.

Sunday, March 11, 2007

புனெயில் 10 குவி.போதைமருந்து சிக்கியது

சமீபத்தில் நடந்த களியாட்ட விருந்தைத் தொடர்ந்து புனெ காவல் நிகழ்த்திய தேடுதலில் 10 குவின்டால் அளவு கஞ்சா பிடிபட்டுள்ளது. ஆனால் தகவலறிந்து அங்கு சென்றபோது ஆளில்லா வீட்டிலேயே போதைப் பொருள் மட்டுமே கிடைத்தது.


Sahara Samay::

சிக்கிம் காவலர் சுட்டதற்கு பாலியல் வன்முறையே காரணம்

நாரி லப்சா, டில்லியில் இன்று ஐந்து சக காவலர்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளவர், தன்னை இறந்தவர்களில் ஒருவர் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப் படுத்தியதாலேயே தாம் உணர்ச்சிவயப்பட்டு இந்தக் கொலைகளைச் செய்ததாகக் கூறினார்.


இது பற்றி The Times of India

சற்றுமுன்னில் வந்த செய்தி

பெர்னாண்டஸ் போபர்ஸ் வழக்கில் வழுக்கு !

போபர்ஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பெர்னாண்டஸ் முன்னுப் பின் முரண். சர்சை வழுகிறது. அதாவது போபர்ஸ் வழக்கை கிடப்பில் போடும் படி வாஜ்பாய் சொன்னதாக முன்பு தெரிவித்தார் பெர்னாண்டஸ். பின்பு பாஜக கட்சிக்குள் பெர்னாண்டஸுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கவே, அவரே வழுக்கி 'வாஜ்பாய் விளையாட்டுக்குச் சொன்னதை தானும் விளையாட்டுக்கு தெரிவித்ததாகவும்' இன்று குறிப்பிட்டுள்ளார்.
போபர்ஸ் வழக்கில் பெர்னாண்டஸ் கில்லி ஆடியாதாக சன் செய்திகளின் வழி தெரியவந்துள்ளது.


சுறுக்கமாக :
முன்னாள் மும்பை தாதா ஹசன் அலியின் ரூ 4000 கோடி பணம் சுவிஸ் வங்கியில் இருப்பதாக கணனி ஆவணங்கள் முலம் தெரியவந்ததாக அவரை விசாரித்து வரும் அதிகாரிகள் தெடிவித்துள்ளனர். 5 முக்கிய அரசியல் வாதிகளின் பணமும் அதில் அடக்கமாம். மேலும் இறுக்கமாக நெருக்கமானவர்கள் பற்றி விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளின் மூலம் சன் நெட்வொர்க்.

'வாஜ்பாய் ஜோக் அடித்தார்':ஃபெர்னாண்டஸ்

போபர்ஸ் கோப்புக்களை திறக்கவேண்டாம் என வாஜ்பாய் ஜோக் அடித்தார் என்றும் தன் பேச்சை பத்திரிகையாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.


'Comments on Bofors file misquoted': Fernandes
Under attack from BJP on his reported remarks on Bofors, former Defence Minister George Fernandes on Sunday sought to downplay the controversy, saying then Prime Minister Atal Bihari Vajpayee was "joking" when he asked him not to touch the Bofors file."I have been misquoted in my interview. Vajpayee was joking when he asked me not to touch the Bofors file," he said.

இன்சாட் 4பி ஏவுதல் ஒத்திவைப்பு

இன்று விண்வெளியில் ஏவப்படவிருந்த இந்தியாவின் செயற்கைகோள் இன்சாட் 4பி ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாய் நாளைக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

டில்லியில் 5 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்

மத்திய டில்லியில் 5 சிக்கிம் போலீசார் அவர்களது சக ஊழியரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தெரிவித்த அதிகாரி ஒருவர், அதிகாலை 4.50 மணியளவில் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும். அங்கு சென்று பார்த்தபோது 5 பேர் சுட்டு கொல்லப்பட்டிருந்தாகவும் , மற்றொருவர் படுகாயமடைந்திருந்தாகவும் தெரிவித்தார். காயமடைந்த போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

source தினமலர், THE HINDU

CHENNAI CENTRAL PREPAID ஆட்டோ கட்டணங்கள்

கீழுள்ள PDF கோப்பில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல ஆட்டோ முன் கட்டண விவரங்கள் உள்ளன.

இங்கே சென்று Download செய்து கொள்ளுங்கள்..

இன்சாட் 4பி விண்ணில் பாய்கிறது

தொலைத்தொடர்பு சேவைக்கான இன்சாட் 4பி இன்று விண்ணில் ஏவப்படவிருக்கிறது.

INSAT-4B to be launched on March 10

உ.பி குழந்தைகள், பெண்கள் உடல் நலம் மோசம்

ஆய்வொன்றில் உத்திரப் பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நல நிலமை மிக மோசமாக இருக்கிறது எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

ஒருலட்சம்பேருக்கு 517 பெண்கள் பிரசவத்தின்போது இறந்துபோவதாகவும், இந்திய சராசரி 301 எனவும் அறியப்பட்டுள்து.

Woman, child healthcare poorest in UP: study

நாகர்கோவிலில் மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது

நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர், பாடத்தை கவனிக்காத மாணவர்கள் இருவரை அடித்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: தினமலர்

'வாஜ்பாய், என்னை போபர்ஸ் வழக்கை திறக்கவேண்டாம் என்றார்':ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

Bofors வழக்கை திறக்கவேண்டாம் என வாஜ்பாய் தன்னை கேட்டுக்கொண்டதாக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கூறியிள்ளார்.

'அவர் ஏன் அப்படி சொன்னார் எனத் தெரியவில்லை' எனவும் கூறினார்.

Vajpayee said no to Bofors probe: Fernandes
Fernandes says Vajpayee asked him not to open Bofors file
Vajpayee told me not to touch Bofors file: George
Vajpayee told me not to open Bofors file: Fernandes
National Democratic Alliance convenor George Fernandes said on Saturday night that when he was defence minister, then prime minister Atal Bihari Vajpayee had told him not to open the Bofors file.

"I don't know why he asked me not to do so," he told journalists in Dharamsala. The BJP rejected Fernandes' charge saying it was during Vajpayee's regime that the legal proceedings moved ahead in the Bofors case.

"I don't want to get into why and in what context, he (Fernandes) is saying all these after so long a time. He is a senior leader. But I would like to assert that it was the Vajpayee Government that took the initiative to take legal moves in the case," BJP spokesman Ravi Shankar Prasad said.

-o❢o-

b r e a k i n g   n e w s...