.

Sunday, July 29, 2007

கோவா: ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம்.

கோவா மாநிலத்தின் 40 உறுப்பினர்சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் உள்ளன.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்கள். மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2 இடத்திலும், கோவா பாதுகாப்பு முன்னணி 2 இடத்திலும், கோவா ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதைத் தவிர சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றனர்.

சுயேட்சைகள் மற்றும் மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சியின் (எம்.ஜி.பி)எம்எல்ஏக்கள் ஆதரவுடன் திகாம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது.

காங்கிரஸ் அரசுக்கு கோவா ஜனநாயக கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. 23 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந் நிலையில் சுயேட்சை எம்எல்ஏக்களும், மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சி எம்எல்ஏக்களும் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரசைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ விக்டோரியா ஃபெர்னாண்டஸூம் எம் எல் ஏ பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

எம்எல்ஏக்கள் பலம் 19 ஆக குறைந்ததால் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த கட்சியும் சுயேட்சை எம்எல்ஏ அனில் சால்கோவோங்கர், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தன.

இதையடுத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமானது.

காங்கிரஸ் இதைத் தடுக்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. காங்கிரஸைச் சேர்ந்த சபாநாயகர் பிரதாப் சிங் ரானே சட்டசபையை கூட்டாமல் இழுத்தடித்து வருகிறார்.

இதையடுத்து 21 எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்றுள்ளார் பாரிக்கர். மூத்த பாஜக தலைவர்களுடன் சென்று குடியரசுத்தலைவர் பிரதீபாவை சந்திக்கவும், எம் எல் ஏக்களை அணி வகுத்துக் காட்டவும் பாரிக்கர் முடிவு செய்துள்ளார் .

ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா



ஸ்டான்ஃபோர்டில் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இந்த போட்டியில் முன்னணி வீராங்கனைகளை தோற் கடித்து சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா அரை இறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான சைபிலி பாமரை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

இதன் முதல் செட்டை சானியா 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பாமர் சுதாரித்து ஆடினார். இதனால் விறுவிறுப்பாக இருந்தது. அந்த செட்டை அவர் 7-5 என்ற கணக்கில் வென்றார்.

இருவரும் தலா ஒரு செட் கைப்பற்றியதால் வெற்றியை நிர்ணயிக்கும் இறுதி செட் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த செட்டை சானியா 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 6-2, 5-7, 6-3.

சானியா குளோவின், ஹிண் டர் தற்போது பாமர் போன்ற முன்னணி வீராங் கனைகளை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந் துள்ளார். இதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் காணுவார்.

சானியாவின் அபாரமான ஆட்டம் இந்திய டென்னிஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தி உள்ளது

மாலைமலர்

Mirza, Chakvetadze win three-setters in Stanford semis

ஜெயமாலாவுக்கு டாக்டர் பட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை ஜெயமாலா. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக சபரிமலை சென்றபோது, ஐயப்பனின் விக்ரகத்தை தொட்டு தரிசனம் செய்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் மக்களிடையே மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

டாக்டர் எம்.ஜி.கிருஷ்ணன் என்பவரின் தலைமையில், பெண்களுக்கு உரிய உரிமைகள் குறித்து, ஜெயமாலா ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். 'சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்' என்ற தலைப்பில் இவர் நடத்திய ஆய்விற்காக பெங்களூர் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

தினமலர்

Deccan Herald - PhD for Jayamala: National award-winning actor Jayamala has been awarded a doctorate by the Bangalore University for her thesis titled ‘A study of the Administrative Set-up of the Rehabilitation of Destitute women in Karnataka State’.

ஜப்பான்: அஞ்சல் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பணம்.

ஜப்பானில் டோக்கியோ உட்பட பல நகர்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை யார் வைத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்ட மழை என்பதா? டோக்கியோவில் மட்டும் 18 தபால் பெட்டிகளில் இத்தகைய அனோமதேய பணக்கட்டுகள் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர்

மொரிசியசுக்கு கங்கை ஜலம் பரிசாக தருகிறார் நிதிஷ்

மொரிசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க உள்ளார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்; அவருக்கு பரிசாக, கங்கை ஜலம், அனுமான் பாசுரம் அடங்கிய புத்தகத்தை அளிக்கிறார்.

ஐந்து நாள் பயணமாக மொரிசியஸ் போகிறார் நிதிஷ். அவருடன், சில அமைச்சர்களும் போகின்றனர். மொரிசியசில் நடக்கும் சர்வதேச போஜ்புரி மொழி பேசும் பீகாரிகள் மாநாடு நடக்கிறது. அதில், நிதிஷ் பங்கேற்கிறார்.

மொரிசியஸ் நாட்டு பிரதமர் ராம்கூலமுக்கு, தன் பரிசாக, கங்கை ஜலத்தை, குடத்தில் எடுத்துச் செல்கிறார். ராம்கூலமுக்கு பிடித்தமான அனுமான் பாசுரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அளிக்கிறார். இதன் ஆயிரம் பிரதிகளை அவரிடம் தந்து, பலருக்கு பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார். மொரிசியஸ் பயணம் குறித்து, பீகார் கலாசாரத்துறை அமைச்சர் ஜனார்த்தன் சிங்வி கூறியதாவது: நாங்கள் கங்கை ஜலத்தை குடத்தில் கொண்டு செல்கிறோம். மொரிசியசிலும், கங்கா தலாப் என்ற நதி உள்ளது. அங்கு, கங்கை ஜலத்தை கொட்டுவது புனிதம் என்று கருதப்படுகிறது. அதனால், இதை கொண்டு சென்று, பிரதமரிடம் அளிப்போம். பீகார் உட்பட சில வட மாநிலங்களில், போஜ்பூரி மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். இந்த மொழி பேசுவோர், பல நாடுகளுக்கு ஒரு காலத்தில் அதிக அளவில் சென்று தங்கி விட்டனர். அவர்கள் சார்பில் தான் மொரிசியசில் மாநாடு நடத்தப்படுகிறது.

மொரிசியசில், இப்போது, போஜ்பூரி மக்களின் வீட்டு வாசலில், அனுமான் கொடி பறக்கும். மொரிசியஸ், மேற்கிந்தீஸ் உட்பட 12 நாடுகளில் போஜ்பூரி மொழி பேசும் பீகாரிகள் இருக்கின்றனர். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர், மொரிசியஸ், 'பீகார் மகோத்சவ்' மாநாட்டில் பங்கேற்கிறோம்.

இவ்வாறு ஜனார்த்தன் சிங்வி கூறினார்.

தினமலர்

Bihar to market brand Bhojpuri to woo diaspora in Mauritius :: News Channel

வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

பாட்னா, ஜுலை.29- பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 25 பேர் பலியானார்கள்.

மொரிஷஸில் பயணத்தைத் தொடரும் முதலைமைச்சர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திட்டங்களை கவனிக்காமல் அனாதரவாக விட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரப்ரி தேவி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கிழக்கு உத்தரபிரதேசமும் பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தத்தளிக்கிறது. இங்கு காக்ரா, குணோ, காதிநாயன் ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. மழை வெள்ளத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

Nearly three million hit by floods in India
The Hindu : National : Rain cripples North Bihar
Death, darkness, dripping roofs in S.Asia floods
Nitish carries Hanuman Chalisa and Gangajal to Mauritius- Hindustan Times

மு.க. முத்து கவலைக்கிடம்

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க. முத்து உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க. முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையாவிளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத் துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து.

அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க. முத்துவின் மகன் அறிவுநிதி. டாக்டராக உள்ளார்.

உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க. முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க. முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சிகள் ரத்து: மு.க. முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...