.

Sunday, September 2, 2007

"அணு ஆயுதத் திட்ட்டத்தை கைவிட்டது வடகொரியா''

வட கொரியா 2007 முடியும் முன்் தன் அணு ஆயுதத் திட்டம் குறித்து முழு விபரங்களையும் வெளியிட்டு ்வெளியிட்டு அத்திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் தூதுவர் கிரிஸ்டோபர் ஹில் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

North Korea 'to end nuclear work' - BBC

ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டில் சாதி உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் மூவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை அந்த மாநில அரசு விலக்கம் செய்திருந்தது. உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென உள் ஒதுக்கீடு செய்து இவர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 3 ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை உச்சநீதிமன்ற அமர்வொன்றின் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, எச்.எஸ்.பெடி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில்

"உடல் ஊனமுற்றோருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதி அடிப்படையில் தனியாக உள் ஒதுக்கீடு அளிக்க முடியாது. பெண்களுக்கான கோட்டாவிலும் தனியாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இப்போது ஏற்படவில்லை
என்று கூறியுள்ளனர்.

மாலைமலர்

மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவிப்பு





இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் இருக்கும் சிலாவத்துறை எனும் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கைப் படையினர் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.




அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளை இலங்கைப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.


அதன் பின்னர் கடந்த சில நாட்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.


"புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டது போல் சிலாவத்துறையையும் மீட்டுள்ளோம்" என்றார் ஜனாதிபதி ராஜபக்ச.


இப் பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் சில கடற்படைத் தளங்களையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகள் பாரிய எதிர்ப்பு எதனையும் காட்டாது பின்வாங்கி விட்டனர் எனவும் படையினர் தெரிவித்திருந்தனர்.


இது இவ்வாறிருக்க, மன்னாரில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 50 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினரை மனிதக் கேடயங்களாகப்[human shields ] பயன்படுத்தி இலங்கை இராணுவம் இப் பகுதிகளில் நுழைந்திருக்கிறது என தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை இராணுவத்தினரின் சிலாபத்துறை இராணுவ நடவடிக்கையால் பல தமிழ்மக்கள் தமது வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.


இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்ற மக்கள் மீது இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடாத்தியதில் 9 தமிழ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட , கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத தாக்குதல்கள் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.



ஆதாரம் : BBC, Tamilnet, Reuters

ஆசிய கோப்பை ஹாக்கி: நாளை இந்தியா-கொரியா மோதல்

7-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பலவீனமான இலங்கையை எதிர்கொண்டது.

இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. 20-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் அதிக கோல்கள் சாதனையை இந்தியா சமன் செய்தது. 1994 ஆண்டு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி 20-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 20-0 என்ற கணக்கில் தாய் லாந்தையும் வென்று இருந்ததே சாதனையாகும்.

இந்திய அணியில் பிரப் ஜோத்சிங் அதிகபட்சமாக 5 கோல்கள் (ஹாட்ரிக்) அடித் தார். எஸ்.வி.சுனில் (ஹாட்ரிக்), துஷார் சன்டேகர், ரகுநாத் ஆகியோர் தலா 3 கோல்களும், இக்னேஸ் திர்கே, சிவேந்திரா சிங் தலா 2 கோல்களும், பிரபோத் திர்கே, ராஜ் பால சிங் தலா ஒரு கோலும் அடித் தனர். பிரப்ஜோத்சிங் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. மற்ற ஆட்டங்களில் கொரியா 16-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 13-1 என்ற கணக்கில் ஆங்காங் கையும், சீனா 6-0 என்ற கணக் கில் வங்காள தேசத்தை தோற்கடித்தன.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொரியாவை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

கொரியா அணி பலம் வாய்ந்தது. இதனால் அந்த அணியை சமாளிக்க இந்தியா மிகவும் கடுமையாக போராட வேண்டும். கொரியா 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா ஒரு முறைதான் 2003-ல் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

ஆசிய கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், கொரியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் `சமன்' ஆனது. 1985ம் ஆண்டு இந்தியா 8-1 என்ற கணக்கிலும், 1989ம் ஆண்டு 5-0 என்ற கணக்கிலும், 2003-ம் ஆண்டு அரை இறுதியில் 4-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இருந்தது. கொரியா 1994-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் 1999ம் ஆண்டு அரை இறுதியில் 5-4 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 1994-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் `சமன்' ஆனது.

நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் வங்காள தேசம்-இலங்கை (காலை 7.30) சீனா-தாய்லாந்து (9.30), ஜப்பான்- ஆங்காங் (மாலை 3 மணி), பாகிஸ்தான்- சிங்கப்பூர் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன. நாளைய ஆட்டங்கள் அனைத் தும் எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

மாலைமலர்

தாகூரின் நோபல் பதக்கம் மீட்க இயலாது - சி.பி.ஐ

ரபிந்த்ரநாத் தாகூரின் நோபல் பரிச்சு பதக்கம் திருடப்பட்டதை அடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தியது. மூன்றரை வருட விசாரணைக்குப்பின் பதக்கம் மீட்க்க இயலாதபடி 'நிரந்தரமாக' தொலைந்து போயிருக்கலாம் என்றும். 'இந்த விசாரணையில் இனி பலன் தரும் நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது' என சி.பி.ஐ யின் அறிவிப்பு தெரிவித்தது.

Rabindranath Tagore's Nobel medal lost foreveCNN-IBN
CBI closes Tagore's medal theft case NDTV.com
CBI shuts Nobel chapter after 3 years Times of India

அர்னால்டு இந்தியா வருகிறார்


அணுஆயுத ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு நவம்பர் மாதம் டெல்லி வருகிறார்.

இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்க அரசியலில் அதிரடியாக குதித்தார். அரசியலில் அமோக வெற்றி அவருக்குக்கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக கலிபோர்னியா மாநில கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் அர்னால்டு வருகிற நவம்பர் மாதம் தனது குடும்பத்தாருடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அப்போது அவர் டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். அரசியல் நல்லெண்ண தூதராகவும், அணுஆயுத விவகாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்காவிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் இந்தியா வருகிறார்.

எனவே அவர் டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

இன்சாட் விண்ணேவல் ஒத்திவைக்கப்பட்டது

இன்சாட்4சிஆர் எனும் செயற்கைக்கோளை விண்ணேற்றும் பணி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரும் செவ்வாய் கிழமைக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னின் முந்தைய செய்தி:

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.


The launch of GSLV delayed Daily News & Analysis
Launch of GSLV rocket postponed due to technical snag Times of India
GSLV launch delayed at Sriharikota NDTV.com

அமெரிக்க ஓப்பன்: சில வெற்றி தோல்விகள்.

அமெரிக்க ஓப்பன் கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையுமான மரியாஷரபோவா(ரஷியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். போலந்தை சேர்ந்த அக்னீஸ்கா 6-4, 1-6, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார்.

இதே போல 7-ம் நிலை வீராங்கனையான நாடியா பெட்ரோவாவும் (ரஷியா) தோல்வி அடைந்தார்.

மேலும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் 16-வது இட வரிசையில் இருப்பவருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) 6-3, 1-6, 0-6 என்ற கணக்கில் பெலாரசை சேர்ந்த விக்டோரியாவிடம் தோற்றார்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சாவும் 3-வது சுற்றோடு வெளியேறினார். அவர் 2-6, 3-6 என்ற கணக்கில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை அனாவிடம் வீழ்ந்தார்.

உலகின் முதல் நிலை வீரரான ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-7(4-7), 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஜானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ரோட்டிக் (அமெரிக்கா), நிக்கோலி (ரஷியா), டோமி ஹால் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஒற்றையர் பிரிவில் தோற்ற சானியா இரட்டையர் பிரிவில் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறி விட்டார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் முன்னேறி உள்ளார். சானியாமிர்ஸா- மகேஷ்பூபதி இணை குளோவின் (பிரான்ஸ்)- பாப்பிரையன் (அமெரிக்கா) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதே போல லியாண்டர் பெயஸ் (இந்தியா) -சுகுனசி (அமெரிக்கா) இணை 7-6, 6-3 என்ற கணக்கில் பெஸ்சாக்- மார்ட்டின் டாம் (செக்குடியரசு) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் மகேஷ்பூபதி- ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை 2-வது சுற்றில்
தோற்றுவிட்டது.

மக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தன் முதலாண்டு வெற்றிப்பயணத்தை முடித்த மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.

இடம் : காமராசர் அரங்கம்,தேனாம்பேட்டை,சென்னை-18

நாள் : 06.09.2007

நேரம் : மாலை 4.00 மணி

கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு

பாராட்டு விழா மாலை 6.00 மணிக்கு

இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இரவு 8.00 மணிக்கு...

நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும்,பொறுப்பாளர்களுக்குப்
பாராட்டும் நடைபெறுகிறது.தொடக்கவிழாவில் நடுவண் தகவல் மற்றும் செய்திஒளிபரப்புத்
துறை அமைச்சர் மாண்புமிகு பிரியரஞ்சன்தாசு முன்சி,மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணிஇராமதாசு கலந்துகொள்கின்றனர்.

தமிழக அமைச்சர்கள் மாண்புமிகுமு.க.ஸ்டாலின்,ஆர்க்காடுவீராசாமி முதலானவர்களும்
பழ.நெடுமாறன்.எம்.கிருட்டிணசாமி,வரதராசன்,இரா.நல்லகண்ணு,தொல்.திருமாவளவன்,
காதர்மொய்தீன் முதலான அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

அழகின்சிரிப்பு என்னும் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரையாற்றுவார்கள்.

தொடர்புக்கு

மின்னஞ்சல்: info@makkal.tv
இணையம் : www.makkal.tv

மு. இளங்கோவன் என்பவர் மின்னஞ்சலில் அனுப்பிய செய்தி

மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?

எண்ணெய் நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிப்பதற்கு முன்பாக பெட்ரோல், டீசல், உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் கடன் பத்திரங்கள் வெளியிடுதல் தொடர்பாக எந்த முன்நிபந்தனையும் இல்லை. நாள்தோறும் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இதன் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் உத்தேசித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு நிறுவனங்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்தாமல் இருப்பதால் நாள்தோறும் ரூ.185 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

ஆனால், விலைகளை உயர்த்தி பொதுமக்களின் தலைகளில் சுமைகளை ஏற்ற வேண்டாம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் சில சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ள நிலையில் இவற்றில் இருந்து 5 சதவீத பங்குகளை அரசு சார்பில் பெற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து வேற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

நஷ்டக் கணக்குகள்: கடந்த பிப்ரவரியில் எண்ணெய் விலைகள் ஏற்றப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டன. இதில், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1-ம் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் காட்டும் நஷ்டக் கணக்குகள் வருமாறு:

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5.88-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4.80-ம், எல்.பி.ஜி. சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.189.14-ம், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14.63-ம் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளன.

விலைகளை ஏற்ற தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருவதால் இதன் விலைகள் ஏற்றப்படுவது மத்திய அரசின் முடிவில் உள்ளது. விலையேற்றத்துக்கு இடதுசாரிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பும். இதையும் மீறி அல்லது அனுசரித்தே தான் விலையேற்றங்கள் இருக்கலாம்.

தினமணி

கடையடைப்புகளால் கேரளாவின் இழப்பு 4,500 கோடி

கடையடைப்புகள் மூலமாக கேரளாவுக்கு ஆண்டுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, பந்த் எதிர்ப்பு முன்னணி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், அரசுக்கு மட்டும் 750 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

கேரளாவில் மாநிலம் தழுவிய கடையடைப்பு ஆண்டுக்கு சராசரியாக ஏழு முறை நடத்தப்படுகிறது. "லோக்கல்' பந்த்கள் ஆண்டுக்கு 185 முதல் 200 வரை நடத்தப்படுகின்றன. இவற்றில் சிக்கி மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், அடிதடியில் காயம் ஏற்பட்டும் பலர் இறந்து போகின்றனர். ஒவ்வொரு கடையடைப்பின் போதும் பலர் வேலையிழக்கின்றனர். பெரிய அளவில் வருமானமும் பாதிக்கிறது.நிலைமை இப்படியே நீடித்தால் முதலீடு செய்யவே முடியாத மாநிலம் என்ற நிலைக்கு கேரள மாநிலம் தள்ளப்பட்டு விடும் என்று இந்த முன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்

கர்நாடக மாநில விருதை அப்துல்கலாம் புறக்கணிக்கக் கோரிக்கை

கர்நாடக மாநிலத்தின் விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெறக் கூடாது என்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் கூறியுள்ளது.

இந்த மன்றத்தின் நிறுவனர் பெ. பராங்குசம் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநில அரசின் உயரிய விருதான பசவாசிறீ விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விருதில் ரூ. 10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் ஒரு தமிழர். குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியனாகவும், தேசியவாதியாகவும் இருந்தார். இவருக்குப் பிடித்த நூல் திருக்குறள்.

திருக்குறள் எழுதிய திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் பல ஆண்டுகளாக சாக்குப் பையால் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. சிலை திறக்க முடியாமல் இருக்கிறது. கன்னடர்கள் சிலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அதனால் இந்த விருதை பெறுவதற்கு முன் திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பராங்குசம்.

தினமணி

கலைமாமணி விழாவில் கருணாநிதி பேச்சு.

2006-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் 69 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

கலைமாமணி விருதுகளை ஆளுநர் பர்னாலா வழங்க, பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். விழாவில், கருணாநிதி பேசியது:

இந்த ஆண்டு சின்னத்திரை கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக, அவர்களிடத்தில் ஒரு ஆதங்கம் இருந்தது. அவர்களுக்கும், விருது வழங்க வேண்டும் என்று. அதுகுறித்து என்னிடம் முறையிட்டார்கள்.

அதை நிறைவேற்றும் இடத்தில் நான் அப்போது இல்லை. தற்போது, நிறைவேறி இருக்கிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது முன்பு, சங்கீத நாடக சபா என்று இருந்தது. அதற்கு, திமுக ஆட்சியில் தான் இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றப்பட்டது.

தமிழுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி அஸ்தஸ்து குறித்து பெருமை பேச வேண்டுமானால் என்னைத் தான் (கருணாநிதி) பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார். அதை, புதையலாகப் பாதுகாத்து வருகிறேன்.

இன்று தமிழைக் காப்பாற்ற, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழைக் காப்பாற்றுகிறவர்கள் எனக் கூறுபவர்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. நாமும் ஏமாற்றி விடக் கூடாது.

கலைஞர் "டிவி'யை தமிழில் நடத்த வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். கலைஞர் "டிவி'யில் தமிழ் வாழுமா எனக் கேட்கிறார்கள். கலைஞர் வாழ்கிறாரோ இல்லையோ? தமிழ் வாழும். அது, மற்றவர்களையும் வாழ வைக்கும்.

பகையைக் கக்கிக் கொண்டு தமிழைக் காப்பாற்ற முடியாது. உள்உணர்வுடன் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழைக் காப்போம் என்றார் கருணாநிதி.

தினமணி

எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

தினமணி

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

தினமலர்

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு

3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவி வரும் குப்பை பிரச்சினை தாற்காலிகமானது தான். மாநகராட்சியின் போர்க்கால நடவடிக்கைகளால் அடுத்த ஓரிரு நாள்களில் நிலைமை சீராகி விடும்.

கடந்த காலத்தில்...: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் மூன்று மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்காக ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதும் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை சரி செய்யப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து திறம்படச் செயல்பட்ட ஓனிக்ஸ் நிறுவனத்தை விரட்ட பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்தது. 26.1.2003-ல் குப்பைகளுடன் கட்டட இடிபாடுகளையும் சேர்த்து அள்ளி, ஓனிக்ஸ் கணக்குக் காட்டுவதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் 10-க்கும் மேற்பட்ட குப்பை லாரிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறை பிடித்தது.

பல தரப்பட்ட குப்பைகளை அள்ளுவது என ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அப்போது நான் சுட்டிக் காட்டினேன். அதையடுத்து, அந்தப் பிரச்னை தீர்ந்தது.

ஓனிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் முடிந்தவுடன் புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் தான் நீல் மெட்டல் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய நிறுவனம் செயல்படும் போது சில நாள்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம்.

~0~


குப்பையை காவல்துறையினர் அகற்றியது அறிந்து கருணாநிதி அளவற்ற மகிழ்ச்சி

கேள்வி: சென்னையில் குப்பை மலைகள் உருவாகிடும் முன்பே அவை மேடுகளாகக் கூட வளர விடாமல், சென்னை மாநகரக் காவல்துறையினர் 'மக்கள் நண்பன்' என்பதை நிரூபிக்கும் வண்ணம், ஒரே நாளில் ஓடியாடி உழைத்து சென்னையை சீர்படுத்திவிட்டார்களே; அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கருணாநிதி பதில்: அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்து கொண்டதையும், அவர்களின் மனித நேயத்தையும் வியந்து, 'சட்டம், ஒழுங்கு பராமரிப்பதைப் போலவே சென்னை நகரை தூய்மையாக்குவதும் தங்கள் கடமைகளில் ஒன்று என்பதை சென்னை மாநகரக் காவலர்கள் சாதித்துக் காட்டினர்' என்று ஒரு நாளேடு சபாஷ் போட்டிருப்பதைப் படித்தபோது, என் கண்களில் ஆனந்தகண்ணீர் துளிர்த்தது.

கேள்வி: சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளுவது குறித்து நிறுவனம் மாற்றப்பட்ட காரணத்தால் ஒரு சில நாட்கள் குப்பைகள் சேர்ந்ததும், அவற்றை அகற்ற உடனே அரசின் சார்பில் முதலமைச்சரே தலையிட்டு, குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துவிட்ட நிலையிலும், ஒருசில கட்சியினர் தாங்களே நேரில் வந்து குப்பைகளை அள்ளப் போவதாக அறிக்கை விடுக்கிறார்களே?

பதில்: அவர்கள் எல்லாம் கட்சி நடத்துவதை பிறகு எப்படித்தான் நாட்டுக்குக் காட்டிக் கொள்வது? அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த குப்பையைக் கூட அள்ளவிட மாட்டேன் என்கிறீர்களே?

~0~


எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க வேண்டுகோள்- எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல்

சென்னையில் குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இப் பணியில் ஆர்வமும், பொதுநல நோக்கமும் கொண்ட எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும் என்று எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் சனிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அளிக்க வந்த அவர் கூறியது:

சென்னையில் குப்பைகள் அகற்றுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, இப்பணி ஒப்படைக்கப்பட்ட நீல் மெட்டல் நிறுவனம் குப்பைகளை அகற்றுவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் தயாராகவுமில்லை. குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இதை சேவையாக தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் அமைப்பு தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். குப்பை அகற்றுவதை வர்த்தகமாக்குவது, இயற்கை சமநிலையைப் பாதிக்கும்.

சென்னையில் ஏற்கெனவே எக்ஸ்னோரா அமைப்பினர், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்ததால், குப்பைகளை மக்கள் வீதியில் கொட்டுவதில்லை. குப்பைகளை குறைக்கவும், அவற்றை உரமாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மக்கள் ஈடுபாட்டுடன் இதில் ஆர்வம் காட்டினர் என்றார் நிர்மல்.

~0~


கருணாநிதி உத்தரவு எதிரொலி: சென்னையில் அசுர வேகத்தில் குப்பைகள் அகற்றும் பணி - ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்

சென்னையில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மைலாப்பூர் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் குப்பைகளை முழுமையாக அள்ள முடியாததால் குப்பைகள் தேங்கின.

கடலூருக்கு சென்று சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் கருணாநிதி குப்பைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்தவுடன், உடனடியாக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் ஆகியோரை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியில் அசுர வேகத்தில் ஈடுபடுங்கள். இதில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது. மேயர், உயர் அதிகாரிகளில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னையில் குப்பைகள் அகற்றும் பணி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓனிக்ஸ் நிறுவனத்தினர் தொட்டிகளை வைத்து குப்பை அள்ளும் பணிகளையும், நீல்மெட்டல் நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிகளையும், மாநகராட்சி 150 தனியார் லாரிகள் மூலம் இந்த பகுதிகளில் முழுமையாக குப்பைகளை அகற்றி வருகிறது. தெருக்களில் விழும் குப்பைகளும் முழுவீச்சில் அள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் தொடர்ந்து இந்த பகுதிகளில் பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

~0~


நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க :: மாநகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

குப்பையை சரி வர அள்ளாத நீல் மெட்டல் நிறுவனத்தின் ஒப் பந்தத்தை ரத்து செய்யக் கோரி மன்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று மண்டலங்களில் துப்புரவு பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர பணி செய்யாததை சுட்டிக் காட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
- தினமலர்

~0~


முந்தைய சற்றுமுன்:
1. குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது
2. விஜயகாந்த் 2 நாள் கெடு
3. துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது



The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage cleared with police assistance
The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage issue generates heat at council meet

யுஎஸ் ஓபன்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவரும் சென்ற வருடம் கோப்பையை வென்றவருமான மரியா ஷரபோவா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டின் ராட்வான்ஸ்கா (Agnieszka Radwanska)வை சந்தித்தார்.

ஒரு கட்டத்தில் எட்டு ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று, மூன்றாவது செட்டில் சர்வை முறியடித்து முன்னணியில் இருந்த ஷரபோவா, கடைசி ஆறு ஆட்டங்களையும் தவறவிட்டு 4-6, 6-1, 2-6 என்று பதினெட்டு வயதான போலந்து வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் லெய்டன் ஹூவிட், மாரட் சஃபீன் ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

SI.com - 2007 US Open - Radwanska stuns Sharapova at U.S. Open
Sharapova Is Dethroned at U.S. Open - washingtonpost.com

-o❢o-

b r e a k i n g   n e w s...