.

Saturday, June 30, 2007

சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக இச்செய்தி தெரிவிக்கிறது.

நியூயார்க்கில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரயில்வே போர்டு தலைவர் ஜே.பி.பத்ரா கையெழுத்திட்டுள்ளார்.

ஜெ.விவகாரம்: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா மீதான புகார் கேட்பாரற்று போய்விடுமோ என சந்தேகப்படுகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

வெற்றிக்கு சிறப்பு

கேள்வி:- கள்ள ஓட்டு புகார் சொல்ல முடியாத அளவிற்கு மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, மத்திய அரசின் காவல் துறையினரே பொறுப்புகளை வகித்து இந்த இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. உங்கள் அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. இது உங்கள் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- கள்ள ஓட்டு புகார் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. எந்தப் பத்திரிகைகளிலும் அப்படியொரு செய்தி வரவில்லை. கள்ள ஓட்டு புகார் மாத்திரமல்ல, எந்தப் புகாரும் இல்லாமல் இந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. தேர்தல் கமிஷன் ஒரு வகையிலே சிந்தித்துச் செயல்பட்டாலும், அந்தச் சிந்தனையும் செயலும் எங்கள் அணியின் வெற்றிக்கு சிறப்பைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

செயற்கையிலே தான்

கேள்வி:- இது செயற்கையான முடிவு என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- உலகத்திலேயே நீங்கள், நான் எல்லோருமே செயற்கையிலே தான் பிறக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம், சதி, அராஜகம், ராவணன், கம்சன், இரணியன் போன்ற ஜெயலலிதாவின் இலாகாக்கள் முழுவதும் அவரது அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் அந்தப் பதவிகளில்

கேள்வி:- தேர்தல் ஆணையத்தால் மதுரையிலிருந்து மாற்றப்பட்ட அதிகாரிகள் எல்லாம் மீண்டும் அந்தப் பதவிகளிலே அமர்த்தப்படுவார்களா?

பதில்:- ஏற்கனவே அப்படி பழைய காலத்தில் நடைபெற்றிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தினால் மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் அந்தப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது தேர்தல் பணிகள் முடிவுற்றதும், அதற்கான அறிவிப்பு வந்த பிறகு அரசு அதைப்பற்றி யோசிக்கும்.

ஜெயலலிதா அறிக்கை

கேள்வி:- தேர்தல் களத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எல்லாம் முழு மூச்சுடன் உங்களை எதிர்த்தன. இதையெல்லாம் விட தேர்தல் ஆணையமே கடும் எதிர்ப்பைக் காட்டியது. இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் வந்த எதிர்ப்பினை மீறி நீங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இது உண்மையான வெற்றியல்ல என்றும், வாக்காளர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்று அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்:- (செய்தியாளர்களிடம் காட்டி) இது ஜெயலலிதா அறிக்கை. அதில் உண்மை எப்படி வெளி வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். "மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வந்துள்ள முடிவு எதிர்பார்த்தது தான்'' - ஆக இவர்கள் இந்த முடிவினை எதிர்பார்த்துத் தான் இருந்திருக்கிறார்கள். மேலும் அறிக்கையிலே சொல்கிறார், "இப்போது வந்துள்ளது மக்கள் தீர்ப்பு அல்ல, இது. தி.மு.க.வினரின் திட்டமிட்ட சதி. நியாயமாகத் தேர்தலை நடத்தி இருந்து அதில் அ.தி.மு.க. இயல்பாக வெற்றி பெற்றிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.'' இந்த அறிக்கையில் அவரே கையெழுத்திட்டுள்ளார்.

அழகிரிக்கு பதவி?

கேள்வி:- இந்த இடைத் தேர்தல் வெற்றிக்கு முழு முதல் காரணம் அழகிரி என்று அனைவருமே கூறுகிறார்கள். எனவே அவருக்கு கட்சியிலே பதவிப் பொறுப்பு ஏதாவது கொடுக்கப்படுமா?

பதில்:- அவருக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்.

கேள்வி:- வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தீர்கள். ஆனால் எல்லா எதிர்க்கட்சிகளும், ஏன் தேர்தல் ஆணையம் கூட உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் குறி வைத்துத் தாக்குகிறார்களே?

பதில்:- அதில் நான் பெருமையடைகிறேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதற்காக பெருமையடைகிறோம்.

உணர்ந்து செயல்படுவோம்

கேள்வி:- இந்த வெற்றியின் மூலமாக ஆட்சிக்கு கூடுதலாகப் பொறுப்பு தரப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- மக்கள் பொதுத் தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை கண்கூடாகப் பார்க்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் எங்கள் அணிக்கு வெற்றியைத் தந்துள்ளார்கள். தொடர்ந்து இதனைக் கட்டிக் காக்கும் பொறுப்பு எங்கள் அணிக்கு இருப்பதை உணர்ந்து செயல்படுவோம்.

விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல்

கேள்வி:- விஜயகாந்த் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்:- எனக்குத் தெரியாது. நான் அந்தக் கணக்கைப் பார்க்கவில்லை.

கேள்வி:- இன்று காலையில் வெளிவந்த "ஆனந்த விகடன்'' பத்திரிகையில் தலையங்கத்தில் வெற்றி மட்டுமல்ல, அதை அடைகின்ற வழியும் முக்கியம், காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட, அது பெருமையடையத் தக்க வெற்றி அல்ல என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்:- இதற்கு இன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணி விடுதலையில் விளக்கமாக பதில் எழுதியிருக்கிறார்.

காங்கிரசுக்கு கூடுதல் இடம்

கேள்வி:- சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைக்கச் செய்திருக்கிறீர்கள். இதற்கு மேலிடத்திலிருந்து நன்றி தெரிவித்திருக்கிறார்களா?

பதில்:- வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

4 இடங்களில் போட்டி

கேள்வி:- சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டது பற்றி நடைபெறும் வழக்கில், நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், அந்தத் தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதைப் பற்றி?

பதில்:- நீதி மன்றத்தில் இது போன்ற ஒரு விளக்கத்தைக் கேட்க ஒரு வழக்கறிஞர் முற்பட்டதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது அறியப்பட வேண்டிய ஒன்று. இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இது போன்ற விளக்கங்களைக் கேட்பது - அதே நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எம்.பி., எழுப்பிய கேள்வியில் காணப்படும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

தி.மு.க.வுக்கு எதிராக

கேள்வி:- தேர்தல் ஆணையம் தொடர்ந்து தி.மு.கழகத்திற்கு எதிராகவும், ஜெயலலிதாவைக் காப்பாற்றுகின்ற முயற்சியிலும் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?

பதில்:- அது இன்று நேற்றல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்பே பொன்னேரி தொகுதியில் 20 ஆயிரம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, அது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு - அந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, அந்தப் பகுதியின் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாஸ்கர் சுந்தரம், அந்த விவரங்களை என்னிடத்திலே ஆதாரத்துடன் கொண்டு வந்து காட்டி விளக்கினார். நான் உடனடியாக அவரையும், தி.மு.கழக தலைமைக் கழகத்தில் உள்ளவர்களையும் தமிழகத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடம் அனுப்பி வைத்து விவரங்களைக் கூறுமாறு சொன்னேன். அவர் அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பல புகார்கள் தி.மு.க. கூட்டணியினரால் தரப்பட்டவை கேட்பாரற்றுப் போய் விட்டன. அந்த வரிசையில் தான் நான்கு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் இடம் பெறுமோ என்று சந்தேகப்படுகிறேன்.

தி.மு.க.வாக இருப்பது தான்

கேள்வி:- தேர்தல் ஆணையத்திற்கும், தி.மு.கழகத்திற்கும் இடையே இப்படிப்பட்ட உரசல் நடப்பதற்கு என்ன காரணம்?

பதில்:- நாங்கள் தி.மு.கழகமாக இருப்பது தான்!

ராமதாஸ் போராட்டம்

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் கோட்டைக்குள்ளே வந்து உங்கள் அனுமதியோடு சுயநிதி கல்லூரிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு இன்று அமைச்சர் பொன்முடி கூட அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது, எனவே டெல்லியில் போராடலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- "கோட்டைக்குள்ளேயே என் கால் படாது'' என்று ஒரு முறை சத்தியமே செய்திருக்கிறார், டாக்டர் ராமதாஸ். இப்போது பட்டால், அது வரவேற்கப்பட வேண்டியது தானே. ஆனால் எதற்காக என்பது பிரச்சினை. அதற்கு தான் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.

கேள்வி:- சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வாங்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. யாரும் அப்படிப்பட்ட புகார் கூறுவதில்லை என்று பொன்முடி சொல்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அப்படி அதிகக் கட்டணம் கொடுப்பவர்கள், புகார் கொடுத்தால், ஆதாரங்களோடு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமெரிக்க கப்பல்

கேள்வி:- அணுசக்தி கப்பல் ஒன்று அமெரிக்காவிலிருந்து சென்னை வருவதைப் பற்றி பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு என்ன செய்யப்போகிறது?

பதில்:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சினை இது. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அது குறித்து போராட்ட அறிவிப்புகளும் வருகின்றன. நாங்கள் இன்னும் அதுபற்றி எங்கள் உயர் நிலைக் குழுவில் சிந்திக்கவில்லை.

கேள்வி:- குடியரசு தலைவர் தேர்தல் உங்கள் கூட்டணி சார்பாக போட்டியிடும் பிரதீபா பட்டீல் அவர்கள் மீது ஊழல் புகார்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்:- பிரதமரே அதை மறுத்திருக்கிறார்.

கேபிள் டி.வி. அரசுடமை?

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் அரசு சார்பில் கேபிள் நெட் ஒர்க் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக்கிறதா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. மத்திய மந்திரி ராஜா, அது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறார். எனவே இதை ஆராய்ந்து - அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு வந்தால், அதைத் தேசியமயமாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.

தீவிரவாத பயிற்சி

கேள்வி:- தேனியில் 600 மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சீபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது ஆதாரப்பூர்வமாக தேர்தல் விதிமுறை மீறல்கள் எல்லாம் சொல்லப்பட்டன. ஆனால் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அந்த அளவிற்கு விதிமுறை மீறல்கள் இல்லையே என்று தேர்தல் ஆணையரிடம் நாங்கள் கேட்ட போது, இது குழந்தைத் தனமான வாதம் என்றும், இரண்டையும் ஒப்பிட்டுக் கேட்கக் கூடாது என்றும் கூறியதைப் பற்றி?

பதில்:- அவர் சொன்னது குழந்தைத் தனமா? நீங்கள் சொன்னது குழந்தைத் தனமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

துணை ஜனாதிபதி

கேள்வி:- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க. போட்டியிடுமா?

பதில்:- தி.மு.க. இதுவரையில் அந்தக் கோரிக்கை வைக்கவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

"தினத்தந்தி"

இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதிக பணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டும் டாக்டர் ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராட தயாரா என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பினார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி கட்டணம்

தமிழகத்தில் உயர்கல்வித்துறை இருக்கிறதா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தெரியப்படுத்துவற்காக சில விளக்கங்களை தெரிவிக்க இருக்கிறேன். உயர் கல்வித்துறை மூலம் ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய சாதனைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பல்வேறு சங்கடங்கள் இருந்தாலும் ஒரு குழு அமைத்து நுழைவுத்தேர்வை ரத்து செய்தது பெரிய சாதனையாகும். அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.12,500-ல் இருந்து ரூ.7,550 ஆக குறைப்பதற்கான நடவடிக்கையை கடந்த கல்வி ஆண்டு முதலே எடுத்து இருக்கிறோம்.

ரூ.27 கோடி ஒதுக்கீடு

அண்ணாபல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்கில் உள்ள 192 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக்கில் சேரும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இலவச பாட புத்தகமும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் இதுவரை அரசு கல்லூரிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலை மாறி குறைந்த பட்சம் 50 ஆயிரம் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 542 அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாய கல்லூரிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் 250 பொறியியல் கல்லூரி

கடந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் சிறுபான்மை பொறியியல் கல்லூரியில் 50 சதவீத இடங்களும் அரசுக்கு ஒதுக்கப்பட்டு நீதிமன்ற சிக்கல் இல்லாமல் பெற்று உள்ளோம். மனசாட்சி உள்ளவர்கள் இதை பாராட்டுவார்கள். ஒரு மூத்த அரசியல்வாதியான டாக்டர் ராமதாஸ், ராமன் குழு உள்ளதா? சுப்பிரமணியம் குழு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கமிட்டிகள் நியமிக்கப்படும் வரை இந்த கமிட்டிகள் நடைமுறையில் இருக்கும் என்று ஏற்கனவே பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 39 சதவீதம் இடம் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியாரிடம் மொத்தம் 250 பொறியியல் கல்லூரிகள் உள்ளது.

புகார்கள் வரவில்லை

சென்னையை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவலாக செய்திகள் இருந்த போதும் தனிப்பட்ட முறையில் பெற்றோர்களிடம் இருந்தோ, மாணவர்களிடம் இருந்தோ எங்களுக்கு எந்த விதமான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வரவில்லை.

டாக்டர் ராமதாசிடம் புகார் செய்த பெற்றோர் சங்கத்தினர் மாணவர்கள் எந்த கல்லூரியில் யார் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

250 பொறியியல் கல்லூரிகளில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி ராமன் குழு, சுப்பிரமணியன் குழு மூலமாக ரூ.39 ஆயிரம், ரூ.32 ஆயிரம் என்ற கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில கல்லூரிகள் இதை விட குறைவான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று எழுதிக்கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட உயர் கல்வி கட்டணம் குறைவாக இருந்தது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். கேரளாவில் உள்ள நீதிமன்ற தீர்ப்பின் படி கல்விக்கட்டணம் ரூ.75 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக கல்வி கட்டணங்கள் குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ராமதாஸ் போராட தயாரா?

கிராமப்புற மாணவர்கள் பயன் அடையும் வகையில் உயர் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். பொறியியல் மருத்துவ கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாக மாநில அரசிடம் இல்லை. டெல்லியில் நடந்த மாநாட்டில் மாநிலத்திற்கு முழுமையான அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ.யிடம் தான் உள்ளது.

எனவே டாக்டர் ராமதாஸ் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ. ஆகிய குழுக்களின் அதிகாரத்தை குறைக்க மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு போராட முன் வந்தால், முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அனுமதி பெற்று நானும் போராட தயாராக இருக்கிறேன்.

மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும். மேலே குறிப்பிட்ட நிர்வாக அதிகாரத்தை கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த டாக்டர் ராமதாஸ் போராடினால் அவருக்கு பின்னால் நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்.

நாங்கள் எடுத்த நடவடிக்கை நிதானமானது. நிரந்தரமாக மாணவர்களுக்கு பலன் அளிக்க கூடியது.

எதிர்காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கல்வியின் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ராமதாசிடம் கேட்க வேண்டும்

கேள்வி:- கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க. இப்படி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறலாமா?

பதில்:-இது பற்றி டாக்டர் ராமதாசிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:-கிராமப்பகுதி மாணவர்களுக்கு முன்பு வழங்கப்பட்டது போல் 15 சதவீத இட ஒதுக்கீட்டை தொழிற்கல்லூரிகளில் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்:-இந்த முறையை நாங்கள் தான் கொண்டு வந்தோம். இந்த முறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அது நிறுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:-பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லையா?

பதில்:- ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லை. உயர் கல்வித்துறை இயக்குனருக்கு புகார் வந்தால் கூட அவர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இருப்பார்.

அதிக கட்டணம்

கேள்வி:- 250 பொறியியல் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் கூட அதிக கட்டணம் வசூல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லையா?

பதில்:- ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருப்போம். டாக்டர் ராமதாசுக்கு எழுதியிருக்கும் குற்றச்சாட்டை எங்களுக்கு எழுதியிருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். அதே நேரத்தில் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஆய்வு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த கல்லூரிகளில் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட்டால் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள்.

கேள்வி:- பொறியியல் கல்லூரிகளில் கண்காணிப்பதற்காக தனி குழு அமைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- இதற்காக இயக்குனர் தலைமையில் ஒரு குழு உள்ளது. இந்த குழுவிடம் புகார் கூறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

"தினத்தந்தி"

103 வயதில் தீக்குளித்த மூதாட்டி

வாழ்க்கையில விரக்தி என்பது யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்து விட்டது டெல்லியைச் சேர்ந்த "மொங்கிபேன் மகாடியா''வின் சாவு.

103 வயதில் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் கடந்த வியாழக்கிழமை மாலை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தார்.

டெல்லியில் தனது 61 வயது மகன் வீட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர் திடீரென்று அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார்.

அவரது உடலில் மளமள வென பற்றிய தீயை அணைத்த மகனும், மருமகளும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே பாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி காந்தி கிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். "தன் சக காலத்து உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் இறந்து விட்டதால் வாழ்க்கையில் தனிமையில் விடப்பட்டது போல் எனது தாய் உணர்ந்தாள்.

இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தது போல் காணப்பட்டார். "இனி நான் எதுக்கு வாழணும்'' என்று அடிக்கடி கூறி வந்தார்.எனவே அந்த எண்ணங்களே அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்க வேண்டும்'' என்று மொங்கிபேனின் மகன் கூறினார்..

சைதப்பேட்டை தீவிபத்தில் 200 குடிசைகள் சாம்பல்.

சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே குடிசை வீடுகள் ஏராளம் உள்ளன. கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் சிறுசிறு குடிசைகளை போட்டு வசித்து வருகிறார்கள். அதிகாலை 2 மணியளவில் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

அடுத்தடுத்துள்ள வீடுகளிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளிகள் தங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்தனர். தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீயணைப்பு வண்டிகள் குடிசைகள் இருக்கும் பகுதிக்குள் செல்ல முடியாததால் சற்று தூரத்தில் நின்று பைப் மூலம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 200 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

வீட்டில் இருந்த பீரோ, சமையல் பாத்திரங்கள், தட்டுமுட்டு சாமான்கள் அனைத்தும் சேதமடைந்தன. உடமைகளை பறி கொடுத்த பெண்கள் அழுது கொண்டே தங்களது வீடுகளின் முன்பு சோகமாக உட்கார்ந்து இருந்தனர். சிம்னி விளக்கு கீழே விழுந்து குடிசையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த பகுதியை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த பகுதி கவுன்சிலர் எம். மகேஷ்குமார் மாம்பலம்- கிண்டி தாசில்தார் ஷியாம் சுந்தர், மண்டல உதவி ஆணையர் முத்துகருப்பன் ஆகியோர் மேற்பார்வையில் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்பட்டன. ரூ.2000 ரொக்கமும், அரிசி, வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. வீடு களை இழந்தவர்கள் சைதாப் பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் கொடுக்கப்பட்டது.

மாலைமலர்

பாரத ஸ்டேட் வங்கியில் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு வாங்கியது

பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு கையகப்படுத்தும் வண்ணமாக இந்திய அரசு, தனது மிகப்பெரிய நேரடி வாங்கலில், ரூ35,531 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதேபோல மத்திய வங்கி மற்றும் இரு அரசுத்துறை நிதியமைப்பு( NABARD,NHB) களிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறது.
Centre completes buyout of RBI stake in SBI

சென்னை: பிரதீபாவுக்கு ஆதரவாக நாளை பேரணி

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட மகளிர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணியில் கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி அனைத்து கட்சி மகளிரும் பங்கேற்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்பேரணியில் பங்கேற்பதற்காக பிரதீபா பட்டீல் நாளை மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

பிரதீபா பட்டீலுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த பேரணி நாளை மாலை 3 மணிக்கு மன்றோ சிலை அருகில் இருந்து தொடங்குகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரணியை முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் ஆகியோர் மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்கள்.

இதற்காக அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கும் அண்ணா சிலைக்கும் நடுவில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை நடைபெறும் பேரணியையொட்டி பாது காப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கமிஷனர் லத்திகாசரண் கூறியதாவது:-

நாளை நடைபெறும் பேரணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து பெண்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதனை வைத்து பார்த்தால் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்புக்காக 10 கம்பெனி சிறப்பு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள் ளனர். மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணி சுமார் 4 மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பேரணி நடைபெறும் பாதையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது

மாலைமலர்

குவைத்: தீவிபத்தில் மூன்று இந்தியர்கள் பலி

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலியானார்கள். குவைத்தில் அபு ஹலிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த வீட்டில் 6 இந்தியர்கள் வசித்து வந்தனர். தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள். ஒருவர் காயமடைந்துள்ளார்.


தினமலர்

RJD MP ஷாஹாபுதீனுக்கு மூன்றுவருட கடுங்காவல்

ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மது ஷாஹபுதீன் மீது திருடப்பட்ட வண்டியை வைத்திருந்ததாக தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து போதுமான சாட்சியங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டார்.

The Hindu News Update Service

முன்னாள் தில்லி முதல்வர் சாஹிப்சிங் வர்மா மரணம்

பிஜேபி தலைவரும் முன்னாள் தில்லி முதல்வராகவும் வாஜ்பேயியின் நடுவண் அரசில்
தொழிலாளர் அமைச்சராகவும் இருந்த சாஹிப்சிங் வர்மா இராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். இவ்விபத்து இன்று 2:30 மணிக்கு ஜெய்பூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் ஒரு மினி டிரக்குடன் ஏற்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) பிசி நொய்லா கூறினார்.
மேலும்....Sahib Singh Verma: Jat with a passion for poetry- Hindustan Times

சிவகங்கை நகராட்சித்தலைவர் கார் வெடிகுண்டால் கொலை

சிவகங்கை நகராட்சித்தலைவர் காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.

நகராட்சி தலைவரான முருகன் நேற்று தனது ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் சீட்டுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் முருகன் அந்த இடத்திலேயே பலியானார். டிரைவர் பாண்டி தூக்கி வெளியே வீசப்பட்டார். குண்டு வெடித்த காரின் அருகே நின்றிருந்த பஸ்சின் கண்ணாடிகளும் உடைந்து சிதறி பலர் காயமடைந்தனர். மேலும் அந்தப் பக்கமாக நடந்து சென்ற பலரும் காயமடைந்தனர்.

டிரைவர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச் சம்பவத்தால் சிவகங்கையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காரில் வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்துள்ளனர்.

திமுகவில் இருந்த முருகனுக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டார். கடந்த நவம்பர் 13ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் 15 கவுன்சிலர்கள் ஆதரவுடன் முருகன் வெற்றி பெற்றார்.

அதே நேரம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் முருகன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சுயேட்சை தலைவராக செயல்பட்டு வந்தார்.

இவருக்கும் திமுக நகரச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடப்பது வழக்கம். மேலும் கேபிள் டிவி தொழில் போட்டி காரணமாக முருகனின் நண்பர் நாகராஜ் என்பலருக்கும் திமுக கவுன்சிலர் ஒருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

இவர்கள் தவிர அப் பகுதியில் வேறு சில கட்சியினருடன் பல விவகாரங்களில் மோதியுள்ளார் முருகன்.

இந் நிலையில் தான் காரில் குண்டு வைத்து முருகன் கொல்லப்பட்டுள்ளார்.

அவருடைய கார் இரவு நேரத்தில் மேல்நிலை தொட்டிக்கு கீழே நிறுத்தப்படுவது வழக்கம். அங்கு தான் காரில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

காரில் குண்டு வைத்து அதை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யும் அளவுக்கு சிவகங்கை போன்ற சிறிய ஊருக்குள் டெக்னாலஜி வந்து நுழைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. இதன் பின்னணியில் வெடிகுண்டுகளை கையாளும் பெரிய அளவிலான கூலிப் படை இருக்கலாம் என்று தெரிகிறது.

தட்ஸ் தமிழ்

நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு.

அமெரிக்க போர் கப்பல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா வின் அணு சக்தி போர் கப்பல் "யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்'நாளை காலை சென்னை துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் துõரத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த கப்பல் வருவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து தெளிவான தகவல் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.இந்திய கடலோர எல்லையில் தீங்கு விளைவிக்கும் பொருள்களை இக்கப்பல் குவிக்கக் கூடும். எனவே, இந்திய கடலோர எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நிமிட்ஸ் அணுசக்தி போர் கப்பலினால் தீங்கு ஏற்படுமா என அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்மணி

பிரதமர் ப்ரௌனின் முதல் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதி வடேரா வெளியுறவு வளர்ச்சிக்கான உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். UBS வார்புர்க் வங்கியில் 14 வருடங்கள் பணியாற்றியுள்ள வடேராயின் பணிகளில் எவ்வாறு வளரும் நாடுகளின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பது என்று அந்த அரசுகளுக்கு அறிவுரை வழங்குவதும் அடங்கும். பிரித்தானிய அரசில் பங்கேற்கும் மூன்றாவது இந்திய பண்பாட்டைச் சேர்ந்தவராவார்.
மேலும்..The Hindu News Update Service

இரயில்நிலையங்களில் வைஃபை வசதி

இனி இரயில்வண்டியின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சூடான தேநீர் கிடைக்கிறதா எனத் தேடுவது மட்டுமன்றி மடிக்கணினியில் 'சற்றுமுன்' நடந்ததென்ன என்ற தேடலும் நடக்கும் விதமாக இந்திய இரயில்வேயின் துணைநிறுவனமான ரைல்டெல் 500 இரயில்வே நிலையங்களில் கம்பியில்லா இனையவசதியான வைஃபை நுட்பத்தை நிறுவ உள்ளது. முதற்கட்டமாக 50 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. பெங்களூருவிலிருந்து ஆரம்பிக்கும் இப்பணி அடுத்து ஜெய்பூர் நகர நிலையத்தை எடுத்துக் கொள்ல இருக்கிறது. பெங்களூருவின் ஏர்லிங்க் நிறுவனமும் அமெரிக்க ரொன் டோக் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை அமலாக்க இருக்கின்றன.

மேலும்... The Hindu News Update Service

மும்பையில் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆண்டுதோறும் வரும் பருவமழை வருகிறதோ இல்லையோ மும்பை வாழ்வு மழையால் பாதிக்கப்படுவது இயல்பாகிவிட்டது. பருவமழைக்காலத்தின் முதல் கனத்தமழை நேற்றிரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இரயில்பாதைகளும் சாலைகளும் நீர்தேங்கி பொதுமக்கள் வாழ்வை பாதித்துள்ளது. மும்பையின் உயிர்நாடியான இரயில் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன. வெளியூர் வண்டிகள் புறப்படுவதும் வந்து சேருவதும் தாமதமாகின்றன. ஜூலை 27, 2005க்க்குப்பின் எடுத்துக் கொண்ட பிரசவ வைராக்கியங்கள் அவை எழுதப்பட்ட தாளிலேயே உள்ளன. வானிலை நிலையம் வழமையான சொற்றொடராக அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என ஆருடம் சொல்லி மும்பைகாரர்களை கிலியடைச் செய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தீவின் தெற்குமுனையிலுள்ள கொலாபாவில் 146.8மிமீ மழையும் மேற்குபுறநகர் என்று பழக்கத்தில்அழைக்கப்படும் மத்தியபகுதியின் சான் டாகுருஸில் 174.1 மி.மீ மழையும் பதிவாயுள்ளன.

DNA - Mumbai - Heavy rains strike city, transport networks thrown out of gear - Daily News & Analysis

Friday, June 29, 2007

தென் ஆப்ரிக்காவை வென்றது இந்தியா - சச்சின் சாதனை

பெல்ஃபாஸ்ட்டில் நடந்த இராண்டாவது ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கட் வித்தியாசத்தில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவின் 226 இலக்கை இந்தியா 49.1 ஓவர்களில் எட்டியது.

சச்சின் டெண்டுல்கர் 93 ரன்களை ஏடுத்து உலகில் முதன் முதலில் ஒருநாள் போட்டிகலில் 15,000 ரன்களைக் குவித்து சாதனை செய்துள்ளார்.

Tendulkar becomes first player to score 15000 ODI runs The hindu
India beat South Africa by six wickets The Hindu

செயற்கை உயிரின மாற்றம் - அறிவியல் சாதனை

செயற்கையாக ஒரு பாக்டீரியாவின் உயிரணுக்களை இன்னொன்றில் செலுத்தி அதை முன்னதைப் போல செயல்படச் செய்து சாதனைஇ செய்துள்ளனர் விஞ்சானிகள். செயாற்கையாக செல்களை உருவாக்கும் முயற்சியில் இது முதல் படி என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்படி பாக்டீரியாக்களை தங்கள் விருப்பப்படி செயல்படச் செய்ய முடியும். ஒரு ஆப்பிள் மாக் கம்ப்யூட்டரை, மென்பொருள் உதவியுடன் ஒரு விண்டோஸ் கம்ப்யூட்டராக மாற்றுவதைப் போன்றது இது என்கிறார் க்ரெய்க் வென்றெர் எனும் உயிரணு சோதனையாளர்.

Scientists take step to making synthetic life - reuters

ஆப்பிள் ஐ போன் வாங்க நீண்ட வரிசைகள்

இன்று விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோனை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவிலிருந்தே ஐபோன் கடைகளின் முன்பாக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

வரிசையில் நிறபவர் தரும் நேரடி செய்திதொகுப்புக்கள்
From the Front Lines of NY's iPhone Line ABC News
In the iPhone Line Detroit Free Press, United States

வீடியோக்க்கள்





40 பாக்கிஸ்தானியர்களை இந்தியா விடுவித்தது

பரஸ்பர உறவை வலர்க்கும் முகமாக இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த கைதிகள் 40பேரை விடுதலை செய்துள்ளது. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்தச் செயல் நன்னம்பிக்கையை உருவாக்கும் முகமாக அமைந்திருக்கிறது.

மேலும் 48 கைதிகளின் சொந்த நாடு எது என அறியப்பட்டதும் அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கைதிகளில் அநேகம்பேர் மீனவர்கள்.

இந்திய பாக்கிஸ்தானிய உள்துறை அமைச்சகங்களுக்கிடையே புதுடில்லியில் ஜூலை 3, 4ல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

India to release 40 Pak prisoners NDTV

லவ் ஆல்? - விம்பிள்டனில் சானியா சர்ச்சைக்குள்ளாகிறார்

நடந்துவரும் விம்பிள்டன் போட்டிகளில் இஸ்ரேலைச் சேர்ந்த தன் முன்னாள் பார்ட்னர் ஷகர் பியரோடு சானியா கூட்டு சேர்ந்து ஆடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முஸ்லிமான சானியா யூதரான பியரோடு ஜப்பான் ஓப்பன் போட்டிகளில் முன்பு ஜோடி சேர்ந்து விளையாடியபோதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது இதன்காரணமாய்ிவர்கள் பிரிய நேர்ந்தது. விம்பிள்டனில் இருவரும் சேர்ந்து ஆட உள்ளனர்.

இதற்கு முன்பும் 2002ல் பாக்கிஸ்தான் வீரர் ஐசம்-அல்-ஹக் குரெஷி இஸ்ரேயேலின் அம்ர் கடாடோடு கூட்டு சேர்ந்ததற்கு பாக்கிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Sania faces Israeli Wimbledon doubles storm Sports Time

'சூழ்சியால் வெற்றி' - ஜெயலலிதா

மதுரை மேற்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி சூழ்சி செய்து வெற்றி வென்றுள்ளனர் என ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

முறையான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கருதி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைக்க முயன்றதாகவும் அதை திமுக, காங்கிரஸ் தலமை தடுத்ததாகவும் அழகிரியி வாக்காளர்களை மிரட்டி போலி வெற்றி பெற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

Congress' victory in by-poll a conspiracy by DMK: Jayalithaa Hindu

ஏய்ட்ஸ் அறிவின்மை: மீரட் மருத்துவர்களுக்கும் !

கேரள பள்ளியில் தான் என்றில்லாமல் மீரட்டில் மருத்துவர்களுக்கும் ஏய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பறைசாற்றும் விதமாக ஹெச் ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரசவத்தை பார்க்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் தச்சுத்தொழில் புரியும் கணவனையே மருத்துவர்கள் வழிமுறை சொல்லி க் கொடுத்து தொடாமலே அக்கணவன் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். தொப்புள்கொடியை தன் கணவனே அறுத்ததாக அந்தப் பெண்மணி கூறினார். இது எழுப்பிய சர்ச்சையின் பின்னால் உ பி அரசு ஆய்வு மகப்பேறு மருத்துவதுறை தலைவரையும் வேலைநேரத்தில் இருந்த மருத்துவரையும் குறை கண்டிருக்கிறது.

The Hindu News Update Service

இஸ்ரேல் அதிபர்் பதவி விலகினார்: சர்ச்சை தொடர்கிறது

பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டு சிறை செல்லவேண்டிய நிலையில் தனது ஏழு வருட பதவிகாலத்தில் இரு வாரங்களே பாக்கியுள்ள நிலையில், பலரும் விமரிசிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலிய அதிபர்மோஷே காட்சவ் தனது பதவியை துறந்தார். இதன் காரணமாக தனது முன்னாள் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டது, அவர்களை பெண் என்பதால் அலுவலகத்தில் துன்புறுத்தியது போன்ற சிறு குற்றங்களுக்கே விசாரிக்கப் படுவார். தவிர அவரது சிறை தண்டனை இடைநீக்கம் செய்யப்படும். அட்டார்னி ஜெனரலின் இந்த தாராள மனதிற்கு பெண்ணீயவாதிகளும் அரசியல் நோக்கர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி: இந்தியா அர்ஜென்டீனாவிடம் தோல்வி

பெல்ஜியத்தில் நடந்துவரும் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் டசன்கணக்கான பெனால்டி கார்னர்களை மாற்ற முடியாது இந்தியா அர்ஜெ டீனாவிடம் ஒன்றுகு இரண்டு என்ர கோல் கணக்கில் தோல்வியுற்றது. பயிற்சியாளர் ஜோக்கிம் கார்வலொ பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றமுடியாது போனால் ஒன்றும் செய்யமுடியாது என்று வருந்தினார். நான்கு ஆட்டங்களில் இரண்டாவதான இந்த தோல்வியால் இந்தியா இந்த ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இறுதியாட்டத்திற்கு தன்னிடத்தை உறுதி செய்துள்ள நியூ சிலாந்து சனிக்கிழமை ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை தோற்கடித்தால் இந்தியா விளையாட வாய்ப்பு கிட்டும்.

DNA - Sport - India grapple with the question on penalty - Daily News & Analysis

இலண்டனில் பெரும் குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது

இலண்டனின் வெஸ்ட் எண்ட் பகுதியில் டைகர்டைகர் இரவுவிடுதியருகே பெட் ரொல், ஆணிகள், சிறு காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகளை திணித்த கார் குண்டு ஒன்றை திறனிழக்கச் செய்திருக்கின்றனர். ஸ்காட்லாந்து காவலின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவரும் துணை உதவி கமிஷனரும் ஆன ் பீட்டர் கிளார்க் இந்த கருவி மட்டும் வெடித்திருந்தால் பெரும் பொருட்சேதமும் உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கும் எனக் கூறினார்.

Massive car bomb defused in London | UK Latest | Guardian Unlimited

இந்தியா அணிசேரா நாடுகள் குழுமத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்

உலகில் இரு அணிகள் இல்லாத, மறைமுக யுத்தம் (Cold war) இல்லாத நிலையில் அணிசேரா நாடுகள் குழுமத்தின் அவசியம் என்னவென்றும் இந்தியா இந்த குழுமத்தை கைவிட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு செயலர் காண்டெலசா ரைஸ் கூறியதற்கு எதிர்வினையாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில் இந்தியா ஒருபோதும் அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு கொடுக்கும் ஆதரவு உறுதியானதும் நிலையானதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இனவெறி காலனியாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மிகவும் உதவிய இந்த இயக்கம் இன்றும் உலகளாவிய ஜனநாயகம் தழைக்க அவசியமானது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

NDTV.com: India firm on NAM commitment

மதுரை இடைதேர்தல்:காங்கிரஸ் வெற்றி.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கொண்டாட்டம்.

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் காங்., வேட்பாளர் 31,115 ஓட்டுகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அனு சக்தி கப்பல் வருகைக்கு தடை விதிக்க இயலாது.

சென்னை ஐகோர்ட் மறுப்பு.

அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு வருவதால் அணு கதிர் வீச்சு ஆபத்து உள்ளது. எனவே கப்பல் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேல்முருகன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஷா தலையிலான பெஞ்ச் அமெரிக்க கப்பல் வருகைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாதெமி விருதுகள்

2006-ம் ஆண்டுக்கான சாகித்ய கலா அகாதெமியின் 'பஷா சம்மான்' விருதுக்கு வெட்டூரி சுந்தரமூர்த்தியும், எச்.பி. நாகராஜய்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதத்தில் தெலுங்கு எழுத்தாளரான வெட்டூரி சுந்தரமூர்த்திக்கு விருது வழங்கப்படவுள்ளது.

கன்னட மொழி எழுத்தாளர் எச்.பி. நாகராஜய்யா இதுவரை 60 புத்தகங்களையும், பத்திரிகைகளுக்கு 300-க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி

நவம்பரில் லாஸ்வேகாஸ் வலைபதிவர் காண்காட்சி

நவம்பர், 2007ல் லாஸ் வேகாஸில் வலைஇப்பதிவர் கண்காட்சி நடைபெற உள்ளது Blogworld & new media expo என அழைக்கப்படௌம் இந்த கண்காட்சி வரும் நவம்பர் 8-9 ஆகிய தேட்திகளில்ல் நடைபெறும்.


Register Now at Blog World

செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

டில்லியில் உள்ள செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக (World Heritage Monument) யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல வரலாற்று சிறப்புமிக்க தலங்களுக்கும் யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை தருவது வழக்கம். இவற்றில் பலவற்றிற்கும் யுனெஸ்கோ நிதி உதவியும் வழங்குகிறது.

இதுகுறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

PM delighted at Red Fort getting world heritage status Hindu
Red Fort joins UNESCO's World Hegitage Sites list Hindu
Red Fort is now a world heritage site Business Standard

பெரு நாட்டிடம் நடிகை கேமரான் டயஸ் மன்னிப்பு கோரினார்

'ஷ்ரெக்' படத்தில் நாயகிக்காக குரல் கொடுத்த கேமரான் டயஸ் சமீபத்தில் பெரு நாட்டின் 'மாச்சு பிச்சு'வுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது 'மக்களுக்கு சேவை' (Serve the People) என்னும் வாக்கியத்தை சீன மொழியில் எழுதியிருந்த கைப்பையை தாங்கியிருந்தார்.

'Serve the People' என்பது சீனாவின் கம்யூனிசத் தலைவர் மாசேதுங்கின் புகழ்பெற்ற அரசியல் கோஷம். ஆனால், பெருவிலோ எழுபதாயிரம் மக்களை கொன்று குவித்த மாவோயிஸ புரட்சியை நினைவுபடுத்துவதாக இந்த முழக்கம் அமைந்துள்ளது.

சீனாவுக்கு பயணித்த போது வாங்கிய கைப்பை வாசகத்தின் காயப்படுத்தும் தன்மை அறியாமல், பெரு மக்களை புண்படுத்தியதற்காக டயஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Diaz is sorry for the slogan on her bag - The Times of India

சீன நிலக்கரி சுரங்க அதிபர் கைது

சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கம் வைத்திருந்ததை ஆராய்ந்ததற்காக லான் (Lan Chengzhang) அடித்துக் கொல்லப்பட்டார். நிருபரை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை தீர்ப்பாகியுள்ளது.

செய்தியாளர் சுரங்க திபரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இந்த முறைகேடுகளை ஆராய்ந்தார் என்னும் குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் எழுந்தது.

அரசின் கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் சீனாவின் சுரங்கங்களில் ஆண்டுதோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் இறக்கிறார்கள்.

BBC NEWS | Asia-Pacific | China mine boss jailed over death

இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: இலங்கை அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது:

ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும்.

தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உத்தியோகப்பூர்வமான தளமாக நாம் அதனைக் கருதவில்லை.

விடுதலைப் புலிகள் இரு உத்தியோகபூர்வமான தளங்களை இயக்கி வருகின்றனர்.

தமிழ்நெட் இணையத்தளம் குறித்து அரசாங்கம் கவலை கொண்டிருக்குமேயானால் ஏன் அந்த இரண்டு இணையத்தளங்களை ஏதும் செய்யாதிருக்கிறோம்? தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தி தொடர்பில் கவலை கொண்டிருந்தோமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக இணையத்தளத்தில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன- அது குறித்து நாம் கவலை கொள்ளாதிருப்போமா? என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

Puthinam Tamil Daily News Page

Thursday, June 28, 2007

பள்ளி ஆசிரியரை தற்கொலைக்குத் தூண்டினாரா பிரதீபாவின் கணவர்

பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரான பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் மீதான வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷெகாவத் மீதான புகார் மீது கிரிமினல் வழக்கு தொடருமாறு போலீஸôருக்கு மகாராஷ்டிரம் புல்தானா மாவட்டம் ஜல்கான்-ஜாமோத் குற்றவியல் முதன்மை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கிரிமினல் வழக்குத் தொடர்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் ஷெகாவத் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, ஷெகாவத் மற்றும் 3 பேர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடர கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தடை விதித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை வந்தது. விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஏ.பி. லாவண்டே.

தினமணி

கல்வி கட்டண உயர்வு: இராமதாஸ் எச்சரிக்கை!

மதுரை வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொழில் கல்வி உள்ளிட்ட கல்விக் கட்டணங்களைக் குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

"கல்வி நிலையங்கள் தாராள வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு போட்டி அதிகரித்து வருவதால் அதிக நன்கொடை மற்றும் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதனை தடுக்க சட்டம் இருந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

ராமன் குழு, சுப்ரமணியம் குழு ஆகிய குழுக்கள் ஏழைகளை பாதிக்கும் வகையில்தான் கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவ மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் ரூ.1.30 லட்சம் கட்டணம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தனியார் கல்லூரிகளில் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் வரை வசூலிக்கின்றனர். இதுதவிர ஹாஸ்டல் கட்டணமாக ரூ.56,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இதே போல் பொறியியல் கல்லூரிக்கு ரூ.32,000 கட்டணம் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உயர்கல்வி துறை இருக்கிறதா அல்லது செயலிழந்து கிடக்கிறதா என்று தெரியவில்லை. கல்வி கட்டணங்களை முறைப்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதல்வரின் அனுமதி பெற்று எம்.பி., எம்.எல்.ஏக்களைத் திரட்டி கோட்டைக்குள்ளேயே போராட்டம் நடத்துவேன்.

இடைதேர்தல் என்பதே தேவையில்லாத ஒன்று. பாமகவைப் பொருத்தவரை, இடைத்தேர்தல் தேவைப்படும் தொகுதியில், எந்த கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சிக்கே அத்தொகுதியை ஒதுக்கிட வேண்டும்"
என்றார்

இந்தியா : புதிய சேவை வரிகள்

தொலைதொடர்பு சேவை, கட்டடங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட ஏழு சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் சேவை வரி பல்வேறு இனங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் மேலும் ஏழு இனங்கள் புதிதாய் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொலை தொடர்புத் துறை, சுரங்கப் பணிகள், அசையாச் சொத்துகளை வாடகைக்கு விடுதல், ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுதல், வளர்ச்சி மற்றும் விருப்பமான சேவைகளை மேற்கொள்ளுதல், சொத்துகள் மற்றும் நிதி மேலாண்மை, வடிவமைப்பு துறை ஆகிய ஏழு பணிகளை மேற்கொள்வோர் இனிமேல் சேவை வரி செலுத்த வேண்டுமென சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி அசையா சொத்துகளை வாடகைக்கு விடுபவர்களில் ஏழு லட்சம் ரூபாய் வரை வாடகை பெறுபவர்கள் பதிவு மேற்கொள்ள வேண்டும்; எட்டு லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக வாடகை வசூல் செய்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டியது அவசியமாகும்.

சுரங்கப் பணிகளுக்கு இதுவரை சேவை வரி விதிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது சுரங்கப் பணிகளில் ஈடுபடுவோரும் சேவை வரியை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் வழங்கப்படும் சிறப்பு சேவைகளான இசை, படங்களின் தொகுப்பு, வால் பேப்பர், மொபைல் விளையாட்டுகள், ரிங்டோன் போன்றவற்றிற்கு இனி சேவை வரி விதிக்கப்படும்.

வடிவமைப்புத் துறையைப் பொறுத்தவரையில் பர்னிச்சர்கள், நுகர்வோர் பண்டங்கள், தொழில் துறை பொருள்கள், லோகோ, கிராபிக்ஸ், வெப்சைட்டுகள் போன்றவற்றை வடிவமைப்பதற்கு இனி சேவை வரி செலுத்த வேண்டும்.

இதுகுறித்து சேவை வரிகளின் ஆணையர் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிதாக ஏழு இனங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. மேற்கண்ட சேவைப் பணிகளை மேற்கொள்வோர் சேவை வரி செலுத்துவதற்கான பதிவினை வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். முதல் சேவை வரியினை ஜூலை 5ம் தேதி செலுத்த வேண்டும். பதிவு மற்றும் சேவை வரி செலுத்துவோர் வசதிக்காக அண்ணா சாலையில் உள்ள சேவை வரி அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் இயக்கப்படுகின்றன. உரிய காலத்தில் பதிவு மேற்கொள்ளாதவர்கள் மற்றும் சேவை வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு ஜெயின் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

பெட்ரோல் டீசல் - விரைவில் விலை உயருகிறது?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து அவ்வப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இடையில், உ.பி. மாநில சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் அதை மனதில் கொண்டு விலை உயர்வை மத்திய அரசு எடுக்காமல் இருந்தது.

இந்த நிலையில், இனியும் நஷ்டத்தை தாங்க முடியாது என்று மத்திய அரசுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து ஆலோசிக்கிறது. இக்கூட்டத்தின் இறுதியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 160 வரை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.50 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4.41 வரையிலும் அதிகரிக்கலாம். மண்ணெண்ணையின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மரத்தை வெட்டினால் 50 மரக் கன்றுகளை நட வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என்று எக்ஸ்னோரா அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி பி. ஜோதிமணி ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர்.

உஸ்மான் சாலையில் மரங்களை வெட்ட மாநகராட்சிக்கு அனுமதி அளித்தனர். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 50 மரக் கன்றுகளை நட வேண்டும். அவற்றை 5 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

தினமணி

விம்பிள்டன்: சானியா மிர்சா இரண்டாம் சுற்றில் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா பதினோராம் தரவரிசையில் உள்ள உருசியாவைச் சேர்ந்த பெட்ரொவாவிடம் 6-2,6-2 என்ற நேர் ஆட்டங்களில் தோற்றார்.

பெண் டி.எஸ்.பி; ஆண் எஸ்.ஐ - புகாருடன் மனைவி

இதுபற்றிய தினத்தந்தி செய்தி பின்வருமாறு:

பெண் போலீஸ் துணை சூப்பிரண்டுடன் தனது கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளதாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி உசிலம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குளத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருக்கும் திருமங்கலத்தை சேர்ந்த வைரவன் மகன் மோகன் (வயது 46) என்பவருக்கும் கடந்த 1990 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்தின்போது மோகன் போலீசாக வேலைபார்த்தார். கடந்த 1998 ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி விழுப்புரத்தில் பணியில் சேர்ந்தார். அதை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் விழுப்புரத்தில் வசித்துவந்தார்.

இந்தநிலையில் விழுப்புரத்தில் புதிதாக பதவி ஏற்ற பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் என்பருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் திருமண அளவிற்கு போய்விட்டது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மதுரை கீரைத்துறை போலீஸ்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் விபத்தில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரை பார்க்க விழுப்புரத்தில் இருந்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் மதுரை வந்துள்ளார். இதை அறிந்த பரமேஸ்வரி கோபமடைந்து மோகனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியநிலையில் பரமேஸ்வரி கோபித்துக்கொண்டு கொக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மோகன் தனது மனைவி பரமேஸ்வரியை என்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் எனக்கு உள்ள கடனை அடைக்க ரூ.12 லட்சம் வரதட்சணையாக உனது பெற்றோரிடம் வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுக்க வேண்டும். இந்த இரண்டு கண்டிசனுக்கும் ஒத்துவரவில்லை என்றால் உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பரமேஸ்வரி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மோகன் அவருடைய கள்ளக்காதலி பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் தூண்டுதலின்பேரில் என்னிடம் ரூ.12 லட்சம் வரதட்சணை கேட்டதுடன் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போட கட்டாயப்படுத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அதற்கு உடந்தையாக அவரது குடும்பத்திருனரும் உள்ளனர்.

இவ்வாறு அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், அவருடைய தந்தை வைரவன், தாயார் அன்னக்கொடி, தம்பி பிரபாகரன், அவருடைய மனைவி அமுதா, தங்கை லதாதேவி, அவருடைய கணவர் விஜயன் ஆகிய 8 பேர் மீது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயநாச்சியார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது பெண்போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் விருதுநகரில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை அமைப்பாளர் ஏற்படுத்திய சர்ச்சை

இந்திப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா பெண்கள் அணியும் பர்தா அணிந்து ஆஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிப்பட்டார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

தன்னுடைய குற்றத்தை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சூஃபி ஞானி Khwaja Moinuddin Chisti-யின் கோவிலை வழிநடத்தும் அஞ்சுமன் அமைப்பாளர்களும் அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முதலில் முகத்திரை இல்லாமல்தான் ஆசி வாங்க சென்றார். ஆனால், திரண்டிருந்த ரசிகர்களின் கூட்டத்தினால் இயலவில்லை.

ஹிந்தி நடிகை கத்ரீனா கயிஃப் முழங்கால் தெரியுமாறு பாவாடை அணிந்து வந்ததனால் இதே ஆலயத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

The Hindu :: Himesh Reshammiya apologises

First Bollywood: This time, Katrina Kaif will be in a long skirt

மகாத்மா காந்தியின் கடிதம்: ஏலத்தை தடுக்க இந்தியா நடவடிக்கை

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் போகாமல் இருக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு, 1948-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி முஸ்லிம்கள் மீது பரிவு காட்டவேண்டும் என்று அவர் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மகாத்மாவின் இந்தக் கடிதத்தை லண்டனில் உள்ள கிறிஸ்டி கலைப் பொருள் விற்பனைக் கூடம் ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளது. வருகிற ஜுலை மாதம் 3-ந்தேதி கடிதம் ஏலம் விடப்பட இருக்கிறது. மகாத்மா காந்தி எழுதிய இந்தக் கடிதம் 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட காந்தியவாதிகள் பசந்த் குமார் பிர்லா, சத்யா பால் ஆகிய இருவரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் எழுதிய கடிதத்தில், "மகாத்மா காந்தியின் கடிதத்தை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி பெறவேண்டும். அல்லது ஏலத்தின்போது கடிதத்தை மத்திய அரசே எடுக்கவேண்டும்'' என்று யோசனை தெரிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கலாசாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். உடனடியாக கலாசாரத்துறை அமைச்சகம் கடிதத்தை திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியது. மேலும் இந்த விஷயத்தில் வெளி விவகாரத்துறையின் உதவியையும் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இது பற்றி கலாசாரத்துறை அமைச்சகத்தினர் கூறுகையில், "நாங்கள் மகாத்மா காந்தியின் கடிதத்தை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை கேட்டிருக்கிறோம். மகாத்மாவின் கடிதத்தை திரும்பப் பெறுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது'' என்றனர்.

மகாத்மா காந்தியின் கடிதத்தைப் பெறுவதில் பண பிரச்சினையும் சேர்ந்து இருப்பதால் அது பற்றி கலாசாரத்துறை அமைச்சகத்திற்கு, மத்திய வெளிவிவகாரத்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. எனவே மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் போகாமல் தடுக்கப்படுவது உறுதி என்று தெரிகிறது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாத்மா காந்தி எழுதிய 18 கடிதங்கள் 1998-ம் ஆண்டு இதே போல் ஏலத்தில் விடப்பட்டன. அப்போது இங்கிலாந்தில் வசிக்கும் தாய்நாட்டுப் பற்றுகொண்ட சில இந்தியர்கள் அந்தக் கடிதங்களை ஏலத்தில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டார் இஸ்ரேேல் அதிபர்

இஸ்ரேேல் அதிபர் மொஷே கட்சவ் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பெண் பணியாளர்களை பாலியல் துன்பத்திற்கு ஆக்கியதாக அவர்மேல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜெயில் தண்டனையை தவிர்க்கும் விதமாக அரசு தரப்போடு அவர் குற்றங்களை்ற்றங்களை ஒப்புக்கொண்டு சமரசம் செய்துகொண்டார். விரைவில் பதவி விலகுவார் என அறியப்படுகிறது.

Israeli president pleads guilty to sex offences Reuters
Analysis: Israeli presidency at its lowest point Jerusalem Post
Plea Bargain Announced in Katsav Case Forbes

அணு உலைகளை மூட வடகொரியா சம்மதிக்கிறது.

அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்து உள்ளது. அப்படி மூடப்பட்டதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி அதிகாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வடகொரியா ஒரு கம்ïனிஸ்டு நாடு ஆகும். அது அணு ஆயுத சோதனை நடத்தியதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை ஐ.நா.சபை விதித்தது.

அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு அந்த நாடு முன்வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அணு ஆயுதத் திட்டத்தை வடகொரியா கை விட்டால், அதற்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்தது.

பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு இருந்த போது, வடகொரியாவின் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி முதலீடு முடக்கப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதும், அந்த முதலீடு புழக்கத்துக்கு விடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுத திட்டம் கைவிடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

அணு உலைகளை மூடுவதற்கு காலவரையரை எதையும் வடகொரியா அறிவிக்கவில்லை. கடந்த வாரம் வடகொரியா சென்று வந்த அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஹில் இன்னும் 3 வாரங்களில் அணு உலைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் அந்த நாட்டுக்கு சென்று திரும்பிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிïபர்ட் பிர்கர் கூறுகையில், வடகொரிய அதிகாரிகளை நான் சந்தித்து பேசினேன். அவர்கள், அணு உலைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். அடுத்த மாதம் (ஜுலை) நாங்கள் உலைகளை மூடிவிடுவோம் என்று தெரிவித்தனர்.

அணு உலைகளை மூடுவதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அதிகாரிகளை அனுமதிக்கவும் வடகொரியா சம்மதித்து உள்ளது.

அந்த ஏஜென்சியை சேர்ந்த ஒலிஹெய்னன் தலைமையில் ஒரு குழு ஏற்கனவே வடகொரியா சென்று அடைந்து உள்ளது. கடந்த ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நடத்திய யோங்க்பியோன் நகரில் உள்ள உலைக்கூடத்துக்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அதிகாரிகள் குழு வியாழக்கிழமை செல்ல இருக்கிறது.

மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்கிரஸ்), செல்லூர் ராஜு (அ.தி.மு.க.), சிவமுத்துக்குமரன் (தே.மு.தி.க.), சசிராமன் (பாரதீய ஜனதா), சிற்றரசு (புதிய தமிழகம்) மற்றும் 23 சுயேட்சைகள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,56,182 பேர். வாக்குப்பதிவுக்காக 216 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 75.34 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 1,17,666 பேர் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இவர்களில் ஆண்கள் 58,329, பெண்கள் 59,337.

கடந்த தேர்தலில் 70 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. இந்த முறை கூடுதலாக 5 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருக்கிறது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் துணை ராணுவ பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடமான மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திலுள்ள கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு, கதவைப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு, பகலாக அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணும் அரங்கத்தில் 16 மேஜைகள் போடப்பட்டு 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அங்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடுவதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கம்பி வலை கட்டப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 1 மணிக்குள் தேர்தல் முடிவு முழுமையாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய இரயில்வே: புதிய முன்பதிவு மையங்கள்

பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய இரயில்வே புதிய திட்டம் ஒன்றை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த வசதி இல்லாத பகுதிகளில் தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.

புதிய இங்கிலாந்து பிரதமர்: மன்மோகன் வாழ்த்து

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த டோனி பிளேர் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கோர்டன் பிரவுன் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற பிரவுனுக்கு இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் பிரவுனின் பதவியேற்பால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த வாய்ப்பு இரு நாடுகளுக்கிடையே நட்புறவையும், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முத்திரைத்தாள் வழக்கில் டெல்கிக்கு 13 வருட சிறை

பலகோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளி அப்துல் கரீம் டெல்கிக்கு 13 வருட சிறைதண்டனையும் 100 கோடிரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனது குற்றங்களை டெல்கி ஒப்புக்கொண்டபிறகு நீதிபதி சித்ரா அவருக்கான தண்டனையை பல்வேறு குற்றவியல் சட்டங்களின் கீழ் அறிவித்தார்.
The Hindu News Update Service

உ.பி: மாயாவதி,சுவாமிபிரசாத் மௌர்யா சட்டமன்ற மேலவைக்கு தேர்வு

உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியும் அவரது அமைச்சரவையின் சுவாமி பிரசாத் மௌர்யாவும் மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
The Hindu News Update Service

ஜெ.மீதான வழக்கு: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு.

2001 ஆம் ஆண்டில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் 4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவு கடந்த 2002ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 2001ல் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கு தொடர்பாக தங்களது கருத்தை கேட்ட பின்னர்தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

திமுக சார்பில் ஆஜரான வக்கீல் சண்முகசுந்தரம், இது வழக்கை இழுத்தடிக்க நடக்கும் முயற்சி. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக உள்ளது என்றார்.

அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு விளக்கம் தரப் போவதில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ஈரானிலிருந்து எரிவாயு: இந்தியா, பாக் ஒப்பந்தம்

ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவர நடந்த மூன்றுநாடுகள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எரிவாயுவை பாக். வழியே கொண்டுவருவதற்கான விலையில் உடன்பாடு கண்டுள்ளன; ஈரான் கடைசிநிமிடத்தில் தன் விலைஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கேட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கொருமுறை உலக சந்தை விலைகளின்படி விலையை ஏற்றி/இறக்க ஒரு நிபந்தனையை சேர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் 25 வருட ஒப்பந்த காலம் முழுமையும் ஒரு மில்லியன் BTUவிற்கு $4.93 ஆக விலையை மாற்றாமல் வைக்க விரும்புகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளையும் தொடரும்.

மேல் விவரங்களுக்கு...The Hindu News Update Service

தமிழ்நாடு: 2500 கோடியில் டாடா தொழிற்சாலை

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன், இன்று டாடா நிறுவனம் கையெழுத்திட்டது.

தென் தமிழகத்தில் அமையவிருக்கும் மிகப் பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை இது என்பதால் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முத்துராமனும், தமிழக அரசின் தொழிற்துறை செயலாளர் சக்தி கந்ததாஸும் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், ரூ. 2,500 கோடியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்ளில் டைட்டானியம் டை ஆக்ஸைடு நிறுவனம் நிறுவப்படும்.

இதன் உற்பத்தித் திறன் 1 லட்சம் டன்னாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 1000 பேருக்கு நேரடியாகவும், 3000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதுத் தவிர 10,000 பேருக்கு விவசாயத் தொழில் துறையில் வேலை கிடைக்கும் என்றார்.

இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தைத் தர முன்வந்து நிலம் கொடுக்க விரும்புபவர்களுக்கு, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். 'கட்-ஆஃப் மார்க்' விவரம்

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு


  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான "கட்-ஆஃப் மார்க்' 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 194.50;

  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 191.75;

  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 187.25;

  5. பழங்குடி வகுப்பினர் - 179.

கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.

  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

கேரளா: கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர்.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பருவ மழை தீவிரமடைந்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது.

மழை, வெள்ளத்திற்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் டாக்டர் ஷர்மிளா மேரி தலைமையில் நடந்தது.

இதில் எம்.எல்.ஏக்கள் தாமஸ், சி.எப்.ஜார்ஜ், ஜார்ஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் பலர், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைப்பதில் தாமதம் இருப்பதாக கூறினர்

இதைக் கேட்ட எம்.எல்.ஏக்கள், தங்கள் மீது மக்களின் அதிருப்தி திரும்பி விடுமோ என பயந்து, இதற்கெல்லாம் முக்கிய காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் என்று கூறி ஆட்சித் தலைவர் மீது பழியைப் போட்டனர்.

எல்லாத் தவறுக்கும் தன் மீது எம்.எல்.ஏக்கள் பழி போட்டதையடுத்து ஆட்சித் தலைவர் மேரி அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய ஆட்சித் தலைவர், அரசுத் தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிகள் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம்தான் நிவாரண உதவிகளை உரிய நேரத்தில் வழங்க முடியவில்லை என்று விளக்கினார்.

எம்.எல்.ஏக்களின் புகாரால் மாவட்ட ஆட்சித் தலைவர் அழுதது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையை இடையூறின்றி இயங்க விடுக : இராம்தாஸ்

மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பாமக தலைவர் இராம்தாஸ் காவல்துறை அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்பட்டு குற்றங்களை அடுத்த மூன்று வருடங்களுக்குள் குறைக்கவேண்டும், தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் எனக் கூறினார். காவல்துறையின் கல்லீரல் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியதை ஒட்டி தற்போது அது(ஈரல்) முழுவதும் கெட்டுவிட்டதாகக் கூறினார். காவலர், குற்றவாளிகள், அரசியல்வாதிகள் இவர்களிடையே இருக்கும் கூட்டே சென்னை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்றும் அவர் கூறினார். திட்டமிடப்பட்டு செய்யப்படும் கொலைகளை விரைவில் புலனாய்வு செய்ய தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் மீதான குற்றங்களை விசாரித்து உடனடி தீர்ப்பு வழங்க மகாராட்டிரத்தில் உள்ளதுபோல திட்டமிட்ட குற்றங்கள் ஒழுங்குச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

The Hindu News Update Service

இந்தியாவின் மில்லியனர்கள் இலட்சத்திற்கும் மேல்

தங்கள் நிகர சொத்து ஒரு மில்லியன் டாலர்கள் (ரூ 4 கோடி) உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாகும். மெர்ரில் லின்ச் மற்றும் காப் ஜெமினியின் உலக வளமை அறிக்கையின்படி சிங்கப்பூரில் பணக்காரர்களின் வளர்ச்சி 21.2 சதமாகவும் இரண்டாவதாக இந்தியாவில் 20.5 சதமாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது.

அறிக்கை விவரங்களுக்கு..- Daily News & Analysis

பயங்கர வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகள் கைது.

பெரியகுளம் அருகே ரகசிய ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு பிடிபட்ட தீவிரவாதிகளுக்கு ஆந்திர நக்சலைட்டுகளுடன் உள்ள தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.

துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே துப்பாக்கிகளுடன் 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.முருகமலை கரடு என்று அழைக்கப்படும் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களுடன் இருந்த 7 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர் பிடிபட்ட தீவிரவாதிகள் பெயர் விவரம் வருமாறு:-
1. வேல்முருகன் (வயது 19). பெரியகுளம் வெ.புதுக்கோட்டையை சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர். 2. பழனிவேல் (26). சேலம் சின்னனூரை சேர்ந்தவர். 3. முத்துச்செல்வம் (22). திருச்சி பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பட்டய படிப்பு படித்தவர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


ஆயுத பயிற்சி

பிடிபட்ட 3 தீவிரவாதிகளிடமும் உயர் போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், துப்பாக்கி- வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சி பெறுவதற்காக அவர்கள் முருகமலை கரடு பகுதிக்கு வந்ததாக தெரிய வந்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஆந்திர தீவிரவாதிகளின் உதவியுடன் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் கரட்டு பகுதிக்கு அவர்கள் கடத்தி வந்து இருக்கிறார்கள். கொடைக்கானல் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இதேபோல் ஆயுத பயிற்சி முகாம்கள் ஏற்கனவே நடந்துள்ளன.
சிறையில் அடைப்பு தப்பி ஓடிய 7 தீவிரவாதிகளின் பெயர் ராஜா, ரமேஷ், சுரேஷ், பிரபு, பிரகாஷ், சங்கர் மற்றும் இன்னொரு சுரேஷ் என்றும், முருகமலை கரடு பகுதியில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு ராஜா தலைவராக செயல்பட்ட தகவலையும் அவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட வேல்முருகன் உள்பட 3 தீவிரவாதிகளுக்கும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள், மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 11-ந் தேதி வரை காவலில் வைக்கும்படி, மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 3 பேரும் பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்
.

இராணுவ வீரர்களை தண்டித்த கிராமம்

ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருக்கும் குனான் கிராம மக்கள் 17வயது சிறுமியை வன்புணர முயன்ற இரு இராணுவ வீரர்களைப் பிடித்து மொட்டையடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் தரப்பிலும் இராணுவ தரப்பிலும் விசாரணைகள் ஆணையிடப்பட்டுள்ளன.

கட்டந்த 17வருடமாக காஷ்மீர் பகுதியில் நடந்துவரும் பதட்ட நிலையில் முதன் முறை கிராம மக்கள் இராணுவ வீரர்களுக்கு தண்டனை தந்த விவகாரம் நடந்துள்ளது.

Two army men paraded naked in Kashmiri village DailyIndia.com
Jawans paraded naked for rape attempt Times of India
Soldiers accused of rape Independent Online
Army men paraded naked for ‘rape attempt’The Statesman, India

குடியரசுத் தலைவர் சம்பளம் இருமடங்காகிறது

குடியரசுத் தலைவரின் சம்பளம் தற்போதைய மாதம் ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக மாற்றப்படவுள்ளது. மேலும் உப குடியரசுத்தலைவரின் சம்பளம் ரூ.40,000லிருந்து ரூ.85,000 ஆகவும், ஆளுநர்களின் சம்பளம் ரூ. 36,000லிருந்து ரூ.75,000 ஆகவும் உயரவிருக்கின்றன. இதுகுறித்து நாளை முடிவெடுக்கப்படும்.

Double salary for Prez, VP in offing Times of India
Govt likely to double salary of President to Rs 1 lakh Zee News
President all set to get a pay hike CNN-IBN

தேரா சச்சா தலைவர் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது

தேரா சச்சா அமைப்பின் தலைவர் பாபா குர்மித் சிங் சீக்கிய குரு குரு கோபிந்த் சிங்கைப்போல வேடமணிந்து பத்திரிகைகளில் விளம்பரம் தந்ததால் எழுந்த சர்ச்சை திரும்பவும் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டாம்முறை குர்மித் சிங் அனுப்பிய மன்னிப்பு கடிதத்தை சீக்கிய தலமை குருக்கள் நிராகரித்துள்ளனர்.

மேலும் குர்மித் சிங்கை கைது செய்ய பஞ்சாப் அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. சட்ட ஒழுங்கை பாதிக்கும் விஷயமாதலால் கைதுக்கு அரசின் ஒப்புதல் தேவை என முன்னதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Dera back on the boil, Badal says OK to chief’s arrest Indian Express
Dera chief’s second apology “unacceptable” Hindu
SGPC looks for middle path Times of India

இரு அர்ச்சகர்கள் பணியிடைநீக்கம்

கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 22-ம் தேதி இரவு நடைபெற்றது. ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மையாருடன், காரைக்கால் அம்மையார் சிலையை வைத்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள், உற்சவம் புறப்படும் முன்னர், காரைக்கால் அம்மையார் சிலையை அப்புறப்படுத்தினர்.

இப்பிரச்னை தொடர்பாக, செயல் அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கோயில் உற்சவத்தில் காரைக்கால் அம்மையார் சிலையை அவமதிப்பு செய்த, கோயில் அர்ச்சகர்கள் கே.ஆர். ரத்தினம், பி.ஆர். மணிகண்டன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி

நாகூர் கந்தூரி விழா: திரளானோர் பங்கேற்பு

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகூர் தர்காவின் 450-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகையிலிருந்து நாகூருக்கு சந்தனக்கூடு ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

'தாபூத்து' எனப்படும் சந்தனக்கூட்டில் சந்தனக்குடம் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை சந்தனக்குடம் தர்காவினுள் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து தர்கா பரம்பரை கலீபா கே.முஹம்மது கலீபா, புனித ரவுலா ஷரீப் மீது சந்தனம் பூசினார். இதைத் தொடர்ந்து 'சாதரா' எனப்படும் மல்லிகைப் பூச்சரங்களால் ஆன பட்டுத் துணியைப் போர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நாகை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி

இந்திய அணியில் மேலும் ஒரு புதிய வீரர்

இந்திய வீரர்கள் பலர் உடல்நலம் குன்றியுள்ளதால் அவர்களுக்கு பதிலாக அணியில் விளையாடுவதற்காக மேலும் ஒரு புதிய வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்து லீக் போட்டிகளில் விளையாடிவரும் அர்ஜுன் யாதவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவ்லால் யாதவின் மகன் இவர்.

கடந்த ரஞ்சிப் போட்டியின்போது ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவர் அர்ஜுன் யாதவ். இதுவரை 47 ஒருதினப் போட்டிகளில் 829 ரன்களை அடித்துள்ளார். மேலும் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தில்லியைச் சேர்ந்த இஷாந்த் சர்மா, மேற்கு வங்கத்தின் ரணதேவ் போஸ், ராகேஷ் பட்டேல் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி

Wednesday, June 27, 2007

அப்துல்கலாம்: ராஷ்ட்ரபதி பவனிலிருந்து பாரதியார் பல்கலைகழகத்துக்கு!

"கோவை பாரதியார் பல்கலைகழகத்தியல் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப மையத்தில் பணியாற்ற, ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்பப்படும்,'' என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. இரண்டாவது முறையாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அப்துல் கலாம் மறுத்துள்ளதால், பெரிய பல்கலைக்கழகங்களில் பணியாற்ற, அவருக்கு அழைப்புகள் குவிந்து வருகிறது. கோவை, பாரதியார் பல்கலைகழகமும் அப்துல் கலாமை பணியாற்ற அழைக்கிறது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:பல்கலைகழகத்தின் வெள்ளிவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அப்துல் கலாம், "நானோ' தொழில்நுட்ப மையம் அமைக்க உதவ, முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று, முதல்வரும், "நானோ' தொழில்நுட்ப மையத்தின் ஆரம்ப கட்ட பணிகளுக்காக, ரூ.ஒரு கோடி ஒதுக்கினார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ரூ.18.8 கோடியை வழங்கியுள்ளது. இதில், 4.9 கோடியில், "சென்டர் பார் லைப் சைன்ஸ்' கட்டடமும், ரூ.14 கோடியில் நவீன கருவிகளும் அமைக்கப்படுகிறது.

இம்மையத்தின் திறப்பு விழா, ஆகஸ்ட்டில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படும். ரூ.500 கோடி திட்டத்தின் முதல் கட்டத்தில், "நானோ' தொழில்நுட்ப வசதி மையத்தின் முதல் கட்ட பணிகள், ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

பாரதியார் பல்கலைகழகத்தில் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப வசதி மையத்தில், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின் விஞ்ஞானியாக பணியாற்ற, அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படி அழைப்பு, விரைவில் அனுப்பப்படும். முழு நேரம் இங்கு பணியாற்றாவிட்டாலும், "விசிட்டிங் சயின்டிஸ்ட்'ஆக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

இந்தோனேசியா: இன்று நிலநடுக்கம் 6 ரிக்டேர் அளவு.

சுனாமி பீதியில் பொதுமக்கள் ஓட்டம்

இந்தோனேஷியாவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்தது. இந்த பேரழிவுக்கு பிறகு அவ்வப்போது இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் தெற்கு கடலோரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவாக பதிவானது. கடற்கரையில் இருந்து 358 கி.மீ. தென்மேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனாலும் மீண்டும் சுனாமி பேரலைகள் உருவாகும் என்ற பீதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு மேடான பகுதிகளை நோக்கி ஓடினார்கள். ஒருசில வீடுகள் இடிந்து விழுந்தன.

ஆனாலும் உயிர் சேதம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதே போல பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மத்திய சான்டோஸ் நகரில் இருந்து தென்மேற்கே 80 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நில நடுக்கத்தால் மணிலா உள்பட பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. சான்தோஸ் நகரில் அடுக்கு மாடி ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்: நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள்.

சென்னை விமான நிலையத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் புதிய முறையில் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஒப்புதலுக்காக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு முறைப்படி சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதி, விமான நிலைய சுற்றுப்புற வேலி, பயணிகள் வந்து போகும் பகுதி, விமான நிலைய ஊழியர்கள் இருக்கும் பகுதி, விமான பொருட்கள் வைக்கப்படும் பகுதி, வந்து போகும் வாகனங்களை கண் காணிக்கும் பகுதி என 6 விதமாக பிரிக்கப்படும்.


இந்த பகுதிகள் நவீன தொழில் நுட்பத்துடன் கணிப்பொறி மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக விமான நிலையத்தின் முக்கிய 60 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதன் மூலம் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடமாடும் மனிதர்கள், மிருகங்கள், சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும். தேவையானவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

விமான நிலைய ஊழியர்களுக்கு வானொலி அலை தொழில்நுட்பம் கொண்ட அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான ஊழியர்கள் தவிர யாரும் விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முடியாது.

இது போல பயணிகள், வாகனங்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்துவதற்கான நவீன கருவிகளும் பொருத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான அனைத்து நவீன தொழில்நுட்ப கருவிகளையும் அமைக்க ரூ. 100 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இந்த நவீன முறை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்போது ஒரே இடத்தில் இருந்து விமான நிலையம் முழுவதுக்கும் நவீன முறையில் துல்லியமான பாதுகாப்பு அளிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

மேற்கு வங்கம்: வரன் தேடும் பெண் எம்.எல்.ஏ

மேற்கு வங்காள மாநிலம் குமார்கஞ்ச் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவர் மபூசாகாதுன். இந்த பெண் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். 2 தடவை எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் இவருக்கு இப்போது 33 வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதுவரை திருமணத்தை பற்றி நினைக்காத மபூசா இப்போது திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். அதுவும் அவர் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணத்துக்கு சம்மதித்து இருக்கிறார்.

இவரது சகோதரர் சமீபத்தில் இறந்து விட்டார். சகோதரரின் ஆதரவால் வளர்ந்த மபூசா மிகவும் மனம் சோர்ந்து போய் விட்டார். அவருக்கு ஒரு துணை தேவை என்பதை உணர்ந்த உவினர்கள் அவரை திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்துள்ளனர்.

மாப்பிள்ளை மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டும். 40 வயசுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டாக்டர், அல்லது போலீஸ் அதிகாரி அல்லது பேராசிரியராக இருக்கலாம். ஏற்கனவே திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் இன்னும் வரன் அமையவில்லை.

இதுபற்றி மபூசாவின் உறவினர்கள் கூறும் போது, நல்ல வரனாக கிடைத்தால் அரசியலுக்கு முழுக்கு போடவும் மபூசா தயார். முழு நேர குடும்பத் தலைவியாக அவர் வாழ்க்கையை தொடங்குவார் என்று தெரிவித்தனர்..

உலகின் நீளமான கடற்பாலம்.

உலகிலேயே மிக நீளமான கடல் பாலம் சீனாவில் கட்டப் பட்டுள்ளது. இந்த பாலம் முறைப்படி இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் நீளம் 36 கி.மீ. ஆகும். தொழில் நகரங்களான ஷாங்காய் நகரையும் நிங்க்போ நகரையும் இந்த பாலம் இணைக்கிறது.

முன்பு இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 400 கிலோ மீட்டராக இருந்தது. இந்த பாலத்தின் வழியாக செல்லும் போது 80 கி.மீ. பயணம் செய்தாலே போதும் ரூ.8 ஆயிரத்து 400 கோடியில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது

செய்தி ஆதாரம்: மாலைமலர்

"படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது."

கடலூர் புனித வளனார் கல்லூரி பயிற்சி அரங்கில் நடந்த விழாவுக்கு அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அரசு வக்கீல் சார்லஸ் ராஜ் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை மத்திய மந்திரி வேங்கடபதி தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் நல்ல சிந்தனையாளர். மனித உரிமைகளை மதிப்பதில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

இந்த 21-ம் நூற்றாண்டில் மனிதத் தன்மை குறைந்து விட்டது. நாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் பண்பாடு இல்லை. பண்பாடு இல்லாததால் தான் மனித உரிமை மீறல் ஏற்படுகிறது.

பல வங்கிகள் மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி கடன் கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். இதுவும் மனித உரிமை மீறல்தான். படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது. அதனால் தான் இன்று சைபர் கிரைம் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். இளைஞர்கள் கல்வி கற்பது குறைந்து போனால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். இன்று பெண்கள் கல்வியில் உயர்ந்து நிற்கிறார்கள்.ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு கடந்த கால வரலாறு சான்றாக உள்ளது. பெண் உரிமை, குழந்தைகள் உரிமை, மக்கள் உரிமை, தொழிலாளர்கள் உரிமைகள் குறித்து இப்போது தான் நம் நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அன்போடு வாழ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னையில் மீண்டும் ரவுடி வேட்டை: 100 பேர் கைது

சென்னை நகரில் கடத்தல், வழிப்பறி, கலாட்டா, திருட்டு ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகள், பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை நகர் முழுவதும் போலீசார் ரவுடிகளை தேடி அதிரடி வேட்டையில் இறங்கினர். தொடர்ந்து ரவுடிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 1000க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து வாரண்டு பிறப்பிக்கப்பட்டு பிடிபடாமல் இருக்கும் தலைமறைவு குற்றவாளிகளின் பட்டியலை அந்தந்த பகுதி போலீசார் தயாரித்து அவர்களை தேடி கண்டு பிடிக்குமாறு கமிஷனர் லத்திகாசரண் மீண்டும் உத்தரவிட்டார்.

இதையடுத்து தலை மறைவு குற்றவாளிகள் கணக்கெடுக்கும் பணி இணை கமிஷனர்கள் ரவி (வடசென்னை), துரைராஜ் (தென்சென்னை), பாலசுப்பிரமணியம் (மத்திய சென்னை) ஆகியோர் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் நடந்தது.

வடசென்னையில் 27 பேரும், மத்திய சென்னையில் 51 பேரும், தென்சென்னையில் 24 பேரும் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளான இவர்கள் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள், கைதாணை பிறப்பித்தும் பிடிபடாமல் இருந்து வந்தனர். தொடர்ந்து ரவுடிகள் வேட்டை நடக்கிறது

'ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும்'

பிரதிபா பாட்டீலும், ஷெகாவத் இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருப்பதால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை இரு ஷெகாவத்துக்களுக்கு இடையேயான மோதலாக எடுத்துக் கொள்ளலாமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பைரோன் சிங் ஷெகாவத் பதிலளித்தார்.

'பிரதிபா, ஒரு ஷெகாவத் அல்ல' என்று கூறியுள்ள பைரோன் சிங் ஷெகாவத், 'அவருக்கு எதிராக நான் இதுவரை எதுவும் கூறவில்லை; இனிமேலும் கூறப்போவதில்லை. யாராவது அவரைப் பற்றி குறை கூறினாலும் அதை நான் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. நான் இவ்வாறு நடந்த கொள்வதற்கு அவர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர் என்பது காரணமல்ல; அவர் பெண் என்பதே காரணம்' என்றார்.

எனினும், இத் தேர்தலை ஷெகாவத்துகளுக்கு இடையேயான போட்டியாக வர்ணித்த காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த ஷெகாவத், 'இது ஷெகாவத் சமூகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது. ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும் என்பதற்கு இதுவே சான்று' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஷெகாவத் சமூகத்தைச் சேர்ந்த தேவி சிங் ஷெகாவத்தை பிரதீபா திருமணம் செய்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இத் தேர்தல் இரண்டு ஷெகாவத்துகளுக்கு இடையேயான போட்டியாக இருக்கப் போகிறது என பிரதிபா அறிவித்தார்.

தினமணி

நடிகை விஜயசாந்தி மீது வருமான வரித்துறை வழக்கு

தெலுங்கிலும், தமிழிலும் பிரபலமாக இருந்த நடிகை விஜயசாந்தி. நடிப்பு வாய்ப்பு மங்கத் தொடங்கியபோது தலி தெலுங்கானா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயசாந்தி.

2002-03, 2003-04ம் ஆண்டுகளுக்குரிய வருமான வரிக் கணக்கை விஜயசாந்தி தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விஜயசாந்தி மீது வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி விஜயசாந்தி நேரில் ஆஜராகவில்லை.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிரேம்குமார் முன்பு ஆஜரான விஜயசாந்தியின் வக்கீல் விஜயசாந்தியால் நேரில் வர முடியவில்லை என்று சில காரணங்களைக் கூறினார்.

விஜயசாந்தி. இப்போது தனி தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி கண்டிப்பாக விஜயசாந்தி ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.

ஸ்ரீலங்கா: 20 கிலோ வெடிகுண்டு - 300 பேர் கைது.

20 கிலோ வெடிகுண்டு ஒன்று எண்ணெய் கிடங்கு அருகே காணப்பட்டதையடுத்து இலங்கை காவல்துறை சுமார் 300 பேரை விசாரணைக்காக கையகப்படுத்தியது.

அவர்களில் 100 பேர் மேல் விசாரணைக்காக கொண்டுச்செல்லப்பட்டனர்

இந்தச் செய்திக்கு...பி/டி/ஐ

இந்தியன் விமானத்தில் மயங்கி விழுந்த பயணிகள்

இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரிப்பேர் வேலைகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து 44 பயணிகளுடன் அந்த விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போது விமானத்தின் உள்ளே கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து விமான சிப்பந்திகள் ஆக்ஸிஜன் மாஸ்குகளை பயணிகளுக்குப் பொறுத்தினர். இது தாற்காலிகமான பிரச்சனை தான், விமானம் பறக்க ஆரம்பித்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிய விமானி விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.

ஆனால், பறக்க ஆரம்பித்த பிறகும் நிலைமை சீரடையவில்லை. பயணிகள் நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து விமானம் திரும்ப தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

ஆனால், அதற்குள் பல பயணிகளின் நிலைமை மோசமாகிவிட்டது. பலரால் நடக்கக் கூட முடியவில்லை. இதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுக்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தன.

22 வயது பெண்ணும், 12 வயது சிறுவனும் மயக்கமடைந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

நீண்ட நேரத்துக்குப் பின் விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு 42 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் கிளம்பிச் சென்றது.

விமானத்திற்குள் காற்று அழுத்தத்தை சீராக வைக்கும் கருவியில் கோளாறு ஏற்பட்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது

ஜெ மீது விரைவில் நடவடிக்கை: தேர்தல் ஆணையர்

கடந்த 2001ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டு மற்ற 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா.

இதை எதிர்த்து திமுக எம்பி குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளிடம் பொய்யான உறுதிமொழிகளை ஜெயலலிதா கொடுத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதராங்கள் உள்ளதாக கூறியது.

6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா 3வதாக புவனகிரியிலும், 4வதாக புதுக்கோட்டையிலும் போட்டியிட்டது தவறு. அந்த தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் அந்த தொகுதி மாஜிஸ்திரேட்டிடம் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இதுவரை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில்,

ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு இன்னும் எனக்கு வரவில்லை. அந்த உத்தரவு கடிதம் மூலம் வரலாம் என கருதுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் கடிதம் கிடைத்ததும், அதில் கூறியுள்ளபடி செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.

போதிமரம் வெட்டப்பட்டதா? - ஆய்வு

புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளை கடந்த ஆண்டில் வெட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இது குறித்த துறைசார் வல்லுநர் ஆய்வொன்றிற்கு பிகார் அரசு ஆணையிட்டுள்ளது.

Experts to conduct test on Mahabodhi tree - Zeenews
Experts to conduct test on Mahabodhi tree Times of India
FIR filed against ‘damage’ to Bodhi tree Hindu

எச் ஐ வி பாதித்த குழந்தைகளுக்கு பள்ளியில் தடை

கேரளாவில் பாம்படை என்னும் இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் எச் ஐ வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் அவரகளோடு பள்ளி வரும் இரு குழந்தைகளும் படிக்கத் தடை வந்துள்ளது. ஆசா கிரண் எனும் சமூக சேவை நிறுவனத்தின் கவனிப்பில் இருந்து வரும் மூன்று குழந்தைகளுக்கு 2006 டிசம்பரில் எச் ஐ வி வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இம்மூவரையும் ஆசா கிரணிலிருந்து பள்ளி வரும் மற்றும் இரு குழந்தைகளையும் பள்ளியிலிருந்து நிர்வாகம் விலக்கியது. பின்னர் அரசாணைக்குப்பின் மீண்டும் இவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது இவர்களை பள்ளியில் சேர்த்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என பிற குழந்தைகளின் பெற்றோர்கள் போராடி வருகிற நிலையில் இந்த ஐந்து குழந்தைகளின் நிலமையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

கூகிள் செய்திகள்

NGO won't send HIV+ kids to schoolCNN-IBN, India
HIV positive children face boycott in school Frontline, India
HIV kids face boycott in Kerala schoolThe Tribune, India

வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கு சாஸ்திரி விருது

2006க்கான லால்பகதூர் சாஸ்திரி விருது பிரபல வேளாண்துறை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது வணிகம், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் சிறப்பு எய்தியவர்களுக்கு வழங்கப் படுகிறது. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய் சன்மானமும் புகழுரையும் ஒரு நினைவுத்தட்டும் கொண்டது.

The Hindu News Update Service

முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை

முன்னாள் மும்பை போலிஸ் கமிஷனர் ஆர் எஸ் சர்மா, மும்பை குற்றவியல் டிசிபி பிரதீப் சாவந்த், ஆய்வாளர் வசிஷ்ட் அந்தாலே ஆகிய மூன்றுபேரையும் பலகோடி ஊழல் செய்த முத்திரைத்தாள் வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்தது.
The Hindu News Update Service

இங்கிலாந்து பிரதமர்: டோனியின் கடைசி நாள்

இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேள்விநேரத்திற்குப் பிறகு 10, டௌனிங் தெரு வீட்டில் தன் கடைசி மதிய உணவை முடித்துக்கொண்டு விடை பெறுகிறார் டோனி ப்ளயர். பத்தாண்டுகாலம் ஆட்சி புரிந்தபிறகு தனது கட்சியின் கார்டன் ப்ரௌனுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு பதவி விலகுகிறார். பத்தாண்டுகளாக நிதியமைச்சராக பணிபுரிந்த ப்ரௌன் தனது நீண்ட நாளைய கனவை நனவாக காணும் நாளிது. அவர் ஈராக் பிரச்சினையை எவ்வாறு கையாளப்போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ப்ரௌன் பிரதமரானபோது தனது இல்லத்தை மாற்ற வேண்டியதில்லை, ஏனெனில் நிதியமைச்சராகவே அவர் பிரதமரின் வீட்டில் தான் வசித்துவந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட 11,டௌனிங் தெரு இல்லம் பெரிதான டோனி பிளயர் குடும்பத்திற்கு சரியாக இருந்ததால் இருவரும் swap செய்துகொண்டிருந்தனர்.
The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...