.

Thursday, May 31, 2007

இடைத்தேர்தலால் அரசுக்கு பண விரயம்: புதிய தமிழகம்

கோவில்பட்டி, மே 31: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி: இடைத்தேர்தல் நடத்துவதால் பணம் விரயம் ஆவதுடன் இடைத்தேர்தல் வாயிலாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை கொடுக்க முன்வரும் நிலை ஏற்படும்.

இது ஜனநாயக விரோத நடவடிக்கை. எந்த கட்சியின் உறுப்பினர் அத்தொகுதியில் இறந்தாரோ அக்கட்சிக்கே அந்த இடத்தை அளிப்பதன் வாயிலாக பிரச்னைகளை குறைக்கலாம். இடைத்தேர்தலை தவிர்த்தால் மட்டுமே பொதுத்தேர்தல் என்பது நியாயமாக நடக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அண்டை மாநிலத்தார், அண்டை நாட்டார் விளை நிலங்களை வாங்கி குவிப்பதை தடுத்திட வேண்டும். தமிழகத்தில் நிலம் வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது அவர்கள் குடும்பஅட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...