.

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, September 3, 2007

இன்சாட் விண்ணேவல் வெற்றிகரம்: தலைவர்கள் வாழ்த்து.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக் கோள் இன்சாட் 4சி ஆர் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக விண்ணில் மாலை 6.20 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மாதவன் நாயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இன்சாட் - 4 சி ஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Sunday, September 2, 2007

இன்சாட் விண்ணேவல் ஒத்திவைக்கப்பட்டது

இன்சாட்4சிஆர் எனும் செயற்கைக்கோளை விண்ணேற்றும் பணி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரும் செவ்வாய் கிழமைக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னின் முந்தைய செய்தி:

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.


The launch of GSLV delayed Daily News & Analysis
Launch of GSLV rocket postponed due to technical snag Times of India
GSLV launch delayed at Sriharikota NDTV.com

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

தினமலர்

Saturday, September 1, 2007

GSLV-F04 விண்ணேற்றத்திற்கு தயார்நிலை ஆரம்பம்

பூமிக்கு நிலையான வட்டப்பாதையில் துணைக்கோள்களை செலுத்தவல்ல ஜிஎஸ் எல்வி ஏவுகணையை நாளை விண்ணில் இந்திய நேரம் 4:21 மணிக்கு அனுப்ப இன்று மதியம் 2 மணியிலிருந்து எண்ணிக்கை குறைப்பு ஆரம்பமானது. இந்த ஏவுகணை இந்திய தொலைதொடர்பிற்கான துணைக்கோள் இன்சாட்-4CR ஐ ஏற்றிச் செல்லும். இந்த துணைக்கோளில் வீட்டிற்கு நேரடி தொலைக்காட்சி (DTH), வழங்க ஏதுவாக 12 அதிக சக்தி Ku பட்டையில் இயங்கும் ஒளிபரப்பு சாதனங்கள் அமைந்துள்ளன. சென்றமுறை இன்சாட் -4C உடன் செலுத்திய இவ்வித ஏவுகணை பாதியிலேயே தனது சக்தியை இழந்து வீழ்ந்ததின் பின்ன்ணியில் நாளைய விண்ணேற்றம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
The Hindu News Update Service
Zee News - INSAT-4CR launch put off by a day to Sept 2

அறிவியல் இன்று - 01/09/2007

நாஸாவால் மறுதளிக்கப்பட்ட ரஷ்யா,நிலவில் தனியாக தளம் அமைக்க முடிவு
----------------------------------------------------------------------------------------
2025-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை ரஷ்யா பெற்றுவிடும் என்று அந்த நாட்டின் வின்வெளி கழகத்தின் தலைவர் அணாடோலி பெர்மினோவ் (Anatoly Perminov) கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து 2027-2032-க்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் சென்று இருக்கும்படியான தளம் அமைக்கவும் திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட நாஸா (NASA) நிறுவனத்தை அனுகியதாகவும்,ஆனால் அந்த யோசனையை நாஸா நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
சீனா,ஜப்பான்,இந்தியா போன்ற மற்ற நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இங்கே

தட்பவெட்ப மாறுதல்களால் உணவுப்பற்றாக்குறை ஏற்படும்,ஐ.நா விஞ்ஞானி கருத்து.
-------------------------------------------------------------------------------------
-----
உலகில் மாறி வரும் தட்பவெட்ப நிலையினால் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப்பற்றாகுறை ஏற்படலாம் என்று ஐநா சபையின் வானிலை பிரிவின் மூத்த விஞ்ஞானி எம்.வி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் 6.3 பில்லியன் மனிதருக்கு உலகின் 11 விழுக்காடு உள்ள விலைநிலங்களின் மூலம் உணவு உற்பத்தி செய்து வருகிறோம்,2020-இல் உலகத்தின் மக்கட்தொகை 8.3 பில்லியன் ஆகும்போது இப்பொழுதிருப்பதை விட குறைந்த விலைநிலங்கள் கொண்டு எப்படி உணவளிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
விலைநிலங்களில் உப்புத்தன்மை அதிமாவதும்,நிலங்கள் பாலைவனங்களாக மாறுவதும் ஏற்கெனவே நடந்து வருவதாகவும் ,இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பை உணர ஆரம்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.


ஆதாரம்:
http://www.cbc.ca/technology/story/2007/08/31/science-russia-moon.html
http://www.reuters.com/article/scienceNews/idUSL3191845020070831

Friday, August 31, 2007

அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள்

உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டி
------------------------------------------------------------
உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டியை ஜப்பானின் ஷார்ப் (Sharp) நிறுவனம் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது. இந்த தொலைக்காட்சிப்பெட்டியின் தடிமன் வெறும் 20mm-கல் தான். இதை சுவற்றில் ஒரு படம் போல மாட்டிவைக்க முடியும்.
இந்த தொலைக்காட்சிப்பெட்டி எப்பொழுது சந்தையில் விற்கப்படும் என்று தெரிவிக்கபடவில்லை.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இதோ


புற்றுநோய்க்கு ஒரு புது மருந்து
-----------------------------------------
எய்ட்ஸ் நோய்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மருந்து புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய திரன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை பற்றி அறிய இந்த இணைப்பை சொடுக்குங்கள்


ஆதாரம் :
http://www.reuters.com/article/technologyNews/idUSL3050290720070830
http://www.reuters.com/article/scienceNews/idUSN3045790520070831

அறிவியல் இன்று - 31/08/2007

வலைப்பூக்கள் மூலமாக பரப்பப்படும் கணிணி வைரஸ்
--------------------------------------------------------------

வலைப்பூக்கள் மூலமாக இணைய தள சுட்டிகளை இடுகைகளாக இட்டு,அதை சொடுக்கும் பயனர்களின் கணிணிகளில் வைரஸ்களை பரப்பும் ஒரு கும்பல் பற்றிய செய்தி இதோ இந்த பக்கத்தில்

ஒரு ஐபாட் (Ipod) அளவே உள்ள கருவியில் 30,000 திரைப்படங்களை சேமிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------


அணுக்களின் அளவுகளில் பொருட்களை கையாளுவது குறித்த ஆராய்ச்சியை நானோ டெக்னாலஜி (Nanotechnology) என்று ஆங்கிலத்தில் வழங்குவார்கள் . இந்தத்துறையில் ஐ.பி.எம் நிறுவனத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் மூலம் ஒரு ஆப்பிள் ஐபாட் அளவே உள்ள கருவியில் 30000 திரைப்படங்களை உள்ளடக்கும் தொழில்நுட்பம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன.இந்த செய்தியை உள்ளடக்கிய இணையப்பக்கம் இங்கே

இன்னும் சில மாதங்களில் காரில் உண்மையாகவே பறக்கலாம்
------------------------------------------------------------------


தரையில் இருந்து 10 அடி உயரத்தில் பறக்கக்கூடிய கார் ஒன்றை மொலர் இண்டர்நேஷனல் (Moller International) எனும் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ளது.
வருடத்திற்கு 250 கார்கள் எனும் அளவில் தயாரிப்பை தொடங்க உள்ள இந்த நிறுவனம் ,இந்த கார் ஓட்டுவதற்கு சுலபமாகவும் பயணிகளுக்கு நிறைய இடம் கொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.
M 200G என்று அழைக்கப்பட உள்ள இந்த காரின் விலை 90,000 அமெரிக்க டாலர்களாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் குத்து மதிப்பாக 90,000 X 40 = 36,00,000 ரூபாய்கள்.

கம்மியாதான் இருக்குல்ல??
காரை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.
பி.கு:படத்தில் இருப்பது அவர்கள் விற்கப்போகும் காரின் மேம்பட்ட வெளியீடு (advanced version).

ஆதாரம் :
http://news.bbc.co.uk/2/hi/technology/6970368.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSN3046298520070830
http://news.bbc.co.uk/2/hi/business/6970031.stm

படம்:
http://www.21stcentury.co.uk/images/technology/moller_m400_skycar.jpg

Thursday, August 30, 2007

அறிவியல் இன்று - 30/08/2007

சிலந்தி மனிதனை போல் சுவற்றில் ஏறலாம்
--------------------------------------------
புகழ்பெற்ற கேலிச்சித்திர கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை (Spider man) போல வருங்காலத்தில் யார் வேண்டுமானாலும் செங்குத்தான சுவாற்றின் மேல் அனாயாசமாக ஏறலாம். அப்படி நடக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை பற்றிய செய்தி இதோ




உங்கள் தூக்கம் பார்த்து ஏழுப்பி விடக்கூடிய அலாரம்
-----------
----------------------------------------------
நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பாமல் தூக்கம் கம்மியாக இருக்கும் நேரத்தில் எழுப்பி விடக்கூடிய அலாரம் பற்றி தெரிய வேண்டுமா??
இந்த செய்தியை படியுங்கள்.



வயது வித்தியாசம் குழந்தை பெற முக்கியம்
-------------------------------------------------
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் அவர்கள் குழந்தை பெறுவதை பாதிக்கும் என இவற்றை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆஸ்த்திரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்

Wednesday, August 29, 2007

அறிவியல் இன்று - 29/08/2007

உலகின் மிகப்பெரிய வைரம்
------------------------------------

தென் ஆப்பிரக்காவின் ஒரு சுரங்கத்தில் இருந்து உலகத்திலேயே மிகபெரிய வைரம் வெட்டிடுக்கப்பட்டிருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுரங்கத்தின் பங்குதாரர் BBC செய்தி நிறுவனத்திடன் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றை துறையின் வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
முழு செய்தி இங்கே



தெள்ளத்தெளிவான நிலாவின் புகைப்படங்கள்

-----------------------------------------------
1970-களில் அப்போல்லோ வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படங்கள் பலவற்றை அரிசோனா பல்கலைகழகம் ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிட இருக்கிறது.
விரிவான செய்தி இதோ



கோப்புகளை சேமிக்க உலகம் முழுக்க ஒரே ஃபார்மேட்
------------------------------------------------------------------

கணிணியில் கோப்புகளை (documents) "சேமிக்க Open XML" எனும் ஃபார்மேட் (format) ஒன்றினை உலக நியதியாக்க மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை நம்ப முடியாது,வருங்காலத்தில் எல்லோரும் அந்த நிறுவனத்தையே சார்ந்து இருக்கும் நிலையை இது ஏற்படுத்தி விடும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதை பற்றிய செய்தி இதோ

ஆதாரம்:
http://news.bbc.co.uk/1/hi/world/africa/6966540.stm
http://news.bbc.co.uk/1/hi/technology/6966655.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSL2824601520070828

Monday, August 27, 2007

அறிவியல் இன்று - 27/08/2007

அண்டார்ட்டிகாவில் பறக்கும் ரோபோ
------------------------------------------
அண்டார்ட்டிகாவில் அராயச்சி செய்வதற்கு பறக்கும் ரோபோ ஒன்றை சீனா வடிவமைத்துள்ளது. ஹெலிகாப்டரை போல் பறக்கும் திறனுடைய இந்த ரோபோ ,அண்டார்ட்டிகாவில் அலைந்து திரிந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இது போன்று தரையில் ஊர்ந்து /சறுக்கிக்கொண்டு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு ரோபோவும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கிறது.
இதனால் செலவும் உயிர்ச்சேதமும் பெருமளவில் தவிர்க்கப்படும் என்று சீன துருவ ஆராய்ச்சி கழகத்தின் (Polar Research Institute of China) செய்தித்தொடர்பாளர் சின்சாவ (Xinhua) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். விரிவான செய்திகள் இங்கே

இளநிலை உயிரணுக்கள் இதய நோய்களின் தீர்வா??
--------------------------------------------------------

மனிதனின் உடலில் பலவிதமான உயிரணுக்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு உயிரணுக்களும் வித்தியாசமானவை. இவையெல்லாம் ஒவ்வொரு விதமாக மாறுவதற்கு முன் தோன்றும் உயிரணுக்களை இளநிலை உயிரணுக்கள் (Stem cells)என்று அழைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உயிரணுக்களின் உதவியோடு எலிகளின் இதய நோய்களை குணப்படுத்தும் சோதனை முயற்சி ஒன்றில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் வருங்காலத்தில் மனிதனுக்கும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இந்த இளநிலை உயிரணுக்கள் மூலம் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்குறது.
இந்த செய்தி பற்றி மேலும் விவரம் அறிய,இங்கே க்ளிக்குங்கள்.


நன்றி :
http://www.reuters.com/article/technologyNews/idUSPEK27411020070826
http://www.reuters.com/article/scienceNews/idUSN2538161420070826

Sunday, August 26, 2007

அறிவியல் இன்று - 26/08/2007

விண்வெளியில் தங்கும் விடுதி 2012-இல் திறக்கும்
---------------------------------------------------------
அடுத்த முறை விடுமுறையை கழிக்க எங்கு செல்லலாம்???
ஊட்டி,கொடக்கானல்,ஏற்காடு???

பேசாமல் விண்வெளிக்கு சென்றால் என்ன??
"வெறும்" 4 மில்லியன் டாலர்கள்் செலவில் விண்வெளியில் விடுமுறையை கழிக்கலாம். வெறும் 80 நிமிடங்களில் பூமியை சுற்றி வரலாம் மற்றும் நாள் ஒன்றிற்கு 15 முறை சூரியன் உதிப்பதை பார்க்கலாம்,இது போன்று பல்வேறு விஷயங்களை நீங்கள் 2012-இல் இருந்து செய்ய முடியும்.
இது பற்றிய செய்திக்கட்டுரை இதோ

பேரண்டத்தில் ஓட்டை
---------------------------------

இதயத்தில் ஓட்டை,ஓசோன் மண்டலத்தில் ஓட்டை என்று எங்கு பார்த்தாலும் குறை கண்டுபிடித்துக்கொண்டு இருந்த மனிதனுக்கு அடித்தது ஜாக்பாட். அங்கே இங்கே பார்த்துவிட்டு கடைசியில் பேரண்டத்திலேயே (Universe) ஓட்டை இருப்பதாக கண்டுபிடித்து விட்டான்.

அதுவும் கொஞ்ச நஞ்சமில்லை ,இந்த ஓட்டையின் விட்டம் ஒரு பில்லியன் ஒளி வருடங்கள் இருக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஒளி வருடமஎன்பது ஒளி ஒரு வருடம் முழுதும் பயணம் செய்தால் அடையக்கூடிய தூரம். ஏரிடனஸ் (Eridanus) எனும் நட்சத்திரத்தொகுப்பில்(Constellation) காணக்கூடிய இந்த ஓட்டை ,இருக்கக்கூடிய பகுதியில் நட்சத்திரங்கள் ,அண்டங்கள் (Galaxies), Dark matter இப்படி எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கிறதாம். இதுவரை மனிதனுக்கு தெரிந்த வரை மிகப்பெரிய வெற்றிடம் இதுதான்.ஏன் இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.இது பற்றிய மேலும் செய்திகள் இங்கே

சர்க்கரையால் ஆன பேட்டரி
-------------------------------------
பேட்டரி தீர்ந்துவிட்டட்தா?? சமயலறைக்கு சென்று சிறிது சர்க்கரை எடுத்து வந்து நிறப்பிவிட்டால் போதும்!!
"என்ன உளருகிறான் இவன்" என்கிறீர்களா??

ஜப்பான் நிறுவனமான சோனி (Sony) உருவாக்கியிருக்கும் பேட்டரி உங்களிடம் இருந்தால் இப்படி செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் மாசு விளைவிக்காத இந்த விதமான பேட்டரி பற்றிய செய்தி இதோ

நன்றி:
http://www.cnn.com/2007/TECH/08/14/space.hotel.reut/index.html
http://www.reuters.com/article/scienceNews/idUSN2329057520070824
http://www.reuters.com/article/scienceNews/idUSSP22885120070824

Friday, August 24, 2007

பூவுலகில் பூதவுடலை விட்டுப் பிரியும் அனுபவம்

மாய யதார்த்தம் (virtual reality) கொண்டு பூதவுடலுக்கு அப்பால் உணர்வதை, உணர வைப்பதில் அறிவியல் வெற்றி கண்டுள்ளது. மரிக்கும் தறுவாயில் நிகழ்வதாக சொல்லப்பட்ட தரிசனங்களுக்கு விஞ்ஞானம் இதன் மூலம் விடை அளித்து, அனைவரையும் மாய பிம்பங்கள் மூலம் அனுபவிக்கவும் (PSYCHOLOGY: Out-of-Body Experiences Enter the Laboratory -- Science journal :: Print Magazine) வழிவகுத்துள்ளது.

தொலை தூரத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்யவும், வீடியோ விளையாட்டுகளில் புது உத்திகளைக் கொணரவும் இந்த நுட்பம் பயன்படும்.

BBC NEWS | Health | Out-of-body experience recreated
The Science of Out-of-Body Experiences - TIME
Scientists induce out-of-body sensation using virtual reality - International Herald Tribune

Tuesday, August 21, 2007

செப்-1 முதல் புதிய செயற்கைக்கோள் இன்சாட்-4 சிஆர்.

அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான "இன்சாட்-4 சிஆர்' செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி மாலையில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூலையில் "ஜிஎஸ்எல்வி-எப்02' ஏவு வாகனம் (ராக்கெட்) மூலம் "இன்சாட்-4சி' செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ஆனால், அது வெற்றிகரமாக விண்ணுக்குச் செல்லவில்லை.

எனவே, இப்போது இன்சாட்-4 சிஆர் செயற்கைக்கோளைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "வீட்டுக்கே நேரடி ஒளிபரப்பு'க்குப் பயன்படக்கூடிய மற்றும் விடியோ படத் தொகுப்புகள், டிஜிட்டல் தகவல்களை அனுப்ப உதவும் அதிநவீன உயர்திறன் கொண்ட 12 கியூ-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் இச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள்.

"கடந்த முறை நமது முயற்சி தோல்வி அடைந்ததால், இப்போது, அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

தினமணியிலிருந்து..

Monday, August 13, 2007

123 உடன்பாடு: பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி உடன்பாட்டினால் நமது பாதுகாப்பு சுதந்திரம் பாதிக்கப்படாது என்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு இடையீடும் வராது என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மக்களவையில் நிகழ்த்திய உரையில் கூறினார். பலத்த கோஷங்களுக்கிடையே தன் உரையை நிகழ்த்திய அவர் இந்திய அணுசக்தி பரிசோதனைகளையோ இராணுவ நடவடிக்கைகளையோ இந்த ஒப்பந்தம் பாதிக்காது என்றும் கூறினார்.் வெளியுறவுக் கொள்கையில் இந்திய அரசின் நேர்மைபற்றி மற்ற நாடுகள் வைத்திருக்கும் அளவாவது தம் அரசின் மீது குறைகாணுபவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றார்.
அவரது உரையின் மற்ற விவரங்களுக்கு....The Hindu News Update Service

அவரது மக்களவை பேச்சின் முழு உரைவடிவம்:

Wednesday, August 8, 2007

123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்

பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டியதில்லை என்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்டு பேரம் பேசபோவதில்லை என்றும் பிரதமரின் அலுவலகம் CNN/IBN க்கு தெரிவித்துள்ளது. திங்களன்று பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இதனை அறிவிப்பார் என்றும் அப்போது பிஜேபி மற்றும் இடது கட்சிகளின் கவலைகளுக்கு பதிலளிப்பார் என்றும் பிரதமர் அலுவலகத்தினர் கூறினர்.

மேலும்....IBNLive.com > UPA won't turn Left, says N-deal on right track :

Tuesday, August 7, 2007

புதிய பெரிய கோள் கண்டுபிடிப்பு

அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக் கோள் உள்ளது. நமது சூரிய மண்டலத்திலுள்ள வியாழனை விட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள் எழுபது மடங்கு பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விண் பௌதிகப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

டிரெஸ்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள்தான் மனித வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கோளாகும். மூன்று தொலை நோக்கிகளை கொண்டு இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இரண்டு அமெரிக்காவிலும் ஒன்று கனேரித் தீவிலும் உள்ளன. இந்தக் கோள் அருகாமையிலுள்ள நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது, அந்த நட்சத்திரத்தின் ஒளியை எவ்வாறு மறைக்கிறது என்பதை அளந்து அதன் அடிப்படையில் இந்தப் புதிய கோளின் அளவை கணித்துள்ளார்கள்.

ஆனாலும் டிரெஸ்-4 எனப்படும் இந்தப் புதிய கோள் வியாழனிடமிருந்து பலவகையில் மாறுபடுகிறது. அது அளவில் பெரியதாக இருந்தாலும் எடை குறைந்தே காணப்படுகிறது. வியாழன் ஒரு குளிர்ந்த கோள். ஆனால் இந்தப் புதிய கோளின் வெப்பநிலை 1300 டிகிரி செல்சியஸ் அளவிலுள்ளது.

இந்தப் புதிய கோளானது அதனைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் மீது குறைந்த அளவே ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதால், அந்தக் காற்றுப் பகுதி அண்டவெளியில் ஒரு வால் நட்சத்திரம் போன்று வளைந்து வெளியேறக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்

தமிழ் பிபிசி

BBC NEWS | Science/Nature | Team finds largest exoplanet yet
ScienceDaily: Largest Transiting Extrasolar Planet Found Around A Distant Star
ABC News: Scientists Discover Largest Known Planet Outside of Solar System

உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகிய 4 கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன.

ஐஐடி 57-வது இடத்தையும், ஐஐஎம் 68-வது இடத்தையும், ஜவாகர்லால் நேரு பல்கலை. 183-வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள 3703 கல்வி நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைசிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், தலைசிறந்த 100 அறிவியல் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 33-வது இடத்தையும் ஐஐடி பிடித்துள்ளது. கலைப் படிப்புகளைப் பொருத்தவரையில், தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் தில்லி பல்கலைக்கழகம் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி

Deccan Herald - Four Indian institutions in world university rankings
IITs 57th in list of world's top varsities :: Economic Times

Saturday, August 4, 2007

செவ்வாய் பயணத்தை துவங்கியது பீனிக்ஸ்

நாசா நிறுவனம் தனது கேப் கானவெரால் நிலையத்திலிருந்து டெல்ட்டா இராக்கெட் மூலமாக பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செல்லுமுகமாக இன்று கிழக்கு அமெரிக்க நேரப்படி காலை 0526க்கு ஏவியது. ஒன்பது மாதங்கள் பயணித்து செவ்வாய் கிரகத்தை இக்கலம் அடையும். அங்கு தரையை அகழ்ந்து முந்தைய,தற்போதைய உயிர் வாழ்வைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும். பூமியின் அலாஸ்காவைப் போன்ற ஒரு தரைபிரதேசத்தில் இதனை தரையிறக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில செ.மீ ஆழத்திலேயே தண்ணீர் உறைந்து ஐஸாக இருப்பதாக நம்பப் படுகிறது.

இது பற்றிய BBC NEWS செய்தி துணுக்கு | Science/Nature | Lift off for Nasa's Mars probe

Friday, August 3, 2007

சிவதாணுப் பிள்ளைக்கு திலகர் விருது

அறிவியல் அறிஞரும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை செயல் அலுவலருமான சிவதாணுப் பிள்ளைக்கு 2007-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

திலகரின் 87-வது நினைவு நாளை முன்னிட்டு புணே நகரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், திலகரின் கொள்ளுப் பேரன் தீபக் திலக் இந்த விருதை சிவதாணுப் பிள்ளைக்கு வழங்கினார்.

திலகர் விருது பெறுபவருக்கு தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது.

தினமணி

India a strategic power, says Pillai-Pune-Cities-The Times of India: "Noted scientist and chief executive officer of BrahMos Aerospace A. Sivathanu Pillai accepted the prestigious Lokmanya Tilak award from Deepak Tilak, chairman of the Lokmanya Tilak Memorial Trust, in the presence of Union energy minister Sushilkumar Shinde and scientist Vasant Gowariker."

Monday, July 23, 2007

உலகளாவியா இயற்பியல் ஒலிம்பிக்ஸ்:இந்திய மாணவர்கள் சாதனை

உலகளாவிய இயற்பியல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய மாணவர்கள் நால்வர் வெற்றிப்பதக்கங்களைப் பெற்று சாதனை செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரைச் சார்ந்த ராம் ஷர்மா தெராதுன்னைச் சார்ந்த ரோஹித் சிங் இருவரும் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் மேலும் இருவர் வெள்ளி பதக்கங்களையும் வென்றனர்.

70 நாடுகளைச் சார்ந்த 326 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்தது.

Indian students excel at Physics Olympiad - The Hindu

-o❢o-

b r e a k i n g   n e w s...