இந்தியாவின் சமூக அவலங்களுள் ஒன்றான வரதட்சணைக்கொடுமை, இந்தியப்பிரதமர் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மன்மோஹன் சிங்கின் சகோதரர் இந்திரஜித் சிங்கின் மகளான அம்னீத்கவுர் லூதியானா மாவட்ட காவல்துறையிடம் வரதட்சணை புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் தன் கணவர் ராணா இந்திவார் சிங், நாத்தனார்கள் பல்விந்தர் கவுர், ஜஸ்மீத் கவுர் மற்றும் அவதார் சிங் ஆகியோர் மீது வரதட்சணைக்கொடுமை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்து, வழக்கு பதிவு செய்து பல்விந்தர் கவுரை நீதிமன்ற காவலிலும், ஜஸ்மீத் கவுர், அவதார்சிங் ஆகியோரை காவல்நிலைய காவலிலும் வைத்துள்ளனர். வரதட்சணையாக வழங்கப்பட்ட பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்
என்கிறது இந்தச்செய்தி.
Monday, June 25, 2007
பிரதமர் சகோதரர் மகளுக்கும் வரதட்சணைக் கொடுமை.
Posted by
வாசகன்
at
8:09 PM
0
comments
சிசேரியன் விவகாரம்: டாக்டர் தம்பதிகள் கைது
உலக சாதனைக்காக தங்கள் 15 வயது மகனை வைத்து சிசேரியன் அறுவைசிகிச்சை செய்ய வைத்த டாக்டர் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டனார்.
Doctor-parents of 15-year-old arrested - The Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:30 PM
0
comments
குவைத்திலிருந்து இந்தியன், ஏர் இந்தியா விமான சேவை ஜூலை 1 முதல் இரத்து ?
ஜூலை ஒன்று முதல் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டி வரும். குவைத்தின் விமான சேவைகளை இந்தியா அதிகரிக்க ஒப்புக்கொள்ளாததால் இந்தியன், ஏர் இந்தியா விமானவேவைகளைகுவைத் நிறுத்தப் போவதாக அரப் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
இதுபற்றி மேலும் அறிய..No AI, 'Indian' flights to Kuwait from July 1 - Daily News & Analysis
Posted by
மணியன்
at
6:54 PM
0
comments
அயல்நாட்டு கப்பற்படை கலங்கள் இந்தியாவிற்கு வருவது புதுமை அல்ல: அந்தோணி
முதன்முறையாக அமெரிக்க கப்பற்படைச் சார்ந்த விமானந்தாங்கி படைக்கலம் USS Nimitz சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப் போகிறது. 'முக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பொருட்டு' இவ்வாறு பயிற்சிகள் நடத்துவது புதிதல்ல என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கூறினார். 90 போர்விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாங்கிய இக்கலம் அரபிக்கடலில் ஆறு மாதம் தங்கியிருக்கும். முன்னதாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் உருசிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் தங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முன்னதாக சிபிஎம் இக்கப்பல் சென்னையில் தங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அணுஆய்தக் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் அனுமதிப்பதில்லை என்ற இந்திய அரசின் கொள்கைக்கு இது புறம்பானது என்று கூறியிருந்தார். அக்கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசிற்கு என்ன கட்டாயம் ஏற்பட்டது என்று அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என மேலும் அவர் கூறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:21 PM
0
comments
குடியரசுதலைவர் தேர்தல்: 19 பேர் வேட்புமனு தாக்கல்
ஆளும் கூட்டணியின் பிரதீபா பாடில், பிஜேபியின் சுயேட்சை வேட்பாளர் செகாவத் உட்பட பத்தொன்பது பேர் இதுவரை குடியரசுதலைவர் தேர்தலுக்கு வேட்புனு கொடுத்துள்ளனர். வேட்புமனுக்கள் ஜூன்30 வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஜூலை இரண்ட்டம் தேதி அவை பரிசீலிக்கப்படும். ஜூலய் 4 தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள கடைசிநாள்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:05 PM
0
comments
பாலம் உடைந்து இரயில் விபத்து: ஆறு பேர் பலி
அசாமில் வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் ஒரு சரக்கு இரயில் சென்றுகொண்டிருந்தபோது அதனடியே பாலம் முறிந்ததில் ஆறு பேர் மரணம்; ஏழு பேர் காயமடைந்தனர். இறந்ததில் ஒருவர் வண்டி ஓட்டுநர். மற்றவர்கள் சரக்கு இரயிலின் கூரையில் பயணித்த உள்ளூர்வாசிகள்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
5:18 PM
0
comments
திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல்.

Posted by
Adirai Media
at
4:08 PM
1 comments
மல்லிபட்டினம் மீனவர்கள் 3 பேர் உடல் இன்று கரை ஒதுங்கியது.
Posted by
Adirai Media
at
3:08 PM
0
comments
ச:ஹைதரபாத்: கடன் மீட்பு: வங்கி 'குண்டர்'களின் அடிதடியில் ஒருவர் பலி
சுகாதாரத்துறையில் மின்சார ஊழியராக பணியாற்றிய யாதையா, தனிநபர் கடனாக ஐசிஐசிஐ வங்கியில் 15,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பிக் கட்ட தவறியதால் கடன்மீட்பை உறுதியளிக்க நியமிக்கப் பட்ட வங்கி ஒப்பந்ததாரர் எலைட் பினான்சியல் சர்வீஸ்காரர்கள் வெள்ளியன்று அவருடன் சண்டையிட்டதில் அமீர்பேட்டை மருத்துவமனையொன்றில் நேற்று அவர் மரணமடைந்தார். அவரது உடலை பேகம்பேட் வங்கிக் கிளையின் முன் வைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உச்சநீதிமன்றத்தின் வன்முறையை பயன்படுத்தி கடன் மீட்பு செய்யக்கூடாது என்ற ஆணையின் பின்னும் வங்கிகள் தங்கள் முறைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
Loanee dies in scuffle with bank agents-Hyderabad-Cities-The Times of India
Posted by
மணியன்
at
2:15 PM
0
comments
ச:குடியரசுதலைவர் தேர்தல்: செகாவத் வேட்புமனு தாக்கல்
துணை குடியரசுத் தலைவராக உள்ள பைரோன் சிங் செகாவத் இன்று குடியரசுதலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். 84 வயது நிரம்பிய செகாவத் இராஜஸ்தானில் ஒரு எளிய குடியானவ குடும்பத்தில் பிறந்து காவல்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து பலநிலைகளை எட்டியவர்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
1:55 PM
0
comments
ஆஃப்கானுக்கு விரைகிறது இந்திய அதிரடிப்படை
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டபிறகும் அங்கு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஓயவில்லை.
மறு சீரமைப்பு பணியில் ஈடுபடும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர் களை அவர்கள் கடத்திச் சென்று படுகொலை செய்கிறார்கள்.
அங்கு மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை பாதுகாக்கவும், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து இந்தியர்களை மீட்கவும் இந்திய அதிரடிப்படை ஆப்கானிஸ்தான் விரைகிறது.
துணை ராணுவ படை யைச்சேர்ந்த இந்த அதிரடி படையில் 134 பேர் இடம் பெறுகிறார்கள். 2 குழுக்களாக இவர்கள் அனுப் பப்படுகிறார்கள். இவர்கள் விசேஷ பயிற்சி பெற்றவர்கள்.
நேற்று ஆப்கானிஸ்தானின் தெற்குபகுதியில் அமெரிக்க கூட்டு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் நீண்ட நேரம் சண்டை நடந்தது.
இதில் 26-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Posted by
வாசகன்
at
12:54 PM
0
comments
ச: விமானத்தில் கோளாறு: ஏர் நியூசிலாந்து விமானம் திரும்பியது
ஆக்லாந்திலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்ட ஏர் நியூசிலாந்து விமானமொன்று பயணித்து நான்கு மணி நேரம் கழித்து நடுக்கடலில் ஏற்பட்ட கோளாறினால் தன் 303 பயணிகளுடன் ஆக்லாந்து திரும்பியது.
மேலும்..The Hindu News Update Service
Posted by
மணியன்
at
11:30 AM
0
comments
ச:சிரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் ஊர்வலம்
சிரீலங்காவில் தொடர்ந்துவரும் தமிழ் இனப்படுகொலைகளை எதிர்த்து டர்பனில் இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வர்த் பகுதியிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணியில் நூற்றுக்கணக்கானவர் பங்கு கொண்டனர்.
மேல் விவரங்கள்...The Hindu News Update Service
Posted by
மணியன்
at
10:42 AM
0
comments
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன், சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்னும் சில மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. யாரோ வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு புரளியால் விமான போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Posted by
Adirai Media
at
10:10 AM
0
comments
b r e a k i n g n e w s...