.

Monday, June 25, 2007

மல்லிபட்டினம் மீனவர்கள் 3 பேர் உடல் இன்று கரை ஒதுங்கியது.

மற்றவர்கள் கதி என்ன?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த 21ம் தேதி, மீன்பிடிப்பதற்காக 40 படகுகள் கடலுக்குள் சென்றன. 37 படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில் மற்ற 3 படகுகளில் சென்ற 7 மீனவர்கள் மட்டும் இன்னமும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மீன் பிடிக்கச் சென்று 4 நாட்களாகியும் 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்நிலையில் இன்று 3 மீனவர்கள் உடல் கரை ஒதுங்கியது. மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் அம்மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...