.

Wednesday, June 27, 2007

"படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது."

கடலூர் புனித வளனார் கல்லூரி பயிற்சி அரங்கில் நடந்த விழாவுக்கு அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அரசு வக்கீல் சார்லஸ் ராஜ் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை மத்திய மந்திரி வேங்கடபதி தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் நல்ல சிந்தனையாளர். மனித உரிமைகளை மதிப்பதில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

இந்த 21-ம் நூற்றாண்டில் மனிதத் தன்மை குறைந்து விட்டது. நாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் பண்பாடு இல்லை. பண்பாடு இல்லாததால் தான் மனித உரிமை மீறல் ஏற்படுகிறது.

பல வங்கிகள் மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி கடன் கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். இதுவும் மனித உரிமை மீறல்தான். படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது. அதனால் தான் இன்று சைபர் கிரைம் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். இளைஞர்கள் கல்வி கற்பது குறைந்து போனால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். இன்று பெண்கள் கல்வியில் உயர்ந்து நிற்கிறார்கள்.ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு கடந்த கால வரலாறு சான்றாக உள்ளது. பெண் உரிமை, குழந்தைகள் உரிமை, மக்கள் உரிமை, தொழிலாளர்கள் உரிமைகள் குறித்து இப்போது தான் நம் நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அன்போடு வாழ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...