.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: கண்துடைப்பு?- கருணாநிதி கண்டனம்

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கையாக இருந்து வருகிற இட ஒதுக்கீடு கொள்கைக்காக ஒரு அமைதி கிளர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்வதாக வேண்டுகோள் விடுத்து, அறிவிப்பு செய்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து, அது இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஏடுகளில் முதல் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியி லேயே அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையிலே பொது வேலை நிறுத்தத்தை வேலை நாளில் அறிவிக்காமல் விடுமுறைநாளான சனிக் கிழமை நடத்துவது ஏமாற்று வேலை என்கிறார். சேராத இடம் தனில் சேர்ந்ததால் எப் படி பட்ட நிலைக்கு அவர் ஆளாகி விட்டார்ப சமூக நீதி உணர்வு குருதியோடு ஓடு பவர்களுக்கு எதிர்ப்பினை எவ்வளவு விரைவிலே காட்டவேண்டும் என்பதில் தான் எண்ணம் செல்லும். சனிக்கிழமைகளில் ரெயில்கள் ஒடுவதில்லையாப

நம்மை அவ மானப்படுத்தினாலும் நாட்டு நலனுக்காக மானத்தைக்கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில் நாம் அனுப் பிய அழைப்பைக்கூட லட்சி யம் செய்யாதவர்களுக்கு இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன- ஆதிக்க புரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமக்கு சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு வாழுபவர் ஒன்றுகூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

கண்துடைப்பாம் கண் துடைப்பு! உடன்பிறப்பே இது கண்துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு! இந்தக் கண்ணீர் அடக்கமுடியாமல் அடித்தட்டு மக்கள் புழுக் களாய்த் தேரைகளாய் பொட் டுப்பூச்சிகளாய் மடிந்து போகாமல்-புரட்சிக்குரல் எழுப்ப எழுந்திடும் உரிமைப் போர்ப்படையின் மீது காரி உமிழ்வது போல இந்தப் பெண் மணியார் கண்துடைப்பு என் கிறாரே, இதுவும் நாம் எதிர் பார்த்தது தான் நாகத்திடம் நச்சுப்பல்லையும், இவர் போன்றோரிடம் நாச காலச் சொல்லையும் தானே எதிர் பார்க்க முடியும்


"மேலும் செய்திக்கு மாலை மலர்"

சற்றுமுன்: சிவாஜி பட ரிலீஸ் பற்றி டி.ஆர் கருத்து

நெல்லையில் நடைபெற்ற தனது 'லட்சிய தி.மு.க கூட்டத்தில் பேசிய விஜய டி.ராஜேந்தர் 'சிவாஜி படத்துக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு.

அந்த பட ரிலீஸ் போது திரையரங்குகளில் டிக்கட்கள் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் தன் கட்சி சார்பில் போராடுவோம் என்கிறார்.அத்துடன் காவிரி பிரச்சனையில் ராஜினி மௌனம் சாதித்ததையும் சாடுகிறார்.தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகத்தில் சொத்து வாங்கும் அவர் படத்துக்கு டிக்கெட் விலை ஏற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.அரசாங்க கொள்கைகளில் தனி மனிதர்களுக்கு விலக்கு அளிக்க முற்பட்டால் விடமாட்டேன் என்றும் கூறுகிறார்

சற்றுமுன்: திருநங்கைகளும் மனிதர்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

தமிழக அரசு அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை அரசு மருத்துவனனைகளிலேயே செய்து கொள்ளலாம்.அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை மாநாட்டில் 'லிவிங் ஸ்மைல் வித்யாவால் வைக்கப் பட்ட கோரிக்கையும்,மதுரை உயர் நீதிமன்றத்தில்ல் 'சரவணன்' என்ற தன் பேரை லிவிங் ஸ்மைல் வித்யா' வாக மாற்ற போடப்பட்ட வழக்கும் அரசின் இந்த உத்தரவுக்கு காரணங்கள்.
தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன வித்யா சொன்னவை:பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்.இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.
நான் இதைச் செய்ய வேண்டி வடமாநிலங்களில் ஒருவருடம் பிச்சை எடுத்தேன்.இப்போது இந்த சிகிச்சையை இலவசமாக அரசு மருத்துவமானைகளில் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.ஒரு திருநங்கை பேங்க் அக்காவுன்ட்,டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை ,செல்போன் இணைப்புக் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.இந்த பிரச்சனைகள் தீரவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.அரசின் தற்போதைய உத்தரவில் பாலின அறுவைசிகிச்சையோடு வாய்ஸ் தெரபி,மார்பக வளர்ச்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் திருநங்கைகளும் மனிதர்கள் அவர்களை மதிப்போம் என்ற பிரச்சாரமும்,அவர்களின் பெற்றோருக்கு கவுன்ஸிலிங்கும் ,வீட்டைவிட்டுத் துரத்தும் பெற்றோருக்கு தண்டனையும் வழங்கப் பட வேண்டும். என்றும் கூறுகிறார் வித்யா

சற்றுமுன்: 2015ம் வருடத்துக்குள் 1.5 கோடி வேலைவாய்ப்பு

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் புதிதாக 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என எத்திராஜ் மகளிர் கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி “வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கலை-அறிவியல் கல்லூரிகள் இணைந்து செயலாற்றுதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் எம். தவமணி, “இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 1.3 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. கலைக் கல்லூரி மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.



- தினகரன்

சற்றுமுன்: முழு அடைப்புக்கு விஜயகாந்த் ஆதரவு

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, தே.மு.தி.க. ஆதரவு தெரிவிக்கும் என்று, அதன் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மத்திய அரசு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சரியான விவரத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு தராததால்தான், இத்தகைய விளைவு.

அனைத்துக் கட்சி கூட்டத்தை, தி.மு.க. கூட்டி முழு அடைப்பு சம்பந்தமாக பேசியிருக்கலாம். இருந்தாலும், சமுதாயத்தின் அடித்தள மக்களின் நலன் கருதி, இந்த முழு அடைப்புக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- தினகரன்

கண்டிப்பான ஆசிரியைக்கு 1.4 மில்லியன் டாலர்!

அமெரிக்காவில் இருக்கும் லூசியான மாஹாணத்தை சேர்ந்த பாலா பெயின் (Paula Payne) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியை, தன்னிடம் பயின்ற எழுபது சதவிகித மாணவர்களுக்கு மிகுந்த குறைவான மதிபெண்களை கொடுத்துள்ளார். இதை அடுத்து இந்த உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் கொடுத்திருக்கும் மதிப்பெண்களை திருத்துமாறு கேட்டு மிகவும் துன்புறுத்தியுள்ளார். பாலா பெயின் அதற்கு சம்மதிக்காமல் போகவே அவரை கீழ்நிலை ஆசிரியராக மாற்றி பின்னர் தற்காலிக வேலை நீக்கமும் செய்திருக்கிரார்.


இந்த வழக்கு நீதிமன்றம் சென்று இப்பொழுது இந்த ஆசிரியருக்கு அவர் வேலை செய்துகொண்டிருந்த லூசியானா பள்ளி நிர்வாகம், 1.4 மில்லியன் டாலர்(அவரை மன ரீதியாக துன்புறுதியதற்காகவும், மற்ற சேதங்களுக்காகவும்) வழங்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளது.


மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/17874261/?GT1=9145

சற்றுமுன்:தமிழகம் முழுவதும் 2-ந் தேதி கோர்ட்டுகள் புறக்கணிப்பு :வக்கீல்கள் சங்கம் முடிவு

நேற்று காலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க கூட்டம், சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில், செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கண்டித்து ஏராளமான வக்கீல்கள் பேசினார்கள். இதன்பிறகு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 29-ந் தேதி இடைக்கால தடை விதித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக இயற்றிய இந்த சட்டத்திற்கு, ஓட்டு வங்கிக்காக இயற்றப்பட்ட சட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியிருப்பது வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

பெரும்பாலான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் இந்த நீதிமன்ற புறக்கணிப்பை கடைபிடித்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடப்படுகிறது.

- தினதந்தி

சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி


புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம்
இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

- தினமலர்

சற்றுமுன்: போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை



பிரென்ஞ் கன்னியாஸ்திரி மேரி சைமன் பெரே என்பவர் ஓரிரவு பிராத்தனையின் பின் தனக்கு இருந்த நோய் குணம் அடைந்துவிட்டதாகவும் அதை வாடிகன் போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திக்கு.."FORBES.COM"

Friday, March 30, 2007

சற்றுமுன்: ஷேவாக் தந்தை ஆவேசம்

உலகக் கோப்பை தோல்விக்கு சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதே காரணம் என்று வீரேந்திர ஷேவாக்கின் தந்தை ஆவேச மாக கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தோல்விக்கு தன்னுடைய மகன் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப் பிய அவர், டெண்டுல்கர், திராவிட் ஆகிய முன்னணி வீரர்கள் படுமோசமாக ஆடிய தாக கூறினார். ஷேவாக் துவக்க வீரராக ஆட அனுமதிக்கப்பட்டிருந்தால் மேலும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பார் என்று அவர் தெரிவித்தார். ஷேவாக்கின் ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


"மாலைச் சுடர்"

சற்றுமுன்:பாமகவுக்கு துக்கநாள் - ராமதாஸ்

கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட் டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் கறுப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

"நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிடாதே', "உயிர் போனாலும் இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுப்போம்', "உயிரை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டை காப்போம்', "விடமாட்டோம் விடமாட்டோம் இடஒதுக்கீடு பறிபோக விடமாட்டோம்' போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: பந்த்-கேலிக்கூத்து,கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதா

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை உரிய முறையில் சந்தித்து நல்ல தீர்ப்பை பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பொது வேலை நிறுத்தம் என்பது கண்துடைப்பு நாடகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஆளும் கூட்டணி கட்சிகளே பொறுப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் கோட்டை விட்டவர்கள் இங்கே பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்திருப்பது கேலிக்கூத்து என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: முஷாரப்பிற்கு அமெரிக்கா பாராட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அதிபர் முஷாரப் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கர்மாக் நிருபர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதம் அதிபர் முஷாரப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. பயங்கரவாதத்தை நசுக்க அதிபர் முஷாரப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை முஷாரப் வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம். 2001 ஆகஸ்டில் இருந்ததை விட பாகிஸ்தானில் தற்போது நிலைமை மாறியுள்ளது.இவ்வாறு சீன் மெக்கர்மாக் கூறினார்.


- தினமலர்

சற்றுமுன்: தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

சந்திப்பூர் (ஒரிசா) : கடற்படை கப்பலில் இருந்து பாய்ந்து சென்று 150 கி.மீ., துõரத்தில் உள்ள எதிரி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "தனுஷ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரிசா சந்திப்பூர் அருகே கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

- தினமலர்

சற்றுமுன்: பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க உத்தரவு!

செவ்வாய், 27 மார்ச் 2007 (10:53 ஐளுகூ)
குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது; அவ்வாறு இருந்தால் குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களின் எலும்புகள் பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். சிறு குழந்தைகளின் எடை அதிகரிக்கும் என்று பாராளுமன்றத்தின் நிபுணர் குழு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக 2004-ம் ஆண்டு என்.கே.கங்குலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.குழு தனது அறிக்கையை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் பெப்சி, கோககோலா நிறுவனங்களில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் உள்ளதாகவும் இது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.தக்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

தங்கள் நிறுவன குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா ஆகிய குளிர்பான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"வெப் உலகம்"

சற்றுமுன்: நேதாஜி தொடர்பான கடிதங்களை அளிக்க உத்தரவு!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலையாய பங்காற்றிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் "காணாமல் போனது" தொடர்பாக ரஷ்ய அரசுடன் இந்திய அரசு நடத்திய கடிதப் போக்குவரத்து விவரங்களை அவருடைய மறைவு குறித்து ஆய்வு செய்துவரும் அமைப்பிற்கு அளிக்குமாறு அயலுறவு அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்!

மிஷன் நேதாஜி (www.missionnetaji.org) எனும் அமைப்பு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய அரசு கூறுவது போல 1945 ஆம் ஆண்டு நடந்ததாக ஜப்பானிய அரசு கூறும் விமான விபத்தில் இறந்தாரா? அல்லது அவர் தப்பிவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

"வெப் உலகம்"

சற்றுமுன்: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் US $ 142.7 பில்லியன

கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 6.2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 142.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த கணக்கின்படி 135.5 பில்லியன் டாலர் (ரூ.6,27,112 கோடி) ஆக இருந்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ல் முடிவடைந்த கணக்கின்படி 142.7 பில்லியன் டாலர் (ரூ.6,32,051) ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

"Yahoo-Tamil"

சற்றுமுன்:'இட ஒதுக்கீடு :பார்லி.யை உடனடியாக கூட்டவேண்டும்'

27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது தொடர்பாக விவாதிக்க, பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இந்த தீர்மானத்தில்,உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தடை,பாராளுமன்றத்தின் உரிமையை பாதிப்பதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீர்ப்பு ,சமூக மற்றும் கல்வி ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"Yahoo-Tamil"

சற்றுமுன்: நாளை தமிழகம் முழுவதும் பந்த்

நாளை முழு அடைப்பு: பஸ்-ஆட்டோ-லாரிகள் ஓடாது

சென்னை, மார்ச். 30-

உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக் கீடுஅளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.

அதோடு வரும் கல்வி யாண்டில் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இட ஒதுக்கீடு ஆதரவு அமைப் புகள், மற்றும் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. தமிழ்நாட்டில் எல்லாக் கட்சிகளும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் எதிர்ப்பை தெரிவிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அவசரக் கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு நடந்தது. தமிழ் நாட்டில் நாளை (சனிக் கிழமை) பொது வேலை நிறுத்தம் (முழு அடைப்பு) நடத்தி இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

முழு அடைப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது. பால் வினியோகம், மருந்து சப்ளை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் மொத்தம் 17,500 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் நாளை ஓடாது. நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களும் நாளை ஓடாது.

நாளை காலை 6 மணிக்குள் விரைவு பஸ்கள் சென்றடையும் வகையில் இன்று மாலை பஸ்கள் முன்கூட்டியே புறப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு பஸ்களுக்கு முன் பதிவு செய்த பயணிகள் முன் கூட்டியே வந்தால் வேறு பஸ்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சென்னையில் வழக்க மாக 2600 பஸ்கள் இயக்கப் படுகின்றன. அனைத்து பஸ் களும் நாளை ஓடாது. மாலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படும்.

டேங்கர், சரக்கு லாரிகள், எல்.பி.ஜி. லாரிகளும் இயக்கப் படவில்லை என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பி.எஸ்.ஏ.செங்கோடன் கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லாரிகளை தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் இயக்க மாட்டோம் என்றார்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் லாரிகள் உள்ளன. அவை அனைத்தும் நாளை ஓடாது. பகல் நேரத்தில் ஓடக்கூடிய ஆம்னி பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற உள்ளது. அவை திட்டமிட்டப்படி நடைபெறும்.

நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள முக் கிய பல்வேறு தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன. எனவே பெரிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் நாளை இயங் காது. கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.

ரெயில், விமான சேவை களும் நாளை இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்த் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாடு முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலை யங்கள் மற்றும் பஸ் டெப் போக்கள் முன்பு பாதுகாப் புக்காக போலீசார் நிறுத்தப் படுவார்கள்.

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 86 ஆயிரம் போலீசார் உள்ளனர். இவர்களில் உத்தர பிரதேச மாநில தேர்தல் பாது காப்புக்காக 6 கம்பெனி போலீசாரும், பீகாருக்கு 6 கம்பெனி போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநில பாதுகாப்புக் காக சென்றுள்ள இந்த 1200 போலீசார் தவிர மீதியுள்ள அனைத்து போலீசாரும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் அனைத்து துணை கமிஷனர்கள் மேற்பார் வையில் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படு வார் கள் என்று போலீஸ் கமிஷ னர் லத்திகாசரண் தெரிவித்தார்.

===========
மாலைமலர்

சற்றுமுன்:கோவையில் ஆடம்பர குடியிருப்புகளுக்கு அமோக வரவேற்பு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து `ஜவுளி நகரம்' கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டினைக் கண்டு வருகின்றன.

கோவையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நவீன தனி இல்லங்களுக்கான தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செலவிடும் பணத்திற்கு தகுந்த மதிப்பு உள்ளதால் இவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயர்தர குடியிருப்புகளை நிறுவுவதில் கோவை மாநகரம் சென்னை அண்ணா நகருக்கு இணையான வளர்ச்சியைக் கண்டு வருகிறது'' என்று பிரசீடியம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி ஹேம்சந்த் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, ஆபரணம், வார்ப்படம், பம்ப் செட் தொழிற்பிரிவுகள், இலகு ரக பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும், வங்கியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நல்ல தேவைப்பாடு உள்ளதாக கோவை ரியல் எஸ்டேட் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

- தினதந்தி, The Economic Times

சற்றுமுன்: இலங்கை கடற்படை தாக்குதல்: 4 மீனவர் பலி

இலங்கை கடற்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 மீனவர்கள் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.

இலங்கை கடல்எல்லையில் இந்திய மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 4 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் எவ்வித முன்எச்சரிக்கையும் விடுக்காமல், திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

"Yahoo-Tamil"

Thursday, March 29, 2007

சற்றுமுன்: எஐஐஎம்எஸ் வேணுகோபாலுக்கு எதிராக ஐகோர்ட் தீர்ப்பு

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எஐஐஎம்எஸ்) இயக்குனர் வேணுகோபால் ஒரேநேரத்தில் இரு பதவிகளை வகிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வேணுகோபால் எஐஐஎம்எஸ்-ன் இயக்குனராகவும், இருதய மருத்துவத்துறையின் பேராசிரியராகவும் ஒரே நேரத்தில் இரு பதவிகளை வகித்து வந்தார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுவதந்திர குமார் மற்றும் நீதிபதி எச்.ஆர்.மல்ஹோத்ரா அடங்கியோர் பெஞ்ச், கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டபின், இரு பதவிகளை வகிக்க முடியாது என்றும், பேராசிரியர் பதவியில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


"Yahoo-Tamil"

சற்றுமுன்: FTVக்கு இந்திய அரசு தடை

ஆட்சேபத்துக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக F-TVயை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடைவிதித்திருக்கிறது. இந்த தடை வரும் ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதிவரை நீடிக்கும். இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு ஆங்கில சேனலான AXNனும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டு பின்னர் அந்த சேனல் மன்னிப்பு கேட்டபின் தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

சற்றுமுன்: இரான், இங்கிலாந்து பிரச்சனை வலுக்கிறது

15 இங்கிலாந்து கடற்படை வீரர்கள் இரானால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தான பிரச்சனை மேலும் மேலும் வலுக்கிறது.

நேற்று இங்கிலாந்து கடற்படை வீரர்கள் இரானின் கடல் எல்லைக்குள் நுழழயவில்லை என தன் பக்க ஆதாரங்களை அறிவித்தது. அதே நேரம் இரான் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணை தொலைக் காட்சி பேட்டியில் காண்பித்தது அப்போது அவர் தாங்கள் ககது செய்யப்படும்போது இரானின் கடல் எல்லைக்குள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்தப் பேட்டிக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்தப் பெண்கைதி விடுவிக்கப் படுவார் என எதிர் பார்ப்பிருந்தது. இன்று செய்தியின்படி இரான் கைதிகளை விடுவிப்பதை தள்ளிப்போட்டுள்ளது.

இங்கிலாந்து இரானை தனிமைப்படுத்தும்படி உலக நாடுகளுக்கு இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புள்ள சுட்டிகள்

Full story: Google news
சற்றுமுன்:15 இங்கிலாந்து கடற்படை வீரர்களை ஈரான் கைதுசெய்துள்ளது
Iran delays sailor's release, UK seeks support
Iran says may not release British woman
Britons entered Iranian waters several times-Iran
Britain seeks UN condemnation of Iran
Iran says stop making 'fuss'
Pressure from London will hinder release of female sailor

ஒரகடத்தில் டிரக் தொழிற்சாலை :ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும் புதூர் அருகே ஒரகடத்தில் 60 ஏக்கர் பரப்பில் ரூ.75 கோடி முதலீட்டில் உயர்ரக டிரக்குகளை தயாரிக்கும் புதிய கனரக வாகன தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு தொழிற் சாலைகளை தொடங்க முதலமைச்சர் அனுமதி வழங்கி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார். இதுவரை 10 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து உள்ளிட்ட எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.


"மாலைச் சுடர்"

சட்டசபைக்கு செல்லாதது ஏன்? ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட் விவாதம் குறித்து எனது கருத்தை சட்டசபையில் பேச வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் சபாநாயகர் அதற்கு நேரம் ஒதுக்கி எனது பேச்சுக்கு இடையே இடையுறு செய்யாமல் பார்த்துக் கொண்டால், முதல்-அமைச்சரின் பதிலை வாங்கி தருவதாக இருந்தால் பேசலாம்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்கப்பட்டது. சபை விதிகள்படி அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச போதுமான நேரம் ஒதுக்கவில்லை.

நான் பேச வந்தாலும் இதுதான் நடக்கும். இடையுறு செய்வார்கள், அவ மதிப்பார்கள், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.எனவேதான் நான் சட்டசபையில் பட்ஜெட் உரையில் பேசவில்லை. அதே நேரத்தில் நான் பேச வேண்டிய கருத்துக்களை இந்த அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.

- மாலை மலர்

பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ஏப். 1ல் பாராட்டு விழா


விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் வில்லியம் மோசஸ், உறுப்பினர்கள் ஜர்னெய்ல் சிங், பஷீர் அகமது ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தொழிலதிபர் மகாலிங்கத்துக்கு பத்மபூஷன் விருது அளித்து கவுரவித்து உள்ளது. இவருக்கு பாராட்டு விழா கோவை அவிநாசி சாலை எஸ்.என்.ஆர் கலையரங்கில் ஏப்ரல் 1ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் மதநல்லிணக்கத்தை பேணும் விதமாக அனைத்து மதத்தினர் பங்கேற்கின்றனர். தொழில், வர்த்தகம், கல்வித்துறையினர் பலர் பங்கேற்கின்றனர்.


- மாலை முரசு

உலக ஒற்றுமைக்கு வன கிராம கோயில்களில் பொங்கல்

தொண்டாமுத்தூர், மார்ச் 29-


கோவையை அடுத்த சிறுவாணி அடிவாரம் சாடிவயல்பதி உச்சி மாரியம்மன் கோயில், முள்ளாங்காடு மாரியம்மன் கோயில்களில் பங்குனி மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது. சீங்கப்பதி, தொட்டப்பதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரேட்டி, ஜாகீர்போரேட்டி, கல்கொத்திபதி, தானிகண்டி ஆகிய வனக்கிராமங்களை சேர்ந்த மலைவாசிகள் கலந்து கொண்டனர்.

அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர்.அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. விழாவையட்டி தினமும் மாலை மலைவாசிகளின் ஆடல், பாடல் நடனம் நடந்தது.

மழை வேண்டியும், உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கவும், உலக ஒற்றுமை வலியுறுத்தியும், வனவிலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மலைவாசிகள் மஞ்சள் நீராடினர்.

திருமண மண்டபத்தை இடிக்க 5 மாத அவகாசம் வேணும்:விஜயகாந்த் மனைவி

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் நிர்வாக இயக்குனரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்க எங்களுக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை மத்திய அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மண்டபத்தை காலி செய்து மார்ச் 26-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் கெடு விதித்தது. இந்த கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிக்கு எங்கள் மண்டத்தில் பலர் பணம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் வரை கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் பிரேமலதா கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு வருகிறது. இதில் மத்திய அரசு சார்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜராகிறார்.

- மாலை முரசு

கட்டாய தமிழ் சுமையாக இருக்காது

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் தமிழை கட்டாயமாக சொல்லி தரவேண்டும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜரானார். ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாய தமிழ் கொண்டு வருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது. கர்நாடகாவில் 3ம் வகுப்பில் இருந்தும், மகாராஷ்டிராவில் 5ம் வகுப்பில் இருந்தும் தாய்மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அது சரியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

- மாலை முரசு

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது


சினிமா மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ வழங்கியது. மும்பையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் விருதுடன் நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா.

இராமநாதபுரத்தில் 8 ராடர்கள்:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா அமைத்தது.

கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் முதலாவதாக நடத்திய விமானத் தாக்குதலையடுத்து வான் பரப்பை கண்காணிப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 8 ராடர்களை இந்திய விமானப் படையினர் பொருத்தியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: www.thinakural.com

சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

பள்ளிப் பேருந்து மனிலாவில் பிணை - சுபம்

மணிலாவில் 33 சிறார்களையும் இரு ஆசிரியர்களையும் பிணையாக வைத்திருந்த சம்பவம், எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்தது. ஏழை மாணவர்களுக்கு கல்வி கோரி, இதை அரங்கேற்றியதாக 56 வயது யூன் (Jun Ducat) தெரிவித்தார்.

The Standard - China's Business Newspaper: "A man who took a busload of children and teachers hostage from his day-care center in Manila Wednesday freed them after a 10-hour standoff during which he denounced corruption and demanded better lives for poor children."

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை

வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா.

முழு ஸ்கோர்கார்ட்

சற்றுமுன்: 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி கிடைக்கிறது!

thatstamil தரும் செய்தி.

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

தென்னிந்திய திரையலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. ஏவி.எம். நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான படம் தயாரிக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மெகா பட்ஜெட் படம் சிவாஜி. இப்படிப்பட்ட படம் இப்போது வெறும் 50 ரூபாய்க்கு தெருவில் வைத்து விற்கப்படுகிறது. சென்னையின் புறநகரான நங்கநல்லூரில், ஒரு டிவிடி கடைக்கு எதேச்சையாக போக நேர்ந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு டிவிடியைக் காட்டினார். என்ன படம், என்ன விவரம் என்று எதுவும் அந்த டிவிடியில் இல்லை. ஆனால் கடைக்காரர், நமது காதை அருகில் இழுத்து கிசுகிசுத்தார். சிவாஜி பட டிவிடி சார் இது. படத்தின் 40 நிமிடக் காட்சிகள் இதில் உள்ளது. 50 ரூபாய்தான், வேணுமா என்று அவர் கூறக் கூற நமக்கு தலை சுற்றிப் போனது. நிஜமாவா என்று நாம் ஆச்சரியம் காட்டியபோது, மெய்யாலும்தான் சார், குவாலிட்டியைப் பற்றிக் கவலைப்படாதீங்க, டிஜிட்டல் பிரிண்ட் இது. படு சூப்பராக இருக்கும், தியேட்டரில் பார்ப்பது போலவே எஃபக்டிவாக இருக்கும் என்று உத்தரவாதமும் கொடுத்தார்.

ஷாக்கிலிருந்து மீளாத நிலையில், நாம் உடனே படத்தின் பி.ஆர்.ஓ. பெரு துளசிபழனிவேலைப் போனில் பிடித்து விசாரித்தோம். மேட்டர் தெரியுமா என்று அவரிடம் கேட்டபோது, அப்படியா சார், எனக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுங்க சார் என்றார் படு கூலாக!. தொடர்ந்து அவரே, தினசரி சிவாஜி குறித்து ஒரு செய்தி வருகிறது. ஒவ்வொரு செய்திக்கும், வதந்திக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்களுடைய வேலைதான் கெட்டுப் போகும். ஏவி.எம். சரவணன் சார் சொல்வதுதான் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல். இதற்கு அவரே பதில் சொல்லட்டும் என்றார்.

முதலில் பட ஸ்டில்கள் லீக் ஆனது, பின்னர் படமே லீக் ஆனதாக செய்தி வந்தது. சமீபத்தில் 3 பாடல்களை இணையதளத்தில் உலவ விட்டனர். இப்போது 40 நிமிட படக் காட்சிகளை வெளியில் விட்டுள்ளனர். அடப் பாவிகளா..

சற்றுமுன்: நந்திகிராம் திட்டத்தைக் கைவிட்டார் புத்ததேவ்

கடந்த மார்ச் 14-ம் தேதியன்று நடந்த கலவரத்தின் எதிரொலியாக நந்திகிராமத்தில் ரசாயன உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டார் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அத்துடன், வன்முறைச் சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.




"Yahoo-Tamil"

சற்றுமுன்: ஏப்ரல் 2ம்தேதி சிவாஜி ஆடியோ வெளியீடு

சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் மற்றும் சிடி ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்படுகிறது.
"ஏப்ரல் 4ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, 2ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேசட் ரூ. 45க்கும், சிடி ரூ.100 க்கும் கிடைக்கும். ஆரம்ப கால சலுகையாக ரசிகர்களுக்கு சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ரஜினியின் 3டி ஸ்டிக்கர் இலவசமாக வழங்கப்படும் என ஏ.வி.எம்., நிறுவனம் தெரிவித்துள்ளது.


Courtesy: தினமலர்

ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் கண்டனம்

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்காக ராமர் பாலத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து "ராமர் பாலத்தை காப்போம்' என்ற இயக்கத்தை ராமநவமி தினத்தன்று தொடங்கியுள்ளன. சுனாமிக்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டாவது சுற்றுக்கு ஆய்வுக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென்று இந்த இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: திருவாரூர் கோவிலில் நாளை போராட்டம்: இல.கணேசன்

பா.ஜனதா மாநிலத் தலை வர் இல.கணேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவாரூரில் ஆழித் தேர் பாரம்பரிய முறைப்படி நாளை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் கூட கோரிக்கைகளை புறக்கனித்து ஆலய மற்றும் அரசு நிர்வாகம் தன்னிச்சையாக வேறு தேதியில் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாளைய தினம் பரிச்சார்த்தமாக மாதிரி தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிக் கையில் சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிட் டுள்ளார்.

திருவாரூரையே சேர்ந்த கருணாநிதி இதில் தலையிட்டு அடுத்த ஆண்டு மரபுப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் தர வேண்டுகிறேன். குறைந்த பட் சம் அமைச்சர் மூலமாவது, அதிகாரிகள் மூலமாவது இந்த உத்திரவாதத்தை அரசு தரவேண்டும். இல்லையேல் நாளை திட்டமிட்டபடி தேரோட்ட போராட்டம் நடை பெறும்.


மாலை மலர்

சற்றுமுன்: தசாவதாரம் எனது கற்பனையில் உருவானது - நடிகர் கமலஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடித் து வரும் தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாம்பர த்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், தசாவதாரம் படத்தை திரையிட தடை விதித்தது. மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் கமல்ஹாசன், படத்தின் இயக்குனரும், ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பியது.

இதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்ய்ராமசாமி, ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

நான் புதிய கதையை உருவாக்கி, தசாவதாரம் படத்தில் நடித்து வருகிறேன். இதை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். மனுதாரரை நான் பார்த்தது இல்லை. 10 வேடங்களில் நடித்த பல ஆங்கில படங்கள், தமிழ் படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்த நிலையில் 10 வேடங்கள் உள்ள கதையை நான்தான் உருவாக்கினேன் என்று மனுதாரர் கூறுவது தவறானது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு உள்ளது. எனது கற்பனையில் உருவானது தான் தசாவதாரம் கதை. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் நடந்து வருகிறது.

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய மனுதாரர் மீது உரிய நேரத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன். போலீசில் என் மீது மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து என்னிடம் போலீசார் விளக்கம் கேட்டனர். நான் உண்மையான பதில் கூறியுள்ளேன். இதை போலீசாரும் ஏற்றுக்கொண்டனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பதில் மனுவில் கூறியுள்ளார்.

- மாலை முரசு

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: சிறுவாணி அணை நீர்மட்டம்் குறைந்துவருகிறது




கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவெனக் குறைந்துவருகிறது. 70 நாட்கள் தேவையைச் சமாளிக்க இந்த நீர் போதுமானது.

- மாலை முரசு

சற்றுமுன்: ஈரோடு மாவட்டத்தில் நாளை பந்த்

ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு 160 சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் பவானி ஆற்றிலிருந்து 6 டி.எம்.சி., தண்ணீரையும், அமராவதி ஆற்றிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீரையும் கேரளாவுக்கு வழங்க கோரி உத்தரவிட்டுள் ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்தில் விவசாயமும், விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்க ளின் வாழ்வும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடுவர் மன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் 29ம் தேதி ரோடு மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந் தது. இதை ஏற்று அனைத்து சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆதரவளித்துள்ளதால் பொதுவேலை நிறுத் தம் முழுமையாக வெற்றியடையும் என இச்சங்கத்தினர் கூறுகின்றனர்.

- மாலை முரசு

சற்றுமுன்: தொழில்நுட்பத்தில் அமெரிக்கா பின்தங்கியது

உலக பொருளாதாரக் குழுமத்தின் (World Economic Forum. ) ஆய்வுப்படி அமெரிக்கா தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


டென்மார்க் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 40வது இடத்திலிருந்து 44வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சைனா 50லிருந்து 59க்கு தள்ளப்பட்டுள்ளது.

NETWORKED READINESS INDEX RANKINGS 2006 (2005)
1: Denmark (3)
2: Sweden (8)
3: Singapore (2)
4: Finland (5)
5: Switzerland (9)
6: Netherlands (12)
7: US (1)
8: Iceland (4)
9: UK (10)
10: Norway (13)
Source: WEF


US 'no longer technology king'

India was four positions down on last year to 44th, suffering from weak infrastructure and a very low level of individual usage of personal computers and the internet.
China was knocked to 59th place, nine positions down, with information technology uptake in Chinese firms lagging.

WEFன் மற்றுமொரு சர்வே

Nordics show way in sex equality

சற்றுமுன்: டீசல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் நோயாளி சாவு

டீசல் தீர்ந்துபோனதால் நடுவழியில் நின்றது ஆம்புலன்ஸ். அதில் நெஞ்சுவலியுடன் துடித்துக் கொண்டிருந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). மெக்கானிக். இவருக்கு நேற்று திடீரென வயிற்றுவலியும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமானதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்சில் கோவிந்தராஜை அவரது உறவினர்கள் தஞ்சாவூருக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் ஒரு நர்சும் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு கந்தர்வக்கோட்டை அடுத்த காடவராயன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது டீசல் தீர்ந்துவிட்டதால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றுவிட்டது.

ஆம்புலன்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோவிந்தராஜ் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டிரைவரை திட்டித் தீர்த்தனர். உறவினர்களின் கதறலை கேட்டு ஊர்மக்கள் அங்கு திரண்டனர். நிலைமை மோசமானதை உணர்ந்த நர்ஸ், ஆம்புலன்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். கோவிந்தராஜ் இறந்த தகவலை தெரிந்து கொண்ட டிரைவர் ராஜேந்திரனும் திரும்பி வரவே இல்லை.

இதுபற்றி கோவிந்தராஜின் உறவினர் ஒருவர் கூறுகையில், புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் புறப்படும்போதே டீசல் போட டிரைவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் பணத்தை வாங்கிக் கொண்டு டீசல் போடவில்லை. அவரது அலட்சியத்தால் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என்றார்.

- மாலைச் சுடர்

சற்றுமுன்:உலகின் உயர்ந்த மனிதர் மணம்புரிந்தார்

உலகத்திலேயே அதிக உயரமானவரான சீனாவைச் சேர்ந்த பவொ ஜிஷன் மணம் முடித்துள்ளார். இவரது உயரம் 7அடி 9 அங்குலமாகும் இவரது மனைவியின் உயரம் 5 அடி 6 அங்குலம்.

படம்: CNN.com
செய்தி:CNN.com

சற்றுமுன்:வீட்டில் 80 ஆடுகளை வளர்த்தவர் கைது

அமெரிக்காவில், நார்த் காரொலினா மாநிலத்தில் வீட்டுக்குள் 80 ஆடுகளை வளர்த்தவர் விலங்குகளை கொடுமைப் படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் மேல் மாடியில் இவர் தங்கிவிட்டு கீழே ஆடுகளள வளர்த்துவந்தார்.

இதில் 30 ஆடுகள் தீவிரமாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவற்றை கருணைக் கொலை செய்துள்ளார்கள்.

Man keeps 80 sheep in his house, authorities say

சற்றுமுன்:குறைவாகப் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

1999-2000 முதல் 2004ஆம் ஆண்டில் வந்த புதிய 70மில்லியன் வேலைவாய்ப்புகளில் 42% நடுநிலைப் பள்ளிக்கும் குறைவாகப் படித்தவர்களுக்கே வந்துள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.
அடுத்ததாக ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் 18மில்லியன் வேலைகளைப் பெற்றுள்ளார்கள்.

Less educated corner new jobs Times of India

சற்றுமுன்:இராம நவமி கொண்டாடிய இஸ்லாமியர்கள்

ஒரிசாவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இராம நவமியை கொண்டாடினர். இராமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராம நவமி விழழ அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர் பலர் இந்துக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து விழாவில் பங்கெடுத்துள்ளனர்.

Muslims celebrate Ram Navami in Orrisa

சற்றுமுன்: ஆபாச தகவல் பரிமாற்றங்களுக்கு எதிராய் சட்ட திருத்தம்

சமீப காலமாக ஆபாச தகவல் பரிமாற்றங்கள் செல்போன்கள் மூலம் நடைபெறுகின்றன. இதை தடுக்கவும், இதைச் செய்பவர்களை தண்டிக்கவும் இந்தியன் பீனல் கோடில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஆபாச தகவல்களை அனுப்புபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். கூடுதலாக ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

Govt set to crackdown on obscenity

சற்றுமுன்: ஒருநாள் போட்டிகளில் இருந்து கும்ளே ஓய்வு

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறியவுடன் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய அணி வீரர்களிடம் கும்ளே இதனை தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 36 வயதாகும் கும்ளே உலகக்கோப்பைக்கு முன்பே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ளே 337 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: MSN Tamil

அண்ணாமலை பல்கலை. பி.இ. மாணவி தற்கொலை: மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம், மார்ச் 28: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விடுதியில் தங்கி பயின்ற பி.இ. மாணவி சாட்னா (20) திங்கள்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து செவ்வாய்க்கிழமை பொறியியல் புலத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துத் துறை மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலை வளாகத்தில் பூமாகோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனுவில் தற்கொலைக்கு காரணமாக இருந்த விரிவுரையாளர் மணிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செனட் மற்றும் சிண்டிகேட் மன்றத்தில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், ஆசிரியர்கள் - மாணவர்கள் பாலியல் நல்லுறவுக் குழு அமைக்க வேண்டும், மாணவி சாட்னா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சற்றுமுன்: புலிகள் விமானப்படை - இந்தியா ரேடார்களை அமைத்தது

விடுதலைப்புலிகள் இலங்கையில் விமானம் கொண்டு தாக்கியதை அடுத்து இந்திய விமானப் படை(IAF) 8 ரேடார்களை இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ளது.

IAF sets up radars after LTTE air strikeZee News
A team of 50 air force personnel, under a commander, would be posted there to monitor the skies, he said. There was also a plan to set up a permanent air-base near Seeniappa Dargah, the official, who wished not to be named, said. The decision to set up radar facility comes two days after LTTE made an aerial attack at a military airbase in Colombo, killing three persons and injuring 16.

India concerned over escalation of violence in Lanka Hindu

சற்றுமுன்: விவசாயிகளை மகிழ்விப்போம் - கருணாநிதி உறுதி

இலவச நிலங்கள் வழங்கி ஏழைகளை முடிந்தவரையில் மகிழ்விப்போம் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
அதிமுக நிதி நிலை அறிக்கையிலே, 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பி: ஏழை விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று தெரிவித்தோம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான், 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு இல்லை என்பது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்படை செய்யக் கூடிய அரசு புறம்போக்கு தரிசு நிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலம் 67 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலம் 7 லட்சம் ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பிலே உள்ள நிலத்தின் மதிப்பு, மொத்தமுள்ள நிலத்தின் பரப்பளவு ஆகியவற்றை கணக்கிட்டு, அதிகம் பேர் பயன்பெறும் வகையில் ஒரு ஏக்கர் என்றும், அரை ஏக்கர் என்றும், சில இடங்களில் 2 ஏக்கர் என்றும் தற்போது இலவசமாக நிலங்களை வழங்கி வருகிறோம்.

இந்த மூன்று கட்டங்களிலும் இதுவரை 77,118 ஏக்கர் நிலம், 71,755 குடும்பங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

- தினகரன்

அம்பலமாகும் அவலங்கள்

உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விகள் பல்வேறு கோணங்களில் அலசப்படும் நிலையில், உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணியில் தனக்கு உடன்பாடில்லை என்ற புதிய வெடியை கொளுத்திப் போட்டுள்ளார் அணியின் பயிற்சியாளர் சேப்பல். அணியில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் எனத் தான் கூறியதாகவும், அணியின் மூத்த வீரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விவரங்களுக்கு

சற்றுமுன்:தில்லியில் 55000 கடைகளுக்கு சீல் வைப்பு

தில்லியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் 55000 கடைகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சீல் வைக்கும் பணி நாளையிலிருந்து துவங்கவிருக்கிறது.

Sealing of 55000 illegal shops in Delhi from Wednesday
Over 55,000 Delhi shops to face axe from Wednesday DNA
Several Delhi shops to face axe from WedTimes of India, India

சற்றுமுன்: பெண்களுக்கான வயகரா அறிமுகம்

உடலுறவில் ஆர்வம் குன்றிய, மற்றும் குறைபாடுகளுடைய ஆண்களுக்கென வயகரா மாத்திரைகள் இருப்பதைப்போல பெண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டும் விதத்தில் வயகரா மருந்துப் பட்டைகள்(Patches) லண்டனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Female Viagra patch to boost women’s libido!Zee News
26 Mar 2007London, March 26: Viagra, the anti-impotence drug that has so far helped men who have lost their sex drive, will become available for women on the NHS (National Health Service) from this week.
Love is a patch on the bottom Times Online
The female Viagra hits the NHS Daily Mail

.

சற்றுமுன்: மைக்ரொசாப்ட் ஹிந்தி மென்பொருள் வெளியீடு

மைக்ரோசாப்ட்டின் Office 2007 ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

Microsoft 2007 Office released in HindiExpressindia.com
2007 Microsoft Office Goes Desi EFYTimes
Microsoft releases 2007 Office in Hindi CIOL

Tuesday, March 27, 2007

சற்றுமுன்: வருமானவரி - ஏமாற்றினால் குற்றவியல் குற்றம்

உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பொன்றில் வருமானவரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது குற்றவியல்(Criminal) வழக்கு தொடரலாம் எனக் கூறியுளது.

'வருமானவரி சட்டம் அபராதங்களை விரித்தபோதும், குற்றவியல் குற்றமாக கருதுவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை' என தீர்ப்பு சொல்கிறது.

IT defaulters liable for criminal prosecution: SC
"It is true that the Act (Income Tax) provides for imposition of penalty for non-payment of tax. That, however, does not take away the power to prosecute accused persons if an offence has been committed by them," a Bench of Justices C K Thakker and P K Balasubramanyan said, while dismissing an appeal filed by Madhumilan Syntex Limited, a company engaged in the production of yarn.

சற்றுமுன்:IIM கட்டண உயர்வு

பெங்களூர் மற்றும் இந்தூர் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணங்களை உயர்த்தியுள்ளன. IIM-B ரூ. 75,000மும் இந்தூர் ரூ.40,000மும் உயர்த்தியதில் பெங்களூர் ஐ.ஐ.எம்மின் புதிய கட்டணம் ரூ2.5 லட்சமாகவும் இந்தூரின் கட்டணம் ரூ. 1.90 லட்சமுமாக மாறுகிறது.

மற்ற நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IIMs in Bangalore, Indore hike fees; others to follow

சற்றுமுன்:ஐ.சி.சி Vs. யூ-ட்யூப்

கிரிக்கெட் குறும்படங்களை யூ-ட்யூபிலிருந்து எடுத்துவிடும்படி ஐ.சி.சி கூகுள் நிறுவனத்தை கேட்டுள்ளது. யூ-ட்யூபில் கிரிக்கெட் வீடியோ காட்சிகளை காண்பிப்பது ஒளிபரப்பு உரிமை மீறல் என ஐ.சி.சி கூறியுள்ளது.

இதை அடுத்து உலகக் கோப்பை குறும்படங்களை யூ-ட்யூப் அகர்ர ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.


YouTube removes WC cricket videos CIOL
ICC targets YouTube World Cup clips
ICC tells YouTube to remove World Cup video Expressindia.com

சற்றுமுன்: வால்மார்ட் , ரிலையன்ஸ்: சிறுத்தைகள் வரவேற்பு

ரிலையன்ஸ், வால்மார்ட் நிறுவனங் கள் பெருநகரப் பகுதிகளில் தான் கடைகளை அமைக்க முடியும் என்றும், இந்த நிறுவனங்கள் கிராமப் புறங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லை.

எனவே, இந்த நிறுவனங்களால் தமிழகத்தில் உள்ள சிறுவியாபாரி களுக்கோ, வணிகர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது; நகர்ப் பகுதிகளிலும் கூட இவற்றால் மளிகைக்கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

இந்த நிறுவனங்களின் கடைகளில் சந்தை விலையை விட பொருட்கள் குறைவான விலையில் கிடைப் பதால் பொதுமக்கள் இந்த கடை களை வரவேற்கின்றனர். இதனை உணர்ந்து ரிலையன்ஸ், வால்மார்ட் கடைகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் ரவிக்குமார்இந்த கருத்தை தெரிவித்தார்.

மாலைச் சுடர்

சூப்பர் 8 போட்டி அணிகள், தேதி

உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது சுற்றான சூப்பர்-8 பிரிவில் அணிகள் மோதும் தேதி, இடம் குறித்த விவரங்கள்:

மார்ச் 27: (ஆன்டிகுவா) மே.இ.தீவுகள் -ஆஸி.

மார்ச் 28: (கயானா) தென் ஆப்பிரிக்கா -இலங்கை.

மார்ச் 29: (ஆன்டிகுவா) மே.இ.தீவுகள்-நியூஸி.

மார்ச் 30: (கயானா) அயர்லாந்து-இங்கிலாந்து.

மார்ச் 31: (ஆன்டிகுவா) ஆஸி.-வங்கதேசம்.

ஏப்ரல் 01: (கயானா) மே.இ.தீவுகள்-இலங்கை.

ஏப். 02: (ஆன்டிகுவா) வங்கதேசம்-நியூஸி.

ஏப். 03: (கயானா) அயர்லாந்து-தென் ஆப்.

ஏப். 04: (ஆன்டிகுவா) இங்கிலாந்து-இலங்கை.

ஏப். 5 மற்றும் 6: ஓய்வுதினம்.

ஏப். 07: (கயானா) வங்கதேசம்- தென் ஆப்.

ஏப். 08: (ஆன்டிகுவா) ஆஸி.-இங்கிலாந்து.

ஏப். 09: (கயானா) அயர்லாந்து-நியூஸிலாந்து.

ஏப். 10: (கிரெனாடா) மே.இ.தீவு-தென் ஆப்.

ஏப். 11: (பார்படோஸ்) இங்கி.-வங்கதேசம்.

ஏப். 12: (கிரெனாடா) இலங்கை-நியூஸிலாந்து.

ஏப். 13: (பார்படோஸ்) ஆஸி.-அயர்லாந்து.

ஏப். 14: (கிரெனடா) தென் ஆப்.-நியூஸி.

ஏப். 15: (பார்படோஸ்) வ.தேசம்-அயர்லாந்து.

ஏப். 16: (கிரெனடா) ஆஸி.-இலங்கை.

ஏப். 17: (பார்படோஸ்) தென் ஆப்.-இங்கி.

ஏப். 18: (கிரெனடா) அயர்லாந்து-இலங்கை.

ஏப். 19: (பார்படோஸ்) மே.இ.தீவு-வங்கதேசம்.

ஏப். 20: (கிரெனடா) ஆஸி.-நியூஸி.

ஏப். 21: (பார்படோஸ்) மே.இ.தீவு-இங்கிலாந்து.

ஏப். 24: (ஜமைக்கா) அரை இறுதி.

ஏப். 25: (செயின்ட் லூசியா) அரை இறுதி.

ஏப். 28: (பார்படோஸ்) இறுதி.

சற்றுமுன்: அனா நிக்கோலி ஸ்மித் சாவில் துப்புதுலங்கியது

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி மாடல் அழகிஅனா நிக்கோலி ஸ்மித். இந்த அழகி நிக்கோலி பல கோடிகளுக்கு அதிபதி.

கடந்த சில வாரங்களுக்கு முன் அனாநிக்கோலி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? சொத்து தகராறில் இந்த கொலை நடந்ததாப அவர் விஷம் தின்று தற்கொலை செய்தாரா என்று தீவிர விசாரணை நடந்தது. பிரேத பரிசோதனை முடிந்ததும்கூட பல நாட்களுக்குப்பிறகு தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அனாநிக்கோலி சாவில் நீடித்த மர்மம் இப்போது நீங்கி விட்டது. நிக்கோலி அளவுக்கு அதிகமாக மருந்து மற்றும் போதை மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர். ஓட்டலில் தங்கி இருந்த போது அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டார். ஊசியும் போட்டுக்கொண்டார்.
- மாலை மலர்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களில் தாவரவியல் பூங்காவும் ஒன்று. 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா பார்ப்பதற்கு ரம்யமாக காட்சி அளிக்கும். 2 லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

கண்ணுக்கு குளுமையாக காட்சி அளிக்கும் தாவரவியல் பூங்காவில் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறும்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தர முடியாது என்பதால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜுன் 1-ந்தேதி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.

இதேபோல் ரோஜா பூங்காவிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை அதி காரிகள் அறிவித்துள்ளனர்.

- மாலை மலர்

தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை கண்டறியாதது குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

புது தில்லி, மார்ச் 27: தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் நிலையில், பிற்பபடுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாதது குறித்த பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரளத்தில், பிற்பபடுத்தப்பட்டோரில் வசதி படைத்தோர் (கிரீமி லேயர்) குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இன்னொரு பெஞ்ச் அளித்த தீர்ப்பை அடுத்து, இப் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை அறிவித்தது. மாநிலத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்தியார்ஜுனா, 69 சத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ள நிலையில், அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறிய வேண்டும் என, "வாய்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் மனுத் தாக்கல் செய்த தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன், மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாத ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழகம் இவ்வளவு ஆண்டுகளாக உதாசீனப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், 69 சத இட ஒதுக்கீடு சட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், அதை தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

""கேரள பிரச்சினை தொடர்பான சமீபத்திய தீர்ப்பை அடுத்து, இப் பிரச்சினையை கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் விசாரிக்கும். 69 சத இட ஒதுக்கீடு தொடர்பான மனுவையும் விசாரிப்போம். தேவைப்பட்டால், தற்போதைய மனுவை 69 சத இட இட ஒதுக்கீட்டு மனுவுடன் சேர்த்து விசாரிப்போம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

"வாய்ஸ்' அமைப்பு தனது மனுவில், தமிழகம் பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை இனம் காணாமல் இருப்பதன் மூலம், உண்மையாக இட ஒதுக்கீடு தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. கல்வி மற்றும் மாநில அரசுப் பணி ஆகிய இரண்டிலுமே அந்தப் பயன்கள் மறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மண்டல் வழக்கில் வசதி படைத்தோர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இட ஒதுக்கீட்டிலிருந்து வசதி படைத்தோரை விலக்கி வைப்பதற்காக அவர்களைக் கண்டறிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு தகுதியற்றது என்று அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

வசதி படைத்தோரைக் கண்டறியாமல் இருப்பதன் மூலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோரில் உண்மையான இட ஒதுக்கீடு தேவைப்படுவோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது வெறும் கற்பனை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Dinamani

சற்றுமுன்: 10, 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாசில் பால், பிஸ்கட்

மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பால், பன், பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

- மாலை முரசு

சற்றுமுன்:ஐஸ்வர்யா - அபிஷேக் கல்யாணதேதி அறிவிப்பு


வெகுநாட்களாக ஊடகங்களில் பலவித ஆரூடங்களை எழுப்பி வந்த பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமணம் எளிய முறையில் அமிதாப் பச்சனின் மும்பை ஜுஹூ இல்லத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஜனவரி 14 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.


DNA - After Hrs - செய்தி

சற்றுமுன்: மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள்் தாக்குதல்

இன்று மட்டக்களப்பு செங்காலடி இராணுவமுகாமை விடுதலைபுலிகளின் தற்கொலைப் படையொன்று நடத்திய தாக்குதலில் நான்கு பேர் மரணமடைந்தனர், பதினாறு பேர் காயமுற்றனர். டிரைலருடன் கூடிய ட்ராக்டர் வண்டியில் வெடிப்பொருள்களை கொணர்ந்து முகாமின் வாயிலருகே வெடித்ததில் சில சிவிலியன்களும் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றபோதும் மேல் விவரங்கள் தெரியவில்லை.


LTTE strikes again - World-Sections-TIMES NOW.tv

சற்றுமுன்: இஸ்ரேல் பாலஸ்தீன அரசுடன் பேச்சுக்களுக்கு சம்மதம்

இஸ்ரேலிய பிரதமர் ஒல்மெர்ட் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட சம்மத்திதுள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலர் காண்ட்லெஸ்ஸா ரைஸின் தீவிர தூதுமுயற்சிக்குப் பிறகு தீவிரவாத அமைப்பான ஹமாஸின் கீழ் இயங்கும் பாலஸ்தீன அரசுடன் பேச மாட்டேன் என அடம் பிடித்த ஒல்மெர்ட் குறைந்தபட்ச பேச்சுக்களுக்கு உடன்பட்டார். இது நம்பிக்கையை வளர்க்கும் என்றும் பின்னால் முழுஅளவு பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்றும் அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்பாத அதிகாரிகள் கூறினர்.
மேலும் விவரங்களுக்கு.. Los Angeles Times

இந்தியரை கவர குவைத்தில் சட்டம் தளர்வு.

இந்திய தொழிலாளர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் குவைத் அரசு தனது தொழிலாளர் சட்டத்தை தளர்த்தி உள்ளது எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள விரிவாக்கமே இதற்க்கு முழுக்காரணம்.

நன்றி: தமிழ் சுடர்

சற்றுமுன்:-பெண்ணுறை வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் பெண்பாலியல் தொழிலாளர்களுக்கு பெண்ணுறையை விநியோகிக்கும் மிகப்பெரிய திட்டம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையமும், வேறு சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கின்றன.
இதன்படி, மாநிலத்தில் இருக்கும் சுமார் மூவாயிரம் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு, அடுத்த நான்கு மாத காலத்தில் அறுபதாயிரம் பெண்ணுறைகள், மிகக்குறைந்த விலையில் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

பெண் பாலியல் தொழிலாளர்கள் மூலம் எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அவர்களிடம் வரும் ஆண் வாடிக்கையாளர்கள் ஆணுறையை அணிய மறுக்கும் சூழல்களில், இந்த பெண்ணுறை அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்கிற கருத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளாளும், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களாலும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், பெண்ணுறை என்பது, பாலியல் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், சராசரி பெண்களுக்கும் கூட, பால்வினை நோய்களிலிருந்தும், தேவையற்ற கருத்தரிப்பிலிருந்தும் பாதுகாப்பளிக்கும் என்கிற கருத்தும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.

பெண்களின் பாலியல் சுதந்திரம் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் இந்த பெண்ணுறை ஆக்கப்பூர்வமான பங்காற்றக்கூடிய சாதனமாக உருவெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதன் பல்வேறு பரிமாணங்களை அலசும் பெட்டகத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஒலிவடிவில் :- www.bbc.co.uk/tamil/wcondom.ram

நன்றி: பிபிசி-தமிழ்

சற்றுமுன்: ஏப்ரல் 6ல் பிசிசிஐ செயற்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்ய அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் பிசிசிஐயின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.

இந்த கூட்டத்தில் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல், அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர் பதவி குறித்தும், மற்ற வீரர்களின் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.


"Yahoo Tamil"

Monday, March 26, 2007

அதிர்ச்சித்தோல்விகள் தொடர்கின்றன

சோனி எரிக்சன் ஓப்பன் 3.45 மில்லியன் டாலர் மொத்தப் பரிசுத்தொகைக்கான டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்து வருகிறது.

இதன் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் இன்று நடந்து வருகின்றன.


நான்காம் நிலை வீரர் ரஷ்யாவின் நிக்கோலாய் டாவிடென்கோ , அமெரிக்க நாட்டின் அறிமுக நிலை வீரரான அமெர் டெலிக்கிடம் 6-7,3-6 என்ற செட் கணக்கில் தோற்றுப்போனார்.

முன்னதாக நேற்று நடந்த ஆட்டங்களில் ஐந்தாம் நிலை ஆட்டக்காரர் சிலி நாட்டின் ஃபெர்ணாந்தோ கன்ஸாலஸ், பிரான்சு நாட்டின் வீரரான பால் ஹென்ரி மாத்யூவிடம்
6-3,7-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்றுப்போனார்.

உலகின்முதல் நிலை ஆட்டக்காரர் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் இன்று ஸ்பெயின் நாட்டின் நிக்கோலஸ் அல்மாக்ரோவிடம் மோத உள்ளார்.


சோனி எரிக்சன் , ஏடிபி டென்னிஸ்

சற்றுமுன்: விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரேமலதா மேல் முறையீடு செய்தார்
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எச்.கே.சீமா, எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மண்டபத்தை இடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், கோயம்பேடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் கட்ட வழி விடும்படி அறிவுரை கூறியது.

இதையடுத்து, "மண்டபத்தை ஒப்படைக்க ஒரு வாரம் கால அவகாசம் தர வேண்டும்' என பிரேமலதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விசுவநாத அய்யர் கேட்டார். அதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.

- தினமலர்

சற்றுமுன்: கனடா பட்ஜெட் - அறிவியலுக்கு கிடைத்த வரம்.

கனடா அரசாங்கம் அறிவியலுக்கு சுமார் $9.2 billion ($7.82 billion U.S.) பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. இது அறிவியலுக்கு கிடைத்த வரம். இதன் மூலம் அறிவியல் வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது.

"செய்தி: SCIENCEMAG.ORG"

சற்றுமுன்: அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டது.


அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய ஆராயச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 அக்டோபர் மாதம் இவை குளோன் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

"Discovery News"

சற்றுமுன்: குடும்ப டி.வி. வருமான கணக்கை தர தயாரா? கருணாநிதிக்கு ஜெ சவால்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள "சன்' குழும டி.வி.க்களின் வருமான கணக்கை அளிக்கத் தயாரா என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.

"மாலைச் சுடர் முழு செய்திக்கு இங்கே செலுங்க.."

சற்றுமுன்: சச்சின் மாதிரி உள்ளவரா விடாதே பிடி, அடி

சச்சின், ஷேவாக், டோனி போன்ற கிரிக்கெட் வீரர்கள் போன்று முகத்தோற்றம் உடையவர்கள் ஓடி ஒளிய வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கிரிக்கெட் வீரர்களை போன்ற உருவம் உடையவர்கள் அவ்வப்போது தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் விழாக்களில் தோன்றி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்று வந்தனர்.

ஆனால் இன்று அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள தாகவும், பொதுமக்களுக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தை சேர்ந்தவர் யோகேந்திர ஷா, இவர் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக்கை போன்ற முகத்தோற்றம் உடையவர். இதனால் "ஜி' டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். இந்திய அணி இலங் கையிடம் தோல்வி யுற்றதால் இவரது தெருவில் வசிப்பவர்கள் இவரை ஷேவாக் என்று நினைத்து அடிக்க வருவதாக கூறுகிறார்.

அதேபோன்று ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் ரத்தோர் பார்ப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் போல தோற்றமளிப்பார். முகேஷ் பட்டேல் என்பவர் விக்கெட் கீப்பர் டோனியை போன்று பார்ப்பதற்கு இருப்பார்.

இவர்கள் இருவரையும் பகுதிவாழ் மக்கள் தற்போது வெறுப்புடன் பார்ப்பதாகவும், வசைபாடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஏச்சுக்கு பயந்து இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல முடிவெடுத் துள்ளனர். இந்திய அணியின் தோல்வி யார் யாரை எல்லாம் எப்படி எப்படியெல்லாம் பாதிக்கிறது.

- மாலைச் சுடர்

சற்றுமுன்: அமிதாப், ஜானி டெப் மீரா நாயரின் படத்தில்

மீரா நாயர் 'தெ நேம்சேக்' (The Namesake) படத்துக்கு அடுத்ததாக ஷந்தரம் எனும் படத்தை இயக்கவிருக்கிறார். கிரகரி டேவிட் ராபர்ட் என்பவரின் நாவல் இது.

இந்தப்படத்தில் டானாக(Don) அமிதாப்பும், மும்பை சேரிகளில் திடீரெனத் தன்னை உணரும் போதைக்கு அடிமையான வெளிநாட்டவராய் ஜானி டெப்'ம்(Johny Depp) நடிக்கவுள்ளனர்.

மற்ற மீரா நாயர் படங்களைப்போலால்லாமல் பெரிய பட்ஜட் படமாக இது அமையும் என மீரா நாயர் தெரிவித்திருக்கிறார்.

Mira Nair ropes in Bachchan, Depp for next movie

தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு முன்வரைவு பட்டியலை திரும்ப பெறக் கோரி ஏப். 22 முதல் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை, மார்ச் 26: தமிழக நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு முன்வரைவுப் பட்டியலை திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி ஏப்ரல் 22 முதல் போராட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்:

"30 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பில் தமிழகத்தில் இதுவரையிலும் 30 மாவட்டங்களிலும் பரவலாக 7 மக்களவை தனித் தொகுதிகள் இருந்தன. தற்போதைய வரைவுப் பட்டியலில் வட தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மட்டும் தனித் தொகுதிகள் உள்ளடங்குமாறு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள், மேற்கு மாவட்டங்களில் உள்ள அருந்ததியர் இன மக்கள் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாத வகையில் நாடாளுமன்றத் தனித் தொகுதிகள் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தற்போது

  • காஞ்சிபுரம்,
  • நாகப்பட்டினம்,
  • சிதம்பரம்,
  • விழுப்புரம்,
  • கள்ளக்குறிச்சி,
  • கடலூர்,
  • திருவள்ளூர்
ஆகிய தொகுதிகள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது இரு மாவட்டங்களில் தலா இரு தொகுதிகள் இடம்பெற்றிருப்பதைக் காட்டுகிறது. எனவே, வெளியிடவுள்ள மறு சீரமைப்பு முன் வரைவுப் பட்டியலைத் திரும்பப் பெற வேண்டும். மாவட்ட, ஒன்றிய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உள்பிரிவு சாதிகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன்பின் மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே உள்ள
  • தென்காசி,
  • பொள்ளாச்சி,
  • ராசிபுரம்,
  • பெரம்பலூர்
போன்ற தொகுதிகள் தனித் தொகுதிகளாக நீடிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டம் நடத்த தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் அமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது."

Dinamani

சற்றுமுன்: நந்திகிராம்: சிபிஐ விசாரணை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

மார்ச் 14இல் நடந்த நந்திகிராம் துப்பாக்கிச்சூடு பற்றிய சிபிஐ விசாரணையை தொடர மறுத்து கொல்கொத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புலானாய்வு துறை இதுவரை கண்ட ஆதாரங்களை சீலிட்ட உறைகளில் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டது. முன்னதாக கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஊடக செய்திகளின் அடிப்படையிலும் ஆளுநரின் அறிக்கையை கொண்டும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேல் விவரங்களுக்கு The Hindu News

மஞ்சுநாத் வழக்கில் பிகே மிட்டலுக்கு தூக்கு

இன்று மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப் பட்டது. முதல் குற்றவாளியான பெட்ரோல் பங்கு உரிமையாளர் பவன் குமார் மிட்டலுக்கு தூக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது.மற்ற ஏழு குர்றவாளிகளுக்கும் மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


மேலும். Zee News -

ஸ்ரீலங்காவில் புலிகள் தாக்குதல் குறித்து இந்திய அரசு கவலை

இன்று கொழும்பு விமானநிலயத்தின் மீது நடந்த வான்புலிகளின் தாக்குதல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக ஒரு போராட்டக் குழு இத்தைகைய வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தளத்திலிருந்து கொழும்புவரை சென்று தாக்குதலை நடத்தி பத்திரமாக மீளவும் முடிந்திருக்கிறது என்றால் தமிழகத்தின் பல பகுதிகளை புலிகள் எளிதாக தாக்க முடியும். இருப்பினும் அவர்களால் தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ உடனடி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


மேலும்..DNA - India

சற்றுமுன்: சினிமா: நடிகை இரம்பா போஜ்பூரி படங்களின் புது ஸ்டார்


தமிழ்படங்களில் நடித்த நடிகை ரம்பா தற்போது பாட்னாவில் போஜ்பூரி படங்களில் வெற்றிநடை போடுகிறார்.


இது பற்றிய செய்தி..

சற்றுமுன் : வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம்: கபில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக இந்திய வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம் என்று கபில்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கோல்கட்டாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விளையாட்டில் இதுபோன்ற தோல்விகள் உண்டாவது இயல்பானது. இதற்காக ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றார். தோல்விகாக கிரிக்கெட் வீரர்களின் வீடுகளை ரசிகர்கள் தாக்கக்கூடாது என்ற கபில், இது தவறான செயல். வீரர்கள் தேடித்தந்துள்ள வெற்றியை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சற்றுமுன்: கட்டுனாயக்க இராணுவ விமானத்தளத்தில் வான்புலிகள் தாக்குதல்

மார்ச் 26, 2007 - இன்று அதிகாலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு, கொழும்புக்கு அருகில் அமைந்த கட்டுனாயக்க இராணுவ விமாளத்தளத்தின் மீது வான் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியது. இது வான்புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முதல் அதிகாரப்பூர்வத் தாக்குதலாகும். இதனால், வான்புலிகள் அமைப்பு இருப்பது உறுதிப்படுகிறது. இதில் இருவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்த இரண்டு இலகு ரக விமானங்களை வான்புலிகள் பயன்படுத்தி உள்ளனர். இலங்கை விமானப் படையின் தாக்குதல் திறத்தை குறைப்பதற்காக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

மேலும் அறிய -

TimesNow.tv

சற்றுமுன்:பங்ளாதேஷில் பறவைக்காய்ச்சல்

பங்ளாதேஷில் பறவைக் காய்ச்சல்(Bird Flu) பரவியுள்ளதாகத் தெரிகிறது. அங்குள்ள பண்ணைகளிலிருந்து சுமார் 5,600 கோழிகள் கொன்றழிக்கப்பட்டன.

Bird flu detected in Bangladesh, 5600 chickens killedPeople's Daily Online - 23 Mar 2007
Bird flu enters Bangladesh Financial Express.bd
Bangladesh says detects bird flu in poultry Reuters India

நாய் வாலை நிமிர்த்த முடியும்




சேலம: தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் பல்துறை விளக்க கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக சேலம் போஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை இதில் நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்தது கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்து சத்யா, எனது நண்பர் நாய் வாலை நிமிர்த்த முடியுமா என சவால் விட்டார். சாவலில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக நாய்க்கு தினமும் பயிற்சி அளித்தேன். முதலில் நாய் வாலை நிமிர்த்த ‘ஸ்டேக்‘ (சிறு நாடா) கட்டி வைத்தேன். தினமும் 10 நிமிஷம் வாலை நீவி விட்டேன். 7 மாத கால பயிற்சிக்கு பின் நாய் வால் நிமிர்ந்து விட்டது.

Sunday, March 25, 2007

அஸ்த்ரா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட வான் வெளியிலிருந்து வானில் உள்ள இலக்குகளை சென்று தாக்கவல்ல அஸ்த்ரா ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து முற்பகல் 11.56 மணிக்கு இந்த சோதனை நடைபெற்றதாக பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஏவுகணையின் செலுத்து தூரம் 80 கி.மீ. வேகத்தில் சென்று தாக்கக்கூடியது என்றும், செலுத்து வேகம் 0.6 முதல் 2.2 மேக் வரை இருக்கக்கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் 3,750 மிமீ நீளமும், 178 மி.மீ குறுக்களவையும் கொண்ட ஏவுகணை அஸ்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்

சற்றுமுன்: நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் : பெர்முடா கேப்டன்.

இலங்கை அணியிடம் தோல்வி கண்டு உலக்க்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்து விட்ட இந்திய அணி வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இன்றைய நாளை எதிர் நோக்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெர்முடா அணி வங்க தேசத்தை வெற்றி கொண்டால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு போகமுடியுமாம். இந்த குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி இந்தியா...!

இதில் பெர்முடா கேப்டன் வேறு நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

சற்றுமுன்: ஜப்பானில் கடும் நில நடுக்கம்

மத்திய ஜப்பான் கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.

மேலும் அறிய -
வாஷிங்டன் போஸ்ட்
தட்ஸ்தமிழ்

சற்றுமுன்: ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலி.

புதுக்கோட்டை மார்ச் 25,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலிமலை உள்ள விராலுரில் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது இதில் சுற்று வட்டாரம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள்முட்டி கல்குத்தாப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(35) உட்பட 20 பேர் காயமடைந்தனர் இதில் சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்தார்.

சற்றுமுன்: ராமேஸ்வரம் கடலில் 12 மீனவர்களை காணவில்லை.

குளச்சலில் இருந்து ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களை காணவில்லை அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Saturday, March 24, 2007

சற்றுமுன்: இரான் எண்ணைக் குழாய் - இந்தியா தொடரும்

இரானிலிருந்து பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரி எண்ணை கொண்டு வரும் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இன்று, திட்டத்தை இந்தியா செயல்படுத்தும் என்றும் வேறெந்த நாடும் அதை கைவிடும்படி இந்தியாவை வற்புறுத்த இயலாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தியோரா பதிலளித்துள்ளார்.

India can't be pressured on Iran pipeline project: Deora
Unfazed by concerns expressed by the US on the proposed USD 7.2 billion Iran-Pakistan-India (IPI) gas pipeline, India today said it will go ahead with the project and no country can pressure New Delhi to scrap it.

"I don't see any problem (on IPI pipeline). No country can debar India from this project. No country can pressure us. We are committed to this," Union Petroleum Minister Murli Deora told reporters here.

"I can't give any timeframe. The advisors have been appointed and they are preparing the feasibility report. It is too early to say at this stage," he said.

EDITORIAL: Handle pipeline politics cautiously Daily Times
India to go ahead with the Iran gas pipeline: Deora Daily News & Analysis

சற்றுமுன்:தெல்கிக்கு 10 ஆண்டுகள் சிறை

முத்திரைத் தாள் மோசடியில் பிடிபட்ட தெல்கிக்கும் மற்றும் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

Telgi sentenced to 10 years in prison
A court in Bangalore has sentenced Abdul Kareem Telgi and four others to 10 years in prison and imposed a fine of Rs 50,000 on each of them in a case of cheating. The court found them guilty of forgery and cheating the government and a private company of around Rs 42 lakh. They forged documents to register a private company's property worth nearly Rs 4 crore. The case is one of 28 being probed by the CBI in which Telgi is an accused.

Telgi, 4 aides sentenced to 10 years RI Daily News & Analysis
Bangalore: Scam king Telgi sentenced CNN-IBN

சற்றுமுன்:உல்மர் கொலை : 2 பாக் வீரர்கள் தங்கியிருக்க உத்தரவு

கொலைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் வழக்கு விசாரணையில் வெள்ளியன்று புதிய திருப்பம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஜமைக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அணியின் மற்ற வீரர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜமைக்கா தொலைக்காட்சியின் தகவலின்படி இரண்டு வீரர்கள் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் அந்த வீரர்கள் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

பாப் உல்மர் கொலை விசாரணையை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரி மார்க் ஷீல்ட்ஸ், முன்னதாக சந்தேகத்துக்குரிய நபர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்தவில்லை.

உல்மர் கொலை செய்யப்பட்ட விதம் பற்றி ஷீல்ட்ஸ் தெரிவிக்கையில், அறையில் எதுவும் உடையாத நிலையில் கொலையாளியை உல்மர் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

உல்மரின் தோற்றதை வைத்துப் பார்க்கும்போது ஒருவருக்கு மேற்பட்டோர் இந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி: MSN TAMIL

சற்றுமுன்: இந்தியா தோல்வி - கருத்துக்கள்

உலகக் கோப்பையில் இந்திய அணி பரிதாபமாக தோற்றதை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரயில்வே மந்திரி லாலு 'மூத்த வீரர்கள்'தான் தோல்விக்கு காரணம் என்றிருக்கிறார்.
Lalu blames senior players for rout

BCCI பரிதாபகரமான(Pathetic) தோல்வி என வர்ணித்திருக்கிறது. 'முற்றிலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தரும் விஷயம்' என்கிறார் துணை தலைவர் சுக்லா.
Defeat, a serious jolt: BCCI vice president

பாஜக சார்பில் வெளிவந்த அறிவிப்பில் 'இந்திய டீம் சீரியசாக ஆடவேண்டும், ரசிகர்கள் நிதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது
Indian team must be more serious, fans less passionate: BJP

இளம் வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக BCCI தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களை ஊக்குவிக்க முடிவு

தோல்விக்கு ஒட்டுமொத்த வீரர்களும் பொறுப்பு - சேப்பல்

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது - டிராவிட்

இந்தியாவிற்கு சூப்பர் 8 வாய்ப்புள்ளது - ஜெயவர்த்தனே

சற்றுமுன்: கேரள பத்திரிகையாளர் மீது சிபிஐ விசாரணைக்கு சிபிஐ கோரிக்கை

கேரளா பத்திரிக்கையாளர்கள் சிஐஏ உளவாளிகள் என்ற கேரள முதல்வரின் கூற்றை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி (ஐ)்(CPI) யின் மாநில செயலர் வெளியம் பார்கவன் மத்திய புலனாய்வு துறை ( CBI or RAW) மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

CPI for probe into CIA funding of Kerala journalists

சற்றுமுன்: பீகாரில் நிலத்தகராறில் மூவர் எரித்துக் கொலை

பீகாரில் நிலத்தகராறு ஒன்றில் நேற்று ஒரு பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் எரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

மேலும்..

சற்றுமுன்: சாகீர்கானுக்கு சொந்தமான ஓட்டல் மீது கல்லெறி

நேற்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா ஸ்ரீலங்காவிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து புனே கிரிக்கெட் இரசிகர்கள் வேகப் பந்து வீச்சாளரான சகீர் கானிற்குச் சொந்தமான ZK's என்ற உணவகம் மீது கல்லெறிந்து கண்ணாடி முகப்பினை உடைத்தனர் என புனே காவல்துறை கூறியது. ஆனால் அவரது உடன்பிறப்பான அனிஷ் கான் இதை மறுத்துள்ளார்.

இது பற்றி மேலும்..

தவிர மகேந்திரசிங் தோனி முக்கிய ஆட்டங்களில் பூஜ்யம் அடித்ததை ஒட்டி அவரது வீட்டிற்கும் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கும் பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இதேபோல ஜலந்தரில் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீட்டிற்கும் மும்பை புறநகர் பாந்த்ராவில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் வீட்டிற்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதுபற்றி..

சற்றுமுன்: மீனவ பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய கடற்படை வீரர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் இந்திய கடற்படை வீரர். அவரை போலீசார் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரம் என்ற இடத்தில் கடற்கரையில் குடிசைகள் உள்ளன. மீனவர்கள் வசிக்கும் இந்த குடிசை வீடுகளில் ஒன்றில் சங்கர் என்பவரும் அவரது மனைவி தனலட்சுமியும் (27) வசித்து வருகின்றனர்.

இரவு வீட்டின் வெளியில் சங்கர் படுத்திருந்தார். வீட்டுக்குள் தனலட்சுமி உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 2 மணியளவில் கடற்கரை செக்போஸ்ட் பணியில் இருந்த இந்திய கடற்படை வீரரான அமித்குமார் (24) என்பவர் சங்கரின் வீட்டுக்குள் பின்பகுதி வழியாக நுழைந்தார். தனலட்சுமியை மானபங்கம் செய்ய முயன்றார்.

இதையடுத்து அவர் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சங்கரும் பிற மீனவர்களும் வந்து அமித்தை பிடித்து உதைத்து ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால், தகவல் அறிந்த கடற்படையினர் ராமேஸ்வரம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அமித்குமாரை விடுவிக்குமாறு வாக்குவாதம் செய்தனர்.

ஆனால், இதை போலீசார் ஏற்கவில்லை. ராமநாதபுரம் எஸ்.பி. திருஞானம் உத்தரவைத் தொடர்ந்து கடற்படை வீரர் அமித்குமாரை கைது செய்யப்பட்டார்.

News Sources That's Tamil

சற்றுமுன்:ஜம்முகாஷ்மீரில் மதக் கலவரங்களால் ஊரடங்கு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ச் மாவட்ட மெந்தர் என்ற எல்லையோர நகரில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து மாவட்ட நிர்வாகம் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு..

சற்றுமுன்:இரான் பிரிட்டிஷ் கடற்படைவீரர்களை பிடித்தது

பெர்சியன் கல்ஃபில் ரோந்து செய்துகொண்டிருந்த 15 பிரிட்டிஷ் கடற்படை வீரர்களை இரானிய காவலர்கள் துப்பாக்கிமுனையில் பிடித்துச் சென்றனர். இரானிற்கு எதிரான பொருளாதார தடை பற்றி ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்க இருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்....

கேரளா பள்ளி பாடத்தில் சினிமா.

கேரள மாநில பள்ளிபாடத்திட்டத்தில் சினிமாவும் இடம் பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.கே. பேபி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சற்று முன்: திருட்டுத்தனமாக லண்டன் பறந்த 2பேர் கைது!

சென்னை விமான நிலையதில் இருந்து ஃப்ரான்ஸ் நாட்டின் விமானம் (ஏஎப்201) 266 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டது அதில் குடியுறிமை சான்றிதழ் பெறாமலேயே இருவர் பயணம் செய்வதாக ஃப்ரான்ஸ் தலைமை கட்டுபாட்டு அதிகாரிக்கு தகவல் தரப்பட்டது.இதன் அடிப்படையில் ஃப்ரான்ஸ் விமான நிலைய பாதுக்கப்பு அதிகாரிகள் அவ்விமானத்தை முற்றுக்கையிட்டு இருவரையும் கைது செய்து சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டனர்.
அவர்களிடம் சென்னை விமான நிலைய பாதுக்காப்பு அதிகாரிகள் துருவிதுருவி விசாரரித்து வருகின்றனர்.

தமிழ் சுடர்

சற்றுமுன்: தெற்கு வசிரிஸ்தான் மோதல்களில் 160 பேர் பலி

பாகிஸ்தானின் வட மேற்கே, தெற்கு வசிரிஸ்தானில் உள்ளூர் பூர்வ குடியினருக்கும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கும் இடையில் இந்த வாரம் நடந்த மோதல்களில் 160 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாநிலத்தின் ஆளுனர் இது குறித்துத் தகவல் தரும்போது, கொல்லப்பட்டவர்களில் 130 பேர் உஷ்பெக்கிஸ்தானியர்கள் அல்லது செச்சினியர்கள் என்றும் சுமார் 30 பேர் உள்ளூர் பூர்வ குடிகள் என்றும் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வெடித்த இந்தச் சண்டையில் தமது இராணுவத்தினர் சம்பந்தப்படவேயில்லை என்பதை பாகிஸ்தான் அரசு முன்னர் மறுத்திருந்தது.

The Hindu : International : Ceasefire in Waziristan

வாழ்வா? தாழ்வா போராட்டத்தில் இந்திய அணி படு தோல்வி

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் உலகக்கோப்பை 'பி' பிரிவுப் போட்டியில், 255 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

துவக்க வீரர்கள் கங்குலி 7 ரன்னுக்கும், உத்தப்பா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சமிந்தா வாஸ் கைப்பற்றினார். 27 பந்துகளைச் சந்தித்து 18 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, வாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 25ஆக இருந்தது.

ஓரளவு தாக்குப் பிடித்த வீரேந்திர ஷேவாக், 46 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து முரளீதரன் பந்துக்கு இரையானார். பொறுப்பின்றி விளையாடிய டெண்டுல்கரும், தோனியும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 6 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் உபுல் தரங்கா 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தில்ஷான்- சில்வா ஜோடி இந்திய பந்து வீச்சை திறமையாக சமாளித்து ரன் குவித்தது. எனினும், 38 ரன்கள் எடுத்த நிலையில் படேல் பந்தில் தில்ஷான் ஆட்டமிழந்தார். 59 ரன்கள் குவித்த சில்வாவின் விக்கெட்டை டெண்டுல்கர் கைப்பற்றினார். வாஸ் மற்றும் அர்னால்டு ஆகியோர் தலா 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் ஜாஹிர்கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அகர்கர், முன்னாப் படேல், டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை
* 50 runs in 11 overs
* 100 runs in 25.1 overs
* 150 runs in 35.1 overs
* 200 runs in 43.5 overs
* 250 runs in 49.4 overs

இந்தியா
* 50 runs in 12.4 overs
* 100 runs in 23.1 overs
* 150 runs in 36.4 overs

இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்?!

இந்தியா தொடர்ந்து மோசமாக விளையாடிவருகிறது. இதுவரை 6 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தோல்வியின் விளிம்பில் இருக்கும் இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு முழுபாதுகாப்பு-ஐசிசி உறுதி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் தங்கியிருக்கும் எஞ்சிய நாட்களில் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஐசிசி உறுதி கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அணி நிர்வாகத்திற்கு ஐசிசி அனுப்பியிருக்கும் கடிதத்தில் இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உல்மர் கொலையைத் தொடர்ந்து உருவாகியுள்ள பீதியால் இந்திய அணி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி ஐசிசி நேற்று கடிதத்தை அளித்திருப்பதாக போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அணிக்கான பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய அணியின் பாதுகாப்புக்கு மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரை செலவிட இருப்பதாக அறிவித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்திய அணியின் பாதுகாப்புக்கான உதவி ஆணையர் மதூப் குமார் திவாரி இந்திய அணியினருடன் பயணம் செய்து வருவதாகவும், இந்திய அணியினரை ஏற்கனவே சந்தித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

Thanks: MSN Tamil

இந்தியா திணறல்

இந்தியா 85 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட டென்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்புள்ள செய்தி: இந்திய அணி தோற்றால் ரூ.6ஆயிரம் கோடி நஷ்டம்

ஜேம்ஸ் பிளேக் தோல்வி

சோனி எரிக்சன் ஓப்பன் 3.45 மில்லியன் டாலர் மொத்தப் பரிசுத்தொகைக்கான டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்து வருகிறது.

இதில் இரண்டாம் சுற்றில், எட்டாம் நிலை ஆட்டக்காரரான அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளேக் , பிரான்சு நாட்டின் ப்ளோரெட் செர்ராவிடம் 6-7,6-2,3-6 என்ற செட் கணக்கில் தோற்றுப்போனார்.

Friday, March 23, 2007

இந்தியா பேட்டிங்

255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கள்மிறங்கியுள்ள இந்தியா 2 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.

நண்பர்களே விவாதங்களை இங்கு தொடரலாம்.

சற்றுமுன்: இலங்கை பாதுகாப்பான ஆட்டம் 127/3

இந்தியா இலங்கை அனிகலுக்குள்ளான (இந்தியாவுக்கு) முக்கியமான போட்டியில் டாசை வென்ற இந்திய அணி இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது.

30 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை இலங்கை எடுத்துள்ளது. தற்போதைய ஓட்ட வேகம் ஓவருக்கு 4.16

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் எனும் நிலையில் இந்தியா ஆடுகிறது.


Sri Lanka innings (50 overs maximum) R B 4s 6s SR

WU Tharanga not out 52 72 6 0 72.22
ST Jayasuriya c Agarkar b Khan 6 23 0 0 26.08
DPMD Jayawardene c Dhoni b Agarkar 7 20 1 0 35.00
KC Sangakkara c Patel b Ganguly 15 35 2 0 42.85
LPC Silva not out 6 8 0 0 75.00
Extras (lb 11, w 8, nb 1) 20

Total (3 wickets; 26.1 overs) 106

To bat TM Dilshan, M Muralitharan, WPUJC Vaas, RP Arnold, SL Malinga, CRD Fernando

Fall of wickets1-33 (Jayasuriya, 6.6 ov), 2-53 (Jayawardene, 12.4 ov), 3-92 (Sangakkara, 23.3 ov)

Bowling O M R W Econ
Z Khan 6 0 18 1 3.00 (1nb, 4w)
AB Agarkar 7 1 23 1 3.28 (3w)
MM Patel 6.1 1 20 0 3.24
Harbhajan Singh 4 0 17 0 4.25
SC Ganguly 3 0 17 1 5.66 (1w)

நேர்த்தியாக விளையாடும் இலங்கை

இந்தியா இலங்கைக்கு இடையே டிரினிடாடில் கிரிகெட் போட்டி நடைபெறுகிறது.

முதலில் பேட்டிங் துவக்கியுள்ள இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் தாரங்காவின் ஆட்டத்தினால் நேந்த்தியாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்திய அணியும் தன் பங்கிற்கு நன்றாகவே விளையாடுகிறது. தற்பொதுவரை இரு அணிகளுக்கும் சம் வாய்ப்பே

பார்க்கலாம் என்னவாகிறது என

சற்றுமுன்:15 இங்கிலாந்து கடற்படை வீரர்களை ஈரான் கைதுசெய்துள்ளது

பெர்ஷியன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் இருந்த 15 பிரிட்டிஷ் கடற்படை வீரர்களை ஈரான் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளது.
வீரர்களை உடனடியாக விடுவிக்கும்படி இங்கிலாந்து ஈரானை கேட்டுள்ளது.

வீரர்கள் ஈராக் கடல் பகுதியில் இருந்தனர் என இங்கிலாந்து வாதிடுகிறது.

Iran 'seizes' 15 British sailors
An Iranian naval patrol seized 15 British marines and sailors who had boarded a vessel suspected of smuggling cars off the coast of Iraq, military officials said.
The British government immediately demanded the safe return of its troops and summoned Tehran's London ambassador to explain the incident.

சற்றுமுன்: உலகக் கோப்பை இந்தியா X இலங்கை

இன்று ( 23-03-07)இந்தியா இலங்கைக்கு இடையே டிரினிடாடில் அதி முக்கியதுவம் வாய்ந்த மேட்ச் நடைபெறுகிறது.

இதில் டாஸில் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

சற்று முன்: ஜூன் 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

டைரக்டர் கனேஷ்ராஜ் மரணம்.

விக்னேஷ் நடித்த சின்னதாயி .சரவணன் நடித்த மாமியார் வீடு நெப்போலியன் நடித்த பரணி. ஆகிய படங்களை இயக்கிய கனேஷ்ராஜ் நுரையீரல் பாதிப்பு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார்.அவரின் உடலுக்கு நடிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலைமுரசு

சற்றுமுன்: கோயம்பேடு வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம்!

சென்னையில் ரிலையன்ஸ் நிறுவனம் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சில்லரை விற்பனை நிலையங்களை திறந்துள்ளது. மேலும் பல கடைகளை திரக்க முயற்ச்சி மேர்க்கொண்டுள்ளதுஇதை கண்டித்து அ தி மு க ஆதரவுடன்கோயம்பேடு வியாபாரிகள் இன்று உண்ணவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.பல ஊர்களில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

சற்றுமுன்: இரான் எண்ணெய் குழாய் திட்டம் U.S. எதிர்ப்பு

ஐக்கிய அமெரிக்க குடியரசு இரானிய எண்ணெய்/வாயு குழாய் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இரானின் அணுஆயுத வளர்ச்சிக்கு வித்திடுவதால் இந்தியா இத்திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்துவதாக யு.எஸ் எரிசக்தி செயலர் சாமுவல் போட்மன் மும்பையில் கூறினார். இதனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு பாதிக்கப் படாது என்றும் தெளிவுபடுத்தினார்.


U.S. Urges Delhi To Drop Iran Pipeline Project - Forbes.com

சற்றுமுன்;மஞ்சுநாத் கொலைவழக்கில் 8 பேருக்கு தண்டனை

உத்தரப் பிரதேச இலக்கிம்பூர் கேரியில் உள்ள மாவட்ட & செஷன்ஸ் நீதிமன்றம் இன்று IOC விற்பனை அதிகாரி மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த எட்டு பேரையுமே குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை மார்ச் 26 அன்று வழங்கப் படும்.

மேலும்...: CNN-IBN

சற்றுமுன்: ஜமைகா காவல்துறையின் முழு அறிக்கை:

ஜமைகா கன்ஸ்டபுலரி ஃபோர்ஸ் (JCF) இன்கிரிக்கெட் கோச் பாப் உல்மரின் மரணம் குறித்த முழு அறிக்கை:DNA - Sport - Daily News & Analysis

-o❢o-

b r e a k i n g   n e w s...