.

Sunday, May 13, 2007

தயாநிதி பதவி விலகினார்



- தினமலர்

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

Union IT and Communication Minister Dayanidhi Maran sent in his resignation to Prime Minister Manmohan Singh on Sunday night hours after a high-level committee of the party decided to withdraw him from the Union Cabinet.

- CNN IBN

Flash News- தயாநிதி நீக்கம் !

தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

- தினமலர்

ச:அஸ்லன்ஷா - இந்தியாவுக்கு வெண்கலம்

கோலாலம்பூர், மலேசியாவ்வில் நட்ந்துவரும் அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டிகளில் மூன்றாவது நான்காவது இடங்களுக்கான போட்டியில் இந்தியா தென் கொரியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

ச: ஜனாதிபதி பதவிக்கு ஷிண்டே: காங்-கம்யூ. கட்சிகள் முடிவு

புதுடெல்லி, மே.13-

உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடித்து இருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சமாஜ்வாடி கட்சி ஓட்டுகள் வெகுவாக குறைந்து உள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சோனியா காந்தி கூëட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று சோனியா கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பரதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச் சூரி, பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் விஸ் வாஸ் ஆகியோர் சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது சிலருடைய பெயரை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி மற்றும் சரண்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டே ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம் என்று அப்போது ஆலோசித்தனர்.

இதில் சுஷில் குமார் ஹிண்டேவுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. மராட்டிய முன்னாள் முதல் மந்திரியாக இருந்துள்ளார். கவர்னர் பதவியிலும் இருந்துள்ளார். எனவே பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்டது. மேலும் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இதனால் மாயாவதி உள்பட எதிர் அணியில் உள்ள கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரும் என்று கருதுகிறார்கள். எனவே சுஷில் குமார் ஷிண்டேயை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு அறிவிக்கின்றனர்.

~மாலைமலர்

ச:பெடரெர், பயிற்சியாளர் பிரிவு

டென்னிஸ் வீரர் ராஜர் பெடரெரும் அவரின் பயிற்சியாளர் டோனி ரோச்சும் பிரிந்தனர். ரோம் மாஸ்டர் தொடரில் பெடரெர் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு 'பரஸ்பர ஒப்பந்தத்தோடு' நடைபெற்றதாகவும் எதிர்வரும் ப்ரெஞ்ச் ஓப்பனுக்கு முன்பாக இவ்வாறு நிகழ்ந்ததில் பெரெடர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிகிறது.


Federer in shock split from coach BBC

-o❢o-

b r e a k i n g   n e w s...