.

Tuesday, July 31, 2007

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அவதூறா? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அசோக்குமார் நியமனம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகியுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் எனும் அமைப்பை கலந்தோ, கலக்காமலோ, நியமனம் செய்யப்பட்டதா எனும் கேள்வி இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளது.

வழக்கினை சட்ட அமைச்சராக இருந்த மூத்த வழக்குரைஞர் சாந்திபூஷனும் காமினி ஜெய்ஸ்வாலும் தாக்கல் செய்துள்ளனர். இதன்மீது நோட்டீஸ் ஏதும் பிறப்பிக்காமலேயே, மய்ய அரசு பதில் உரை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது; 1999 முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட் டவர்கள் பற்றிய விவரங்களை ஆறு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

வழக்கு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அனில்தவான் வாதிடுகையில் 1998-இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் படி, தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் கொண்ட கொலேஜியம், நீதிபதிகளை முதலில் நியமிக்கும் போது மட்டும் அல்லாமல் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் போதும் முடிவெடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது இது பின்பற்றப்பட வில்லை; இந்த விசயத்தில் நாங்கள் வாதிடுவதில் எங்களுக்கு ஒன்றும் மகிழ்ச்சி யில்லை, ஆனால் நடந்தவை எங்களைச் சங்கடப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் 2003-இல் கூடுதல் நீதிபதியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். கூடுதல் நீதிபதியாகவே ஏறத்தாழ நான்கு ஆண்டுக்காலம் பதவி வகித்து வந்தவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் கூறும் வாதம் என்னவென்றால், இந்தியத் தலைமை நீதிபதி கொலாஜியத்தையோ, அல்லது பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பதே!

கொலேஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை 1998-இல் நடைமுறைக்கு வந்தது. இந்த நடைமுறை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினால் வந்தது இந்திய அரசமைப்புச் சட்டத் தில் கூறப்பட்ட நடைமுறை வேறு. அதன்படி, மாநில, மத்திய அரசுகளின் பரிந் துரைப்படி இந்தியத் தலைமை நீதிபதியைக் கலந்து ஆலோசித்து நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவர் என்பதுதான் ஆதியில் இருந்த நடைமுறை, 1950 முதல் இருந்த நடைமுறை. பாதியில் வந்த நடைமுறையின்படிதான் கொலேஜியம் சர்வ அதிகாரம் கொண் டதாக ஆக்கப்பட்டு மைய, மாநில அரசுகள் வெறும் பொம்மைகளாக மாற்றப் பட்ட நிலை.
தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இந்தியத் தலைமை நீதிபதியும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்.

முழுவதும் படிக்க: விடுதலை

The Hindu : National : Justice Ashok Kumar’s appointment challenged
IBNLive > Madras HC judge chosen despite SC objection, PIL filed

இதழியலாளர் பி சாய்நாத்திற்கு இராமன் மக்சேசே விருது

ஆசியாவின் நோபல் பரிசு என கருதப் படுகின்ற ரமன் மக்சேசே விருது இந்தியாவின் இதழியலாளர் பி.சாய்நாத்திற்கு அவரது சமூக விழிப்புள்ள கட்டுரைகளுக்காகவும் இந்திய கிராமங்களின் ஏழைகளைப் பற்றிய புரிந்துணர்வை எழுப்பியதற்காகவும் வழங்கப் பட்டுள்ளது. ஆந்திர,மகாராட்டிர விவசாயிகளின் பட்டினிச் சாவுகளையும் தற்கொலைகளையும் தேசிய ஊடகங்களுக்கு கொண்டு சென்ற சாய்நாத் முன்னாள் குடியரசுத் தலைவர் வி வி கிரி அவர்களின் பேரனாவார். சென்னையில் பிறந்து லயோலாவிலும் பின்னர் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.

மேலதிக தகவல்களுக்கு: Zee news:P Sainath wins Magsaysay award for journalism

கிரிக்கெட்: இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி: 73/3

நாட்டிங்காமில் நடந்த இரண்டாம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற கணக்கில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆட்டத்தொடரில் 1-0 என்று முன்னணியில் உள்ளது. இன்று நடந்த ஆட்டத்தில் கார்த்திக் 22,ஜாபர் 22, சச்சின் 1 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திராவிட் 11 மற்றும் கங்குலி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா: 481 & 73/3
இங்கிலாந்து: 198 & 355

டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய ஒருவருக்கு' 1000 ஏக்கராவில் தாது பிரித்தெடுக்கும் உரிமையை வழங்கியதே டாடாவிற்கு அனுமதி வழங்காமல் இருந்ததிற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதனை ஜெயலலிதா 'கற்பனை' என்று கூறி மானநட்ட வழக்குப் போடப் போவதாகக் கூறியிருந்தார். இன்று மீண்டும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'அந்தக் குறிப்பிட்ட நபர்' தொழில் அமைச்சர் நயனார் நாகேந்திரன் நவம்பர்22,2005 இல் கூட்டிய கூட்டத்திற்கும் வந்திருந்ததாகக் கூறியுள்ளார். டாடா ஸ்டீல் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை எனவும் வினவியுள்ளார்.
முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

தாலிபான் கொடூரம்: இரண்டாவது கொரிய பிணைக்கைதி கொலை

ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகள் ஜூலை 19 அன்று காபூலிலிருந்து காந்தஹார் சென்றுகொண்டிருந்த 23 கொரிய பயணிகளை வழிமறித்து பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். இவர்களை விடுவிக்க இணையாக 23 தாலிபான் கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பியிருந்தனர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே பாதிரியார் பே ஹுயங் கு வினைக் கொன்று அவரது உடல் திங்களன்றுதான் கொரியா சென்றடைந்துள்ளது. இதனிடையே இன்று ஆஃப்கான் காவல்துறையினர் ஷ்ஹிம் சுங் மின் என்ற மென்பொருளாளரின் உடலை கண்டெடுத்துள்ளனர். அவரது வலது பொட்டில் துப்பாக்கி இரவை பாய்ந்த காயம் உள்ளது. நாளைக்கு மதியம் 12 மணிக்குள் தாங்கள் கோரிய கைதிகளை விடுவிக்காவிட்டால் 18 பெண்கள் அடங்கிய பிணைக்கைதிகளிலிருந்து ஒவ்வொருவராக கொலை செய்யப் படுவர் என அவர்களின் பிரதிநிதியாக செயல்படும் காரி யூசஃப் அஹமதி கூறியுள்ளார். ஆஃப்கன் அரசும் கொரிய அரசும் பொய் பேசுவதாலும் ஏமாற்றுவதாலுமே இந்தக் கொலைகள் நடந்தேறியதாகவும் அவர் கூறினார். இந்த செய்தி கொரியாவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Hostage Killing: Second South Korean Hostage Murdered - International - SPIEGEL ONLINE - News

ரிசர்வ் வங்கி பணவைப்புவிகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது

இன்று வெளியிட்ட காலாண்டு நிதி கொள்கையின் ஆய்வின் முடிவாக வங்கிகள் மத்திய வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பணவைப்பு விகிதத்தை 0.5% அதிகரித்தும் வட்டி விகிதங்களில் மாறுதல் எதுவும் செய்யாமலும் தன் கொள்கையை வெளியிட்டது.
மேலும் விவரங்களுக்கு....The Hindu News

சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 1993இல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்த வழக்கில் ஆறாண்டுகள் சிரைதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. மும்பையின் தடா நீதிமன்றத்தின் நீதிபதி கோடே இந்திய ஆயுதங்கள் சட்டப்படி அவர் AK-56 மற்றும் பிஸ்தால் வைத்திருந்தது குற்றமாகும் என தண்டனை வழங்கினார். தனது நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு தண்டனையை தள்ளிவைக்க அவர் கொடுத்த மனுவை நிராகரித்து அவர் அடுத்தடுத்து குற்றம் புரிந்திருக்கிறார், அவர்மீது நான் பரிதாபப் பட்டாலும் சட்ட மேன்மைக்கே என் முன்னுரிமை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

DNA - Mumbai - Dutt sentenced to six years in jail - Daily News & Analysis

டெல் கணினிகள் சென்னையருகே தயாரிப்பு

உலகில் அதிகமான கணினிகளை தயாரித்துவரும் பன்னாட்டு நிறுவனமான டெல் திங்களன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை துவக்கியது. முதல் கணினியை தனது மிகப் பெரும் வாடிக்கையாளரான இன்ஃபோசிஸிற்கு இலவசமாக கொடுத்து தனது இந்திய அலுவலை துவக்கியது.

வரும் ஐந்தாண்டுகளில் முப்பது மிலியன் டாலர்வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்டிற்கு 40,000 கணிகள்வரை தயாரிக்கக் கூடிய இத்தொழிற்சாலையின் உற்பத்தி இந்தியாவின் 75% தேவையை ஈடுசெய்ய முடியும்.


India eNews - Dell launches first Indian manufacturing base in south India

மத்திய அமைச்சரவையில் பகுஜன் சமாஜ்?

மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது என்று அக்கட்சி உயர்நிலைத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர். கட்சித் தலைமை இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

பகுஜன் சமாஜ் பொதுச் செயலர் ராம் நரேஷ், தேசிய செயலர் ராம் ரக்ஷா பால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. அமைச்சரவையில் சேருமாறு ஆளும் கூட்டணி தரப்பில் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த முடிவை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும்.

ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக பழங்குடி தலைவர் சல்கான் மர்மு இருப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து கொள்ள மாயாவதிக்கு வலை விரித்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி. மாயாவதிக்கும் அதன் தயவு தேவை இருந்தது.

விளைவு உ.பி. மாநிலத் திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி தருவதாக மத்திய அரசு அறிவித்தது; மாயாவதி மீதான ரூ. 175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி. மாநில கவர்னர் டி .வி. ரஜேஸ்வர் அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்தார் மாயாவதி. இந்த நெருக்கம் தற்போது மேலும் அதிகரித்து வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பகுஜன் சமாஜை எப்படியாவது இடம் பெற செய்து விட்டால் கூட்டணி மேலும் வலுப்பெறும், ஆட்சியை ஐந்தாண்டு காலம் பிரச்னை இன்றி கடத்திவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகள் மிரட்டல், கூட்டணி அரசில் இடம் பெற்று பல்வேறு நெருக்குதல் தரும் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியே பகுஜன் சமாஜ் கட்சியை அரசில் சேர்க்கும் முயற்சி என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி

ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது

சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் ஷில்பாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்நிலையில், சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது வழங்கப்படவுள்ளது என்று ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தர நிர்ணய ஆணையத்தால் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி தர விருது ஏற்படுத்தப்பட்டது. தரத்தில் சிறந்து விளங்கும் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்திலும் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, அதி கோத்ரெஜ், ஆனந்த் மஹிந்திரா, சுனில் மித்தல், கிரண் மஜும்தார் ஷாவ், சாந்த் சிங் சத்வால், ஷாருக்கான், தருண் தேஜ்பல், சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

தினமணி

Dr Shilpa Shetty to receive Rajiv Gandhi Award - bollywood news: "To be a worldwide achiever at such a young age; bestowed with flattering accolades, is a matter of utmost prestige for Shilpa. She is extremely grateful to be chosen for this honour." The award has been designed in line with similar awards in other developed countries, like 'Malcolm Baldrige National Quality Award' in USA, 'Deming Prize' in Japan and the 'European Quality Award'.

அரவானிகளும் கல்லூரிகளில் படிக்கலாம்: உயர் கல்வித்துறை செயலாளர்

தமிழகத்தில் இனி அரவானிகளும் கல்லூரி படிப்பைத் தொடர முடியும். இதற்கான, அரசாணை ஆகஸ்ட்டில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கே. கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியது: அரவானிகளுக்கு கல்லூரிக் கல்வி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது. அவர்களும் உயர்கல்வி பெறுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை தயாராக உள்ளது. இது அடுத்த மாதம் வெளியாகும். எனவே இந்த கல்வியாண்டிலேயே விருப்பமுள்ளவர்கள் கல்லூரியில் பயில முடியும்.

பெயர் பிரச்னை: அரவானிகளை ஆங்கிலத்தில் Transgenders என அழைக்கின்றனர். தமிழ் மொழியில் அவர்களை 'திருநங்கைகள்' என அழைக்கலாம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், உயர் கல்வித் துறையில் அரவானிகளை, பால் மாறியவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். பால் மாறியவர்கள் என்றால், சென்னை வட்டார வழக்கில் வேறு பொருள் வரும்.

எனவே, ஆங்கிலத்தில் உள்ள Transgenders என்கிற வார்த்தையை அப்படியே மொழிபெயர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்கு, தமிழறிஞர்கள் உதவிட வேண்டும்.

பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது: கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே உள்ளது. அரசு உத்தரவு மூலம், கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் கூடுதலாக அரவானிகள் என்கிற பாலினமும் சேர்க்கப்படும்.

ஆண், பெண் இரு பாலரும் படிக்கும் கல்லூரிகளில் அரவானிகளுக்கு இடம் உண்டு. பெண்கள் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் இல்லை. சேர்க்கையில் அவர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு ஏதும் இருக்காது. தற்போது, இருக்கும் சேர்க்கை விதிமுறை அப்படியே இருக்கும். ஆண்கள், பெண்களைப் போல அரவானிகளும் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் கணேசன்.

தினமணி

அமீரின் பருத்திவீரன் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு

புதுடில்லி : புதுடில்லியில் நடந்த 9வது ஒஸியன் சினிமா விழாவில் பருத்திவீரன் திரைப்படம் இந்தியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. டைரக்டர் அமீர் இயக்கத்தில் கார்த்திக், பிரியாமணி நடித்த பருத்திவீரன் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதை தட்டியது. மேலும், இத்திரைப்படத்தில் நடித்த பிரியாமணி சிறந்த நடிகைக்கான விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நன்றி: தினமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...