.

Thursday, May 31, 2007

க்வாண்டனமோவில் சவூதி நாட்டு கைதி தற்கொலை

அமெரிக்க ஆளுகைக்குட்ப்பட்ட க்யூபாவின் க்வாண்டனமோ விரிகுடா சிறைச்சாலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த சிறைக்கைதி உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூனில் யெமனியர் ஒருவரும் சவூதி நாட்டவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளாக இயங்கும் க்வாண்டனமோவில் 380 பேர் 'போர்க்கால குற்றங்களை'க் காரணங் கற்பித்து பிணையாக இருக்கிறார்கள்.

BBC NEWS | Americas | Guantanamo Saudi 'kills himself'

'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது'

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்து மதத்தவர்களைத் தவிர பிறருக்கு நுழைய அனுமதியில்லை என்று தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி தெரிவித்தார். எனினும் அரசு சட்டம் இயற்றினால், அ-ஹிந்துக்களை தரிசிக்க விடலாம் என்றார்.

முந்தைய சற்றுமுன்: குருவாயூர் கோவில் மீது வழக்கு

NDTV.com: No entry of non-Hindus into temple: Chief priest

ச: எம்.பி முதல்வராகலாமா? - மாயாவதி மூலம் தெரியும்!

எம்.பி.யாக இருப்பவர் முதல்வராகவோ, மாநில அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற 'மரபு'க்கிணங்கி, மாநிலங்களவை எம்.பியாக இருந்துக்கொண்டே உ.பி. முதல்வராகியுள்ள மாயாவதிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

ஹிந்து தனியார் சட்ட வாரியத்தின் அஷோக் பாண்டே என்பவர் இவ்வாறு மனுதாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தின் வழிகாட்டும் ஆணையை அளிக்கும் படி அவர் கோரியுள்ளார். மாயாவதியுடன், அவர் அமைச்சரவையிலுள்ள சதீஷ் சந்திர மிஸ்ரா என்பவரும் இதில் பிரதிவாதியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சட்ட மன்ற தேர்தலில் நிற்கும் முன் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை விட்டும் இவர்கள் விலகவில்லை என்பது அடிப்படை குற்றச்சாட்டு!

பி.டி.ஐ செய்தி

ஃப்ரெஞ்ச் ஓபன்: சானியா வெளியேறினார்!

முதல் சுற்றில் நேர்கணக்குகளில் ஜெயித்திருந்த இந்தியாவின் இளம் டென்னிஸ்
வீராங்கனை சானியா மிர்ஸா, ஃப்ரெஞ்ச் ஓபன் இரண்டாம் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக்-கிடம் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்கணக்குகளில் தோல்வியை தழுவினார்.
இதன் மூலம் இப்போட்டியிலிருந்து அவர் ஒற்றையர் ஆட்டங்களில் வெளியேற நேர்ந்துள்ளது.
சானியாவின் நேற்றைய முதல் சுற்று வெற்றி, ஃப்ரெஞ்ச் ஓபனில் அவருக்கு முதலாவதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்பான முந்தைய 'சற்றுமுன்'

'சற்றுமுன்'னுக்காக வாசகன்

ச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை

வேலூர் அருகே இரு கோழிப்பண்ணைகளில் மின்கசிவு மூலமாக எழுந்த தீ விபத்தில் ஆயிரம் கோழிகள் வரை தீக்கிரையாயின. 2400 கோழிகள் இருந்த ஓலை வேய்ந்த பண்ணையில் தீபிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஒரு பண்ணை முழுவதுமாக சாம்பலானது.

The Hindu News Update Service

ச: NDTV expose': தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை

தில்லியின் BMW கார்மோதல் வழக்கில் அரசுதரப்பு சாட்சியை கலைக்க அரசு வழக்குரைனரும் எதிர்தரப்பு வழகுரைனரும் ஈடுபட்டதை இரகசிய ஒளிப்படம் எடுத்து நேற்று NDTV நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து வக்கீல்களின் தார்மீக கொள்கைகள் குறித்தும் விவாதம் நடத்தியது.

BMW case: Lawyers collude, stung : hit-and-run, BMW case, Sanjeev Nanda, sting operation, news channel, prosecution, defence, nexus, RK Anand : IBNLive.com : CNN-IBN

தில்லி உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த வழக்கின் எல்லா ஆவணங்களையும் ஜுன்11 அன்று காண விழைந்துள்ளது.

The Hindu News Update Service

ச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம்

இந்த முறை எப்படியும் ரோலண்ட் காரோசில் வென்றுவிடவேண்டும் என்று ஆடும் முதல் ஆட்டக்காரர் பெடரர் தான் இரவு 9:30 வரை ஆடிவேண்டியிருந்தது குறித்து ஆட்டநிர்வாகிகளிடம் ஆதங்கப் பட்டார். தனது இரண்டாம் சுற்றில் 6-1,6-2,7-6 (10/8) என்ற கணக்கில் வென்றாலும் எதிராளி தியரி அசியொனிடம் கைகுலுக்கும்போது உன்னைக் காணமுடியாமல் கைகுலுக்குகிறேன் என்று தன் கடுப்பை வெளிப்படுத்தினார்.

DNA - Sport - Roger Federer rages at French Open's heart of darkness - Daily News & Analysis

ச:இணையத்தில் 'குப்பைமின்னஞ்சல்கள் மன்னன்' கைது

நமக்கு வருகின்ற ஓரிரண்டு மின்னஞ்சல்களையும் தன் கூட்டத்தில் மறைத்துவிடும் குப்பை மின்னஞ்சல்களில் பெரும்பாலானவைகளுக்குக் காரணமான ராபர்ட் சோலொவே என்ற அமெரிக்க வலையுல வணிகரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இலட்சக்கணக்கான குப்பைகளுக்குக் காரணமான இவரை குப்பைமின்னஞ்சல்களின் மன்னன் என்று அழைக்கிறார்கள்.
மேலும்... DNA - Evolutions - US Internet 'Spam King' arrested - Daily News & Analysis

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.

அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம் 8,67,707 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 79.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 77.6 சதவீதமாக இருந்தது. இவர்களில் மாணவிகள் 83 சதவீதமும் மாணவர்கள் 76 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு புனித மேரி பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.அக்ஷயா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார். சேரன்மாதேவியைச் சேர்ந்த அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெசீமா சுலைஹாவும், திருவாரூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவகாமசுந்தரியும், புந்துச்சேரி விவேகானந்தா உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யபாரதியும் 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். தக்கலை அமலா பள்ளியைச் சேர்ந்த லம்சே, தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த பாலவித்யா, மயிலாடுதுறை டிபிடிஆர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி, கூடலூர் புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். கணிதப் பாடத்தில் 2,512 பேரும், அறிவியலில் 66 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 13,033 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். இந்த முறை அது 2,512 ஆகக் குறைந்துவிட்டது.

விமானப்பணி பெண்களிடம் ரகளை - சென்னையர் கைது!

சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு சென்றார். அப்போது இவர் விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் பிலடெல்பியாவில் தரையிறங்கயதும் போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்ததாகவும், ஊழியர்களை தாக்கியதாகவும், வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் பிலடெல்பியா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 69 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தட்ஸ் தமிழ்

அர்ஜுன் சிங்குக்கு மஹாத்மா காந்தி விருது

மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதுரை தென்னக மூத்த காந்திய அன்பர்களின் கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்கம் மற்றும் சமூகநீதிக்கான காந்தி விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விருதை உழுபவனுக்கே நிலவுடமை இயக்கத் தலைவி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வழங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் வாழ்த்துரை வழங்கினார்.

தட்ஸ் தமிழ்

வறுமை ஒழிப்புக்கு $2.6 பில்லியன்-OIC

வறுமை ஒழிப்புக்கு 10 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு நாடுகள் இதுவரை 2.6 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளன.

இத்தகவலை செனகல் அதிபர் அப்துல்லாயே வதே , தாகரில் இஸ்லாமிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களின் 32ஆவது வருடாந்திர மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அரப் நியூஸ் செய்தி

ஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது!

கடந்த மே11ல் ஜெத்தாவின் முஷ்ரிஃபா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக ஒரு இந்திய ஓட்டுநர், இரண்டு இலங்கை பணிப் பெண்கள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருட முயன்று, கொலையில் முடிந்த இச்சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் மின்சார வயர்களால் பிணைக்கப்பட்ட நிலையில், தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஒரு பெட்டகத்தை உடைத்து திருட வந்தவர்கள் ஆயிரம் ரியாலுக்கு மேல் அதில் காணவில்லையாம்.

மேலும் படிக்க: அரப் நியூஸ்

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்.

பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும்.
இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 71 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 17 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இருசக்கர வாகனங்களில் ஹெல் மெட் அணியாமல் செல்லும்போது விபத்தில் சிக்கினால் தலையில் காயம் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு முதலில் 100 ரூபாயும் 2வது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் ஒரு இடத்தில் போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தினாலும் சிறிது தூரத்தில் மீண்டும் போலீசாரிடம் மாட்டும்போதும் அபராதம் விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற கம்பெனிகள் தயாரிக்கும் ஹெல்மெட் மட்டுமே அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையட்டி, சென்னை உட்பட மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் குறித்து டி.ஜி.பி.முகர்ஜி நேற்று கூறியதாவது:
சென்னை உட்பட 6 மாநகராட்சி பகுதிகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஜூன் 1 முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் இருப்பவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் சென்று முதல்முறை பிடிபடும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அரசின் உத்தரவுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் முழு ஆதரவு தரவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க வேண்டும்.
அரசு உத்தரவை முறைப்படி அமல்படுத்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முகர்ஜி கூறினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சி வகுப்பு - PHOTO


தமிழக அரசின் புதிய சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடக்கிறது.இங்குள்ள இந்து அறநிலையத்துறை வைணவ அர்ச்சகர் பயிற்சி மாணவர் இல்லத்தில் இதற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது.வெளியூர் மாணவர்களும் தங்கி பயில உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் 10 ம்வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பயிற்சி பெறுகிறார்கள் . பயிற்சி வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.


நன்றி: "தினகரன்"

அமெரிக்க குடியுரிமைக் கட்டணம் கடும் உயர்வு

வாஷிங்டன், மே 31: இப்போது அமெரிக்கக் குடியுரிமை பெற சுமார் ரூ.15,000 செலுத்த வேண்டும். இனி ரூ.30,000 செலுத்த வேண்டும். அமெரிக்கக் குடிமகனாக ஆகாமல் அங்கேயே நிரந்தரமாக வசிக்க ரூ.45,000 செலுத்த வேண்டும். இந்தப் புதிய கட்டண விகிதம் ஜூலை 30 முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வளவு அதிக தொகையைச் செலுத்த முடியாத ஏழைகளின் நிலைமை என்ன ஆவது என்று அமெரிக்காவில் குடிபுகல் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தினமணி

தினம் 10 மரக் கன்றுகள் நடும் ஒரிசா பெண்

புவனேசுவரம், மே 31: ஒரிசா மாநிலம் பலசூர் மாவட்டம் கூதப்படா கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா பெஹிரா(48). இவர் சுமார் 15 ஆண்டுகளாக தினமும் சுற்றுப்புற கிராமங்களில் 10 மரக் கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பாரமரித்து வருகிறார்.

இப்படியாக அவர் இதுவரை 60 கிராமங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை வளர்த்துள்ளார்.

தினமணி

ராஜஸ்தானில் அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா

குர்ஜார் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி குர்ஜார் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் காலு லால் குர்ஜார் மற்றும் ஆளும் பாஜக-வின் எம்.எல்.ஏ.க்கள் ஹர்யான் சிங், தாதா பராம், பிரகலாத் குன்ஜால், அடர் சிங் பாதனா, நாதா சிங் ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை தங்கள் ராஜிநாமா கடிதத்தை மாநில தலைவர் மகேஷ் சர்மாவின் அலுவலகத்தில் கொடுத்தனர்.

தினமணி

முந்தைய சற்றுமுன்: குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

இடைத்தேர்தலால் அரசுக்கு பண விரயம்: புதிய தமிழகம்

கோவில்பட்டி, மே 31: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி: இடைத்தேர்தல் நடத்துவதால் பணம் விரயம் ஆவதுடன் இடைத்தேர்தல் வாயிலாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை கொடுக்க முன்வரும் நிலை ஏற்படும்.

இது ஜனநாயக விரோத நடவடிக்கை. எந்த கட்சியின் உறுப்பினர் அத்தொகுதியில் இறந்தாரோ அக்கட்சிக்கே அந்த இடத்தை அளிப்பதன் வாயிலாக பிரச்னைகளை குறைக்கலாம். இடைத்தேர்தலை தவிர்த்தால் மட்டுமே பொதுத்தேர்தல் என்பது நியாயமாக நடக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அண்டை மாநிலத்தார், அண்டை நாட்டார் விளை நிலங்களை வாங்கி குவிப்பதை தடுத்திட வேண்டும். தமிழகத்தில் நிலம் வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது அவர்கள் குடும்பஅட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி

சமாதானப்புறா நம்பர் 2

நார்வே நாட்டுக்குப்பிறகு வரிசையில் நிற்கும் சமாதானப் புறாக்களில் முதலிடம் நியூஸிலாந்து'ன்னு இன்னிக்கு வெளியான Global Peace Index (GPI)சொல்லுது.

இன்னும் விளக்கமாப் பார்க்கணுமுன்னா இங்கே:


http://nz.news.yahoo.com/070530/3/jwt.html


உங்களுடன் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்பவர்:

நியூஸியிலிருந்து துளசி.

அறை எண் 305ல் கடவுள் - சிம்புதேவன்

வடிவேலை வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன், அடுத்து இயக்கப்போகிற படம் 'அறை எண் 305ல் கடவுள்'. இதில் கஞ்சா கருப்பு பிரதான கேரக்டரில் நடிக்கப் போகிறார்.

கருப்பு தவிர சந்தானமும் நடிக்கிறார். கடவுளாக மம்மூட்டி, பிரகாஷ் ராஜ் என்று நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிற விவரங்கள் - TamilMSN.com

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள்: பிரும்மாண்ட ஏற்பாடுகள் விவரம்

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது. லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி நவீன கணிணிக் கலக்கலுடன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் சிறப்பை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுமையாக, தமிழ்த்தாய் வரவேற்புரை ஆற்றவும், திருவள்ளுவர் நன்றி கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய அழைப்பிதழைத் திறந்தால் இனிய குரலில் ஒரு பெண் பேசுகிறார். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாள். உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள், ஆயிரம் விளக்கு பகுதியின் சார்பில் அகம் மகிழ அழைக்கிறோம், வாருங்கள், வாருங்கள் என்று அந்தக் குரல் கூறுகிறது.

மேலும் அழைப்பிதழில் உள்ள முதல்வரின் படத்தை ஒரு பக்கம் சாய்த்தால் பெரியார் தெரிகிறார், மற்றொரு பக்கம் சாய்த்தால் அண்ணா தெரிவது போலவும் அசத்தியுள்ளனர்.

பிற விவரங்கள் - thatstamil.com

Wednesday, May 30, 2007

சீனாவில் ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை

பெய்ஜிங், மே 30: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முன்னாள் இயக்குனர் ஜெங் ஜியாவோ-க்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.

63 வயதான ஜெங் ஏற்கெனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தனது பதவிக் காலத்தில் பணமாகவும், பரிசுப் பொருள்கள் மூலமாகவும் ரூ.5 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ஜெங் தவிர 30 உயர்நிலை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் ஏற்கெனவே செய்திவெளியிட்டு வந்தன. மருந்து நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக ஜெங்கின் மனைவி, மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி

தேசியப் பூப்பந்து போட்டி முடிவுகள்

சென்னை, மே 30: சென்னையில் நடைபெற்ற 52-வது ஆண்டு தேசிய சீனியர் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 13-29, 29-18, 29-25 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் தமிழக ஆடவர் அணியைத் தோற்கடித்தது.

ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து ஆந்திரம் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

கேரளம் வெற்றி:
முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான இறுதி ஆட்டத்தில் கேரள மகளிர் அணி 29-14, 29-15 என்ற செட்களில் கர்நாடகத்தை வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. அந்த அணி தொடர்ந்து 10-வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரை நேர் செட்களில் தோற்கடித்து 3-வது இடத்தை தமிழக அணி பெற்றது.

தினமணி

ஃபிரெஞ்ச் ஓபன்: இரண்டாம் சுற்றில் சானியா

ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா இத்தாலியின் அல்பெர்ட்டா பிரியாட்டினியை 6-1, 6-1 என்ற நேர்கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் அர்ஜெண்டினாவின் ஜுஆன் மார்ட்டினை போராடி வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

சற்றுமுன் செய்திகளுக்காக வாசகன்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்' என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, "இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு'' என்றார்.

தினமணி

முந்தைய சற்றுமுன்-கள்:
ச: இராஜஸ்தான் துப்பாக்கிசூட்டில் ஏழுபேர் மரணம்
ச: ராஜஸ்தானில் காவல் நிலையங்கள் எரிப்பு!
ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்

கான்பூரில் தீ விபத்து.

கான்பூரில் உள்ள எட்டடுக்கு வணிக வளாகத்தின் ஆறாம் மாடியில் சற்று முன் சம்பவித்த தீ விபத்தில் 60 பேருக்கும் மேல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தீவிபத்துக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியபடவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

டைம்ஸ் ஓஃப் இந்தியா

திமுகவுக்கு எதிராக சோனியா-மாறன் சதி

சென்னை, மே 30:

தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக செயல்பட சோனியாவுடன் சேர்ந்து தயாநிதி மாறன் முயற்சி செய்த தாலேயே அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார்.

முழு செய்திக்கு "மாலைச் சுடர்"

ச: மதுரை இடைத்தேர்தல்: அ தி மு க வை ஆதரிக்க பா ஜ க விருப்பம்.

மதுரை இடைத்தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்த மாநில தலைவர் இல.கணேசனின் நா உலருவதற்குள் அது காங்கிரஸ் கூட்டணியிலில்லாத கட்சிகளை, குறிப்பாக அ தி மு க வை ஆதரிக்கவோ, அவற்றின் ஆதரவை பெறவோ தயாராகி வருவதாக தேசியச் செயலாளர் திரு-நாவுக்கரசர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இல்லை என்றால் தனித்து போட்டியிடுவோம். வேட்பாளர் பற்றி தேர்தல் குழு முடிவு செய்யும் என்றும் அவர் சொன்னார். மாலைமலர் நாளேட்டில் இச்செய்தி மலர்ந்துள்ளது.

ச: மதுரை மேற்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்

மதுரை, மே. 30-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனாலும் மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ராஜாங்கம், தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ், ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம், கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை, மாணவரணி செயலாளர் உதய குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம், முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால் கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.

எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.

மாலைமலர்

சீனாவின் சைபர் போலீஸ் - சில மணிகளில் தடை செய்யப்பட்ட ஆபாசத்தளம்

சீனாவில் ஆபாசத்தளம் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் தடை செய்யப்பட்டது.

www.rsf-chinese.org என்ற தளம் மே 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கி ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாகவே இந்தத் தளம் சீனா முழுவதும் தடை செய்யப்பட்டது.

தள நிர்வாகிகள், மூன்று வாரம் கழித்து, வேறொரு நிறுவனத்தின் இணையத் தொடர்புச் சேவையூடாக மே 25ஆம் தேதி மீண்டும் அதே தளத்தை வேறு புதிய பெயரில் வெளியிட்டார்கள். மீண்டும் அதே ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாக இந்த தளம் தடை செய்யப்பட்டு விட்டது.

www.rsf-chinese.org ஐச் சோதனை முயற்சியாகத் தொடங்கிய 'ஊடக சுதந்திரக் குழு', "சீன இணைய காவலர்கள்(cyber police) கீழ்த்தரமான, ஆபாச உள்ளடக்கம் கொண்ட சீன மொழித்தளங்களைக் கண்காணிக்கும் மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்" என்றும், ஆயிரம் இணைய தளத்துக்கு ஒரு தளம் என்ற கணக்கில் சீன மொழித் தளங்கள் இதுபோல் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.

பாரிஸ் வழக்கறிஞர் ஒருவர் சீனாவின் இது போன்ற தடைகளை இணைய விரோத நடவடிக்கை என்கிறார். முப்பதாயிரத்திலிருந்து, நாற்பதாயிரம் இணைய காவலர்களை சீன அரசாங்கம் இது போன்ற பணியில் ஈடுபடுத்தி இருக்கும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள்.

DNA செய்தி

ச: ரௌடித்தனம் செய்த தன் கட்சி எம்பியையே கைது செய்த முதல்வர்

் அசாம்கர் நகரில் தனக்கு அடிபணிய மறுத்த கடைகாரரின் கடையை தரைமட்டமாக்கிய பிஎஸ்பி கட்சி எம்பி உமாகாந்த் யாதவை உபி முதல்வர் மாயாவதி தன் வீட்டிற்கு அழைத்து காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் தள்ளினார். அவரிடம் விளக்கம் அளிக்க வந்த அந்த எம்பி மாயாவதியின் இந்தச் செய்கையை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. தவிர யாதவின் மகனையும் கட்சியிலிருந்து விலக்கிவைத்தார். இதன்மூலம் சட்டம் ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு வலுவான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Mayawati traps BSP MP in her home, sends him to jail - Yahoo! India News

ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்

ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்துவரும் குஜ்ஜார் இனக் கலவர்ங்களுக்கு இராஜஸ்தான் அரசை குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி நீதியரசரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. அம்மாநில பிஜேபி அரசின் அடக்குமுறை அனைவரும் அறிந்தது என்று குறைகூறிய அக்கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த அரசு அதனை மக்களிடம் விளக்கமுடியாததால் இந்தக் கலவரங்களும் வன்முறையும் எழுந்துள்ளன என்றும் கூறியுள்ளது.

The Hindu News Update Service

ச:91% எடுத்தும் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவன்

கொச்சியையடுத்துள்ள ஆலுவாவில் பள்ளியிறுதியில் 91% மதிப்பெண்கள் பெற்றும் பிரின்ஸ் தாமஸ் என்ற மாணவன் தன் பெற்றோர்களால் மேல்படிப்பிற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாதேயென்று தற்கொலை செய்துகொண்டுள்ளான். பிஎஸ்சி நர்சிங் படிக்க விரும்பிய அவன் அதிக நன்கொடை கொடுக்கவேண்டியிருக்கும், பனமுடையிலிருக்கும் தன் பெற்றோருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று இந்த முடிவிற்கு வந்ததாகத் தெரிகிறது.

DNA - India - He scored 91%, but still killed himself - Daily News & Analysis

பெண்களை போல விமானப்பணியில் ஆண்கள் அறிமுகம்.

இந்த ஆண்டு 100 பேருக்கு பயிற்சி
விமானத்தில் பயணம் செய்யவே முடியாத சாமானியர்களுக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் சொல்லவா வேண்டும்ப விமானத்தில் எப்போதும் அல்லவா பறக்கலாம்.ஆதி திராவிட மாணவர் களுக்கு அந்த வாய்ப்பை தமிழக அரசு அளித்துள்ளது. கடந்த ஆண்டு முதன் முதலாக ஆதி திராவிட பெண்களுக்கு விமானப் பணி பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிளஸ்-2 படித்து முடித்த 100 மாணவிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒரு ஆண்டு பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு அரசு சார்பில் விமானப்பணிப் பெண் வேலை பெற்று தரப் படுகிறது. மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும். படித்த ஆதிதிராவிட பெண் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு கொண்டு வந்த திட்டம் இந்த ஆண்டு முதல் மேலும் விரிவு படுத்தப்படுகிறது.பெண்களை போல ஆண்களுக்கும் விமானப் பணி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-2 முடித்த 100 ஆதி திராவிட மாணவர்கள் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு.....
மாலை மலர்

ராஜஸ்தானில் காவல் நிலையங்கள் எரிப்பு!

குர்ஜார் வகுப்பினரை பழங்குடி வகையிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகைக்கு 'உயர்த்திய' அரசின் செயலைக் கண்டித்து நடைபெறும் கிளர்ச்சியில் இன்று டவுசா ('ர்' இல்லை) மாவட்டத்தில் இரு காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஜெய்ப்பூர் -ஆக்ரா நெடுஞ்சாலைப் போக்குவரத்து இக்கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவலரை காணவில்லை என்று பி.டி.ஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் துறை முடிவு செய்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை காலை 11 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியல் எல்லா பள்ளிகளிலும் நாளை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதனால், இணைய தள வசதிகள் இல்லாத ஊர்களில், மதிப்பெண்களை பள்ளிகளிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
www.tnresults.nic.in
www.dge
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
ஆகியவை உட்பட 28 இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மேலும், பி.எஸ்.என்.எல். 7333, 6505, 12555, ஏர்டெல் 646, உள்ளிட்ட 11 எண்களில் எஸ்.எம்.எஸ் அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பாலிவுட்டில் பாப் உல்மர்.

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாப் உல்மரின் வாழ்க்கை வரலாற்றை இந்திக்காரர்கள் படமாக்கவுள்ளனர்.

பிரபல இயக்குநர் மகேஷ்பட், உல்மரின் கதையைப் படமாக்கப் போகிறாராம். உல்மரின் வாழ்க்கை வரலாறாக இது இல்லாமல், உலகக் கோப்பைப் போட்டியின்போது நடந்த உல்மர் மர்மச் சாவு சம்பவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு படமாக்குகிறாராம்.

படத்தில் உல்மரின் பெயர் ஒரு இடத்தில் கூட வராது என்று கூறும் மகேஷ்பட், இந்தப் படம் உலகக் கோப்பை போட்டியின்போது ஏற்பட்ட சர்ச்சை மரணம் குறித்து மட்டுமே பேசும் என்று விளக்கியுள்ளார். அதேசமயம், படத்தில் அழகான காதலையும் ஒரு கதையாக பின்னியுள்ளாராம். சூதாட்டம், படுகொலை பிளஸ் காதல் பின்னணியுடன் கூடியதாக இந்தப் படம் அமையுமாம்.

தட்ஸ் தமிழ்

கருணாநிதி மொத்த குடும்பம் - கனிமொழி - வீடியோ

கலைஞர் கருணாநிதி முதல் மனைவி - பத்மாவதி, குழந்தை - மு.க.முத்து

முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு தயாளு அம்மாள் மனைவியானார். குழந்தைகள் - அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசன்.

கலைஞர் கருணாநிதி - ராஜாத்தி அம்மாள் குழந்தை கனிமொழி.

தனது மகள் கனிமொழியின் அம்மா ராஜாத்தி அம்மாள் என்று சட்டசபையிலே கருணாநிதி கூறியுள்ளார்.


கனிமொழிதான் அவர் குழ்ந்தைகளில் அதிகம் படித்தவர். கான்வென்ட் பள்ளியில் பயின்றவர்.
முதுகலைப் பட்டம் பெற்றவர். Master Degree in Business Economics.

நன்றி: IBN LIVE.COM CNN IBN TV.

முழு விடியோ கிழே

ரஜினியின் சிவாஜி - EXCULSIVE TRAILER

ரஜினி நடித்து ஜீன் 15 வெளிவர உள்ள சிவாஜி படத்தின் TRAILER தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன் வீடியோ கிழே

நன்றி: IBN LIVE .COM - CNN IBN TV

எவரெஸ்ட் சிகரத்தை சுத்தமாக்கிய மலையேறிகள்

சாதனைக்காக சிகரத்தின் உச்சியைத் தொட்டு கொடியேற்றுபவர்கள் மத்தியில், ஜப்பானின் கென் நொகுச்சி (Ken Noguchi) தலைமையில் அமைந்த குழு ஐநூறு கிலோ குப்பைகளை எவரெஸ்ட் மலையில் இருந்து துப்புரப்படுத்தி சாதனை படைத்துள்ளார்கள்.

Climbers clear mountain of garbage from Everest: Scientific American

'ஆணுறை ராஜா'வுக்கு மில்லியன் டாலர் பேறு

தாய்லாந்தை சேர்ந்த Mechai Viravaidya-வுக்கு உலக சுகாதாரத்துக்கான கேட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆணுறைகளை விநியோகிப்பதில் பல புதுமைகளை செய்து குடும்பக் கட்டுப்பாடு பரவலாவதற்கும் எயிட்ஸ் பரவாமல் தடுப்பதற்கும் தொண்டு செய்ததற்காக ஒரு மில்லியன் பரிசு பெற்றிருக்கிறார்.

Thai "Condom King" wins Gates health award - washingtonpost.com
Thai activist against AIDS gets $1m prize - The Boston Globe

ருஷியாவில் தற்பால் நலன்விரும்பிகள் தாக்கப்பட்டு கைது

ஞாயிறன்று ருஷியாவின் மாஸ்கோ நகரில் தற்பால்விரும்பிகளின் நலனுக்கான ஆர்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் மாஸ்கோ நகர மேயரிடம் தற்பாலர் பேரணிக்கான தடையை நீக்கக் கோரி மனு கொடுக்க இருந்தார்கள். நகரத் தந்தை யூரி (Yuri Luzhkov) தற்பாலரை சாத்தானுக்கு ஒப்பாக ஏற்கனவே வர்ணித்துள்ளார்.

மனு கொடுக்கும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூர்க்கமாகத் தாக்கப்பட்டார்கள். தாக்கியவர்களை தடுத்து நிறுத்தவோ கைது செய்யவோ காவல்துறை மறுத்துவிட்டது. மேலும் அடிபட்டவர்களை சிறையில் அடைத்தது.

Gay activists beaten and arrested in Russia | Russia | Guardian Unlimited

இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை இந்திய இராணுவம் புதுப்பிக்கக் கூடாது - காஷ்மீர் மதகுரு

இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை கட்டுவது, புதுப்பிப்பபது போன்ற செயல்களில் இந்திய இராணுவத்தினர் ஈடுபடக் கூடாது என்று ஒரு மதஆணையை காஷ்மீரின் முக்கிய முஸ்லீம் மதகுரு வெளியிட்டுள்ளார். இது போன்ற செயல்களை செய்ய முஸ்லீம்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் கிளர்சியாளர்களுடன் மோதிவரும் இந்திய இராணுவம், தனது நல்லெண்ண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தான் இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர் தொகையை முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலன்களை சீரமைப்பதற்காக செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஆனால் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையானது, காஷ்மீர் மக்களின் மதச் சுதந்திரத்தில் தேவையில்லாமல் தலையிடும் ஒரு செயல் என்று காஷ்மீரின் தலைமை முஃப்தி பஷிருதீன் கூறியுள்ளார்.

- பிபிசி தமிழ்

BBC NEWS | South Asia | Kashmir fatwa over mosque rebuild

நைஜிரியாவில் புதிய அதிபர் பதவியேற்பு

நைஜீரியவின் புதிய அதிபராக உமாரு யார் அடுவா இன்று அதன் தலைநகர் அபுஜாவில் பதவி ஏற்றுக் கொண்டார். வெள்ளை நிற அங்கி அணிந்து ஒரு மேடையின் மீது நின்றவாறு அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக் கொள்வதை குறிக்கும் வகையில் உறுதிமொழியில் அவர் கையொப்பம் இட்டபோது அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தொலிகளை எழுப்பினர்.

தம்மை பதவிக்கு கொண்டு வந்த தேர்தலில் சில குறைபாடுகளும், தவறுகளும் இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்த அதிபர் தேர்தல் தவறானது என சர்வதேச பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நைஜீரிய மக்கள் சிந்தித்து முனைப்போடு சிறப்பாக செயல்படக் கூடியவர்கள் என்றும், பணிவு மற்றும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் குணங்களை பின்பற்றுமாறும் புதிய அதிபர் கோரியுள்ளார்.

எண்ணை வளம் மிகுந்த நிஜர் நதியின் டெல்டாப் பகுதியில் பணிபுரியும் பல வெளிநாட்டவர்களை கடத்தும் ஆயுதக் குழுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் மீது உடனடி கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

- பிபிசி தமிழ்

BBC NEWS | Africa | New Nigerian president sworn in

ஸ்பைஸ் ஜெட்டுக்கு 19 கோடி இழப்பு

குறைந்த கட்டண தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் கடந்த ஆண்டில் 19 கோடி ரூபாய் செயல்பாட்டு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் 121 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் வர்த்தகம் 640 கோடி ரூபாயாகவும் செயல்பாட்டு செலவுகள் 659 கோடியாகவும் இருந்தது. தற்போது 11 விமானங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் மேலும் 8 விமானங்களை கூட்ட திட்டமிட்டுள்ளது.

MSN INDIA

மேற்கு இந்தியத்தீவுகளை இங்கிலாந்து வீழ்த்தியது

மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 283 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இரட்டை சதமடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்ஸன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 570 ரன்கள் எடுத்தது.மேற்கு இந்தியத்தீவுகள் அணி 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து பாலோ- ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய மேற்கு இந்தியத்தீவுகள், இந்த முறையும் 141 ரன்களுக்குள் சுருண்டது.

MSN INDIA - ஹெட்டிங்லி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி

Tuesday, May 29, 2007

பிரென்ச் ஓப்பனில் மற்றுமொரு அதிர்ச்சித்தோல்வி

பிரென்ச் ஓப்பன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சி தோல்விகள் தொடர்கின்றன.

உலகின் 5வது நிலை ஆட்டக்காரர் சிலி நாட்டின்
ஃபெர்னாந்தோ கன்ஸாலஸ் இனறு முத்ல் சுற்று போட்டியில்
58வது நிலை ஆட்டக்காரர் ராடக் ஸ்டெப்னிக்கிடம் 2-6,2-6,4-6
என்ற நேர் செட்களில் தோற்றுப்போனார்.

ஃபெர்னாந்தோ கன்ஸாலஸ் இந்த ஆண்டு ஆஸ்த்திரேலியா
டென்னிஸ் ஓப்பன் போட்டியில் இறுதிப்போட்டி வரை
முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டி ரோடிக் பரிதாப தோல்வி

பிரான்சின் பாரிஸ் நகரில் பிரென்ச் ஓப்பன் ( களிமண்தரை) டென்னிஸ் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது.

முதல் நாள் ஆட்டங்கள் மழையின் காரணமாக தடைப்பட்டது.இரண்டாவது நாளாகிய இன்று முதல்சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.


முதல் நிலை ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரர் சுலபமாக 6-4,6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் ரஸ்ஸலை வென்று இரண்டாம் சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

மூன்றாம் நிலை ஆட்டக்காரர், அமெரிக்காவின் ஆண்டி ரோடிக்
6-3,4-6,3-6,4-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் இளம் ஆட்டக்காரர் இகோர் ஆண்ட்ரீவிடம் தோற்றுப்போனார்.

ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

தேசிய வளர்ச்சி கூட்டத்தில் கருணாநிதி!

தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.கருணாநிதி, நதிகளை தேசியமயமாக்கவும், தமிழகத்திற்கு அதிக நிதி கேட்டும் உரை நிகழ்த்தியுள்ளார்.

தமிழக அரசு செயற்படுத்தியுள்ள விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் சுமார் 700கோடி தள்ளுபடி திட்டத்தில் மத்திய அரசின் பங்கினையும் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண்மைப் பணிகளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலைமலர்

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை கணினி மூலம் அறிந்து கொள்ளும் வசதி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை மற்றும் இந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் கூட்டு முயற்சியால் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் வயலார் ரவி:

'ஓவர்சீஸ் பெசிலிடேஷன் சென்டர்' - Overseas Indian Facilitation Centre (OIFC) என்று பெயரிடப்பட்டுள்ள இச் சேவை மையங்கள், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த தகவல்களை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தெரிவிக்கும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிதித்துறை ஆலோசனைகளையும் வழங்கும். மேலும், இம்மையத்திற்கு நேரில் வந்து ஆலோசனைகள் பெற முடியாதவர்கள் www.ofic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தினமணி

பஹ்ரைன்: பொதுமன்னிப்பு-அனுமதியின்றி தங்கியிருப்பவர்களுக்கு!

கள்ளத்தனமாக குடியேறியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு அவகாசமும் பொது மன்னிப்பும் அளிக்கப்படும் என்று பஹ்ரைன் தொழிலாளர் நல அமைச்சர் மாஜித் முஹ்சின் அல்அலவி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியர்கள் பலரும் பலனடைவார்கள்.

ஏற்கனவே 2002லும் பஹ்ரைன் இவ்வாறான ஒரு பொதுமன்னிப்பு காலத்தை அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. இச்செய்தி பஹ்ரைன் ட்ரிப்யூன் நாளேட்டில் வந்துள்ள்ளது.

"ஆயுத உதவி ப்ளீஸ்!" - இந்தியாவிடம் கேட்கிறது இலங்கை!

இலங்கையின் ராணுவத்துறை செயலர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமற்ற வருகை மேற்கொண்டு, உச்சத்தில் நடந்து வரும் உள்நாட்டு போரை சமாளிக்க இந்தியாவிடம் ஆயுத உதவி கோருவதாக பி.டி.ஐ நிறுவன செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

இந்தியா உதவாத பட்சத்தில் வேறு நாடுகளின் உதவி கோரப்படுமாம்.

திமுகவில் சேரும் ராஜ் டிவி சகோதரர்கள்

ராஜ் டிவி நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் திமுகவில் சேரத் திட்டமிட்டுள்ளார். முன்பு ராஜ் டிவிக்கு தயாநிதியால் நெருக்கடி வந்தபோது பாஜகவில் சேர்ந்தார் ராஜேந்திரன். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் திமுக தரப்பிலிருந்து தங்கள் மீது ஆதரவுப் பார்வை படத் தொடங்கியுள்ளதால் திமுகவில் சேர முடிவு செய்துள்ளார் ராஜேந்திரன். ஜூன் 1ம் தேதி அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ராஜேந்திரனும், அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் ஆகியோரும் திமுகவில் இணையவுள்ளனர்.

இது சந்தர்ப்பவாத செயலாக கூறப்படுகிறதே என்று ராஜேந்திரனிடம் கேட்டபோது,

நிச்சயம் இல்லை. நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.

எனது தந்தை மாணிக்கம் பிள்ளை திமுககாரர். எனது மாமனாரும் திமுககாரர். முன்னாள் அமைச்சர் மாதவன் எனது உறவினர். எனது குடும்பமே திமுக குடும்பம்தான். எனவே நானும், எனது சகோதரர்களும் திமுகவில் சேருவது சந்தர்ப்பவாத செயல் அல்ல என்றார் ராஜேந்திரன்.

சோனியாவுடன் தயாளு அம்மாள் சந்திப்பு

புதுடெல்லி, மே 29-
டெல்லியில் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை, தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.


நன்றி: "மாலை முரசு"

ச: ஹிமாச்சல்: முதல்வர் மீது ஊழல்புகார் கூறியதால் காங். எம். எல்.ஏ சஸ்பெண்ட்

ஹிமாச்சல் பிரதேச முதல்மந்திரி வீரபத்ரசிங் மீது நேற்று தர்மசாலாவில் ஊழல் புகார் கூறியதை அடுத்து காங். மேலிடம் விஜய் சிங் மான்கோடியா என்ற ஆளும் கட்சி எம் எல் ஏவை இன்று தற்காலிக பணிநீக்கம் செய்தது. விஜய் சிங் முன்னதாக முதல்வர் மற்றும் அவரது எம்பி மனைவி பிரதிபாசிங் அவர்களின் உரையாடலுடன் கூடிய டேப்பை வெளியிட்டு இருவரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். மேலும் பிரதமரும் காங்கிரஸ் தலைவரும் முதல்வரின் சொத்துக்களை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் ஆராய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முழு விவரம்..The Hindu News Update Service

ச: இராஜஸ்தான் துப்பாக்கிசூட்டில் ஏழுபேர் மரணம்

இராஜஸ்தானைச் சேர்ந்த குர்ஜார் இன மக்களை பழங்குடியினர் என்றில்லாமல் இதர பிற்பட்ட இனத்தவராக அடையாளப் படுத்தியதற்கு எதிர்த்து தௌசா என்றவிடத்தில் ஜெய்பூர்- ஆக்ரா நெடுஞ்சாலை போக்குவரத்தை மறித்துப் போராடியவர்களைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டிலும் அடிதடியிலும் ஏழுபேர்வரை மரனமடைந்துள்ளனர்;் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறை கரௌளி,புந்தி ஆகிய இடங்களுக்கும் பரவுவதை யடுத்து இராணுவம் கூப்பிடப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கலவரம் பற்றி மேலும் அறிய DNA - India - Daily News & Analysis

சேதுசமுத்திர திட்டம் :ராம.கோபாலன் வழக்கு விசாரணை.

ராமரே அழித்து விட்டார்! ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு.


ராமர் சேது பாலமே இல்லையென்று கூறிவந்த மத்திய அரசு, தற்போது அந்த பாலத்தை ராமரே அழித்து விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறது. இது தமிழக அரசின் கெஜட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றும் போது ராமர் பாலத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலனும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுடைய மனுக்கள் இம்மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் ஜோதிமணி, சுதாகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று முதலாவதாக சுப்பிரமணியசாமியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரே நேரில் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜரானார்.
மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன் பின்னர் ராமகோபாலன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலர், இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல், சேதுசமுத்திர திட்டத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தே மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கி இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.சேது சமுத்திர திட்டம்
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆயினும் உச்சநீதிமன்றம் தடை எதையும் வழங்கவில்லை. ராமர் பாலம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை; கற்பனையானது. ஆதம்பாலத்தை ஆழப்படுத்த 230 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆதம்பாலம் என்பது மணல் திட்டுக்களே. அது ராமர் பாலம் அல்ல.
இலங்கையில் இருந்து ராமர் திரும்பிய பிறகு தன் வில்லை ஏவி அவர் அமைத்த பாலத்தை அவரே அழித்து விட்டதாக தமிழ்நாடு கெஜட்டில் கூறப்பட்டுள்ளது. இல்லாத பாலத்தை இருப்பதாக கூறுகிறார்கள். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

மிரட்டல்: FBI பிடியில் இந்தியர்

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரை அவருடைய பாலியல் சுரண்டலை காரணமாக வைத்து மிரட்டிய இந்தியர் ஒருவரை அமெரிக்க FBI கைது செய்துள்ளது. அவர் பெயர் ராஜதத்தா பட்கர் ஆகும். IITயில் பயின்றவர்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு சில காலம் ஜப்பானீய மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார். அவரால் மிரட்டப்பட்டவர் ஹவாய் மாகாண ஆளுநரின் செயலராம்.

மேலும் படிக்க:

புதிய ஜனாதிபதி யார்?

ஆலோசனைகள் தீவிரம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்ய பல்வேறு கட்சிகளும் தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளன.
காங்கிரஸ் சார்பில் பல பெயர்கள் அடிபட்டாலும் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பிஜேபி தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த ஆலோசித்து வருகிறது. மேலும்...

ராம்-இலட்சுமண் இரட்டையர்கள் பிரிப்பு!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ராம்-இலட்சுமண் என்கிற 10 மாத குழந்தைகள் இன்று மருத்துவ வரலாற்றின் அரிய அறுவைசிகிச்சை மூலம் பிரிக்கப்படுகின்றனர்.

ராய்ப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளரும், மருத்துவருமான எம்.பி.பூஜாரி இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி!

தமிழகத்தில் கத்திரிவெயில் இன்றுடன் முடிகிறது.

தமிழத்தை கடந்த ஒரு மாதமாக தாக்கி எடுத்து வந்த அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்றுடன் முடிகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அடித்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. ஆங்காங்கே நல்ல மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்துக் கட்டியது. குறிப்பாக சென்னை, அரக்கோணம், வேலூர் ஆகிய நகரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் பலமாக இருந்தது. இந்த ஊர்களில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் படிப்படியாக குறையத் தொடங்கியது. இன்றுடன் கத்திரி வெயில் முடிவடைகிறது. இதையடுத்து வெயில் இனி அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோடை மழையும் ஆங்காங்கே பரவலாக பெய்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையில் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அங்கீகாரம் பெற்றதனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழகஅரசு சார்பில் ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளிகூடங்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக பயணம்மேற்கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கப் படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகூடங்கள் 1ந்தேதி தொடங்குகிறது. பள்ளி தொடங்கும் முதல் நாளே இலவச பஸ்பாஸ்களை வழங்க சென்னைபெருநகர போக்கு வரத்து கழகம் தயாராக உள்ளது. போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில்,சென்னையில் படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 1-ந்தேதி முதல் இலவச பஸ் பாஸ் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுஉள்ளன.
பள்ளிகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது. பஸ் பாஸ் பெற விரும்புவோர் முறையாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப் பித்தால் புகைப்படம் எடுத்து உடனடியாக வழங்கப்படும்.
மாணவர்களின் விண்ணப் பங்களை ஒட்டு மொத்தமாக சேகரித்து பள்ளி நிர்வாகம் கொடுத்தால் அங்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுப்பபட்டு பஸ்பாஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டு 2லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு பஸ்பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட கூடுதலாகவழங்க வேண்டியிருக்கும்.
சுமார் 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு மேல் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இடிக்கப்பட்ட 'ராப்ரி ரயில் நிலையம்'

பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் பெயரால் அமைக்கப்பட்டிருந்த 'ரயில் நிலையத்தை' இடிக்க ரயில்வே உத்தரவிட்டது. இதையடுத்து அது இடித்துத் தள்ளப்பட்டது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பீகாருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. மற்ற மாநிலங்களில் காண முடியாததை பீகாரில் அதிகம் காணலாம். அதற்கு ஒரு உதாரணம், பீகாருக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ரயில்கள் ரயில்வேயின் கட்டுப்பாட்டிலேயே கிடையாது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் ரயில்வே அமைச்சர்களாக வருகிறார்கள் என்பதால், யார் அமைச்சராக இருக்கிறாரோ அவர்கள் பெயரைச் சொல்லி அவர்கள் ரயில் என்றுதான் பீகாரிகள் செல்லமாக கூறுவார்கள்.

முன்பு ராம் விலாஸ் பாஸ்வான் ரயில்வே அமைச்சராக இருந்தார். பிறகு நிதீஷ் குமார் இருந்தார். தற்போது லாலு பிரசாத் யாதவ் இருக்கிறார். இந்த மூவரில் லாலு வந்த பிறகுதான் பீகாரிகளுக்கு ரயில்வே மீது அதிக 'பாசம்' வந்து விட்டது. 'லாலு கா ரயில்' என்று கூறியபடி அவர்கள் செய்யும் அலும்புகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

பீகாரில், சஸ்ராம் - பிகார்கஞ்ச் ஆகிய இரு ஊர்களுக்கு இடையிலான 45 கிலோமீட்டர் தொலைவில், வழக்கமாக உள்ள ரயில் நிலையங்கள் தவிர சில அதிகாரப்பூர்வமற்ற 'ரயில் நிலையங்களும்' உள்ளன. உள்ளூர் பிரபலங்களின் பெயரால் உள்ளூர் மக்களே அமைத்த 'ரயில் நிலையங்கள் தான் இவை. இவர்களே ஒரு பிளாட்பாரத்தை எழுப்பி, அதன் மேல் அந்த ஊர் பிரபலத் தலைவர்களின் பெயர்களால் ஒரு போர்டும் வைத்துள்ளனர். இந்தப் பகுதி வழியாக செல்லும் உள்ளூர் ரயில்கள் கண்டிப்பாக இந்த அதிகாரப்பூர்வமற்ற ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான் அந்த ரயிலின் டிரைவருக்கு சரமாரியாக சாத்துப்படி கொடுக்கப்படுமாம். இவர்களுக்குப் பயந்து உள்ளூர் ரயில்கள் இந்த அதிகாரப்பூர்வமற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லுமாம்.

அப்படிப்பட்ட ஒரு ரயில் நிலையத்திற்கு ராப்ரி தேவியின் பெயர் வைத்திருந்தனர் அந்தப் பகுதி மக்கள். இதுபோல கிட்டத்தட்ட 8 ரயில் நிலையங்கள் இந்த மார்க்கத்தில் உள்ளன. இவை அனைத்தையும் இடித்துத் தள்ளுமாறு ரயில்வே துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த ரயில் நிலையங்களை இடித்துத் தள்ளினர். ராப்ரி நிலையமும் கூடவே இடித்துத் தள்ளப்பட்டது.

தட்ஸ்தமிழ்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு,

சென்னை மாணவிகள் சாதனை.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபர் தீவுகள், டாமன்-டையூ, லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன. சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் சென்னை மாணவ, மாணவிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சென்னை கோபாலபுரம் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி ச.திவ்யா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இதே பள்ளியில் படிக்கும் ச.ராஜேஸ்வரி 489 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.சென்னை முகப்பேர் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி பா.சவுமியா 491 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இதேபோல், சென்னை கோபாலபுரம் டிஏவி ஆண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவர் நவனீத் நாயர் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை சற்றுமுன் மனதார பாராட்டுகிறது. சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதேசமயம், தேர்ச்சிபெறாமல் போன மற்ற மாணவ/மாணவிகள் தொடர்ந்து தங்கள் கல்வி கற்கவும் பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து கல்வி புகட்ட சற்றுமுன் கேட்டுக்கொள்கிறது.

மணிரத்னம் தம்பி உடல் தகனம் நடைப்பெற்றது.

சினிமா டைரக்டர் மணிரத்னத்தின் தம்பி சீனிவாசன், குலுமனாலியில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து மரணம் அடைந்தார். அவருடைய உடல் குலுமனாலியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து இன்னொரு விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
`கேன்ஸ்' படவிழாவில் கலந்துகொண்டுவிட்டு, ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்த டைரக்டர் மணிரத்னம் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். தம்பியின் உடலைப்பார்த்து அவர் கண்கலங்கினார்.
மரணம் அடைந்த சீனிவாசன், மணிரத்னத்துடன் இணைந்து `உயிர்,' `அலைபாயுதே,' `இருவர்,' `ஆயுத எழுத்து,' `குரு' உள்பட பல படங்களை தயாரித்தார். அவருடைய உடல் தகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11-30 மணிக்கு, சென்னை பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடைப்பெற்றது.

இன்போசிஸ் மதிப்பு ரூ.31,600 கோடி 38% அதிகரிப்பு

பெங்களூர், மே 29: முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிசின் மொத்த மதிப்பு கடந்த மார்ச் வரை ரூ.31,617 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2005-06 நிதி ஆண்டைவிட 38 சதவீதம் அதிகம்.

இன்போசிஸ் நிறுவனத்தில் 73 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இது 2005-06 நிதி ஆண்டைவிட 37 சதவீதம் அதிகம். அதாவது, 2006-07ம் நிதி ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பேர் வேலையில் சேர்ந்தனர்.

ஊழியர்களால் சராசரியாக இன்போசிஸ் நிறுவனத்துக்கு 6.7 சதவீத வர்த்தகம் நடந்தது. இது முந்தைய ஆண்டில் 5.3 சதவீதமாக இருந்தது.

ஊழியர்களிடம் இருந்து சிறந்த பணித் திறமை வெளியாக சிறப்புப் பயிற்சிகள், பொழுதுபோக்கு வசதிகள், சலுகைகள், அதிக விடுமுறை ஆகிய நடைமுறைகளை கடந்த நிதி ஆண்டில் இன்போசிஸ் தாராளமாக வழங்கியதும் வர்த்தக உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.
கடந்த நிதி ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.7 ஆயிரம் கோடியை இன்போசிஸ் வழங்கியது. மொத்த வர்த்தகத்தில் ஊழியர்களுக்கு செலவிடும் தொகை சராசரி 12.4 சதவீதமாக அதிகரித்தது. இது முன்பு 10.3 சதவீதம்.



நன்றி: "தினகரன்"

9ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு



மே 29: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது வைரிச்செட்டிப்பாளையம். இங்குள்ள வேடன்கலிங்கு அருகே, வேடன் சிற்பம் உள்ளதாக கீழக்கல்பூண்டி கல்வெட்டு ஆய்வாளர் பாண்டுரங்கனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் பழம்பொருள் சேகரிப்பாளர் பெரியசாமி, கல்வெட்டு ஆய்வாளர் எழிலரசு, தொல்பொருள்துறை ஸ்தபதி ராமன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இரண்டரை அடி அகலம், மூன்றரை அடி உயரம் கொண்ட வீரனின் புடைப்பு சிற்பம் இருந்தது. இது 9ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல் என தெரியவந்துள்ளது. தன்னிடமுள்ள பசுக்கூட்டங்களை கவர்ந்து சென்றவர்களை மீட்கும்போது நடந்த சண்டையில் இறந்த வீரன் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.




நன்றி: "தினகரன்"

யாழ்ப்பாணத்தை மீட்க புலிகள் திட்டம்

கொழும்பு, மே 28:

யாழ்ப்பாணத்தை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


முழு செய்திக்கு "மாலைச் சுடர்"

Monday, May 28, 2007

மாறன் இல்ல நிகழ்ச்சி: முதல்வர் குடும்பம் புறக்கணிப்பு

சென்னை, மே 28:

முரசொலி மாறன் மகள் டாக்டர் அன்புக்கரசியின் வளைகாப்பு சென்னையில் இன்று நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. முதல்வர் குடும்பத்தினர் யாரும் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.


முழு செய்திக்கு "மாலைச் சுடர்"

இந்திய சரோட் இசை மேதைக்கு அங்கிகாரம்.

சரோட் இசை வல்லுனர் ஆஷிஷ் கானுக்கு Fellow of the Royal Asiatic Society of Great Britain and Ireland என்கிற உயரிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கிகாரம் பெறும் முதல் இந்திய இசைக்கலைஞர் இவர். இது ஐக்கிய இராச்சியத்திலேயே (UK) ஆசிய கலைகளுக்கான மிக உயர் பீடமாகும்.

இவ்வுயர் அங்கிகாரம் பெற்றவர்களில் கவிமேதை ரவீந்தரநாத் தாகூர், வரலாற்றறிஞர் சர். ஜாதுநாத் சர்க்கார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

சரோட் இசை மேதை அலி அக்பர் கானுடைய மகனாகிய ஆஷிஷ் கான், தனது தந்தைக்கு இணையாக கிராமி விருதுகள் பெற்றுள்ளவராவார்.

இந்திய இசையை மேற்கில் பரவச்செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

The Hindu News Update Service-லிருந்து

ச: நிலவு செல்லும் திட்டத்திற்கு இயந்திரஜீவி : ஐஐடி கான்பூர் தயாரித்தது

இந்தியா நிலவிற்கு மனிதரை 2011இல் அனுப்பும் திட்டத்திற்கு உறுதுணையாக அங்குள்ள நிலத்தில் செல்லவும் படங்கள், நிகழ்படங்களை் எடுக்கவும் ஏதுவான ஒரு இயந்திரஜீவியை ஐஐடி கான்பூர் மாணவர்களும் பேராசிரியர்களும் தயாரித்திருக்கிறார்கள். இரண்டுகால்களுடன் கூடிய இந்த இயந்திரஜீவி அதிநவீன காமிராக்களின் மூலமும் லேசர் விளக்குகள் மூலமும் தகவல் சேகரிக்க முடியும்.

மேலும் அறிய..Robot for India's moon mission - Sify.com

ஜப்பானிய அமைச்சர் தற்கொலை!


ஜப்பானின் விவசாய அமைச்சர் டோஷிகட்சு மட்சோகா இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 62.

வெறும் 236,000 டாலருக்கும் சற்றே அதிகமான செலவு கணக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான கேள்விக்கணைகளுக்கு உள்ளான அவர், மானத்துக்கு பயந்து இந்த முடிவு கண்டதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற கமிட்டி ஒன்றின் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக இம்முடிவை அவர் எய்தியுள்ளார். முன்னதாக, எதிர்கட்சிகள் அவருடைய பதவி விலகலை கோரி வந்திருந்தன.

பதவியேற்றிருந்த மூன்றே நாளில், அரசியல் நன்கொடைகளின்பால் செலவிடப்பட்டிருந்த 8,500 டாலர் தொகைக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பி.கு: தொழிற்மயப்பட்ட நாடுகளில் ஜப்பானில் தான் தற்கொலைகள் அதிகம்.

சி.என்.என். செய்தி

ச:கேரளாவில் பருவமழை துவங்கியது

பொருளாதார நிபுணர்களிலிருந்து பங்கு வணிகர் வரை எதிர்பார்க்கும் இந்தியாவின் பருவ மழை கேரளத்தில் இன்று எட்டியதாக தெரிகிறது. திருவனந்தபுரம், மலப்புரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா என எல்லா மாவட்டங்களிலும் கடந்த 24 மணிநேரத்தில் கனத்த மழை பெய்துள்ளது. கேரள வானிலை அதிகாரிகள் இது பருவமழைதானா என நிச்சயிக்காவிடினும் தில்லி வானிலை நிலையம் இது பருவமழையே யாகும் என உறுதி செய்துள்ளது.

NDTV.com: Monsoon hits Kerala coast

சோனியாவை சந்தித்தார் கருணாநிதி.

தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும், இதில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.மேலும், டெல்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளார். இதனிடையே, டெல்லியில் இன்று நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் அவர், தமிழகத்துக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசு வழங்கவேண்டிய உதவிகள் குறித்து விவரிப்பார் எனத் தெரிகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளில் திமுக பிரதானக் கட்சியாகத் திகழ்வதால், சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் உடனான கருணாநிதியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அஸ்ஸாம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஒருசேர நிகழ்ந்த இரு முழு அடைப்புகளால் அஸ்ஸாமின் இயல்பு வாழ்க்கை இன்று பாதிப்படைந்தது.

29 வணிக அமைப்புகள் சேர்ந்து 24 மணி நேர முழு அடைப்புக்கு காம்ரூப் மாவட்டத்திலும், அஸ்ஸாம் கன பரிஷத் குவஹாத்தி நகரில் 12 மணி நேர முழுஅடைப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தன. மாநிலத்தில் நிகழ்ந்துவரும் குண்டு வெடிப்புகளை கண்டித்து, உல்ஃபா தீவிரவாதத்துக்கு எதிராக இந்த முழு அடைப்புகள் நிகழ்த்தப்பட்டன. மற்ற அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன.

The Hindu News Update Service

மதுரை மேற்கு: அ தி மு க வேட்பாளர் யார்?

மதுரை மேற்கு இடைத்தேர்தலில் அ தி மு க வேட்பாளராக டேவிட் காளிமுத்து நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

மாலைமலர்

வெளிநாட்டுவாழ் இந்தியர் கைது!

கணவனை கொல்ல முயன்றதாக, பஞ்சாபைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியப்பெண்மணி பல்விந்தர் அவர் மகளுடனும், மகளின் காதலனுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷின் கொவென்ட்ரி நகரில் இது நடந்துள்ளது

தனக்கிருக்கும் கடன் தொல்லையிலிருந்து மீள, கணவன் பெயரில் ஆயுள் காப்பீடு எடுத்து, பின்னர் கணவரையே கொல்ல முயன்றுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கும் முறையே பத்து, எட்டு, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

டைம்ஸ் ஓஃப் இந்தியா

துபாய்-ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

துபாயில் இந்திய முஸ்லீம் சங்கத்தின் சார்பில் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வரும் ஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ளது. அல்-கிஸஸ் சென்ட்ரல் பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. முகாமில் ஆண்கள், பெண்கள் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் முன் பதிவு 15 தினார் ஆகும். இந்த பயிற்சிக்கு முன் பதிவு செய்யும் முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முன் பதிவு செய்ய 050 51 96433 மற்றும் 050 47 53052 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் iman1976@emirates.net.ae அல்லது unarvaiunnai@yahoo.comஎன்ற இ-மெயில் முகவரிகள் மூலமும் முன் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

source: thats thamil

டெல்லி புறப்பட்டுச் சென்றார்:முதல்வர் கருணாநிதி.

அன்பழகனுக்கு பதவியா?
முதல்வர் கருணாநிதி 2 நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். காலை 6.40 மணிக்கு டெல்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் ராஜா ஆகியோரும் சென்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். தனது டெல்லி பயணத்தின்போது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் கருணாநிதி. இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரை, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் சந்தித்துப் பேசுகிறார். 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் சந்திக்கிறார். 12 மணிக்கு சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கருணாநிதி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள் குறித்து முக்கிய விவாதம் நடக்கிறது. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திமுகவுக்கு அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அப்பொறுப்புக்கு அமைச்சர் அன்பழகனை திமுக நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து இன்று முடிவு செய்யப்படும். மாலை 5.30 மணிக்கு மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முதல்வரை சந்திக்கிறார். இரவு 7 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார். இரவு 8 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ஏ.பி.பர்தான் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று தமிழகத் திட்டங்கள் குறித்து பேசுகிறார். அதே போல உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் விபி சிங்கையும் சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து நாளையே தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கருணாநிதி சென்னை திரும்புகிறார்.

அடக்குமுறைகள் தொடர்கின்றன: திருமாவளவன்

ஆளும் கூட்டணியில் இருந்தாலும் காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதும், அடக்குமுறைகளும் தொடர்கின்றன என்றார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன்.

கொத்தடிமைகள்

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கல்குவாரிகள், தறிப் பட்டறைகளில் தலித் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அரசு இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாநகரில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் போடுகின்றனர். இதுதொடர்பாக மண்டல காவல் துறைத் தலைவரையும் மாநகர் காவல் ஆணையரையும் சந்திப்பேன்.

கரூர் மாவட்டம், தம்மாநாயக்கன்பட்டியில் தலித் மக்கள் நடைபாதையாக இருந்த பகுதி, பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்புகிறோம் என்ற பெயரில் அடைக்கப்பட்டுள்ளது.

தினமணி

HATS OFF "கனகவல்லி"




திருமண மண்டபத்தில், சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்து இருக்கிறது. "வேறு பெண்ணை கர்ப்பம் ஆக்கியவருடன் குடும்பம் நடத்த மாட்டேன்'' என்று கூறி, காலையில் கட்டிய தாலியை, மதியம் கழற்றி வீசினார், புது மணப்பெண்.

முழு செய்திக்கு "தினத்தந்தி்"

மலையாள மனோரமா பத்திரிகைக்கு சுற்றுச்சூழல் விருது

மலையாள மனோரமா பத்திரிகைக்கு 2004-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட உள்ளது.

2004-ம் ஆண்டு கேரளத்தில் கடும் வறட்சி நிலவியது. அப்போது நீர் சேகரிப்பு குறித்து 'பல துளி' என்ற பிரசாரத்தை மாநிலம் முழுவதும் மலையாள மனோரமா பத்திரிகை மேற்கொண்டது. இதை பாராட்டும் விதத்தில்தான் அப் பத்திரிகைக்கு இந்திரா காந்தி பர்யாவரண் (சுற்றுச்சூழல்) விருது மத்திய அரசினால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது சர்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வழங்கப்படும்.

தினமணி

கலைஞர் டிவிக்கு "சிவாஜி' பட உரிமை

புதிதாக தொடங்கப்பட உள்ள 'கலைஞர் டிவி'க்கு, ரஜினி நடித்து வெளிவர உள்ள 'சிவாஜி' படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள்:'சிவாஜி' படத்தை தமிழகம் முழுவதும் திரையிட வசதியாக 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜூன் 3-ம் தேதி 'கலைஞர் டிவி'க்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி "டிவி' தொடங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

'டிவி' தொடக்க நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி, 'சிவாஜி' படம் "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும்.

தினமணி

உழைப்பால் உயர்ந்த சிங்கம்

நேற்று ஐஸ் வியாபாரி இன்று கோடீஸ்வரர் -
உழைப்பால் உயர்ந்த சிங்கம்


லூதியானா. மே 28: வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடி அலைவதே இன்றைய இளைஞர்கள் பலரின் லட்சியமாக உள்ளது. ஆனால், எந்த வேலை செய்தாலும், அதை தாயகத்தில் செய்து முன்னுக்கு வரவேண்டும் என்பதை பஞ்சாபி ஒருவர் நிருபித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் ராஜேந்தர் சிங் பசந்த். இன்று இவர் மிகப் பெரும் கோடீஸ்வரர். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன் இவர், சைக்கிளில் ஐஸ் விற்ற வியாபாரி. இவரால் எப்படி கோடீஸ்வராக முடிந்தது? அவரே சொல்கிறார்:

என் தந்தை, குல்பி ஐஸ் விற்கும் ஏழை வியாபாரியாக இருந்தார். என்னை படிக்க வைக்க கூட அவருக்கு வசதியில்லை. அதனால், குல்பி ஐஸ் விற்கும் தொழிலையே எனக்கும் கற்று கொடுத்தார். 1980ம் ஆண்டில் என் தந்தை இறந்தார். அது முதல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும் என் மீது விழுந்தது. இதனால் முழு மூச்சில் குல்பி ஐஸ் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டேன்.

அப்போது பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலம். லூதியானாவில் எப்போது ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரம் என்று கூற முடியாத நிலை. இரவு 8 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படமாட்டாது. என்னை போல் சிறு வியாபாரிகள், எந்த வியாபாரமும் செய்ய முடியாது.

ஒருநாள், சைக்கிளில் குல்பி ஐஸ் பெட்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, தினமும் என்னிடம் காசு கொடுக்காமல் மிரட்டி ஐஸ் வாங்கி சாப்பிடும் போலீஸ்காரர் ஒருவர் எதிரில் வந்தார்.

என்னிடம் ஐஸ் கொடுக்கும்படி கேட்டார். ஆனால், என்னிடம் ஐஸ் இல்லை. கோபம் தலைக்கேறிய நிலையில், அந்த போலீஸ்காரர், என் கண்ணத்தில் அறைந்துவிட்டு சென்று விட்டார். மன வேதனையுடன் வீட்டுக்கு திரும்பினேன். அப்போது வழியில், அதே போலீஸ்காரர், ஒரு அரசியல்வாதியிடம் மிகவும் பவ்யமாக, காலில் விழாத குறையாக வணக்கம் செலுத்துவதை பார்த்தேன்.

வாழ்க்கையில் பணமும் பதவியும் இருந்தால்தான் மதிப்புÕ என்பதை புரிந்துக் கொண்டேன். கடுமையாக உழைத்து வாழ்க்கையில் பணக்காரனாக வேண்டும் என்று உறுதி கொண்டேன். ஒய்வு என்று ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை. அதேநேரத்தில் பசந்த் குல்பி ஐஸ் தரமான ஐஸ் என்பதில் எந்த குறைவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன்.

24 மணி நேரமும் ஐஸ் வியாபாரம்தான் எனது பணியாக இருந்தது. படிப்படியாக பஞ்சாபின் பல பகுதிகளில் எனது ஐஸ் கம்பெனியின் கிளைகளை திறந்தேன். சைக்களில் ஐஸ் விற்க ஆரம்பித்த நான், பின்னர், வேன்களில் விற்க ஆரம்பித்தேன். இன்று வட மாநிலங்களில் எனது நிறுவனத்தின் கிளைகள் இல்லாத இடமே இல்லை. ஏன்? லண்டனில் கூட பசந்த் குல்பி ஐஸ் கடை திறந்துள்ளேன். இத்துடன் பஞ்சாபில் பல பகுதிகளில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் எனக்கு சொந்தம்.

சாதாரண ஐஸ் வியாபாரியாக இருந்த நான், இன்று கோடீஸ்வரனாக இருப்பதற்கு காரணம் கடும் உழைப்பை தவிர வேறு எதுவும் இல்லை.
கடும் உழைப்பை என் தந்தை எனக்கு கற்று கொடுத்தார். இன்று என் குழந்தைகளுக்கு அதைதான் நான் சொல்லிக் கொடுக்கிறேன்.

இன்று இளைஞர்கள் பலருக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பது கனவாக உள்ளது. பலர் வெளிநாடு செல்கிறார்கள். ஆனால், சாதிக்க முடிவதில்லை. கடும் உழைப்பை நம்பி எந்த தொழில் செய்தாலும் வெற்றிதான். அதில் நிச்சயம் தாயகத்திலேயே சாதிக்க முடியும் என்பதுதான் இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை.

வாழ்க்கையில் முன்னுக்கு வர கனவு காணுங்கள். அதற்கு உழைப்பை மட்டும் நம்புங்கள். அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் நேர்மையையும் ஓழுக்கத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எந்த தொழில் செய்தாலும் நிச்சயம் முன்னுக்கு வர முடியும். நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும் என்று கூறுகிறார் ராஜேந்தர் சிங் பசந்த்.


நன்றி: "தினகரன்"

உமறுபுலவர் கருணாநிதி







அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7ம் மாநாடு-2007 கடந்த 25ம் தேதி தொடங்கியது. அதன் நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதிக்கு, உமறுபுலவர் விருது வழங்கப்பட்டது. மேடையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுடன் முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார்.

நன்றி: "தினகரன்", "தினத்தந்தி"

Sunday, May 27, 2007

ச: மாநிலங்களவைக்கு அதிமுக வேட்பாளர்கள்: மைத்ரேயன், இளவரசன்

முன்னாள் அதிமுக எம்பி டா.மைத்ரேயனும் இளவரசனும் அதிமுக வின் சார்பில் ஜூன் 15 நடைபெறவுள்ள மாநிலங்களைவை தேர்தலுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
மேலும்..The Hindu News Update Service

ச: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு : தமிழக அரசு அவசர ஆணை பிறப்பிக்கும்

முஸ்லிம்களுக்கு கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசர ஆணை இன்னும் ஒருவாரத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். இன்றிரவு ஏழாவது அனைத்துலக இஸ்லாமிக் இலக்கிய மாநாட்டில் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான் கான் கேரள,கர்நாடக மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு போல தமிழகத்திலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த ஒதுக்கீடு 69% உள்ளேயே இருக்கும் என்று முதல்வர் கூறினார்.

முன்னதாக முதல்வருக்கு உமறு புலவர் விருது வழங்கி ஒரு இலட்ச ரூபய் சம்மானமும் ஒரு நினைவுப் பொருளும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.



DNA - India - TN to provide reservation for Muslims - Daily News & Analysis

ச: மணிரத்தினம் சகோதரர் ஜி சீனிவாசன் மரணம்

தமிழகத்தின் பிரபல படதயாரிப்பாளரும் இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரருமான ஜி. சீனிவாசன் ஞாயிறன்று ஹிமாச்சலின் மணாலி அருகே மலைப்பாதையில் செல்லும்போது தடுக்கி 50 அடி பள்ளத்தில் விழுந்து மரணமடைந்தார். 49 வயதான சீனிவாசன் அவரது மனைவி சந்தியா லக்க்ஷ்மண், மகள் ஷ்ரேயா ஆகியோருடன் விடுமுறைக்காக சென்றவிடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து மூன்றுமனிநேரம் கழித்தே அவரது உடலை மீட்க முடிந்தது. அவருக்கு ஷ்ரேயா தவிர திவ்யா, அக்ஷயா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

அவரது தயாரிப்பில் வெளியான இருவர் (1997), ஆயுத எழுத்து (யுவா) ( 2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2202), குரு (2007) யாவையுமே மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து பிரபலமானவை.

DNA - India - Mani Ratnam's brother dead - Daily News & Analysis

ச: கிரிக்கெட்: இந்தியா பங்களாதேச டெஸ்ட் தொடரை வென்றது

இந்தியா இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்றே பங்களாதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆட்டத்தொடரையும் 1-0 என்ற கணக்கில் வென்றது. சிட்டகாங்கில் ஆடிய முதல் ஆட்டம் மழையினால் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.

58/5 இல் நேற்றைய ஆட்டத்தை தொடர்ந்த பங்களாதேசம் 118 ஓட்டங்களில் சுருண்டது. மீண்டும் அவர்களையே தொடரச் செய்த இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸிலும் அவர்களை 253 ஓட்டங்களில் வென்றதால் தாங்கள் தங்களுக்குண்டான இரண்டாம் இன்னிங்ஸை ஆடாமலே 239 ஓட்டங்களில் வென்றனர்.

ஸ்கோர்: பங்களாதேசம் 118 (ஜாகீர்கான் 5-34, கும்ப்லே 3-32) & 253 (மொஹம்மத் அஷ்ராஃபுல் 67, மொர்டசா 70, ரமேஷ் பவார் 3-33)

இந்தியா 610-3 அறிவிப்பு (D.கார்த்திக் 129,ஜாஃபர் 138 அடிபட்டு ஓய்வு, திராவிட் 129, டெண்டுல்கர் 122 ஆட்டமிழக்காது, தோனி 51 ஆட்டமிழக்காது)

மாநிலங்களவைக்கான அ தி மு க வேட்பாளர்கள் -

ஜூன் 15ல் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான அ தி மு க வேட்பாளர்களாக மைத்ரேயனும், இளவரசனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1999ல் பா ஜ க விலிருந்து தி மு க கூட்டணியை எதிர்த்து வெளியேறி அ தி மு க வில் சேர்ந்த மைத்ரேயன் 2002ல் அ தி மு க சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர்.

இளவரசன் என்பவர் பெரம்பலூர் மாவட்ட கட்சி செயலாளர்.

உதகையிலிருந்து திரும்பியுள்ள ஜெயலலிதா இதை அறிவித்துள்ளார்.
முன்னதாக, கனிமொழியை வேட்பாளராக அறிவித்துள்ள தி மு க வின் முடிவைப் பற்றி பிறகு கருத்து சொல்வதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

The hindu News updation

முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் ட்ரில்லியனர்.

ஒரு இலட்சம் கோடி சொத்துக்களை பங்குகளின் மூலம் அடைந்துள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் ட்ரில்லியனராகிறார். பல்வேறுபட்ட தொழில்களிலும், நிறுவனங்களிலும் அவருடைய பங்கு மதிப்பு 111,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

90,000 கோடி சொத்துக்களுடன் அவர் தம்பி அனில் அவரைப் பின் தொடர்கிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

சந்திரஜித் யாதவ் காலமானார்

புதுதில்லி, மே 27: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்திரஜித் யாதவ் (80) வெள்ளிக்கிழமை இரவு தில்லியில் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சந்திரஜித் யாதவ், கடந்த 21-ம் தேதி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவரது உடல் வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டு, திங்கள்கிழமை நண்பகலில் சொந்த ஊரான அசம்காரில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று யாதவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

உ.பி. அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Dinamani

சொத்து குவிப்பு வழக்கு: சிக்கிம் முன்னாள் முதல்வர் குற்றவாளி: சிபிஐ

காங்டாக், மே 27: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிம் முன்னாள் முதல்வர் நார்பகதூர் பண்டாரி குற்றவாளி என்று சிபிஐ கோர்ட்டு சனிக்கிழமை தீர்ப்பளித்தது. காங்டாக் நகரில் பண்டாரி ரூ.15.22 லட்சம் மதிப்பில் 5 மாடி கட்டடம் கட்டியிருந்தார்.

கணக்கில் காட்டப்படாத பணத்தில் அந்த கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்பட்டதை விசாரிக்க கடந்த 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ கோர்ட்டு ஏற்படுத்தப்பட்டது. சிக்கிம் முதல்வராக பண்டாரி கடந்த 1979 முதல் 1994 வரை இருந்துள்ளார். தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிக்கிறார்.

Dinamani

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குண்டுவெடிப்பு

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜனநெருக்கடியான சந்தைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் குறைந்தப்பட்சம் ஏழு பேர் கொல்லப்பட்டு, பதினெட்டு பேர் காயமடைந்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த குண்டு ரிக்சா ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதமாக அசாம் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. இதில் இந்தி மொழி பேசும் மற்ற மாநிலத்தவர்களை கூறி வைத்து பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்துகின்றனர்.

- பிபிசி தமிழ்

BBC NEWS | South Asia | Seven killed in Assam bomb blast

தீவிரவாத 'குறி'யில் திராவிட், டோனி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் திராவிட், விக்கெட்கீப்பர் டோனி ஆகியோரைக்கொல்ல தீவிரவாதிகள் தற்கொலைப்படையை அனுப்பியுள்ள செய்தியொன்றை மாலைமலர் வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் நக்ஸலைட் தீவிரவாதிகளை ஒடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் சிக்கியது.

பி.சி.சி.ஐ தலைவரும், மத்தியமந்திரியுமான சரத்பவாரும் தீவிரவாதிகளின் 'குறி'ப்பேட்டில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாதாரண மக்களின் பணத்தில் இவர்கள் செல்வந்தர்களாக வாழ்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி உரியவர்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.

இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் - பிரிட்டன்

'வேகமான வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவுடன் வலிமையான, ஆழமான நட்புறவுக்கு மிக அதிக முன்னுரிமை தரப்படும் என்று வருங்கால பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

பதவி விலகும் டோனி பிளேய்ரினை அடுத்து இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்தில் பதவி ஏற்க உள்ள அவர் தன்னுடைய அரசு பின்பற்றவிருக்கும் பிற 'திட்டங்கள்' குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவின் பாரம்பரிய வரலாறு, அதன் போராட்டங்கள், சாதனைகள், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி கேட்டறிந்தவாறே தான் வளர்ந்ததாக 56 வயதாகும் ஜேம்ஸ் மேலும் பெருமிதப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

தினமலரின் வேண்டுகோள்!

அனனத்து இந்திய தமிழ்ச் சங்கங்களுக்கும் அன்பான வேண்டுகோள்

இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள் தொடர்பாகவும் தினமலர் இணைய தளத்தில் செய்திகள் வெளியிட இருக்கிறோம். எனவே டில்லி, மும்பை, புனே, நாக்பூர், கோல்கட்டா, திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், புவனேஸ்வர், போபால், இந்துர், ராஞ்சி, ரெய்ப்பூர், ஜெய்ப்பூர், ஆமதாபாத், பரோடா, சூரத், சண்டிகர், லக்னோ, டேராடூன், சிம்லா, கவுகாத்தி, இம்பால், காங்க்டாக், ஷில்லாங், இடாநகர், அய்ஜால், அகர்தாலா, கொகிமா மற்றும் இதர முக்கிய நகரங்களில் அமைந்துள்ள தமிழ்ச்சஙகங்கள் தங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். சங்கங்களின் நிர்வாகிகள் விவரம், சங்க நடவடிக்கைகள், உங்கள் பகுதிகளில் உள்ள தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் போன்ற செய்திகளை படத்துடன் அனுப்பி வையுங்கள். தமிழர்களுக்கு இடையேயான ஒரு இணைப்பு பாலமாக விளங்க தினமலர் இணைய தளம் விரும்புகிறது. அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

மும்பையில் பெருந்திரளாக புத்த மதத்திற்கு மாறினர் - வீடியோ

கனிமொழி பளிச் பேட்டி - வீடியோ

Saturday, May 26, 2007

உலக வங்கி நியமனங்கள்: யு.எஸ்ஸுக்கு தெ.ஆஃப்ரிக்கா வலியுறுத்தல்

உலக வங்கியின் தலைவர் பொறுப்பு, சர்வதேச நிதியத்தின் இயக்குனர் உள்ளிட்ட நியமனங்களில், 20 பொருளாதார வல்லரசுகளும் ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிப்படையான, கட்புலனாகும் (Transparent) வகையில் அமைய வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்க நாடுகளை தெ.ஆஃப்ரிக்கா வலியுறுத்தியுள்ளது. ராய்ட்டர் செய்தி

கருணாநிதி பற்றி படம் -கனிமொழி தயாரிக்கிறார்

சென்னை, மே 26:

முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் டாக்குமெண்டரி திரைப்படம் இன்னும் இரு மாதங்களில் வெளி வரும்.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள அவருடைய மகள் கனிமொழி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். இன்னும் இரண்டு மாதங் களில் இப்படம் வெளியாகும் என்றார் அவர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்பட முக்கிய பிரமுகர்களை இப்படத் துக்காக பேட்டி கண்டிருக்கிறார் கனிமொழி.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ உள்பட மூத்த பத்திரிகையாளர்களையும் சந்தித்து, கருணாநிதி பற்றிய அவர்களின் கருத்துகளை இப்படத்தில் சேர்த்திருக்கிறார்.


மேலும் செய்திக்கு "மாலைச்சுடர்"

செல்போனில் இடி இறங்கி 2 பேர் பலி

அவிநாசி, மே 26-
கோவை அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி மீது இடி இறங்கியதில் கட்டட காண்டிராக்டர் உள்பட இருவர் பலியாயினர். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
அவிநாசி தாலுகா செம்பியநல்லூர் கிராமம் மொண்டிநாதம்பாளையம் பிரிவில் கோழிப்பண்ணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியில் காவலாளி அறை கட்டும் பணி நேற்று நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை துவங்கியது.
அப்போது, திடீரென ஒரு இடி இறங்கியது. அப்போது கட்டடத் தொழிலாளி ஜெய்சங்கர் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். செல்போன் வழியாக இடி இறங்கியதால் ஜெய்சங்கர் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அருகில் இருந்த கட்டட கான்ட்ராக்டர் சேகர் (35) என்பவரும் இறந்தார்.

அவினாசி அருகே தனியார் கோழி பண்ணை மீது இடி தாக்கி 2 பேர் இறந்தனர். இடி தாக்கிய கட்டிடத்தை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

- நன்றி: "மாலை முரசு"

ச: செல்பேசி கட்டணம் செலுத்தாததால் பாஹ்ரைனை விட்டு வெளிவரமுடியாத இந்தியர்

மொஹம்மது கருப்பன் என்ற இந்தியர் பஹ்ரைன் தொலைபேசிக்கு இரண்டு இலட்ச ரூபாய் பில்லை கட்ட முடியாததால் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று அந்நாட்டு குடியுரிமை, தகவுச்சீட்டு பொது இயக்ககம் கூறியுள்ளது. கடந்த 28 வருடங்களாக அங்கேயே வாழும் அவர் இந்தக் கடனை அடைக்க முடியாமல் அங்கேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டியதுதானோ என்று கவலைப் படுகிறார்.

DNA - World - Indian stranded in Bahrain over unpaid phone bill - Daily News & Analysis

ச: மும்பை மெகா பிளாக்: ஊரக இரயில்வண்டிகள் பாதிப்பு

மும்பையின் நாடிகளில் ஒன்றான மேற்கு இரயில்வேயின் தண்டவாளங்களை அதிகரிக்கும் பணிக்காக சனி,ஞாயிறு அன்று உள்ளூர் இரயில்வண்டிகள் 25%க்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மும்பைகாரர்கள் இன்று வெளியே செல்வதையே தவிர்த்தனர். போரிவலி- விரார் இடையே நான்கு தண்டவாளங்களாக்கும் பணி நடைபெறுகிறது. வரவிருக்கும் வசதிக்காக இந்த சங்கடத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று துணை பொது மேலாளர் விவேக் சஹாய் கூறினார். சில வெளியூர் இரயில்களும் மும்பை சென்ட்ரலிற்கு பதிலாக மும்பை CST யிலிருந்தோ வாசாய் ரோடிலிருந்தோ இயக்கப் படுவதாகக் கூறினார்.


DNA - Mumbai - Mega block: Trains services in Western section affected - Daily News & Analysis

கனிமொழிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி : தி.மு.க., முடிவு

கனிமொழிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி : தி.மு.க., முடிவு

- தினமலர்

ச: சிபிஎம் பொலிட்பீரோவிலிருந்து கேரள முதல்வரும் மாநில செயலரும் தற்காலிக நீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை முன்னிறுதும் வகையில் சிபிஎம் தனது கட்சி கொள்கைகளை தீர்மானிக்கும் தலைமையகத்திலிருந்து கேரள முதல்வரான அச்சுதானந்தனையும் கேரள மாநில செயலர் பினயாரி விஜயனையும் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. அவர்கள் இருவரும் பொது ஊடகங்களில் ஒருவரையொருவர் குறைகூறியதை தீவிரமாக எடுத்துக் கொண்டு கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் எவராயினும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தொண்டர்களுக்கு கூறும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆயினும் அவர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதில் ஒரு தடங்கலுமில்லை.

CPM suspends Kerala CM, secy from Politburo

மதுரை மேற்கு சட்டசபை இடைத் தேர்தல்.

மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில், அதிமுக சார்பில் எஸ்.வி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சண்முகம் திடீர் மரணம் அடைந்தார். இதையடுத்து இத்தொகுதி காலியானது. மதுரை மேற்குத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் தற்போது இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஜூன் 1ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8ம் தேதியாகும். மனுக்கள் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படும். 11ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். ஜூன் 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 29ம் தேதி நடைபெறும். இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என்று கூறியுள்ளார் நரேஷ்குப்தா. மதுரை மேற்குத் தொகுதியில் புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ச: கிரிக்கெட்: இந்தியா 610/3; பங்களா 58/5

இரண்டாம் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இந்தியர்களுக்கு நல்ல வேட்டையாக அமைந்தது. திராவிட் தனது சதத்தை அடித்து வெளியேறியவுடன் கார்த்திக் தனது முந்தைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து தனது சதத்தை நிரைவு செய்தார். சச்சின் டெண்டுல்கரும் தனது பங்காக சதமடித்து திராவிட் திரும்ப அழைக்கும்வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். காங்குலி மட்டுமே குறைந்த ஓட்டங்களில் (15) ஆட்டமிழந்தார். ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் சமயம் தோனி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பல சாதனைகள் பதிவான இந்த டெஸ்டில் ஆட்டநேர முடிவில் பங்களாதேசம் ஐந்து விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. ஜாகீர்கான் மூன்று விக்கெட்களையும் ஆர்பி சிங்கும் கும்ப்லேயும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.



2nd Test, Bangladesh v India - Cricket Scores on Yahoo! India

குவஹாத்தி: மற்றொரு குண்டு வெடிப்பு!

அஸ்ஸாமின் குவுஹாத்தியில் இன்று மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இறப்பு-7, காயம்-15.
இம்மாதத்தில் இது அங்கு ஐந்தாம் தடவை. மேலும் படிக்க:டைம்ஸ் நவ்.டிவி

தமிழறிஞர் படைப்புகள் நாட்டுடமை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி
இருபது தமிழறிஞர்கள்; படைப்பாளிகளின் ஆக்கங்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன.
இதற்காக அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. ஒரு கோடியே எண்பது இலட்சம் பரிவுத்தொகையாக வழங்கப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அரசு, இதற்கு முன்னரும் பதினாறு தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு ஒரு கோடியே, இருபத்து மூன்று இலட்சம் ரூபாய் மரபுரிமையர்களுக்கு வழங்கியுள்ளது.

இச்சமயம் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களில், கி.வா.ஜ, பேராசிரியர் அ.ச.ஞா, கி.ஆ.பெ, திருக்குறள் முனுசாமி, கவிஞர் சுரதா, கவிஞர் மருதகாசி, குன்றக்குடி அடிகளார், சாவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாலைமலர்

ஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது.

ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூர் மேட்டுகாடு பகுதியில் சந்திரசேகரன் (28) என்ற விவசாயி, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் 55 டெட்டனேட்டர் மற்றும் 110 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் புதுரோட்டை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவர், ராமபட்டினத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தோட்டத்திற்கு அந்த வெடிபொருட்களை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகரன், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து, உரிமம் இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், கடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.ஜே.பி யின் போஸ்டருக்கு எதிர்ப்பு!

பி.ஜே.பி.யின் போஸ்டர் ஒன்றுக்கு, பி.ஜே.பியின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ஷீதல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இன்னமும் பதிவு செய்யப்படாத புகார் ஒன்றையும் அவர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி.யின் மூன்றாண்டு ஆட்சி நிறைவையொட்டி கடந்த ஏப்ரல் 15 ம் தேதி அதன் எம்.எல்.ஏ சூர்யகாந்த் வியாஸ் என்பவரால் வெளியிடப்பட்ட போஸ்டரில் வாஜ்பேய், அத்வானி, ராஜ்நாத் ஆகியோரை முறையே பிரம்மா, விஷ்ணு, சிவனாகவும் மேலும் மாநில முதல்வர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் பலரும் தேவ தேவதைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம்.

இது தன்னுடைய மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ஷீதல்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் விபரங்களுக்கு: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ச: விலைவாசி விகிதம் குறைந்தது

நமக்கெல்லாம் தெரியாமல் நான்காவது தொடர்ந்த வாரமாக மே 12 வரை முடிந்த வாரத்திற்கான விலைவாசி விகிதம் 5.27 சதவீதமாக குறைந்துள்ளது. ஐந்து மாதங்களில் மிகக்குறைந்த இந்த விகிதம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமின்றி சற்று நிம்மதி கொடுத்திருக்கும். மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கும் வயிற்றில் பால் வார்க்கும். கடந்த வருடம் இதே வாரத்தில் 4.63 ஆக இந்த விகிதம் இருந்தது.

முழுமையான தகவலுக்கு..The Hindu News Update Service

இராக் போர் - 100 பில்லியன் டாலர் நிதி!

இராக் போருக்கான $100 பில்லியன் நிதியுதவி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ். W. புஷ் வெள்ளியன்று கைச்சாத்திட்டுள்ளார்.

முன்னதாக, ஒக்டோபர் 1 முதல் அமெரிக்கப் படைகளை இராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளும் கோரிக்கையை தனது 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி அவர் விலக்கினார்.

ராய்ட்டர்

ஐ டி சிறப்பு பொருளாதார மண்டலம் - சென்னை அருகில்!!

சென்னை அருகே, காஞ்சி மாவட்டத்தில் ரூ. 3750 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுடன் கூடிய சிறப்பு பொருளாதார மையத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

துபாயைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் இணைந்த ஈடிஏ ஸ்டார் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனமும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்தவுள்ளன. ரூ.3750 கோடியில் உருவாகும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நகரியம் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. ஈடிஏ அஸ்கான் குழும தலைவர் சையத் சலாஹுதீன், டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தட்ஸ்தமிழ்

குடியரசுத் தலைவர் புதுச்சேரி வருகை.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பகுதிக்கு விஜயம் செய்கிறார்.

அங்கு கட்டப்பட்ட உள்ள ஈபிள் டவர் போன்ற கோபுரத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனை புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், இந்த கோபுரத்தை கட்டுவதற்கான முழு செலவையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.
தனது பயணத்தின் போது அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுகாதார காப்பீட்டு திட்டத்தையும் கலாம் தொடங்கி வைக்கிறார். ஏனாம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு மரக்கன்றுகள் அளிக்கும் பசுமை ஏனாம் திட்டத்தையும் அவர் துவக்கிவைக்கிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நான்கு தென் மாநிலங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாவணவர்களுடன் கலாம் உரையாட இருப்பதாகவும் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...