.

Wednesday, June 27, 2007

இந்தோனேசியா: இன்று நிலநடுக்கம் 6 ரிக்டேர் அளவு.

சுனாமி பீதியில் பொதுமக்கள் ஓட்டம்

இந்தோனேஷியாவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்தது. இந்த பேரழிவுக்கு பிறகு அவ்வப்போது இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் தெற்கு கடலோரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவாக பதிவானது. கடற்கரையில் இருந்து 358 கி.மீ. தென்மேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனாலும் மீண்டும் சுனாமி பேரலைகள் உருவாகும் என்ற பீதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு மேடான பகுதிகளை நோக்கி ஓடினார்கள். ஒருசில வீடுகள் இடிந்து விழுந்தன.

ஆனாலும் உயிர் சேதம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதே போல பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மத்திய சான்டோஸ் நகரில் இருந்து தென்மேற்கே 80 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நில நடுக்கத்தால் மணிலா உள்பட பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. சான்தோஸ் நகரில் அடுக்கு மாடி ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...