.

Saturday, March 3, 2007

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 - வேட்பாளர்கள்?

Democrats:

1. Joseph Biden -- senator from Delaware
2. Hillary Clinton -- senator from New York
3. Christopher Dodd -- senator from Connecticut
4. John Edwards -- former senator from North Carolina
5. Mike Gravel -- former senator from Alaska
6. Dennis Kucinich -- representative from Ohio
7. Barack Obama -- senator from Illinois
8. Bill Richardson -- governor of New Mexico
9. Tom Vilsack -- governor of Iowa (since withdrawn)

Republicans:

1. Samuel Brownback -- senator from Kansas
2. Jim Gilmore -- former governor of Virginia
3. Rudolph Giuliani -- former mayor of New York City
4. Mike Huckabee -- former governor of Arkansas
5. Duncan Hunter -- representative from California
6. John McCain -- senator from Arizona
7. Mitt Romney -- former governor of Massachusetts
8. Tom Tancredo -- representative from Colorado
9. Tommy Thompson -- former governor of Wisconsin and former Secretary of Health and Human Services


There are plenty of third-party candidates too. User-edited site Wikipedia lists all the "official and potential" candidates. Some of the better known possibilities include:

1. Elaine Brown -- former Black Panther leader running for the Green Party nomination
2. Doug Stanhope -- former host of Comedy Central's "The Man Show" running for the Libertarian nomination
3. Michael Moriarty -- actor and former star of "Law and Order" running as an independent candidate


Ask - Yahoo

சேவாக்கை சேர்க்க திராவிட் பிடிவாதம் - வெங்சர்க்கார்

வீரேந்திர சேவாக்கின் ஆட்டம் சிறப்பாக அமையாத போதிலும், உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெற்றே தீரவேண்டும் என திராவிட் வலியுறுத்தியதால் அவர் சேர்க்கப்பட்டதாக தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.


MSN-Tamil

டென்மார்க் தெருக்களில் கலவரம்


கடந்த வியாழனன்று கோபன்ஹேகன் கட்டிடமொன்றில் கூடியிருந்த சமூக விரோதக் கும்பலொன்றை தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் கலைத்ததிலிருந்து ஆரம்பித்த கலவரங்கள் இன்று தீவிரமடைந்துல்ளது. ஸ்வீடன், நார்வே மற்றும் ஜெர்மனியிலிருந்து டானிஷ் இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே மிக கடுமையான கலவரமாகும்.மேல் விவரங்களுக்கு

இன்று ஆற்றுக்கால் அம்மன் பொங்கலா கொண்டாட்டம்

திருவனந்தபுரத்திலிருக்கும் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கும்பிட்டனர். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு மாசிமகம் அன்று ஒரே நாளில் இலட்சக்கணக்கானவர் வருகை தருவது ஆண்டுதோறும் நிகழும் நிகழ்ச்சியாகும். கோவிலிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு கேரளாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பெண்கள் வரிசையாக அரிசியும் வெல்லமும் கலந்து பொங்கல் பொங்குவது அருமையானக் காட்சியாகும். சென்ற வருடம் அதிகமான பெண்கள் குழுமிய விழாவாக கின்னஸ் சாதனை படைத்தது. இதுபற்றிய NDTV.com - News

சந்திர கிரகணம் : திருப்பதி கோவில் மூடப்படும்

நாடு முழுவதும் ஞாயிறன்று அதிகாலை முழு அளவிலான சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் சாதாரணமாக பார்க்கலாம்.

இந்த சந்திரகிரகணம் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி காலை 4.14 மணிக்கு பூரண கிரகணமாகத் தெரியும் என்று கொல்கட்டாவில் பிர்லா கோளரங்க இயக்குனர் டி.பி. துரை தெரிவித்துள்ளார். கொல்கட்டா மக்கள் முழு அளவிலான சந்திர கிரகணத்தை முழுமையாக கண்டு களிக்க முடியும் என்றும், இந்தியாவிலேயே முதலில் இந்த சந்திர கிரகணம் கொல்கட்டாவில் தான் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இந்த கிரகணம் காலை 5.27 மணி வரை நீடித்து பின்னர் நிறைவடையும் என்றும், அதன் பின்னரே சந்திரன் வெளியே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MSNதமிழ்

காவிரி:அதிமுக கோரிக்கைக்கு கருணாநிதி எதிர்ப்பு

நன்றி MSN தமிழ்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிழதில் வெளியிட வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கைக்கு முதலமைச்சர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதிமுகவின் இந்தக் கோரிக்கை, நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956 விதி 6(1)ன் கீழ் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டால், அந்த முடிவு சம்பந்தப்பட்ட மாநிலங்களை கட்டுப்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமனதான முடிவுக்கு எதிராக அதிமுகவின் கோரிக்கை அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பிரதமரிடம் மனு கொடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் பிரச்சனையில், மாநிலங்களுக்கு டையிலான நதிநீர் தாவா சட்டம் 1956ன்கீழ் உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரியோ அல்லது மறு ஆய்வு செய்யக்கோரியோ மேல்முறையீடு செய்யலாம் என்றும், இதுகுறித்த மனுக்களை நடுவர் மன்ற பரிசீலித்து இறுதி முடிவு எடுத்த பிறகே அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா, வடதுருவத்தில் ஆய்வு

முதன்முதலாய் வடதுருவத்திற் அறிவியல் ஆய்வுக்குழு ஒன்றஒ இந்தியா அனுப்பவிருக்கிறது. அங்கு சென்று உலகளாவிய தட்பவெட்ப மாற்றங்களை ஆய இருக்கிறது குழு.

India to undertake maiden scientific mission to North Pole (The Hindu)
India will soon undertake its maiden scientific mission to the North Pole to study the phenomenon of climate change, giving the country's 25-year-old polar science programme a bipolar perspective.

Scientists from the Goa-based National Centre for Antarctic and Ocean Research, in collaboration with the Norwegian Polar Research Institute, will kickstart their long term research programme in the Arctic region.

சானியா மருத்துவமனையில்


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கதார் போட்டியிலிருந்து கால் காயம் காரணமாக விலகியவர்,இன்று ஹைதராபாத் அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காலை பரிசோத்தித்த மருத்துவர்கள் அறுவை சிகிட்சை தேவை இல்லை என்றும் நான்கு வார பயிற்சி போதும் என்றும் ஆறுதல் அளித்துள்ளனர். ஜுபிலி ஹில்ஸில் உள்ள அபோல்லோ மருதுவமனையின் அறிக்கைப்படி இரண்டொருநாளில் அவர் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Zee News

20 பேர் மரணம்,காணாமல் போனவர் பலர் - இந்தோனேஷிய மண்சரிவு

கிழக்கு இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான ஃப்லோரஸில் பெரு மழையினால் ஏற்பட்ட மலைச்சரிவுகளில் குறைந்தது 20 பேர் மரணமடைந்ததாக இந்த செய்தி Daily News & Analysis கூறுகிறது. வீடுகள் அவற்றின் குடிதாரர்களுடன் அடித்துச் செல்லப்பட்டன. அதிகாரிகளும் உதவிக்குழுக்களும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு இன்னும் செல்லமுடியவில்லை எனவும் அந்த செய்தி கூறுகிறது.

அமெரிக்க இராணுவ செயலர் (மந்திரி) பதவி விலகல்


இராணுவ மருத்துவமனை யொன்றின் மோசமான பராமரிப்பு பற்றிய சர்ச்சைகளின் பின்னணியில் சென்றவாரம் அந்த மருத்துவமனை(வால்டர் ரீட் இராணுவ மருத்துவ மையம்) யின் தலைவர் பதவி இழந்தார். நேற்று இராணுவசெயலர் ஹார்வி தன் பதவி விலகலை அறிவித்தார்.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி

பூரி ஜெகந்நாதர் அமெரிக்கர் வரவால் பட்டினி!

மாற்றுமதத்தவர் வரவால் பல இலட்சங்கள் பெறுமான உணவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பூரியில் அரங்கேறியிருக்கிறது.

அமெரிக்க பொறியிலாளர் பால் ரோடிகர் தன் இரு இந்து நண்பர்களுடன் புகழ்பெற்ற பூரி ஜெகன்ந்நாதர் ஆலயத்திற்கு சென்றார். அங்கு உள்ளே நுழைய இருக்கும் விதிமுறைகளை அறியாத நிலையில் மூவரும் சென்றது கோவில் பாதுகாவலர்களின் ஆத்திரத்தைக் கிளறியது. அமெரிக்கரை காவலர் வெளியில் கொண்டு சென்றபோதிலும் கோவில் மாசுபட்டுவிட்டதாக அனைத்து பூசைகளும் நிறுத்தப் பட்டன. மதிய நேர உணவு படையலை(மகா போக்) கோவிலை அடுத்துள்ள பூங்காவனத்தில் குழிதோண்டி புதைத்தனர். பின்னர் கோவில் தூய்மை படுத்தப் பட்டு பூசைகள் தொடர்ந்தன.

மேலும் இது பற்றிய The Hindu செய்தி

இனிமேல் கேப்டன் ஆகமாட்டேன்: கங்குலி

இனிமேல் அணித்தலைவர் பதவி வகிக்கமாட்டேன் என கங்குலி NDTVக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

No more captaincy: Sourav

Speaking to Dr Prannoy Roy on India questions, the former India skipper said, "I am happy being a player. I am freer mentally. I am fresher on the cricket ground."

பாக்கிஸ்தான் வெற்றிகர ஏவுகணை சோதனை

அணுகுண்டுகளைத் தாங்கி தரைவழி தாக்கும் ஏவுகணை சோதனையை பாக்கிஸ்தான் வெற்றிகரமாக செய்துள்ளது.

Pakistan test fires short-range missile
Pakistan successfully test-fired a short-range nuclear-capable, surface-to-surface ballistic missile on Saturday, the military said.

The Hatf-II Abdali had a range of 200 km, it said in a statement. "The test was aimed at validation of the desired technical parameters which has been successfully achieved."
Pakistan and arch-rival India routinely carry out missile tests, and have agreed to inform each other of tests in advance.

The foreign ministers of Pakistan and India met in New Delhi in February and signed an accord to reduce the risk of accidents linked to their nuclear arsenals.

Last week Pakistan test-fired a long-range nuclear-capable, surface-to-surface Hatf VI missile which can hit targets within 2,000 km.

இரு சக்கர வாகனங்களில் செல்போரிடம் "லிஃப்ட்" கேட்டு நூதன கொள்ளை- தம்பதி கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் லிஃப்ட் கேட்டு நகை, பணம் கொள்ளையடித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூரைச் சேர்ந்தவர் வாசுதேவன் மகேசுவரன் (50) நகைத்தொழில் செய்து வந்தார். இவர் அண்ண மேம்பாலம் அருகே மொபெட்ட்ல் புதன்கிழமை சென்றபோது ஒரு பெண் லிஃப்ட் தருமாறு கேட்டார்.

தியாகராய நகரில் உள்ள திருமலைப் பிள்ளை சாலை வந்தது அந்தப்பெண் இறங்கிக்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு மகேஸ்வரனுக்கு, பாலியில் தொழிலில் ஈடுபட்டுல்ள பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மிரட்டியிருக்கிறார். அச்சமடைந்த மகேந்திரன் அணிந்திருந்த 2 தங்க மோதிரங்கள், ரூ.2 ஆயிரம் ரொக்க்கப்பணம், கிரெடிட் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

மேலும்

டாஸ்மார்க் கடைகளில் குளுகுளு பார் வசதியா?

டாஸ்மார்க் கடைகளில் குளுகுளு பார் வசதி ஏற்படுத்த முடிவு செய்திருந்தால் அதைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் மேலும், இடிந்த நிலையில் பள்ளிக் கூடங்கள் மரத்தடியில் வகுப்புகள் என்ற நிலைமை மாநிலம் முழுவதும் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய அவலநிலையில் முதல் கட்டமாக 300 இடங்களில் டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஹைடெக் பார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அவசரமாக உத்தரவிடப்பட்டிருக்கிறது என செய்தி வெளியாகி உள்ளது.

மேலும்

திருமலை தேவஸ்தான கிளையில் கண்காணிப்பு கேமராக்கள்

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் உண்டியலில் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.

சென்னை கிளையில் கண்கானிப்பு கேமாராக்கள் பொருத்துவதாக முடிவு செய்து முதல் கட்டமாக 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுல்ளன.

மேலும் -

இலங்கை ரயில் பாதையை சீரமைக்க இந்தியா ஒப்புதல்

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு-மதாரா கடலோர ரயில்பாதை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்தார்.

மேலும்

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

இதில், வரும் மாநில பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், விரைவில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள், நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது



Yahoo Tamil

ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு 50 லட்சம் வரை சம்பளம்

இந்தூர் ஐ.ஐ.எம்(IIM) மாணவர்களுக்கு ரூ. 50லட்சம்(வெளிநாடு) முதல் ரூ.18 லட்சம்(இந்தியா) சம்பளம் வரும் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன.

Handsome pay packets for IIM Indore graduates(The Hindu)
Handsome pay packets in the range of Rs 50 lakhs (international offer) and Rs 18 lakhs (domestic offer) per annum were offered to the passing out batch of the country's youngest Indian Institute of Management (IIM), Indore during placements.

"A total of 329 offers were made to 115 students of the eighth batch, which included 12 international offers and an average salary of Rs 12 lakhs per annum - an increase of 45 per cent over last year," IIM Director S P Parashar told reporters on Thursday.

சற்றுமுன்னின் 200வது பதிவு. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

14 ஈராக் காவல்துறையினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன

ஈராக்கில் முன்னர் கடத்தப்பட்டிருந்த 14 காவல்துறையினரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Bodies of 14 policemen found in Baghdad (The Hindu)

வருடத்திற்கு 4 லட்சம் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் தேவை : சி.எஸ்.ஐ.!

வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் தேவை. ஆனால், தகுதி பெற்றுவரும் 2 லட்சம் கணினி பொறியாளர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பணி வாய்ப்பு பெறக்கூடிய தகுதியுடையவர்களாக உள்ளனர் என்று கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா கூறியுள்ளது!


WEB உலகம்

உலக வெப்பமயமாக்கலில் எறும்புகள்

உலக வெப்பமயமாக்கலுக்கு ஏற்றவாறு எறும்புகள் தங்களை தகவமைத்துக் கொள்கிறது என்றும் இந்த எறும்புகள் மற்ற உயிரினங்களும் ஒரு எடுத்துக்காட்ட விளங்க முடியும் என ஆராயச்சியளார்கள் நம்புகின்றனர்.


Science Daily

மேற்கு வங்க டி.ஜி.பிக்கு 6 மாதம் சிறை

கோர்ட்டின் ஆணையை நிறைவேற்றத் தவறியதாக மேற்கு வங்க டி.ஜி.பிக்கு 6 மாத சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கினார்.

West Bengal police chief gets six months in jail

A police chief has been sentenced to six months in jail on Friday for disobeying court orders, officials said.

Anup Bhushan Vohra, director-general of police of West Bengal, was given three weeks to appeal the sentence.

Seventeen others, including two senior police officers and a district administrator, were also sentenced to six months by the high court in Kolkata.

பாலுறவுத் தொழிலாளர்களிடம் வரி?:மேற்கு வங்கம் நிராகரித்தது

பாலுறவுத் தொழிலாளர்களிடமிருந்து வரி வசூலிக்கக் கோரும் கோரிக்கையை மேற்குவங்க அரசு நிராகரித்தது. முன்னதாக ரெய்டுகள், பின்புலச் சோதனைகளை அரசு செய்வதற்குப்பதிலாக வரி வசூலிக்கலாம் எனும் பரிந்துரை செய்யப்பட்டது.

Tax from prostitutes? No thanks, says West Bengal (Reuters)

Officials said since prostitution was illegal, the government could not tax sex workers.
"Tomorrow, criminals will say we will pay taxes so don't catch us," Raj Kanojia, a top state police officer, said.

அல்கடெல்-லூசண்ட் வழக்கு:மைக்ரொசாஃப்ட்டுக்கு சாதகமான தீர்ப்பு

அல்காடெல்-லூசண்ட் மைக்ரோசாஃப்ட்டின் மீது தொடுத்திருந்த காப்புரிமை மீறல் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Judge rules for Microsoft in Alcatel-Lucent suit
SEATTLE (Reuters) - A U.S. federal judge dismissed Alcatel-Lucent's (ALU.PA: Quote, Profile, Research)(ALU.N: Quote, Profile, Research) patent claim against Microsoft Corp. (MSFT.O: Quote, Profile, Research) over technology that converts speech into text, the two companies said on Friday.

The ruling made late Thursday comes one week after a jury found that the world's largest software maker infringed on audio patents held by Alcatel-Lucent and ordered the company to pay $1.52 billion in damages.

தமிழகத்திலிருந்து ஆயுதம் கடத்தவில்லை - புலிகள் மறுப்பு

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடவில்லை என்று அவர்களை ஆதரிக்கும் இலங்கை தமிழ் எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை விடுதலைப் புலிகள் ஆதரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


MSN-தமிழ்

லாயிட்ஸின் இந்திய அவுட்சோர்சிங் நிப்பாட்டம்

Powergen போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் புகழ்பெற்ற வங்கியான லாயிட்ஸ் (Lloyds TSB), இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் அழைப்பு மையத்தை மூடப் போகிறது. முன்பு, இங்கிலாந்து பணியாளர்கள் பிஸியாக இருந்தால், தொலைபேசி அழைப்புகள், மும்பைக்கு சென்றது. பிரிட்டனில் இருக்கும் பத்து உள்ளூர் சேவை மையங்கள் மட்டுமே இனி இயங்கும்.

இந்தியாவில் பணியாற்றும் பார்க்கும் 2,800 ஊழியர்களுக்கும் மாற்று வேலை தரப்படும்.

BBC

சோமாலியாவில் குண்டு வெடிப்பு

ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப் படைகளின் ஒரு பகுதியாக செல்லும் உகாண்டா நாட்டின் 1700 பேரைக் கொண்ட குழு சோமாலிய அரசுக்கு உதவி செய்வதற்காக நேற்றுக் கிளம்பியது. அங்குள்ள சோமாலிய ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களை களையும் முயற்சியில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள்.

இதைத் தொடர்ந்து சோமாலியாவில் ஆறு இடங்களில் குண்டு வெடித்தது. ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டின் பின் பகுதியில் எத்தியோப்பியாவின் ஆதரவுடன், சோமாலியாவில் இருந்து இஸ்லாமியப் படைகளை அரசு விரட்டியடித்தது. அங்கு தங்கியிருந்த எத்தியோப்பிய படையினருக்கு மாற்றாக இந்த அமைதி காக்கும் படை அங்கு செல்கிறது.

கடந்த இரு வாரங்களில் மட்டும், பத்தாயிரக் கணக்கானோர், தலைநகரை விட்டு தப்பியோடியதாக ஐநா சொல்கிறது.

சமாதான வீரர்கள் எண்ணிக்கை
உகாண்டா: 1,700
நைஜீரியா: 850
புருண்டி: 1,700
கானா: முடிவு செய்யப்படவில்லை

BBC

நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெ. கோரிக்கை

காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.


MSN-தமிழ்

-o❢o-

b r e a k i n g   n e w s...