இந்திய கடற்பிரதேசத்திலேயே மிகப்பெரிய கப்பற் கூட்டமாக ஐந்து நாடுகலைச் சேர்ந்த கப்பற்படையினரின் போர்க்கலங்கள் தங்கள் திறன்களை சோதிக்கும் பயிற்சியை இன்று வங்காள விரிகுடாவில் துவங்கின. ஏவுகனைகள், நீர்மூழ்கிக் கலங்கள்,வானூர்தி திறன் இவை போர்க்கால நடப்பில் எவ்வாறு இயக்கப்படும் என முன்னோட்டம் நடத்தப்படுகின்றன. உண்மையான ஆயுதங்கள் பயன்படுத்த படாது. மயான்மரின் கோகோ தீவிற்கு 50 கடல்மைல்கள் தொலைவில் இப்பயிற்சி நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் 26 கப்பல்கள் பங்கேற்கின்றன. இப்பாதையில் வரவேண்டாம் என வர்த்தக கப்பல்கள் எச்சரிக்கப் பட்டுள்ளன.
Zee News - Multi-nation Naval exercise in Bay of Bengal
Tuesday, September 4, 2007
ஐந்து நாடுகள் கப்பற்படை பயிற்சி வங்காளவிரிகுடாவில் துவங்கியது
Posted by
மணியன்
at
4:57 PM
0
comments
அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.
பாக்தாதிற்கு மேற்கேயுள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர் இறங்கினார். அங்கு அவர் மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இராக்கில் தொடந்து நடைபெற்று வரும் வன்முறையை குறைக்கும் நோக்கில் அங்கு மேலும் பல ஆயிரம் துருப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்கத் தளபதிகள் தங்களது மதிப்பீட்டை அமெரிக்க காங்கிரஸுக்கு அளிப்பதற்கு சிலநாட்கள் உள்ள நிலையில், புஷ் இராக் சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் அன்பார் மாகாணத்திற்கு சென்றிருப்பது, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவர்களை அல் கையீதாவிற்கு எதிராக, அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக திருப்பியதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது என்று பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பிபிசி தமிழ்
AFP: Bush visits Asia as Iraq row rumbles at home
Bush: 'Fewer American forces' possible in Iraq - CNN.com
Posted by
Boston Bala
at
12:02 AM
0
comments
Wednesday, August 22, 2007
அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்
அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்
இந்திய போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ். ராஜ்புத் மற்றும் ஐ.என்.எஸ். பெத்வா ஆகியவை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30 ம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நல்லெண்ணப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான நட்புறவு அதிகரிக்க உதவிகரமாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goodwill visit: Indian warships to arrive in Abu Dhabi
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home
Posted by
முதுவை ஹிதாயத்
at
11:35 PM
0
comments
Saturday, August 11, 2007
ஜம்மு காஷ்மீரில் இராணுவ கிடங்கில் தீ:மக்கள் ஓட்டம்
தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருட்கள் கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தினால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதிகாரிகள்அடுத்துள்ள கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர். காவல்துறையினர் இதுவரை இராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் முப்பதுபேர்வரை கயமடிந்திருப்பதாகக் கூறினர். தீயினால் எழுந்த தொடர்ந்த குண்டு வெடிப்புகளால் அருகேயிருந்த மக்கள் இங்குமங்கும் ஓடினர். மிகப் பெரிய புகைமூட்டம் எழுந்துள்ளது.
மேலும்...Fire in JK arms depot; villagers flee area
Posted by
மணியன்
at
1:56 PM
0
comments
Thursday, July 26, 2007
இந்திய இராணுவ தலைமை தளபதியாக தீபக் கபூர் நியமனம்
லெஃப்டினன் ட் ஜெனரல் தீபக் கபூர் நமது இராணுவத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 30இல் பணிஓய்வு பெறும் ஜேஜே சிங்கிடமிருந்து பதவி ஏற்பார். இந்தப் பதவியை ஏற்பதற்கு ஏதுவாக பிப்.2005இலிருந்தே வடக்கு மண்டல தளபதியாகவும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து துணை தலைமை தளபதியாகவும் பதவி வகித்து வருகிறார்.
அமைச்சரவையின் நியமனகுழு வதந்திகள் ஏதும் வருமுன்னரே இந்தப்பதவிக்கு தன் பரிந்துரையை கொடுத்துவிட்டது.
Lt Gen Deepak Kapoor to be next army chief
Posted by
மணியன்
at
7:24 PM
0
comments
பாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு போட்டி
வழக்கமான மற்றும் மாறுபட்ட அணு ஆயுதங்களை ஏற்றி 700 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதனை ஓட்டம் விட்டது. இது பாகிஸ்தானின் முன்னேற்பாட்டை ஒருங்குபடுத்தி நாட்டின் பாதுகாப்பை வலுவாக்கும் என பாதுகாப்புதுறை அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் காரணமாக அமைந்த விஞ்ஞானிகளை அதிபர் முஷரஃப்பும் பிரதமர் சௌகத் அசீஸும் பாராட்டினர். இந்த சோதனை பற்றி இந்தியாவிற்கு முன்னதாக தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள உடன்பாடு தானே விழும் (ballistic missile) ஏவுகணைகளுக்கே பொருந்தும். பாபர் தரையிலுள்ள ரடார் மூலம் முழுவதும் கட்டுப்பாட்டிலுள்ள (Cruise missile) ஏவுகணையாகும்.
IBNLive.com > Pak test-fires Babur missile, the rival to Brahmos :
Posted by
மணியன்
at
5:13 PM
2
comments
Tuesday, July 10, 2007
இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 23 பாதுகாப்பு படையினர் பலி
இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்படையினர் 23 பேரின் சடலங்களை தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
காட்டின் நடுவே மறைவான ஒரு இடத்தில், மாவோயிஸ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை விசாரிக்க நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட படை நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட இந்தப் பாதுகாப்பு படையினரோடு தமக்கு இருந்தத் தொடர்பை அதிகாரிகள் இழந்ததாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
போலீசாரின் அறிக்கையின்படி கிளர்ச்சியாளர்கள் 500 பேர் வரை இப்பதுங்குத் தாக்குதலை நடத்தினார்கள் என்றும், கிளர்ச்சியாளர்கள் 40 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக இப்பகுதியில் நடந்துவரும் மாவோயிஸ சண்டைகளில் இதுவரை 6000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
- BBC Tamil
BBC NEWS | South Asia | Dozens die in India Maoist clash
Posted by
Boston Bala
at
11:44 PM
0
comments
Saturday, July 7, 2007
இந்தியா ஆயுதப்போட்டியில் இறங்காது:பிரதமர்
பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவன (DRDO) விருதுகளை பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கும் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா உலக நாடுகள சமூகத்தில்் ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் என்றும் நிலையான விதிகளை மதிக்கும் உலக அமைப்பு அமைவதில் பங்கேற்போம் என்றும் கூறினார். நமது அண்டை நாடுகளுடன் அமைதியும் வளமையும் கொண்ட சூழலை நமது பாதுகாப்பிற்கான முக்கிய அடிப்படையாகக் கருதுகிறோம் அவர்களுடன் போட்டிபோட்டு ஆயுதங்களை அதிகரிக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.
The அவரது முழுமையான பேச்சிற்கு....Hindu News Update Service
Posted by
மணியன்
at
1:35 PM
1 comments
Monday, July 2, 2007
இராணுவ பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.
காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தின் மின்சாரம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் உயர் இராணுவ பெண் அதிகாரி மெகா ரஸ் டான். ஜம்மு பகுதியில் தனது அலுவலக அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண் டார்.
போர்வையை அவர் தூக்குக் கயிறாக மாட்டி அதில் பிணமாகத் தொங்கினார். வேறு சில அதிகாரிகளின் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப் படுகிறது. இவருக்கு 4 மாதங் களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.
இவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாலைமலர் செய்தி
Posted by
வாசகன்
at
4:26 PM
0
comments
Thursday, June 28, 2007
இராணுவ வீரர்களை தண்டித்த கிராமம்
ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருக்கும் குனான் கிராம மக்கள் 17வயது சிறுமியை வன்புணர முயன்ற இரு இராணுவ வீரர்களைப் பிடித்து மொட்டையடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் தரப்பிலும் இராணுவ தரப்பிலும் விசாரணைகள் ஆணையிடப்பட்டுள்ளன.
கட்டந்த 17வருடமாக காஷ்மீர் பகுதியில் நடந்துவரும் பதட்ட நிலையில் முதன் முறை கிராம மக்கள் இராணுவ வீரர்களுக்கு தண்டனை தந்த விவகாரம் நடந்துள்ளது.
Two army men paraded naked in Kashmiri village
Jawans paraded naked for rape attempt
Soldiers accused of rape
Posted by
சிறில் அலெக்ஸ்
at
3:18 AM
7
comments
Tuesday, June 26, 2007
ச:அணுசக்தி போர்க்கப்பலால் சென்னைக்கு ஆபத்து: ஜெயலலிதா
சென்னைக்கு வரப்போகும் அமெரிக்க அணுசக்தியினால் இயங்கும் விமானந்தாங்கி போர்கப்பலால் சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களுக்கு தீங்கு விளையும் என்று அதிமுக தலைவர் செயலலிதா நடுவண் அரசை இதனை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கதிரியக்க தீமையினால் ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் இக்கப்பலுக்கு தங்கள் கடற்பகுதியில் அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்கக் கப்பல் USS Nimitz ஜூலை ஒன்று முதல் ஜூலை 5 வரை சென்னை துறைமுகத்தில் தங்கியிருக்கும்.
இது பற்றி The Hindu செய்தி
அதே நேரம்அமெரிக்கஅரசின் சென்னை கான்சுலேட் ஜெனரல் அலுவலகம் இந்தக்கப்பலினால் எந்த தீங்கும் நேராது
என்று அறிக்கை விட்டுள்ளது. தனது 56 வருட பணிக்காலத்தில் ஒரு விபத்தைக் கூட சந்திக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
Posted by
மணியன்
at
5:43 PM
1 comments
Monday, June 25, 2007
அயல்நாட்டு கப்பற்படை கலங்கள் இந்தியாவிற்கு வருவது புதுமை அல்ல: அந்தோணி
முதன்முறையாக அமெரிக்க கப்பற்படைச் சார்ந்த விமானந்தாங்கி படைக்கலம் USS Nimitz சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப் போகிறது. 'முக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பொருட்டு' இவ்வாறு பயிற்சிகள் நடத்துவது புதிதல்ல என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கூறினார். 90 போர்விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாங்கிய இக்கலம் அரபிக்கடலில் ஆறு மாதம் தங்கியிருக்கும். முன்னதாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் உருசிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் தங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முன்னதாக சிபிஎம் இக்கப்பல் சென்னையில் தங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அணுஆய்தக் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் அனுமதிப்பதில்லை என்ற இந்திய அரசின் கொள்கைக்கு இது புறம்பானது என்று கூறியிருந்தார். அக்கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசிற்கு என்ன கட்டாயம் ஏற்பட்டது என்று அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என மேலும் அவர் கூறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:21 PM
0
comments
ஆஃப்கானுக்கு விரைகிறது இந்திய அதிரடிப்படை
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டபிறகும் அங்கு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஓயவில்லை.
மறு சீரமைப்பு பணியில் ஈடுபடும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர் களை அவர்கள் கடத்திச் சென்று படுகொலை செய்கிறார்கள்.
அங்கு மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை பாதுகாக்கவும், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து இந்தியர்களை மீட்கவும் இந்திய அதிரடிப்படை ஆப்கானிஸ்தான் விரைகிறது.
துணை ராணுவ படை யைச்சேர்ந்த இந்த அதிரடி படையில் 134 பேர் இடம் பெறுகிறார்கள். 2 குழுக்களாக இவர்கள் அனுப் பப்படுகிறார்கள். இவர்கள் விசேஷ பயிற்சி பெற்றவர்கள்.
நேற்று ஆப்கானிஸ்தானின் தெற்குபகுதியில் அமெரிக்க கூட்டு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் நீண்ட நேரம் சண்டை நடந்தது.
இதில் 26-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Posted by
வாசகன்
at
12:54 PM
0
comments
Sunday, June 24, 2007
இலங்கை: 10 ஆயிரம் இராணுவத்தார் தப்பி ஓட்டம்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் விமானப்படை பலமும் அதிக ரித்து வருவது சிங்கள ராணு வத்துக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. இராணுவத்தின் கெடுபிடிகளால் சிங்கள வீரர்கள் அதிருப்தி அடைந்து விடு கிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கும் அவர்களால் ஈடு கொடுக்க முடிய வில்லை.
இதனால் இராணுவத்தில் இருந்து சிங்கள வீரர்கள் தப்பி ஓடுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இராணுவத்தில் இருந்து 10 ஆயிரத்து 60 சிங்கள வீரர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தவிர 93 உயர் ராணுவ அதிகாரிகளும் தப்பி ஓடி இருக்கிறார்கள்.
இதனால் இப்போது கூடுதல் இராணுவத்தினரை சேர்க்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரையும், கடற்படைக்கு 15 ஆயிரம் பேரையும், விமானப் படைக்கு 10 ஆயிரம் பேரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தகுதியான வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
1:16 PM
1 comments
Tuesday, June 12, 2007
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை - அமெரிக்க அரசியல் குரல்.
ஜோ லீபர்மேன் என்கிற அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ஈரான் மீது அமெரிக்காவின் இராணுவ தாக்குதலை கோரியுள்ளார். இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவி வருவதாக குற்றஞ்சுமத்தியுள்ள அவர், செனட்டில் கடந்த ஆண்டு முதல் சுயேச்சையாக செயற்பட்டு வருபவராவார்.
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியொருவர் வெளிப்படையாக இப்படி பேசியுள்ளது இதுவே முதல் முறை. சைனாவின் ஆயுதங்களை இராக் போராளிகளுக்கு ஈரான் வழங்குவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை "இராக் விடயத்தில் ஈரானின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம்" என்றது. அமெரிக்க தூதர் ரையான் குரோக்கர் இதுபற்றி தன் ஈரானிய சகாவிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Posted by
வாசகன்
at
1:46 PM
0
comments
Sunday, June 10, 2007
இந்தியாவின் முதல் இராணுவ விண்கலம்.
முதன்முதலாக முழுதும் இராணுவ நோக்கங்களின் அடிப்படையில் இந்தியாவின் விண்கலம் ஒன்று ஆகஸ்டில் விண்ணேவபடவுள்ளது.
CARTOSAT 2A என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விண்கலம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்கம்பக்கம் ஏவுகணை நடமாட்டத்தை கண்காணிக்கவும், 'ஏரியா'வில் இந்திய கண்காணிப்பை பலப்படுத்தவும் இது உதவும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க..
Posted by
வாசகன்
at
7:17 PM
0
comments
b r e a k i n g n e w s...


