.

Wednesday, June 27, 2007

அப்துல்கலாம்: ராஷ்ட்ரபதி பவனிலிருந்து பாரதியார் பல்கலைகழகத்துக்கு!

"கோவை பாரதியார் பல்கலைகழகத்தியல் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப மையத்தில் பணியாற்ற, ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்பப்படும்,'' என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. இரண்டாவது முறையாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அப்துல் கலாம் மறுத்துள்ளதால், பெரிய பல்கலைக்கழகங்களில் பணியாற்ற, அவருக்கு அழைப்புகள் குவிந்து வருகிறது. கோவை, பாரதியார் பல்கலைகழகமும் அப்துல் கலாமை பணியாற்ற அழைக்கிறது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:பல்கலைகழகத்தின் வெள்ளிவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அப்துல் கலாம், "நானோ' தொழில்நுட்ப மையம் அமைக்க உதவ, முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று, முதல்வரும், "நானோ' தொழில்நுட்ப மையத்தின் ஆரம்ப கட்ட பணிகளுக்காக, ரூ.ஒரு கோடி ஒதுக்கினார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ரூ.18.8 கோடியை வழங்கியுள்ளது. இதில், 4.9 கோடியில், "சென்டர் பார் லைப் சைன்ஸ்' கட்டடமும், ரூ.14 கோடியில் நவீன கருவிகளும் அமைக்கப்படுகிறது.

இம்மையத்தின் திறப்பு விழா, ஆகஸ்ட்டில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படும். ரூ.500 கோடி திட்டத்தின் முதல் கட்டத்தில், "நானோ' தொழில்நுட்ப வசதி மையத்தின் முதல் கட்ட பணிகள், ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

பாரதியார் பல்கலைகழகத்தில் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப வசதி மையத்தில், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின் விஞ்ஞானியாக பணியாற்ற, அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படி அழைப்பு, விரைவில் அனுப்பப்படும். முழு நேரம் இங்கு பணியாற்றாவிட்டாலும், "விசிட்டிங் சயின்டிஸ்ட்'ஆக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...