.

Tuesday, September 4, 2007

ஐந்து நாடுகள் கப்பற்படை பயிற்சி வங்காளவிரிகுடாவில் துவங்கியது

இந்திய கடற்பிரதேசத்திலேயே மிகப்பெரிய கப்பற் கூட்டமாக ஐந்து நாடுகலைச் சேர்ந்த கப்பற்படையினரின் போர்க்கலங்கள் தங்கள் திறன்களை சோதிக்கும் பயிற்சியை இன்று வங்காள விரிகுடாவில் துவங்கின. ஏவுகனைகள், நீர்மூழ்கிக் கலங்கள்,வானூர்தி திறன் இவை போர்க்கால நடப்பில் எவ்வாறு இயக்கப்படும் என முன்னோட்டம் நடத்தப்படுகின்றன. உண்மையான ஆயுதங்கள் பயன்படுத்த படாது. மயான்மரின் கோகோ தீவிற்கு 50 கடல்மைல்கள் தொலைவில் இப்பயிற்சி நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் 26 கப்பல்கள் பங்கேற்கின்றன. இப்பாதையில் வரவேண்டாம் என வர்த்தக கப்பல்கள் எச்சரிக்கப் பட்டுள்ளன.

Zee News - Multi-nation Naval exercise in Bay of Bengal

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...