ராகுல் காந்திதான் உத்தரப்பிர்தேசத்தின் எதிர்காலம் என்றும் உத்தரப்பிரதேசத்தின் புதிய தலைவர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக முதல் முறையாக வந்துள்ள பிரதமர், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவைப் பெருக்கும் உத்தியாக, ராகுல் காந்தியை மையப்படுத்தி பிரசாரம் செய்தார்.
புதிய பாரதத்தைப் படைக்க ராஜீவ் காந்தி 20 ஆண்டுகளுக்கு முன்னால் கனவுகண்டார்; அதே போல உத்தரப் பிரதேசத்தை முன்னேற்ற ராகுல் காந்தி உறுதிபூண்டிருக்கிறார் என பிரதமர் கூறினார்.
இதனிடையே உத்தரபிரதேச மாநில முலாயம் அரசின் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மாநிலத்தில் வேளாண் மற்றும் தொழில்துறைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதற்கு மாநில அரசுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு அளித்த வளர்ச்சி நிதியை மாநில அரசு பயன்படுத்தவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த எந்த அரசும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
Monday, April 16, 2007
ராகுல் காந்திதான் உத்தரப்பிர்தேசத்தின் எதிர்காலம்:பிரதமர் மன்மோகன்.
Posted by
Adirai Media
at
10:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment