.

Wednesday, June 27, 2007

ஜெ மீது விரைவில் நடவடிக்கை: தேர்தல் ஆணையர்

கடந்த 2001ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டு மற்ற 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா.

இதை எதிர்த்து திமுக எம்பி குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளிடம் பொய்யான உறுதிமொழிகளை ஜெயலலிதா கொடுத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதராங்கள் உள்ளதாக கூறியது.

6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா 3வதாக புவனகிரியிலும், 4வதாக புதுக்கோட்டையிலும் போட்டியிட்டது தவறு. அந்த தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் அந்த தொகுதி மாஜிஸ்திரேட்டிடம் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இதுவரை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில்,

ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு இன்னும் எனக்கு வரவில்லை. அந்த உத்தரவு கடிதம் மூலம் வரலாம் என கருதுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் கடிதம் கிடைத்ததும், அதில் கூறியுள்ளபடி செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...