.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: 2015ம் வருடத்துக்குள் 1.5 கோடி வேலைவாய்ப்பு

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் புதிதாக 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என எத்திராஜ் மகளிர் கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி “வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கலை-அறிவியல் கல்லூரிகள் இணைந்து செயலாற்றுதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் எம். தவமணி, “இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 1.3 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. கலைக் கல்லூரி மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.



- தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...