.

Thursday, April 19, 2007

ஈராக் குண்டுவெடிப்பு பலி 172 ஆக உயர்வு.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது.ஈராக்கின் மத்திய மற்றும் புறநகரில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியா பிரிவினர் அதிகமிருக்கும் சத்ரியா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 90 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுபோன்ற பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை குண்டுவெடிப்பு : தண்டனை இன்று அறிவிப்பு?

1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 100 குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் பல கட்டங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த பயங்கர தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் டைகர் மேமன் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இவர்களது குற்றங்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் 100 பேரும் மும்பை தடா கோர்ட்டில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.இதையடுத்து, குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் அறிவிக்கப்படலாம் என நீதிமன்றத்தில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோகநாதன் குடும்பத்தினர் அமெரிக்கா கிளம்பினர்: வாஷிங்டன்- விர்ஜினீயா செல்ல சிறப்பு விமானம்.

தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது பெற்றோர் உள்பட 9 பேர் நேற்று நள்ளிரவு அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றனர். லோகநாதனின் உடல், அவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது விருப்பப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது

லோகநாதனின் தாயார் சக்கர நாற்கலியில் அமர்ந்தபடி செல்கிறார்கள்.
இதில் கலந்து கொள்வதற்காக லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அமெரிக்கா செல்ல முடிவு செய்யப்பட்டது. அவர்களில் லோகநாதனின் பெற்றோர் வாசுதேவன், கண்ணம்மாள், சகோதரர் செங்கோட்டுவேலவன், அண்ணி செந்தமிழ்ச் செல்வி, இன்னொரு சகோதரர் பழனிவேல், அண்ணி நிர்மலா ஆகியோருக்கு மட்டும் பாஸ்போர்ட் இல்லை. இதையடுத்து இவர்கள் நான்கு பேருக்கும் முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதேபோல 9 பேருக்கும் அமெரிக்க தூதரகம் உடனடியாக விசாவும் வழங்கியது.

-o❢o-

b r e a k i n g   n e w s...