.

Monday, April 16, 2007

சற்றுமுன்: வேன்மீது மீது ரெயில் மோதி பயங்கரம்: 11 கிராம அதிகாரிகள் பலி

காஞ்சீபுரம், ஏப். 16-

சென்னையில் இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பேரணி நடை பெற உள்ளது. முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இந்தபேரணி நடை பெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 22 கிராம நிர்வாக அதிகாரிகள் இந்த பேரணியில் பங்கேற்க இன்று அதிகாலை ஒரு வேனில் சென்னை புறப்பட்டனர்.

வேலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் சண்முக பரணி தலைமையில் அவர்கள் புறப் பட்டு வந்தனர். காஞ்சீபுரம் அருகே வந்ததும் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள குருஸ்தல மான தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர்.

காலை 9.40 மணி அளவில் வேன் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை நெருங்கி யது. அங்குள்ள ரெயில்வே கேட்டை வேன் கடக்க முயன்றது. அது ஆள் இல்லாத ரெயில்வே `கேட்' ஆகும்.

அந்த சமயத்தில் தூரத்தில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் மின் னல் வேகத்தில் வந்து கொண் டிருந்தது. `ரெயில் தூரத்தில் தானே வருகிறது அதற்குள் கடந்து போய் விடலாம்'' என்ற எண்ணத்தில் வேன் டிரைவர் `கேட்'டை கடக்க முயன்றார்.

அதற்குள் எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கி விட்டது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த ரெயில் வேன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பலத்த சத்தத்துடன் வேன்தூள்- தூளாக நொறுங்கியது. வேனின் பின் பகுதி முழுமையாக நொறுங்கிச் சிதறியது. உடைந்த வேனின் ஒரு பகுதியை ரெயில் 15 மீட்டர் தூரத்துக்கு இழுத் துச் சென்று நின்றது. வேனில் இருந்த 23 பேரும் சின்னா பின்னமாகி

சிதறினார்கள்.இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டு, துண்டாகி சிதறி பலியானார் கள். அவர்களது உடல்கள் ரெயில் தண்டவாளத்தில் ஆங் காங்கே சிதறிக் கிடந்தன. அந்த பகுதியே ரத்த ஆறு ஓடியது போல காட்சி அளித்தது.

மற்ற 11 கிராம அதிகாரிகள் உடல் நசுங்கி படுகாயங்களு டன்துடி துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஐ.ஜி. ராஜா உத் தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா மற்றும் போலீசாரும் மீட்பு படை யினரும் வந்தனர். உயிருக் குப் போராடிக் கொண் டிருந்தவர்களை மீட்டு, மருத் துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தென்னக ரெயில்வே அதிகாரிகளும் சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது.இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியா னோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் புதுப்பாக் கத்தில் உள்ள ஆள் இல்லா ரெயில்வே கேட்டில் சென்னை - திருமால்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆட்டோ மீது மோதி 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாக்கம் விபத்தில் 17 உயிர்கள் பறிபோனதுமே ரெயில்வே அதிகாரிகள் ஆள் இல்லா ரெயில்வே கேட் பகுதிகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று நடந்த பரிதாப உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.


வேனில் வந்த 23 பேர் விபரம்

1. சண்முகபரணி

(செங்காநல்லூர்)

2. புருஷோத்தமன்

(அத்திïர்)

3. மனோகரன்

(அடுக்கம்பாறை)

4. தாண்டவராயன்

(செம்பேடு)

5. பிரபாகரன்

(சேன்பாக்கம்)

6. நாராயணசாமி

(விரிப்பாச்சிபுரம்)

7. நடராஜன் (அரிïர்)

8. தாமோதரன்

(கரடிக்குடி)

9. மதிவாணன்

(மேல்மணவூர்)

10. வெங்கடேசன்

(பெல்லூர்)

11. ராமமூர்த்தி (வல்லம்)

12. எஸ்.குணசேகரன்

(வேலம்பாடி)

13. எம்.குணசேகரன்

(பாலமதி)

14. செல்லபாண்டியன்

(ஊனைவாணியம்பாடி)

15. துரைசாமி

(கனிகனியான்)

16. மேகநாதன்

(மேல் அரசம்பட்டு)

17. பாலகிருஷ்ணன்

18. குமாரசாமி

(இலவம்பாடி)

19. பன்னீர்செல்வம்

(அணைக்கட்டு)

20. நந்தகுமார்

(பெருமுகை)

21. ரவி

(ராமமூர்த்தி மகன்)

22. மோகன்

23. குமார்

(வேன் டிரைவர்)

=மாலைமலர்.

மேலும் தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...