.

Monday, April 30, 2007

எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்: விஜயகாந்த்

ஒசூர், ஏப். 30: எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்:

என்னுடைய திருமண மண்டபத்தை இடித்தார்கள். எனக்குப் பல வழிகளில் பொருளாதாரரீதியாக தொந்தரவு கொடுத்துப் பார்த்தார்கள். இப்படி எல்லாம் தொந்தரவு கொடுத்தால் இவன் கூட்டணியில் சேர மாட்டானா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், எனக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்.

மலை ஏறுவது கடினம்தான்; ஏறிய பிறகுதான் தெரியும் மலை நமது காலுக்கடியில் இருப்பது.

நான் பிழைப்பிற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கின்றேன்.

சிலர் என்னை சீண்டி பார்க்கிறார்கள். இளைஞர்களை தூண்டிவிட்டால் தமிழ்நாடே பற்றி எரியும். ஆனால் இளைஞர்களை நல்வழியில் நடத்த வேண்டியது நம் கடமை. விஜயகாந்த்தை அழிக்கவும், அடிக்கவும், நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது.

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 8.33 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி தற்பொழுது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

படித்த இளைஞர்களுக்கும், படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

எந்த அரசியல் தலைவரும் தனி மனித வருமானத்தைத் தெரிவிப்பதில்லை. மத்திய நிதி அமைச்சரை கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் நமக்குக் கிடைக்கவில்லை.

Dinamani

நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினர் ஆளுங்கட்சியினர் இடையே தொடரும் வன்முறை தாக்குதல்

நந்திகிராமம், ஏப். 30: மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வன்முறைத் தாக்குதல் நடந்தது. ஹெஜுரியில் இருந்து திரண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200 பேர் நந்திகிராமத்தில் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை நில பாதுகாப்பு அமைப்பினர் எதிர்த்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் கையெறி குண்டுகளை மாறி மாறி வீசினர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் பலியானார். இருவர் காயம் அடைந்தனர். நந்திகிராமத்தைச் சுற்றியுள்ள பங்கபெரா, சதிங்கபரி, ஆதிகரிபரா மற்றும் சிமல்குந்து பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Dinamani

கலாமுக்கு மீண்டும் பதவி: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்காது என்று தெரிகிறது.

அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி யாரை ஆதரிக்கும்; மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அப்பதவிக்கு போட்டியிடுவாரா? என்று பிரகாஷ் காரத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "கடந்த முறை குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணனை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று கேட்டபோது, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. யாரையும் இரண்டாவது முறையாக அப்பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று அக்கட்சியினர் வாதிட்டனர். இப்போது அவர்கள் எந்த வகையில் அதே கருத்தை அணுகப்போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது' என்றார்.

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவடைந்ததும் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து கட்சி விவாதித்து முடிவு எடுக்கும் என்றார் காரத்.

அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ஆதரித்தால் மீண்டும் குடியரசுத் தலைவராக கலாம் சம்மதம்?

எலியின் மூளை செயல்பாடு கணினியின் மூலம் உருவகமானது

எலியின் மூளையை கணினியில் உருவகப்படுத்துவதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அரைக்கிணறு தாண்டிவிட்டார்கள். எலி யோசிப்பது மாதிரியே கணினியையும் தன்னுடைய உருவகங்களில் சிந்திக்க வைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

புத்தி எவ்வாறு செயல்படும் என்பது மிகவும் சிக்கலான விஷயம். எட்டு மில்லியன் நியுரான் இணைப்புகளை 4,096 கணிச்செயலர்களை (processors) உள்ளடக்கிய சூப்பர்கம்ப்யூட்டர் மூலம் ஜேம்ஸ் ஃப்ரை (James Frye), ராஜகோபால் அனந்தநாராயணன், தர்மேந்திரா எஸ் மோதா ஆகியோர் இதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

BBC NEWS | Technology | Mouse brain simulated on computer

சற்றுமுன் - சாலை உருகியது !

அமெரிக்கா வளைகுட பகுதியில் இருக்கும் பாலம் உருகியது. பெட்ரோல் எடுத்து சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய வாகனம்(லாரி)வெடித்து தீ பிடித்து எரிந்தததால் சான்fரான்சிச்கோ - ஓக்லாண்ட் பகுதியையும் மற்ற சாலைகளையும் இணைக்கும் இந்த பாலம் சேதம் அடைந்ததது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உண்டாகியிருக்கிறது.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/18392684/

'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காவல்துறைக்கு மூன்று கோடி ரூபாய் செலவு

ஷில்பா ஷெட்டியினால் இந்தியாவிலும் கவனிக்கப்பட்ட 'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியினால் காவல்துறைக்கு ஏற்படும் செலவுகளின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் £350,000 செலவாகியுள்ளது.

BBC NEWS | UK | England | Beds/Bucks/Herts | Big Brother police costs revealed

ச:போதையில் மாப்பிள்ளை, தம்பிக்குத் திருமணம்

பிகாரில் திருமணத்தன்று குடித்துவிட்டு அதிக போதையில் பெண்வீட்டாரோடு சண்டைபோட்ட மாப்பிள்ளையை ஊரார் விரட்டிவிட்டு அவரின் தம்பிக்கு மணமகளை திருமணம் செய்துவைத்தனர்.

Bihar groom too drunk to wed, so brother steps in
"The groom was drunk and had reportedly misbehaved with guests when the bride's family and local villagers chased him away," Madho Singh, a senior police officer told Reuters after Sunday's marriage in a village in Bihar's Arwal district.

The younger brother readily agreed to take the groom's place beside the teenage bride at her family's invitation, witnesses said.

"The groom apologised for his behaviour, but has been crying that word will spread and he will never get a bride again," Singh said by phone.

ச: புலிகளும் அரசும் தமது தாக்குதல்களைப் "பதிலடி" என்கிறார்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகிலுள்ள எரிபொருட்கள் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக தமது வான் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசின் விமானப்படை கூறியுள்ளது.

ஆனால் இலங்கையின் வடக்கில் உள்ள தமது பிரதேசத்தில் விசுவமடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அரச விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே தமது வான்படையினர், கொழும்பில் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளார்.

29 ஏப்ரல் அதிகாலை சுமார் 1.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு இலகுரக விமானங்கள் தலைநகர் கொழும்பிலுள்ள கொலன்னாவ மற்றும் புறநகர்பகுதியான முத்துராஜவெல போன்ற இடங்களிலுள்ள எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றன.

கொழும்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தை திறந்தவெளி திரைகளில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் இந்த வான் தாக்குதலை நடத்தினர். விமான எதிர்ப்பு எறிகணைகள் சுடப்பட்டத்தின் வானத்தில் செந்நிற நெருப்பு கீற்றுகள் காணப்பட்டன.

இந்தத்தாக்குதலினால் எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் எவற்றிற்கும் எவ்வித தாக்குதலும் இல்லை என்று பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா புலிகளின் விமானங்களைத் தாக்கியழிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

புலிகளின் தாக்குதலை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு கிழக்கே உள்ள விசுவமடு பகுதியில் அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்கு ஒன்றின் மீது அரச விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதைப் பகுதியில் இன்று காலை 5.35 மணியளவில் மீண்டும் ஒரு விமானக் குண்டுத் தாக்குதலை விமானப்படையினர் நடத்தியிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

கடந்த மாதம் தான் விடுதலைப் புலிகள் முதல் முறையாக தமது இலகுரக விமானம் மூலம் இலங்கை அரசின் நிலைகள் மீது வான் தாக்குதலை நடத்தினர்.


இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி

இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ்.

செவ்வி:

அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வேளையில் அதற்கான புலிகளின் பதில் தான் இது என்று படுகிறது.

புலிகளின் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் சிறிதா பெரிதா என்பதை விட, புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருகின்றன என்ற செய்தி தான் முக்கியமாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் சென்று சேரப் போகிறது.

அரசும் புலிகளும் ஒரே மொழி
வான் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பேசும் அதே மொழியை அதே நியாயத்தைத் தான் புலிகளும் பேசுகிறார்கள். ஏனென்றாhல் சில குண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்த போதிலும் அது ராணுவ ரீதியிலான தமது பதில் தாக்குதல் என்று அரசாங்கம் கூறிவருகிறது. அதை எவரும் பெரிதாக கண்டிக்க முன்வரவில்லை. புலிகளும் தங்களுடைய இந்த மூன்றாவது தாக்குதல் ராணுவ ரீதியிலானது என்கிறார்கள். எனவே புலிகளின் இந்த வான் தாக்குதல்களை கண்டிக்கக் கூடிய தார்மீக நிலையில் எவரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அரசின் போக்கில் மாற்றம் வராது
சர்வதேச நாடுகள் கேட்பது போல இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்தி, ஒரு உண்மையான யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் புலிகளின் விசுவமடுப் பகுதியில் அரசு வான் தாக்குதல் நடத்தியதை வைத்துப் பார்த்தால் அடிக்கு அடி, பல்லுக்கு பல்லு என்று தான் அரசு நிற்கிறது என்று படுகிறது. இருப்பினும் -

ஊடகங்களிலும் அரசாங்கப் பேச்சாளர் மூலமாகவும் பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் அவற்றை உற்று நோக்கும் போது தெரிவது என்னவென்றால் புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன என்றோ, எத்தகைய விமானங்கள் உள்ளன என்றோ, அல்லது அவை எங்கே வைக்கப்பட்டிருக்கினறன என்றோ அரசாங்கத்துக்கோ எவருக்குமோ எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. ஆனால் -

அரசு அல்லாத ஓர் அமைப்பிடம் இத்தகைய வான் படை வலு இருப்பதை எந்த நாடும் விரும்பாது, குறிப்பாக மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இத்தகைய நிலையை விரும்ப மாட்டா.

செய்தி: பிபிசி - தமிழ்

ச:இன்பத்தமிழன் சரணடைந்தார்

முன்னாள் அ.தி.மு.க மந்திரி இன்பத் தமிழன் இன்று மதுரை கீழ் கோர்ட்டில் சரணடைந்தார். முனிசிபல் சேர்மேனின் கணவரைக்கொன்ற வழக்கில் அவர் தேடப்பட்டார்.

Ex-AIADMK Minister surrenders in court

நந்திகிராம் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நந்திகிராம் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மக்களவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தன.

மேலதிக விபரங்களுக்கு...

http://content.msn.co.in/Tamil/News/National/0704-30-11.htm

"மே தினம்" தலைவர்கள் வாழ்த்து.

மே தினம்' என்றழைக்கப்படும் தொழிலாளர் தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களுக்கு தடையின்றி தாராளமாக போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி, திமுக அரசு தொழிலாளர் நலம் பெற தொடர்ந்து பாடுபட்டு வருவதை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில், உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் பயன் ஒரு சிலருக்கு மட்டுமே உடைமையாக்கப்பட்டபோது, அடங்கி ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்து எழுந்து தங்கள் உரிமையை பெற்ற நாள் என்று மே தினத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மே தின நன்னாளில் அனைவருக்கும் வேலை கிடைக்கவும், கண்ணியமான வாழ்வு அமையவும் புதியதோர் சமுதாயம் அமைவதற்கு சூளுரை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விசாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் ஊழல் குற்றச்சாட்டில்்டில் கைது

விசாகப் பட்டிணத்தின் காவல் கண்காணிப்பாளர் ஜே ஜி முரளி ஞாயிறன்று ஊழல் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ1.5 இலட்சம் பணம், 22 தோலா தங்கம், மற்றும் 64 இலட்சம் பெறுமான சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.

மேலும்..NDTV.com

Sunday, April 29, 2007

உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது ?

வெளிச்சமின்மை காரணமாக D/L படி ஆஸ்திரேலியா உலக கோப்பையை கைப்பற்றியது.

The light's been offered and Sri Lanka have taken it - meaning Australia have won the World Cup again. They certainly deserve it and are huddling in celebration.

ஆஸ்திரேலியா 281 / 4

இலங்கை 206 /7

ஆஸ்திரேலியா உலக கோப்பையை கைப்பற்றியது.

என்று முன்னார் அறிவித்தார்கள்.

இடையில் என்ன ஆயிற்றோ திரும்பவும் விளையாடுகிறார்கள்.

இறுதியாக 36 ஓவரில் ஆட்டம் முடிந்தது !

53 ரன்கள் வேறுபாட்டில் ஆஸ்திரேலியா D/L முறைப்படி வெற்றிபெற்றது !
:)

கங்காருகளுக்கு வாழ்த்துக்கள் !

Saturday, April 28, 2007

சற்றுமுன்: உலகக்கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா x இலங்கை

உலக கோப்பை இறுதிப் போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு; 38 ஒவராக குறைப்பு

பார்படாஸ் : உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலக கோப்பை இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் துவங்குவது தாமதப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 0945 மணிக்கு ஆட்டம் துவங்கும்; மழை காரணமாக ஆட்டம் 38 ஒவராக குறைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆஸி., வீரர் மெக்ராத் மற்றும் இலங்கை வீரர் அர்னால்ட் ஆகிய இருவருக்கும் இது கடைசி போட்டி ஆகும்.

=தினமலர்

மாநில நடுவண் அரசுகளின் உறவை சீர்திருத்த புது கமிஷன் அமைப்பு

மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசிற்குமிடையே நிலவும் அதிகாரப் பங்கினை ஆய்ந்து சீர்திருத்தங்களை பரிந்துரைக்க முன்னாள் தலைமை நீதிபதி திரு எம்.எம்.புன்ச்சி தலைமையில் ஒரு புது கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. மாநில சுயாட்சியை பரிந்துரைத்தவர்கள் பங்குபெறும் ஆட்சியில் நடுவண் அரசிற்கு அதிக அதிகாரங்களை, தாமே மைய காவல்படையினரை மாநிலங்களுக்கு அனுப்புவிதமாகவும், நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களை நேரடியாக ஆயும் விதமாகவும் கொடுப்பதற்கு வித்திட இந்த கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும் அறிய...The Hindu : National : New commission on Centre-States ties

மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்சேர்க்கை ஆரம்பம்

இந்திய அரசின் மனிதவள அமைச்சின் வழிகாட்டலை அடுத்து ஐந்து இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ( அகமதாபாத், பங்களூரு,கொல்கொத்தா, இந்தோர், இலக்னோ) மாணவர்களை சேர்க்கும் விதமாக தங்கள் தேர்வுபட்டியலை அவரவர் வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

Institutes in action mode

வீரப்பன் உளவாளி கொலை வழக்கு நக்கீரன் கோபால் விடுதலை.

2007 கோபிச்செட்டிப்பாளையம் வீரப்பனுக்கு உணவு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்த ஹோட்டல் அதிபர் கந்தவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பர்கூரில் ஹோட்டல் வைத்திருந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றைக் கொடுத்து வந்தார். மேலும் வீரப்பனின் உளவாளியாகவும் இருந்தார். இவரை சிலர் கொலை செய்து விட்டனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் நக்கீரன் கோபால், நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட11 பேர் மீது கொலை வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி பிரேம்குமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பை அறிவதற்காக கோபி நீதிமன்றத்திற்கு வந்திருந்த கோபால் தீர்ப்பு குறித்து கூறுகையில், இது பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கால் நானும், எனது பத்திரிக்கை நிருபர்களும் கடந்த ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்டோம், துன்புறுத்தப்பட்டோம். இப்போது பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

ச: நுழைவுத் தேர்வு தேவை இல்லை. ஐகோர்ட் தீர்ப்பு

நுழைவுத்தேர்வு இல்லை! * தமிழக அரசின் சட்டம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு * பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது

சென்னை: "தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் செல்லும்' என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நுழைவுத் தேர்வு இல்லை என்று முடிவானதால் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. "நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்; நகர்ப்புற மாணவர்களே பலனடைகின்றனர்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து இரண்டு முறை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

தி.மு.க., அரசு பதவியேற்ற உடன், நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிந்துரைக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து தரப்பிலும் கருத்துக்களை கோரியது. வெவ்வேறு போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி சமன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்தது. கடைசியில் அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் அஸ்வின்குமார் உள்ளிட்ட நால்வரும், ஆதரித்து பா.ம.க., மாணவர் அணி, திராவிட கழகம் ஆகியவையும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை முதலில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின்னர் இவ்வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட்ஜெனரல் விடுதலை, கூடுதல் அட்வகேட்ஜெனரல் கண்ணதாசன், சிறப்பு அரசு பிளீடர் சேகர், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் முரளிகுமரன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் சிங்காரவேலன், பா.ம.க., சார்பில் சீனியர் வக்கீல் ரவிவர்மகுமார், வக்கீல் ஜோதிமணி, தி.க., சார்பில் வக்கீல்கள் தியாகராஜன், வீரசேகரன், ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கில் கடந்த 11ம் தேதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. பொதுவான உத்தரவை முதலில் நீதிபதி மிஸ்ரா வாசித்தார். பின்னர் நீதிபதி சம்பத்குமார் கூடுதலாக தனது உத்தரவை வாசித்தார். "நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என்றும் இதை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர். கட்டடக்கலை படிப்பில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் திறன் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், திறன் தேர்வு ரத்து பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அதை நடத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டும்.சமூக நீதியை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்று நீதிபதி சம்பத்குமார் கூறினார்.

தினமலர்

கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது: கருணாநிதி

சென்னை, ஏப். 27: காங்கிரஸ் கட்சியின் கடைசி தொண்டர் நினைத்தாலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

இங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்கள் கள்ளச் சாராய சாவுகளைக் கூறி அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்கள். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று பேசிவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த வீடு அருகே கிணறு தோண்டி அதில் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்கப்பட்ட தகவலை நாடாளுமன்றத்தில் கூறி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வேதனைப்பட்டார்.

இந்திரா காந்தி அல்ல, காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டர் நினைத்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. இதற்கு மதுவிலக்கு திட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு நல்ல சரக்குகளை உற்பத்தி செய்தால்தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.

மதுவிலக்குப் பற்றி பேசிய சில உறுப்பினர்கள் டாஸ்மாக் பணியாளர்கள் குறித்தும் பேசினார்கள். அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பதாக இருந்தால் டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூட அரசு தயாராக உள்ளது.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ஹாலிவுட் நடிகருக்கு கைது வாரண்ட்

ஜெய்ப்பூர், ஏப். 27: பொது நிகழ்ச்சியில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரியை கைது செய்யும்படி ஜெய்ப்பூர் நகர நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் நடிகை ஷில்பா ஷெட்டியை வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதமாக இருவரும் நடந்துகொண்டதால் இந்திய குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டுமென ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த பூணம் சந்த் பண்டாரி என்பவர் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை ஜெய்ப்பூர் கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் தினேஷ் குப்தா, வியாழக்கிழமை விசாரித்தார். இதுதொடர்பான விடியோ காட்சிகளை பார்வையிட்ட அவர், இச்செயல் எல்லை மீறியது; சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என்றார். மேலும், கெரியின் அரவணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளாமல் ஒத்துழைப்பு அளித்ததன் மூலம் ஷில்பா ஷெட்டியும் குற்றவாளியாகிறார் என்றார் நீதிபதி.

பொது இடத்தில் இருவரும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டதாக, இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தில்லி, மும்பை, வாராணசி, போபால், கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் பெரும்பாலும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் இருவரின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinamani

Friday, April 27, 2007

இந்தியாவின் நாட்டு உற்பத்தி ட்ரில்லியன் டாலர் !

உலகநாடுகளில் தங்களது மொத்த உற்பத்தி ( GDP) ஒரு ட்ரில்லியன் டாலர்களை மிஞ்சிய ஒரு சிலநாடுகளுடன் ( 12 நாடுகள்) இந்தியா இன்று சேர்ந்து கொண்டது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 41ரூ. வாக உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இந்திய பங்குசந்தையில் சந்தையாக்கப்பட்ட பங்குகளின் மதிப்பும் இன்று ஒரு ட்ரில்லியனை எட்டியது குறிப்பிடத் தக்கது. இது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தற்காலிகமானது என்றாலும் இந்த கணக்காண்டில் நிரந்தரமாக இவ்வெல்லையை கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


DNA - Money - Cheers! India is now a trillion dollar economy - Daily News & Analysis

ச: முடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி

சிவாஜி படம் சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் ஓய்வுக்காக இமயமலைக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார் ரஜினிகாந்த்.

செய்தி...

முன்னதாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

விவரம்

திருச்சூர் பூரத்தில் ஆனை மிரண்டது

கேரள மாநில திருச்சூரில் இன்று நடந்த பூரம் திருவிழாவில் திரண்டிருந்த யானைகளில் ஒன்று முரண்டுபிடித்து ஓடியதால் மக்கள் கூட்டம் மிரண்டு இங்குமங்கும் ஓடினர். 'இளஞ்சிதாரா' மேளம் வாசிக்கும் போது உன்னிக்கிருஷ்ணன் என்ற யானை தனது இரும்புசங்கிலியிலிருந்து தப்பி ஓடியதை கண்ட அஞ்சிய மக்கள் பின்னர் அது அடக்கப் பட்டபிறகு மீண்டும் கூடி பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'குடை மாற்றம்' நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.


DNA - India - Elephant turns violent at Thrissur pooram - Daily News & Analysis

உலகப்போர் இந்திய வீரர்களுக்கு கலாம் அஞ்சலி

இரண்டாம் உலகப்போரில் கிரேக்க நாட்டில் பணிபுரிந்து வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அறுபது வருடங்களுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஏதென்ஸில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதுவரை சென்ற இந்திய தலைவர்கள் எவரும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஆங்கிலேயர்களுக்காக தங்கள் தாயகத்திலிருந்து போர் புரிந்த பஞ்சாப் ், சென்னை வீரர்களுக்கு திரு கலாம் நம் நன்றியறிதலை வெளிபடுத்தினார்.


மேலும்..The Hindu News Update Service

காஷ்மீர்: கிலானி கைது

காஷ்மீர் ஹுரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் சையத் அலி ஷா கிலானி இன்று வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். நேற்று அவரது ஆறு துணைவர்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச முற்படும் போது கைது செய்யப் பட்டனர். ஏப்ரல் 22 அன்று நடந்த ஒரு பேரணியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுப்பிய கோஷங்களைத் தொடர்ந்து அவர்மீதும் மற்ற நான்கு தலைவர்கள் மீதும் குற்றம் பதியப் பட்டது.
மேலும் விவரங்களுக்கு..
NDTV.com

பாரதி ஏர்டெல்லின் நான்காம் பருவ இலாபம் இருமடங்கானது

முக்கியமான இந்திய செல்பேசி சேவையாளர்களில் ஒன்றான பாரதி நிறுவனம் இன்று வெளியிட்ட நான்காம் பருவ முடிவுகளில் அதன் இலாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு..Business-The Times of India

குஜராத்:போலி துப்பாக்கிசூட்டில் இறந்தவரின் மனைவியும் கொலை ?

இன்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ் துப்பாகிச் சூட்டில் மரணமடைந்த ஷேக்கின் மனைவி கசூர் பீயை நேரில் ஆஜர் படுத்தமுடியாததிற்கு அவரும் கொலையுண்டிருக்கலாம் என்று அறிக்கை சமர்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்...- Hindustan Times

கருணாநிதி பிறந்த நாள்: சாலை ஓரங்களில் 2 லட்சம் மரக் கன்றுகள்

சென்னை, ஏப். 26: முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சாலை ஓரங்களில் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் பேசும்போது இத் தகவலை வெளியிட்டார். ஜூன் 3-ம் தேதி முதல்வர் கருணாநிதி பிறந்த நாள். அன்று தமிழகத்தின் பிரதான சாலைகளின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவர் கூறினார்.

இந்த மரக் கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படும். ஆக்கிரமிப்புகளைத் தடுக்க சாலை எல்லையில் கற்கள் நடப்படும் என்றார்.

Dinamani

Thursday, April 26, 2007

UPA vs Modi in Gujarat encounter case

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

இந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.

1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.

பிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.

அவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.

பிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Dinamani | Zee News - Joy at Sohrabuddin`s home after arrest of three IPS officers: "Rubabuddin, however, claimed the well did not belong to his family. 'It was a roadside well and the weapons were dumped in it by gangster Abdul Latif in connivance with the anti-terrorist squad of Gujarat'".

பா.ஜனதா எம்பி பாபுபாய் மக்களவையில் கலந்து கொள்ள தடை.

ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பா.ஜனதா எம்பி பாபுபாய் கட்டாரா மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று உத்தரவிட்டார்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், பாபுபாய் பிரச்சனை குறித்த அறிக்கை ஒன்றினை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையில் படித்தார்.அப்போது, பாபுபாயின் ஆள் கடத்தல் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சாட்டர்ஜி, இப்பிரச்சனை தொடர்பாக மக்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி விவாதித்து முடிவெடுக்கும் வரை பாபுபாய் மக்களவையில் கல்ந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.பாபுபாயின் செயலுக்கு தமது சார்பிலும், மக்களவை சார்பிலும் தாம் கடும் கண்டனம் தெரிவிப்பதாக சாட்டர்ஜி மேலும் கூறினார்.

இறுதிப் போட்டி: இலங்கையுடன் ஆஸ்திரேலியா மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.

முன்னதாக இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க இயலாமல் துவக்க ஆட்டக்காரர்கள் மளமளவென அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். எனினும் பின்னர் வந்த கிப்ஸ், கெம்பம் ஆகியோர் நிதானமாக ஆடியதால் அந்த அணி 149 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய துவக்கத்தில் கில்கிறிஸ்ட் மற்றும் பாண்டிங் விக்கெட்களை இழந்த போதிலும் இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 31.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது..

MSN

Wednesday, April 25, 2007

புதைகுழியில் விழுந்த 2 சிறுவர்கள் சாவு

திருச்செங்கோடு, ஏப். 25: திருச்செங்கோட்டில் பாழடைந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் புதைகுழியில் விழுந்து உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவரது மகன் ஸ்ரீநாத் (7) இங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். செல்வத்தின் உறவினர் மகன் கோகுல் (6).

கோகுலும், ஸ்ரீநாத்தும் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த குளத்தில் திங்கள்கிழமை தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தவறி அங்கிருந்த புதை குழியில் இருவரும் விழுந்து விட்டனர். அதில் மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் ஒரு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Dinamani

சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு

புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

Dinamani

இட ஒதுக்கீடு: பிரதமருடன் அர்ஜுன்சிங் சந்திப்பு.


உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில்,பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் இன்று சந்தித்துப் பேசினார். ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இவ்வாண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்க்கப்படாமல் இருப்பது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.பிரதமரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன்சிங், இட ஒதுக்கீடு வழக்கை முன்னதாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மாறுபட்ட தன்மை நிலவுகிறது என்றார். வழக்கை முன்கூட்டியே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், இதனால் இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்து, பிரதமருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

அணை விவகாரம்: தெலுங்கானா பகுதியில் பந்த்

அணை கட்டும் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த தெலுங்கானா பந்த், 21 காலை துவங்கியது. இதையொட்டி அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், வாரங்கல் மற்றும் நல்கொண்டா ஆகிய ஐந்து தெலுங்கானா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பள்ளி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட்டுவதற்கு மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நந்தத் மாவட்டத்திற்கு தேவையான 2.7 டிஎம்சி குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று ஆந்திரா கூறி வருகிறது.

மகாராஷ்டிர அரசின் இந்த போக்கைக் கண்டித்து தெலுங்கானா பகுதிகளீல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

MSN

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இலங்கை தகுதி?

இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தன் விளைவாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக ஆடிய நியுசிலாந்து 35 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 165 மட்டுமே அடித்திருக்கிறது. முரளி நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், முன்னாள் உலகச் சாம்பியன் இலங்கை அணி வெற்றியின் வாயிலில் உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.

2004-ல் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி

புணே, ஏப். 24: 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறுதான் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்தார்:

"சென்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரகடனப்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு. அதற்கு பதிலாக "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கலாம். அதுதான் உண்மை.

தில்லியில் சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு பதிலாக இந்தியா எழுச்சி பெறுகிறது என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்று அத்வானி கூறினார்.

2009-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்ற வாசகத்தை பிரகடனப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் அடுத்த தேர்தலுக்கு என்ன உத்தி கையாளப்படும் என்று இப்போதே சொல்லுவதற்கில்லை என்று அத்வானி கூறினார்.

பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுடப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி புணேயில் நடைபெற்றது. இதில் அத்வானி கலந்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலின்போது "இந்தியா ஒளிர்கிறது' என்ற பாஜக தேர்தல் பிரசார வாசகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் மகாஜனும் ஒருவர். இந்நிலையில் அத்வானி இப்போது அதுபற்றி கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது."

Dinamani

Tuesday, April 24, 2007

பிரான்ஸ் புறப்பட்டார் கலாம்.

ஜனாதிபதி அப்துல்கலாம் ஐந்து நாள் பயணமாக ஸ்டாரஸ்பர்க்(பிரான்ஸ்), கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டார். பிரான்ஸ் செல்லும் கலாம், நாளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். நாடுகளின் ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இதற்கு முன்பாக ஸ்டாரஸ்பர்க் நகரில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுமைய பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.ஜனாதிபதியின் கிரீஸ் பயணத்தின்போது, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் மூலமாக இருதரப்பு நல்லுறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.21 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் நாட்டுக்கு கலாம் விஜயம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : YAHOO TAMIL

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்.

இலங்கையில் இரண்டாவது முறையாக விடுதலைப் புலிகள் விமானபடைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக புலிகள் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வழியாக இளந்திரையன் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, இன்று அதிகாலை இலங்கையின் யாழ்பாணம் பகுதியில் உள்ள பாலே விமான தளம் மீது இரண்டு இலகு ரக விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு வன்னிப் பகுதிக்கு திரும்பி விட்டோம். இது புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல், என்று கூறினார்.

உ.பி தேர்தல்:பகுஜன் சமாஜ் முன்னிலை?

உத்தரபிரதேசம் நான்காம் கட்ட தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெறும் என தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. நான்காம் கட்ட தேர்தலில் 46 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் தேர்தலுக்குப்பின் நடத்திய கருத்துக் கணிப்பில் பகுஜன்சமாஜ் கட்சிக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது.மொத்தமுள்ள 57 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 17 சீட்டுகளை மட்டுமே பிடிக்கும். சமாஜ்வாடி கட்சி 25 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.

Monday, April 23, 2007

சற்றுமுன் : முன்னாள் ரஷ்யா அதிபர் எல்ட்சின் மரணம்


முன்னாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க...

Former Russian leader Yeltsin dead

இடஒதுகீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.இந்திய மேலாண்மைக் கழகம்-ஐஐஎம், இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்விநிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி.- சி 8'ராக்கெட்

பி.எஸ்.எல்.வி.- சி 8 ராக்கெட்சீறிப்பாயும் காட்ச்சி

வணிக ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள 'பி.எஸ்.எல்.வி.- சி 8' ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலிய நாட்டு செயற்கைக்கோள் 'ஏகிள்' உடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி .

சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை 5லிருந்து 6 மணி வரை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விமானபடையின் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்சிகளை நிகழ்த்தினர் இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் இதையொட்டி வாகனப் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டதின் எதிரொளியாக சாகசநிகழ்சிக்குப்பின் பொதுமக்கள் வீடு திரும்பபெரும்பாடு பட்டனர்.

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று ஒரு தபால் அட்டை வந்துள்ளது. அதில், அரசை குறைகூறி ஜெயா டிவியில் தொடர்ந்து செய்தி வருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் ஜெயலலிதா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.

Saturday, April 21, 2007

நாசா கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி கட்டடத்தில் இயங்கும் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில், பில்டிங் 44 என்ற கட்டடத்தில் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவத்தில் இருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாயின.கட்டடத்திற்குள் புகுந்த மர்ம மனிதன், விஞ்ஞானி ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் தன்னைத் தானே சுட்டு கொன்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கையில் துப்பாக்கியுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவன் நாசா கட்டடத்திற்குள் புகுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வெர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள், நாசா கட்டடத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு:முத்துப்பேட்டையில் பதற்றம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலயை சில மர்ம ஆசாமிகளால் உடைத்ததின் எதிரொளியாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகிஉள்ளது இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Friday, April 20, 2007

சற்றுமுன் : 'அபிஷேக் ஏமாற்றி விட்டார்' து. நடிகை தற்கொலைக்கு முயற்சி!!

ஏப்ரல் 20, 2007

மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டு ஏமாற்றி விட்டு தற்போது ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்தி துணை நடிகை ஜான்வி கபூர் என்பவர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அபிஷேக்பச்சனுடன் தஸ் என்ற படத்தில் இணைந்து சிறு வேடத்தில் நடித்தவர் துணை நடிகை ஜானகி கபூர். இன்று காலை அவர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்புறம் திடீரென தனது கையின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் முன்னுக்குப் பின் முரணாகவும் அவர் பேசினார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளார்.

போலிஸில் ஜான்வி கபூர் அளித்த வாக்குமூலத்தில், நானும், அபிஷேக் பச்சனும் காதலித்தோம். என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக அபிஷேக் உறுதியளித்திருந்தார்.

கடந்த ஆண்டு சில நண்பர்கள் முன்னிலையில் எனக்கு அவர் சிந்தூர் (குங்குமம்) வைத்தார். இதனால் எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாகத் தான் அர்த்தம்

இதையடுத்து பலமுறை என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.

ஆனால் இப்போது என்னை ஏமாற்றி விட்டு ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளார். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார் கபூர்.

ஜான்வி கபூர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது. இவரது நிஜப் பெயர் நைனா ரிஸ்வி.

வெறும் பரபரப்புக்காக அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் பச்சன் குடும்பத்தினர் இதுவரை வாய் திறக்க மறுப்பது தான் மர்ம முடிச்சாக உள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ்.காம்

சற்றுமுன் : நைஜீரியாவில் நெய்வேலி என்ஜீனியர் கடத்தல்

நைஜீரியாவில் நெய்வேலி என்ஜீனியர் கடத்தல்

ஏப்ரல் 20, 2007

நெய்வேலி: நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர், நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் திவாகரன். இவரது மகன் ராமச்சந்திரன் (36). நைஜீரியாவில் உள்ள குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக இப்பணியில் அவர் உள்ளார்.

இந்த நிலையில், தீவிரவாதிகள் ராமச்சந்திரன் உள்ளிட்ட இரு இந்தியப் பொறியாளர்களைக் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.

ராமச்சந்திரனை மீட்க துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு பெற்றோர் திவாகரன், சாந்தம்மாள், சகோதரர் ராதாகிருஷ்ணன், சகோதரி ராதாமணி ஆகியோர் தந்தி அனுப்பியுள்ளனர்.


நன்றி : தட்ஸ் தமிழ்.காம்

Thursday, April 19, 2007

ஈராக் குண்டுவெடிப்பு பலி 172 ஆக உயர்வு.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது.ஈராக்கின் மத்திய மற்றும் புறநகரில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியா பிரிவினர் அதிகமிருக்கும் சத்ரியா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 90 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுபோன்ற பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை குண்டுவெடிப்பு : தண்டனை இன்று அறிவிப்பு?

1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 100 குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் பல கட்டங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த பயங்கர தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் டைகர் மேமன் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இவர்களது குற்றங்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் 100 பேரும் மும்பை தடா கோர்ட்டில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.இதையடுத்து, குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் அறிவிக்கப்படலாம் என நீதிமன்றத்தில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோகநாதன் குடும்பத்தினர் அமெரிக்கா கிளம்பினர்: வாஷிங்டன்- விர்ஜினீயா செல்ல சிறப்பு விமானம்.

தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது பெற்றோர் உள்பட 9 பேர் நேற்று நள்ளிரவு அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றனர். லோகநாதனின் உடல், அவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது விருப்பப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது

லோகநாதனின் தாயார் சக்கர நாற்கலியில் அமர்ந்தபடி செல்கிறார்கள்.
இதில் கலந்து கொள்வதற்காக லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அமெரிக்கா செல்ல முடிவு செய்யப்பட்டது. அவர்களில் லோகநாதனின் பெற்றோர் வாசுதேவன், கண்ணம்மாள், சகோதரர் செங்கோட்டுவேலவன், அண்ணி செந்தமிழ்ச் செல்வி, இன்னொரு சகோதரர் பழனிவேல், அண்ணி நிர்மலா ஆகியோருக்கு மட்டும் பாஸ்போர்ட் இல்லை. இதையடுத்து இவர்கள் நான்கு பேருக்கும் முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதேபோல 9 பேருக்கும் அமெரிக்க தூதரகம் உடனடியாக விசாவும் வழங்கியது.

Wednesday, April 18, 2007

போலி மனைவியுடன் கனடா செல்ல முயன்ற பாஜக எம்.பி கைது!


பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா


மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா. தாஹோத் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்று காலை 7.30 மணிக்கு கனடா தலைநகர் டொரண்டோவுக்கு செல்வதற்காக ஒரு பெண்ணுடன் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார் கத்தாரா.
அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதித்தபோது, அதில் அந்தப் பாஸ்போர்ட்டுக்குரியவர் கத்தாராவின் மனைவி சாரதா பென் இல்லை என்பது தெரிய வந்தது. கத்தாராவுடன் வந்த பெண்ணின் பெயர் பரம்ஜித். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கத்தாரா விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். அதில் கத்தாரா தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கத்தாராவை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். குடியேற்றத் துறையினரால் பிடிக்கப்பட்ட கத்தாரா மற்றும் பரம்ஜித் ஆகிய இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்


உத்தரபிரதேசம்: ராகுல் காந்தி 5ம் கட்ட பிரச்சாரம்.

உத்தரபிரதேச சட்டசபைக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்து வரும் நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் காந்தி தனது 5ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அமேதி தொகுதியில் இருந்து இன்று துவக்கியுள்ளார்.

Tuesday, April 17, 2007

50 கோடி 'அலேக்' - இரண்டே நிமிடத்தில்

மிகப் பாதுகாப்பான நகரெனக் கருதப்படும் துபாய் நகரின் பளபளப்பும் படோடபமும் நிறைந்த வாஃபி வணிக வளாகத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இயந்திரத் துப்பாக்கிகளோடு நுழைந்து அங்கிருந்த வைர நகைககடையில் இருந்த சுமார் 50 மில்லியன் திர்ஹாம் (50 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள வைர நகைகளை அள்ளிச் சென்றிருக்கிறது.
மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட இந்தச் சம்ப்வம் மொத்தம் இரண்டே நிமிடங்களீல் நடந்து முடிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் துபாய் நகரை உலுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை துணிகரமான் கொள்ளை நடந்திருப்பது காவல்துறையை தனியார் காவல் ஊழியர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்குவது பற்றி யோசிக்க வைத்திருக்கிறது

'பலியான வி ஏ ஓ குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி !

காஞ்சிபுரத்தில் வேன் மீது ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலியான விஏஓ (கிராம நிர்வாக அலுவலர்) குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் வட்டம் கோவிந்தவாடி அகரம் கிராம அருகே செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஆளில்லாத லெவல் கிராசிங்கில் வேன் மீது மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 22 பேர்களில் 11 பேர் பலியானார்கள். அதில் 9 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள். ஒருவர் கிராம நிர்வாகி ஒருவரின் மகன் மற்றொருவர் ஓட்டுனராவார். விபத்து செய்தி கிடைத்ததும்,காஞ்சிபுரம் அமைச்சர் அன்பரசனையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியில் இருந்தும்,இறந்த அரசு அலுவலர் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியாக ரூ. ஒரு லட்சமும் சேர்த்து ரூ. இரண்டு லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு, அவர்களின் காயத்தின் தன்மைக்கேற்ப மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் நிவாரண வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Monday, April 16, 2007

ச: அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் துப்பாக்கிச்சூடு : 22 பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி அதிபர் புஷ் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்


- "CNN-IBN", தினமலர்

சற்றுமுன்: வேன்மீது மீது ரெயில் மோதி பயங்கரம்: 11 கிராம அதிகாரிகள் பலி

காஞ்சீபுரம், ஏப். 16-

சென்னையில் இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பேரணி நடை பெற உள்ளது. முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இந்தபேரணி நடை பெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 22 கிராம நிர்வாக அதிகாரிகள் இந்த பேரணியில் பங்கேற்க இன்று அதிகாலை ஒரு வேனில் சென்னை புறப்பட்டனர்.

வேலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் சண்முக பரணி தலைமையில் அவர்கள் புறப் பட்டு வந்தனர். காஞ்சீபுரம் அருகே வந்ததும் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள குருஸ்தல மான தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர்.

காலை 9.40 மணி அளவில் வேன் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை நெருங்கி யது. அங்குள்ள ரெயில்வே கேட்டை வேன் கடக்க முயன்றது. அது ஆள் இல்லாத ரெயில்வே `கேட்' ஆகும்.

அந்த சமயத்தில் தூரத்தில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் மின் னல் வேகத்தில் வந்து கொண் டிருந்தது. `ரெயில் தூரத்தில் தானே வருகிறது அதற்குள் கடந்து போய் விடலாம்'' என்ற எண்ணத்தில் வேன் டிரைவர் `கேட்'டை கடக்க முயன்றார்.

அதற்குள் எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கி விட்டது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த ரெயில் வேன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பலத்த சத்தத்துடன் வேன்தூள்- தூளாக நொறுங்கியது. வேனின் பின் பகுதி முழுமையாக நொறுங்கிச் சிதறியது. உடைந்த வேனின் ஒரு பகுதியை ரெயில் 15 மீட்டர் தூரத்துக்கு இழுத் துச் சென்று நின்றது. வேனில் இருந்த 23 பேரும் சின்னா பின்னமாகி

சிதறினார்கள்.இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டு, துண்டாகி சிதறி பலியானார் கள். அவர்களது உடல்கள் ரெயில் தண்டவாளத்தில் ஆங் காங்கே சிதறிக் கிடந்தன. அந்த பகுதியே ரத்த ஆறு ஓடியது போல காட்சி அளித்தது.

மற்ற 11 கிராம அதிகாரிகள் உடல் நசுங்கி படுகாயங்களு டன்துடி துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஐ.ஜி. ராஜா உத் தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா மற்றும் போலீசாரும் மீட்பு படை யினரும் வந்தனர். உயிருக் குப் போராடிக் கொண் டிருந்தவர்களை மீட்டு, மருத் துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தென்னக ரெயில்வே அதிகாரிகளும் சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது.இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியா னோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் புதுப்பாக் கத்தில் உள்ள ஆள் இல்லா ரெயில்வே கேட்டில் சென்னை - திருமால்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆட்டோ மீது மோதி 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாக்கம் விபத்தில் 17 உயிர்கள் பறிபோனதுமே ரெயில்வே அதிகாரிகள் ஆள் இல்லா ரெயில்வே கேட் பகுதிகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று நடந்த பரிதாப உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.


வேனில் வந்த 23 பேர் விபரம்

1. சண்முகபரணி

(செங்காநல்லூர்)

2. புருஷோத்தமன்

(அத்திïர்)

3. மனோகரன்

(அடுக்கம்பாறை)

4. தாண்டவராயன்

(செம்பேடு)

5. பிரபாகரன்

(சேன்பாக்கம்)

6. நாராயணசாமி

(விரிப்பாச்சிபுரம்)

7. நடராஜன் (அரிïர்)

8. தாமோதரன்

(கரடிக்குடி)

9. மதிவாணன்

(மேல்மணவூர்)

10. வெங்கடேசன்

(பெல்லூர்)

11. ராமமூர்த்தி (வல்லம்)

12. எஸ்.குணசேகரன்

(வேலம்பாடி)

13. எம்.குணசேகரன்

(பாலமதி)

14. செல்லபாண்டியன்

(ஊனைவாணியம்பாடி)

15. துரைசாமி

(கனிகனியான்)

16. மேகநாதன்

(மேல் அரசம்பட்டு)

17. பாலகிருஷ்ணன்

18. குமாரசாமி

(இலவம்பாடி)

19. பன்னீர்செல்வம்

(அணைக்கட்டு)

20. நந்தகுமார்

(பெருமுகை)

21. ரவி

(ராமமூர்த்தி மகன்)

22. மோகன்

23. குமார்

(வேன் டிரைவர்)

=மாலைமலர்.

மேலும் தட்ஸ்தமிழ்

சட்டசபையில் இன்றும் அதிமுக வெளிநடப்பு.

4 அதிமுக எம்எல்ஏக்களை இந்த பட்ஜெட் கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னதாக அதிமுக துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையில் (செருப்பை காட்டி கலாட்டா செய்தது) 4 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்கள் தங்கள் கடமையை செய்வதிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளனர். புரட்சித் தலைவரை விமர்சித்து பேசியதால் உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சிகாரர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.எனவே சபாநாயகர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

சிகரெட் விலை உயர்வு-"ஊதுவோர்" டென்ஷன் !

பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், சிகரெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் புகை பிடிப்போர் தடுமாற்றம் அடைந்துள்ளனர். 2007-2008 க்கான மத்திய பொது பட்ஜெட்டில் புகையிலை தொடர்பான பொருட்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து சிகரெட்டுகளின் விலையையும் அதன் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. வில்ஸ் சிகரெட்டின் விலை நேற்று முதல் திடீரென உயர்த்தப்பட்டது. ரூ.3க்கு விற்கப்பட்ட ஒரு சிகிரெட்டின் விலை இப்போது ரூ. 3.50க்கு விற்கப்படுகிறது. முன்னதாக ஒரு பாக்கெட் வில்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 33 ஆக இருந்தது. இப்போது ரூ. 34 ஆக விற்கப்படுகிறது. இதேபோல, கிங்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 3.50லிருந்து ரூ. 4 ஆக அதிகரித்துள்ளது. கத்திரி சிகரெட் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளால் புகை பிடிப்போர் டென்ஷனாகி உள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

ராகுல் காந்திதான் உத்தரப்பிர்தேசத்தின் எதிர்காலம்:பிரதமர் மன்மோகன்.

ராகுல் காந்திதான் உத்தரப்பிர்தேசத்தின் எதிர்காலம் என்றும் உத்தரப்பிரதேசத்தின் புதிய தலைவர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக முதல் முறையாக வந்துள்ள பிரதமர், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவைப் பெருக்கும் உத்தியாக, ராகுல் காந்தியை மையப்படுத்தி பிரசாரம் செய்தார்.
புதிய பாரதத்தைப் படைக்க ராஜீவ் காந்தி 20 ஆண்டுகளுக்கு முன்னால் கனவுகண்டார்; அதே போல உத்தரப் பிரதேசத்தை முன்னேற்ற ராகுல் காந்தி உறுதிபூண்டிருக்கிறார் என பிரதமர் கூறினார்.
இதனிடையே உத்தரபிரதேச மாநில முலாயம் அரசின் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மாநிலத்தில் வேளாண் மற்றும் தொழில்துறைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதற்கு மாநில அரசுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு அளித்த வளர்ச்சி நிதியை மாநில அரசு பயன்படுத்தவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த எந்த அரசும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

ச: தூக்கம் இல்லை என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ விமானி விமானத்தை ஓட்ட மறுப்பு்

புதுடில்லி : சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள் 12 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளானார்கள். புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு பிஏ143 என்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அதில் 225 பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது அந்த விமானத்தின் பைலட் கேப்டன் வில்லியம் விமானத்தை ஓட்ட மறுக்கிறார் என்று தெரியவந்தது. என்ன காரணத்தால் ஓட்ட மறுக்கிறார் என்று விசாரித்தபோது அவர் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. நேற்றிரவு அவர் தங்கி இருந்த ஹோட்டலில் ஒரே இடையூறாக இருந்ததால் அவரால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், சரியான தூக்கம் இல்லாமல் விமானத்தை ஓட்ட முடியாது என்றும் சொல்லி விட்டதாக தெரியவந்தது. வேறு வழியின்றி அதிலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். அதற்கு பதில் வேறு விமானமும் ஏற்பாடு செய்யப்படாததால் அதே விமானம் மதியம் 2.30க்கு தான் புறப்பட்டு சென்றது. இது பற்றி பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரி ராதிகா ரெய்சி கூறுகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் பாதுகாப்பு முறைப்படி, பாதுகாப்பை கருத்தில்கொண்டு இம்மாதிரியான நேரங்களில் விமானியை விமானம் ஓட்ட அனுமதிப்பதில்லை என்றார்.


- தினமலர்

ச: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா

ஏப்ரல் 15, 2007

போபால்: இந்து-மூஸ்லீம் கலப்புத் திருமணங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் கூறியுள்ளார்.

இஸ்லாம் குறித்து அவர் எழுதிய சர்ச்சைக்குள்ளான நாவலையடுத்து அவருக்கு எதிராக வங்கதேசத்தில் பத்வா பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த அவர் சமீபகாலமாக பலத்த பாதுகாப்புடன் இந்தியாவில் தங்கியுள்ளார்.

இந் நிலையில் போபாலில் உள்ள பாரத் பவன் பல் கலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசுகையில்,

இந்தியாவில் இந்து பெண்ணும் மூஸ்லீம் ஆணும் திருமணம் செய்துக் கொண்டு படும் துனபங்களை கண்டால் வருத்தம் தான் வருகிறது.

இது போன்ற திருமணங்களை எதிர்ப்பதற்கு பதிலாக வரவேற்று ஆதரிக்க வேண்டும்.

"Thatstamil"

சங்கராச்சாரியாரை கைது செய்த எஸ்.பி.பிரேம்குமார் திடீர் டிஸ்மிஸ்

ஏப்ரல் 15, 2007

சென்னை: சங்கராச்சாரியாரை கைது செய்து பெரும் பரபரப்புக்குள்ளான எஸ்.பி. பிரேமகுமார் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் நல்லகாமன் என்பவரையும் அவரது மகனையும் தாக்கி ரோட்டில் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது, ராணுவ வீரரின் மனைவியை தாக்கியது மற்றும் பெண் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது ஆகிய வழக்குகளில் சமீபத்தில் பிரேமகுமாருக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


21 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வந்த பிரேம்குமாரை நீதிமன்றத்தில் சரணடையவும், அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்தை, திமுக ஆட்சிக்கு வந்த பின் நேரில் சந்தித்த பிரேம்குமார், அவரை தப்பிச் செல்லுமாறு கூறி சிக்கலில் மாட்டினார். அந்த விவகாரத்தில் பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இப்போது நல்லகாமன் வழக்கிலும் உச்ச நீதிமன்றத்திடம் கண்டனம் பெற்றுள்ளார் பிரேம். இதையடுத்து அவரை பதவியில் இருந்தே டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

அரசு ஊழியர் நன்னடத்தைப் பிரிவு 3 (11)ன் கீழ் பிரேம்குமார் மீது இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

இந்தப் பிரிவின்படி எந்த விளக்கமும் கேட்காமலேயே பதவி நீக்கம் செய்ய முடியும். தேச துரோக செயல்களுக்குத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது பிரேம் குமார் மீது இந்தப் பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

"Thatstamil"

ச: சர்வஜித்து ஆண்டு எப்படி இருக்கும்

ராசி பலன்களில் ஆர்வம் உள்ளவர்கள் "சர்வஜித்து ஆண்டு எப்படி இருக்கும்" என்று அறிய இங்கே செல்லுங்க.. "வெப் உலகம்"

ச: ஊட்டியில் இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தை!

ஞாயிறு, 15 ஏப்ரல் 2007

இந்திய-சீன இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடைபெற்று வரும் பேச்சுவார்ததையின் அடுத்தகட்டம் வரும் சனிக்கிழமை டெல்லியிலும், மறு நாள் ஊட்டியிலும் நடைபெற உள்ளது.

60 ஆண்டு காலத்திற்கு மேல் நீட்டித்து வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை நடைபெற்ற 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, எல்லைகளை வகுக்கும் முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தை வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறுகிறது.

சீனத்தின் சார்பாக அந்நாட்டு அயலுறவுத் துணை அமைச்சர் தாய் பிங்குவா, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

"வெப் உலகம்"

ச: 27 % இட ஒதுக்கீடு:சுப்ரீம் கோர்ட்டில் நாளை அப்பீல்

புதுடெல்லி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நாளை அப்ப்பீல் செய்யும் என தெரிகிறது.

சொலிசிட்டர் ஜெனரல் கூலம் வான்வதி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியன் ஆகியோர் அரசு தரப்பில் ஆஜராகி வாதாட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

"Yahoo Tamil"

ச: 'உ.பி.யின் எதிர்காலம் ராகுல்காந்தி'

லக்னோ(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைவராகவும், அம்மாநிலத்தின் எதிர்காலமாகவும் ராகுல் காந்தி திகழ்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மன்மோகன், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

ராகுல் காந்திதான் உங்களது எதிர்காலமாக உள்ளார்.அவர் உங்களுக்காக உழைக்கிறார்.எனவே தயவு செய்து காங்கிசுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என மன்மோகன் மேலும் பேசினார்.

ராகுல்காந்திக்கு இந்த அளவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரித்துப் பேசியது உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

"Yahoo Tamil"

ச: காவிரி:தேவைப்பட்டால் தமிழகம் சுப்ரீம் கோர்ட் செல்லும்

சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

காவிரி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து விட்டு, அதன்பின்னர் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட் செல்வது என தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதமைச்சர் கருணாநிதி, காவிரி நடுவர் மன்றத்திடம் எத்தகைய மனுவினை தரலாம் என்பதை தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.

"Yahoo Tamil"

Saturday, April 14, 2007

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்; 40 பேர் உடல் சிதறி சாவு

பாக்தாத், ஏப். 14-

ஈராக்கில் கர்பலா நகரில் ஒரு மசூதி அருகே இன்று கார் குண்டு வெடித்தது. இதில் மசூதிக்கு வந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் சிதறி பலியானார்கள். 58 பேர் காயம் அடைந்தார். மசூதி அருகே இருந்த கடைகளும் நொறுங்கின.

சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன

Friday, April 13, 2007

பிளாக்கரில் இந்தியில் பதிவது இனி எளிது

பிளாக்கரில் இந்தியில் நேரடியாகபதிய கூகிள் புதிய நிரலியை நிறுவியுள்ளது. அதுவாகவே கற்றுக் கொள்ளும் திறன் உள்ள நிரல் ஆதலால் ஆங்கில எழுத்துக்களின் வினோத கூட்டுக்களை ( உ-ம்: maNam) நினைவில் கொள்ள வேண்டாம். இந்த கற்றல் தனியொருவருக்கானதாகையால் இந்தி ஆங்கில மொழிபெயர்ப்பு நம் விருப்பப்படி இருக்கலாம். இணையத்தில் எங்கிருந்தாலும் கிடைக்கின்ற வசதி வேறு.

இது பற்றி..Official Google Blog: Now you can blog in Hindi

இதுபற்றிய விவாதக் களம்

இந்திய வேளாண் துறையை மேம்படுத்த உலகவங்கி நிதியுதவி

இந்தியாவில் வேளாண் துறையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் உருமாற்றுவதற்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க உள்ளது. உலக வங்கியின் மேம்பாட்டு அமைப்பான சர்வதேச மேம்பாட்டு சங்கத்தின் மூலம் இந்த கடன் வழங்கப்படுவதாகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 50 மில்லியன் டாலர் அளிக்கவிருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

இந்திய வேளாண் துறையை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கும், குறைந்தபட்ச தன்னிறைவை அத்துறை எட்டுவதற்கும் இந்த கடனுதவி வழிவகை செய்யும். வறுமை ஒழிப்பு, வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றையும் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இத்திட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அடுத்த 6 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் துறை வளர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளதாகவும் போதிய அளவுக்கு இல்லை என்றும் கார்ட்டர் கூறினார்.

MSN INDIA

இந்தியாவில் ஆசிய விளையாட்டு: சீனா பின்வாங்கியது

வரும் 2014ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியை புது டெல்லியில் நடத்த இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த சீனா, தனது நிலையில் இருந்து பின் வாங்கியுள்ளது. தென் கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த தனது ஆதரவை சீனா தெரிவித்துள்ளது.

கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட சீன பிரதமர் வென் ஜியாபாவோவை, இன்சியான் நகர மேயர் ஆம்-ஸங்- சூ சந்தித்துப் பேசினார். அப்போது, 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த சீனாவின் ஆதரவைக் கோரினார். இதற்கு பதிலளித்த சீன அதிபர், தாயகம் திரும்பியதும் தென் கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப் போவதாக உறுதி அளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் புது டெல்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் ஆசிய விளையாட்டு போட்டி நடத்து முயற்சியில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

MSN INDIA

Thursday, April 12, 2007

சற்றுமுன்: இனி தந்தியடிக்க முடியாது

தகவல் தொடர்பில் தொலைபேசிகள் வருவதற்கு முன்பு அவசரத்துக்கு உதவியது தந்தி. தபால் தந்தித் துறையின் கீழ் இருந்த தந்தி பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப் பட்ட போது அந்நிறுவனத்தின் பொறுப்பில் வந்தது. தகவல் தொடர்புகள் தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல் என பரந்து விட்ட நிலையில் தந்தி அனுப்புவோர் மிகவும் குறைந்து விட்டனர். எனவே பிஎஸ்என்எல் நிறுவனம் சிறுகச் சிறுக தந்தி அலுவலகங்களை குறைத்து தற்போது முற்றிலும் தந்தி சேவை நிறுத்தப் படுவதாக அறிவித்து விட்டது.

தூத்துக்குடி நிறுவனத்தின் சாதனை

கடல் வணிகத்திற்கு ஏதுவாக கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கி ஏற்றும் தேவைகளை நிறைவேற்றும் PSTS குழுமம் இன்று ரூ850 மிலியன் விற்பனையைக் கொண்டு தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டிணம் துறைமுகங்களில் கொடியோச்சி வருகிறது. அந்த நிறுவனத்தை பற்றிய ஒரு செய்தி

சீக்கியர்கள் தொகுப்பாளர் மந்திராபேடி மீது கோபம்


உலகக் கோப்பை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மந்திரா பேடி ஒரு சீக்கியர். இவரது அண்மைய நிகழ்ச்சியொன்றில் சீக்கியர்களின் புனிதச் சின்னமான 'ஏகம் கர்' (ஒருவனே தேவன்) சொல்லை தனது திறந்த முதுகுப் புறத்தில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து கொதித்தெழுந்து விட்டார்கள். சீக்கியர்களின் புனித நூலான கிரந்தசாகிப்பில் முதல் வாக்கியங்கள் அவையாகும். லூதியானா, அமிர்தசரஸ் நகரங்களில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது.

இதன் முன்னரும் தனது நாய்களுக்கு, அவற்றை தன் குடும்பத்தினாராக வரித்துக் கொண்டு, சீக்கியப் பெயர்களை சூட்டி சச்சரவில் மாட்டியுள்ளார்.

மேலும்..Mandira Bedi in midst of Sikh religious storm

ச: At least 23 die in 2 terrorist bombings in Algeria

அல்ஜியர்ஸில் நடந்த தாக்குதலில் 23 பேர் பலி

அல்ஜீரியத்தலைநகர், அல்ஜியர்ஸில் நடந்த குண்டுத்தாக்குதல்களில், குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 160 பேர் காயமடைந்துள்ளனர். இவைகள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என்று போலிசார் கூறுகிறார்கள்.

அல்ஜியர்ஸ் நகரின் மையப்பகுதிக்கு அருகே உள்ள பிரதமரின் அலுவலகங்களை நோக்கி வந்த கார் ஒன்று வெடித்து சிதறியதை தாங்கள் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். மற்றுமொரு குண்டு வெடிப்பு கிழக்கே புறநகர் பகுதியில் அமைந்துள்ள போலிஸ் நிலையம் ஒன்றில் நடந்தது.

BBC

வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் மீது கொலைக் குற்றச்சாட்டு

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு போலீசார் கொலைக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அரசியல் வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டது தொடர்பில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அவரைத் தவிர அவரது கட்சியான அவாமி லீகைச் சேர்ந்த 46 பேர் மீதும் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே சம்பவம் தொடர்பாக இஸ்லாமியக் குழுவான ஜமாத் ஏ இஸ்லாமி அமப்பின் தலைவரும் மேலும் அந்தக் குழுவின் நான்கு பேர் மீதும் வன்முறையைத் தூண்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஷேக் ஹசீனா பிபிசியின் வங்க மொழி சேவைக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் தம் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். தான் யாரையும் கொலை செய்யவில்லை என்பது வங்கதேச மக்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும், இவ்விதமான நடவடிக்கைகள் தம்மீது பொய் குற்றச்சாட்டுகளை வைக்க எடுக்கும் முயற்சி எனவும் கூறியுள்ளார்.

சமபவம் நடந்த நாளில் ஜமாத் கட்சியினரும், வங்கதேச தேசியக் கட்சியினரும் தமது கட்சியினர் நடத்திய ஊர்வலத்தின் மீது பலத்த தாக்குதல்களை நடத்தினர் எனவும், இதை போலீசார் கண்டும் காணாமல் இருந்தார்கள் எனவும் ஷேக் ஹசீனா கருத்துக் கூறியுள்ளார். எனவே இந்த வன்முறைகளுக்கு வங்கதேச தேசியக் கட்சியும், ஜமாத் கட்சியுமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம் தாம் தமது நாட்டிற்கு திரும்புவதை தடுக்க வங்கதேசஅதிகாரிகள் எண்ணுவார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருப்பதாகத்தான் பொருள் எனவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

BBC

Wednesday, April 11, 2007

பிகாரில் பள்ளிக்கூடம் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்

முங்கர், ஏப். 11: பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் பனஹரா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது பள்ளிக்கூடத்தில் யாரும் இல்லை என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்க கூடிய சிலர் நடுநிலைப் பள்ளியின் சில அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

பள்ளி அறைகளுக்குள் இருந்து சில வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என முங்கர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரவீந்திர சங்கரன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகாரில் ஹௌரா-கயா ரயிலிலும், மத்திய ரிசர்வ் போஸீசார் முகாமிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இந் நிலையில் பள்ளிக் கூடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinamani

விடுதலைச் சிறுத்தைகள் மண்ணுரிமை மாநாடு ஜூன் 17-க்கு ஒத்திவைப்பு

திண்டிவனம், ஏப்.11: நெல்லையில் ஏப்.14-ம் தேதி நடைபெற இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்

செண்டூர் விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி : விஜயகாந்த்

சென்னை, ஏப். 11: திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

புதுக் கட்டடங்களில் ஊனமுற்றோருக்காக சாய்தளம் அமைப்பது கட்டாயமாக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை, ஏப். 11: அரசுக் கட்டடங்கள், அரசு சார்ந்த கட்டடங்கள், தனியார் நிறுவனக் கட்டடங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம் (RAMP) அமைப்பது கட்டாயமாக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

பார்வையற்றோரைத் திருமணம் புரியும் நல் உடற்கூறு உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. ஆனால் மற்ற வகை ஊனமுற்றோரை மணம்புரியும் நபர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரமாக உள்ளது. இந்த வருமான உச்ச வரம்பு இவ்வாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற தகுதிகள் உள்ள அனைவரும் இத் திட்டங்களில் கீழ் பயனடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு நவீன செயற்கை உறுப்பு வாங்க அரசு மானியமாக ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும்.

ஆதரவற்ற சிறுவர் சிறுமியருக்கான சிறப்பு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களைப் பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியம் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 என்ற நிலையிலிருந்து ரூ.450 ஆக இவ்வாண்டு முதல் உயர்த்தப்படும்.

தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

அரசினர் கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு நிறுவனங்களில் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு இவ்வாண்டு ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் செலவில் வாரம் ஒரு முறை கோழி இறைச்சி வழங்கப்படும்.

Dinamani

தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.இன்று விளக்கம்

உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது, சர்ச்சைக்குரிய சிடியை வெளியிட்டது குறித்து தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா இன்று விளக்கம் அளிக்க உள்ளது.அந்த சிடி, தங்களது கவனத்திற்கு கொண்டுவராமலேயே வெளியிடப்பட்டதாகவும், அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறியிருந்தனர்.ஆனால் காங்கிரஸ்,பிஎஸ்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜன்மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் பா.ஜனதா கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.இதனிடையே தேர்தல் கமிஷனும் உங்கள் கட்சி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.இந்நிலையில், தேர்தல் கமிஷனின் நோட்டீசுக்கு பா.ஜனதா தலைவர்கள் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.

கோவை குண்டுவெடிப்பு: விரைவில் தீர்ப்பு!

கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி 12 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் பலர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான சம்பவங்களில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 181 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2002ல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. நான்கு கட்டங்களாக நீதிமன்றத்தில் வாதம் நடந்தது.எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் கடந்த 30ம் தேதி முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாராயணமூர்த்தி மன்னிப்பு கோரினார்

தேசிய கீதத்தை அவமதித்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நாராயணமூர்த்தி மன்னிப்பு கோரினார்.


"CNN - IBN"

ச: ஏர் டெக்கான் 2006ல் சிறப்பான சேவை

பெங்களூர்

இந்திய விமான பயணிகள் சங்கம் (ஏ.பி.ஏ.ஐ) என்ற அமைப்பு விமான பயணிகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவையினை அளித்து வருகிறது. லாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, அதன் உறுப்பினர்கள், நாடு முழுவதிலும் உள்ள இத்துறை சார்ந்த செய்தி தொடர்பாளர்கள் மற்றும் அடிக்கடி விமான பயணத்தை மேற்கொள்ளும் பல்வேறு நிறுவன அதிகாரிகள் மத்தியில் ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. இந்த ஓட்டெடுப்பின் வாயிலாக ஏர் டெக்கான் நிறுவனம் 2006-ஆம் ஆண்டில் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் சிறப்பான சேவை அளித்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறும்போது, "2006-ஆம் ஆண்டின் சிறந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக ஏர் டெக்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் விமான பயணம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் இலட்சியத்திற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து வசதிகள் மிகவும் முக்கியமானதாகும்'' என்று தெரிவித்தார்.

தினகரன்

ச: 2010ல் ஐ.டி. துறையின் மொத்த ஊழியர்களில் பெண்கள் 50%

பெங்களூர், ஏப். 11: பெண்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதை விரும்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விடுமுறை, குழந்தை பராமரிப்பு, வீட்டருகே அலுவலகம் என சலுகைகளையும் கொட்டித் தருகின்றன.

ஐ.டி. நிறுவனங்களில் நாட்டிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டது டாடா கன்சல்டன்சி. அதன் 88 ஆயிரம் ஊழியர்களில் 25 சதவீதம் பெண்கள். இது ஓராண்டு முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தப் போகிறது டிசிஎஸ்.

அடிக்கடி வேலை மாறாதது, வேலை நேரம் வீணாகாதது மட்டுமின்றி ஐ.டி. நிறுவனங்கள் விரும்பும் திறமைகளும் பெண்களிடம் இருப்பதே, அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க காரணம். திறமையான பெண் ஊழியர்களை வேலை யில் தக்க வைத்துக் கொள்ள புதுமையான சலுகைகளை அளிக்கிறோம். அதிகபட்சம் 2 ஆண்டு விடுமுறை எடுத்து விட்டு, பிறகு அதே பணியில் சேரலாம் என்றார் டிசிஎஸ் மனித வள பிரிவு தலைவர் பத்மநாபன்.
Ôலேடீஸ் ஸ்பெஷல்Õ என்ற பெயரில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை டெக் மந்திரா நிறுவனம் அடிக்கடி நடத்துகிறது. தனது பெண் ஊழியர்களில் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்களுக்கு உதவ, பெங்களூரில் சாட்டிலைட் அலுவலகங்களை இன்போசிஸ் அமைத்துள்ளது.

இதன்மூலம், நீண்ட தூர பயணத்தைத் தவிர்த்து, அவரவர் வீட்டின் அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றலாம். ஐபிஎம் நிறுவனம் ஏற்கனவே பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அலுவலகத்தை ஒட்டி காப்பகம் அமைத்துள்ளது. வேலையின் இடையே அதிகநேரம் வரை குழந்தைகளை சந்திக்க அனுமதித்துள்ளது.
இதற்கிடையே, 2010ம் ஆண்டில் ஐ.டி. துறையின் மொத்த ஊழியர்களில் பெண்கள் எண்ணிக்கை பாதியாக உயரும் என்று நாஸ்காம் கணித்துள்ளது.

தினகரன்

ச: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சீரமைப்பு

மதுரை, ஏப்.11: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ரூ. ஒன்றரை கோடி செலவில் உலக தரத்திற்கு நிகராக சீரமைக்கப்படுவதையட்டி சென்னை தொழில்நுட்ப குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியமாக இருந்து வருகிறது. இதனை ரூ.1 கோடியே 55 லட்சம் செலவில், உலகத்தரத்திற்கு நிகராக அழகுபடுத்தப்படுத்த சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இம்மண்டபத்தின் தரையை செப்பனிடுவது, ஐம்பொன், கற்களால் ஆன சிலைகளை அவற்றின் காலம், சிறப்பு, வரலாற்றுத் தகவல்களுடன் காட்சிக்கு வைப்பது, திருவிளையாடல் புராணம் உள்பட ஓவிய காட்சிகளை வகைப்படுத்தி வைப்பது, நவீன விளக்குகளுடன் காட்சிப் பெட்டிகள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடக்க இருக்கிறது. வெளியிலிருந்து மேலும் பல பழமைப் பொருட்களையும், சிலைகளையும், வரலாற்று ஆவணங்களையும் இந்த அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினகரன்

ச: எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யாக நியமனம்

புதுடெல்லி, ஏப்.11: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், நாட்டிய மேதை கபிலா வத்ஸயாயன் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் கலாம் நியமித்து உள்ளார்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஒருவரின் பதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து ஒரு இடம் காலியாக இருந்தது. அந்த இடத்துக்கு பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 6 ஆண்டு இந்த பதவியில் இருப்பார்.
Ôபசுமைப் புரட்சியின் தந்தைÕ என்று அழைக்கப்படும் சுவாமிநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் விஞ்ஞான ஆலோசனை கமிட்டி, உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்துள்ளார். இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்புக்கான சர்வதேச யூனியனின் தலைவராகவும் பணியாற்றினார்.

தினகரன்

ச: கமலின் தசாவதாரம் படத்துக்கு தடை நீங்கியது

சென்னை : நடிகர் கமலஹாசன் நடிக்கும் "தசாவதாரம்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

நீதிபதி ராமசுப்ரமணியன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

தனது கதையை காப்பி அடித்து இருப்பதாக மனுதாரர் தவறாக கருதியுள்ளார். அதற்கான ஆதாரங்களை அவர் காட்டவில்லை. மேலும் தனது கதையை அப்படியே தயாரிப்பதாக மனுதாரர் நிரூபிக்கவில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்ய இதுவே போதுமானது. படத்தின் கதையை தாக்கல் செய்யுமாறு தயாரிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. அவரும் தாக்கல் செய்தார். இருதரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட கதைகளை படித்து பார்த்தேன். இரண்டும் ஒரே மாதியாக இல்லை. முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. எனவே இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவில் கூறியுள்ளார்.

தினமலர்

ச: பாகிஸ்தான் திரும்புகிறார் பெனாசீர்

பாகிஸ்தானில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள போதிலும், தாம் நாடு திரும்ப போவதாக பெனாசீர் புட்டோ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான புட்டோ, தற்போது லண்டனில் தங்கி உள்ளார்.தனது சுயசரிதையை ஏற்கனவே எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ள பெனாசீர், அந்த புத்தகத்தில் சில பகுதிகளை கூடுதலாக எழுதி அதன் மறுபதிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் மேற்கண்ட தகவலை எழுதியுள்ள அவர், பாகிஸ்தானில் இறங்கிய உடனேயே தாம் கைது செய்யப்படவோ அல்லது படுகொலை செய்யப்படவோ வாய்ப்புள்ளது என்பதை தாம் உணர்ந்துள்ளபோதிலும், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மக்களுடன் தாம் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.

"Yahoo-Tamil"

ச: பிரணாப் முகர்ஜி வீடு திரும்பினார்

புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 10 ஏப்ரல் 2007

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.


"YAHOO - TAMIL"

Tuesday, April 10, 2007

கடனைத் திருப்பித் தரக் கோரி டி. ராஜேந்தர் மீது வழக்கு

சென்னை, ஏப்.10: நடிகர், இயக்குநர் மற்றும் இசை அமைப்பாளர் டி. ராஜேந்தர் ரூ. 34 லட்சம் கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி திருச்சியைச் சேர்ந்த எஸ்.பி. ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

'மோனிஷா என் மோனாலிசா' என்ற திரைப்படத்தை 1998-ல் டி.ராஜேந்தர் தயாரித்தார். இப்படத்துக்காக ரூ.59 லட்சம் நிதி உதவி செய்ததாக தனது மனுவில் கூறியுள்ளார் ராமமூர்த்தி. வாங்கிய கடனில் இன்னும் 34 லட்சம் ரூபாயை டி. ராஜேந்தர் தர வேண்டியிருப்பதாக தனது வழக்கில் அவர் கூறியுள்ளார்.

தற்போது அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை சன் டி.வி.யில் டி. ராஜேந்தர் நடத்துகிறார். இதற்காக அவருக்கு வாரம் ஒரு முறை ரூ.2 லட்சம் சம்பளம் தரப்படுவதாக அறிகிறேன். அத்தொகையில் 75 சதவீதத்தை ஒவ்வொரு வாரமும் எனக்குத் தருமாறு டி. ராஜேந்தருக்கும், சன் டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

- Dinamani

கல்லூரி மாணவிகள் 10 பேரை கடித்துக் குதறிய தெரு நாய்கள்

கல்லூரிக்குத் தேர்வு எழுதச் சென்ற 10 மாணவிகளை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தேர்வைத் தள்ளிவைத்தது.

ஹைதராபாத் கோதி பெண்கள் கல்லூரி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவர்களைச் சுற்றி வளைத்து கடித்துக் குதறத் தொடங்கின. தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக நகராட்சி அலுவலகத்திடம் தகவல் தெரிவித்தனர். நகராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடித்துச் சென்றனர்.

Dogs in biting spree in Hyderabad : stray dogs, Hyderabad, women's college : IBNLive.com : CNN-IBN

இறந்தோர் குடும்பத்தை அரசே தத்தெடுக்கும்: முதல்வர்

சென்னை, ஏப். 10: திண்டிவனத்தை அடுத்த செண்டூர் கிராமத்தில் வெடித்துச் சிதறிய ஜீப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் தான் இருந்தன என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்:

இந்த விபத்தில் 5 கான்கிரீட் வீடுகள், 8 ஓட்டு வீடுகள், 17 குடிசை வீடுகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான 4 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 28 லட்சம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த அனைத்து வீடுகளையும் கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அரசு வேலை: இறந்தவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலித் தொழிலாளிகள். இவர்களை நம்பித்தான் அவர்களது குடும்பம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்தில் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். அத்துடன் குடும்பத்தலைவனை இழந்து வாடும் குடும்பத்தை அரசே தத்தெடுத்து எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

தனிக்குழு: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்கள் பரிந்துரையை ஏற்று அனைத்துக் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

வெடி மருந்துக் கிடங்கு: புதுச்சேரி மணலிபட்டு என்ற இடத்தைச் சேர்ந்த சேகர் (48) என்பவர், மயிலம் பாதிரிபுலியூரில் வெடிமருந்துக் கிடங்கை நடத்தி வருகிறார். அங்கிருந்து கல் குவாரிகளுக்கு வெடிப் பொருள்களை சப்ளை செய்து வருகிறார். "சிவசக்தி எக்ஸ்புளோஸிவ்' என்ற நிறுவனம் அவருக்கு வெடிமருந்துகளை வழங்கி வருகிறது. சனிக்கிழமை வெடித்துச் சிதறிய அந்த ஜீப்பில் 200 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 320 மீட்டர் சேப்ட்டி வயர், 150 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் ஆகியன எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, பாறைகளைத் தகர்க்க அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ஜீப்பிலிருந்து திடீரென புகை வந்ததால், அதை சாலையோரம் நிறுத்தி புகையை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குக் காரணம் என்ன? ஜெலட்டின் குச்சிகளையும், டெட்டனேட்டர்களையும் தனித்தனியே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துச் சென்றதால், அவை ஒன்றோடு ஒன்று உரசி பெரும் விபத்து ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது.

Dinamani

செண்டூர் வெடி விபத்து: ஜெ. கூற்றை ஏற்கிறேன் -கருணாநிதி

சென்னை, ஏப். 10: செண்டூர் வெடி விபத்து போன்ற விபத்துகள் அனைத்து ஆட்சிக் காலத்திலும் நடைபெற்றுள்ளன.

அதிமுக ஆட்சியின்போது ரசாயன பொருள் ஏற்றிவந்த லாரி அரசு பஸ்சுடன் மோதி 54 பேர் உயிரிழந்தனர்.

அப்போது இதே பேரவையில் ஜெயலலிதா,

"இயற்கையாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது மனமாச்சரியங்களுக்கு இடம் கொடுக்காமல், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்,''
என்று குறிப்பிட்டுள்ளார். அக்கூற்றை ஏற்று அதே கருத்தை நானும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கூறினார் கருணாநிதி.

Dinamani

தீவிரவாத செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி

தமிழகத்தில் எந்தவொரு தீவிரவாத அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகளையும் மாநில அரசு பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்காது என்று முதல் அமைச்சர் கருணாநிதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும்விபரங்களுக்கு...

http://content.msn.co.in/Tamil/News/Regional/0704-10-7.htm

ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால் சாகசமாக ஒரு தற்கொலை

ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால், வெறுப்படைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து மீது வேகமாக மோட்டார் சைக்களில் சென்று மோதி தற்கொலை செய்து கொண்டார். இதில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.

முழுவிவரம்...

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர்.

தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.

இடஒதுக்கீடு : மாநில கல்வி அமைச்சர்கள் இன்று ஆலோசனை.

உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது குறித்து டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேங்கும் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாநில கல்வி அமைச்சகர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கால் துவக்கிவைக்கப்படும் இம்மாநாட்டில், உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் பஸ்-ட்ரக் மோதல், 20 பேர் மரணம்

கொழும்புவிற்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் பீர் ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் தீப்பிடித்து 20 பேர் மரணமடைந்தனர்; 40 பேருக்கு காயமேற்பட்டது.

மேலும்..Reuters AlertNet -

ச: Girl gets HIV blood at AIIMS, dies

ஒன்பது வயதுச் சிறுமி ஃபைஜான் அனீமியா வியாதிக்காக தில்லியிலுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டாள். அவளுக்கு இரத்த மாற்றுச் சிகிச்சை நடந்தது. அப்போது அவளுக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தப் பத்து வயதுச் சிறுமிக்கும் எச்.ஐ.வி. தொற்றிக்கொண்டது.

இதனால் ஃபைஜானது தந்தை கோர்ட்டில் நியாயம் கேட்க, தில்லி உயர்நீதிமன்றம் மருத்துவமனையைக் கடுமையாக விமரிசித்ததோடு. ஃபைஜானின் மருத்துவச் செலவு முழுவதையும் அந்த மருத்துவ மனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

இது ஒரு தனித்த சம்பவமல்ல. இன்னொரு சம்பவத்தில் HIVயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொடுக்கப்பட்டதால் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் 17 வயதான ஜோதி என்ற பெண் மரணமடைந்திருக்கிறாள். அவள் டெங்கு ஜுரத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு 20 யூனிட் இரத்தம் (HIV கிருமிகள் கலந்த) கொடுக்கப்பட்டது. ஜோதி நோய் குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவள் தனது பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஆனால் மறுபடியும் அவள் நோய் வயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் HIVயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நிலாச்சாரல்

மேலும்: Two Delhi hospitals under scanner for HIV transmission

Monday, April 9, 2007

திண்டிவனம் வெடிவிபத்து - தேடப்பட்டவர் சரண்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செண்டூரில் கடந்த சனியன்று நிகழந்த ஜீப் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளி சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க வேலூர் மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராஜ்நாத் சிங், அத்வானியை கைது செய்ய போலீசார் மறுப்பு.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய லக்னோ போலீசார் மறுத்து விட்டனர். அக்கட்சியின் பிரச்சார சிடி விவகாரத்தின் எதிரொலியாக இன்று ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்கள் இன்று தானாக முன்வந்து ஹஸ்ராத்காஞ்ச் காவல் நிலையத்தில் கைதாக முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்ய மறுத்தனர்.லக்னோவில் தானாக முன்வந்து கைதாக முற்பட்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, நக்வி மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் சென்றிருந்தனர். இதுகுறித்து, டிஜிபி ஜி.எல்.ஷர்மா செய்தியாளர்களிம் கூறுகையில், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் இல்லை என்பதால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், தான் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

'வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு தத்தெடுக்கும்

வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு தத்தெடுத்து தேவையான உதவிகளை செய்யும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்

மும்பை பெண் இந்திய அழகியாக தேர்வு

ஞாயிறு அன்று நடந்த பன்டலூன்ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் மும்பையைச் சேர்ந்த சாரா ஜேன் முதலிடத்தில் வந்தார். இவர் இந்தியாவிலிருந்து Miss World உலக அழகிப் போட்டிக்கு ்போட்டிக்கு அனுப்பப் படுவார். இரண்டாவதாக தில்லியைச் சேர்ந்த பூஜா குப்தா தேர்வானார். இவர் Miss Universe உலக அழகிப் போட்டிக்கு அனுப்பப் படுவார்.
மூன்றாவது இடம் பெங்களூருவைச் சேர்ந்த பூஜா சிட்கோபகருக்கு கிடைத்தது.


மேலும்..NDTV.com

தில்லி விமானவளாகத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து, பயணிகள் தப்பினர்

ஏர் இந்தியாவின் பாங்காக்- தில்லி விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரப் பகுதி கோளாறை கவனித்த விமானியின் கோரிக்கையால் 'அவசரநிலை' அறிவிக்கப் பட்டு முழுபாதுகாப்புடன் இறக்கப் பட்டது. மெயின் தளத்தில் இறங்கியபிறகு அதனை டாக்ஸி பாதைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் 183 பயணிகளும் அவர்களின் உடமைகளும் ஓடுதளத்திலேயே இறக்கப் பட்டு பிறகு விமானம் டிராக்டர் உதவியால் தள்ளப் பட்டது. அப்போது அதன் முன்சக்கரம் (Nose wheel) ஒடிந்து ஓடுதளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் இந்த ஓடுதளத்தை மற்ற விமானங்கள் பயன்படுத்தமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையிலிருந்து பெரிய கிரேன்கள் வந்தபிறகே விமானத்தை அகற்ற முடியும். இன்று மாலை 3 மணிவரை இந்த நெரிசல் நீடிக்கும் எனத் தெரிகிறது.

Plane blocks runway at Delhi airport, causes delays | Reuters.com

The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...