.

Monday, April 16, 2007

சட்டசபையில் இன்றும் அதிமுக வெளிநடப்பு.

4 அதிமுக எம்எல்ஏக்களை இந்த பட்ஜெட் கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னதாக அதிமுக துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையில் (செருப்பை காட்டி கலாட்டா செய்தது) 4 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்கள் தங்கள் கடமையை செய்வதிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளனர். புரட்சித் தலைவரை விமர்சித்து பேசியதால் உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சிகாரர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.எனவே சபாநாயகர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...