.

Thursday, March 22, 2007

சற்றுமுன்: ரிலையன்ஸ் காய்கறி கடைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் காய்கறி வியாபாரிகள் நாளை கடையடைப்பு

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் "ரிலையன்ஸ் ப்ரெஷ்" காய்கரி கடைகளை எதிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள காய்கரி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் 12-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை திறந்து உள்ளது. இந்தக் கடைகளால் தங்களது வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான "வால்மார்ட்" போன்றவையு தமிழகத்தில் சில்லறை விற்பனையில் ஈடுபட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்...

மேலும்..

சற்றுமுன்: திரைப்படத்தால் விபரீதம் : பள்ளிமானவன் தீக்குளிப்பு

சேலம் நகரில் பள்ளி மாணவன் தீக்குளித்து இறந்தான். அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் வருவது போல் சாகசம் செய்ய நினைத்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

கமலக்கண்ணன்(13) தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். செவ்வாய் கிழமை வீட்டில் தனியே இருந்த அவன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, அலறியபடி வெள்யில் ஓடி வந்துள்ளான், அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு கமலக்கண்ணன் இறந்தான். அண்மையில் வெளியான ஆங்கிலத்திரைபடத்தில் ஒருவர் தீப்பிடித்த உடலோடு மோட்டார் சைக்கிள் ஓட்டிவரும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்போல தானும் செய்ய வேண்டும் என்று கமலக்கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளான்.

நன்றி :-தினமணி

சற்றுமுன்: தமிழகம் - பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது


சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக 13வது சட்டசபையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வரகூர் பழனிவேலு மேட்டூர் சுந்தராம்பாள் இளையாங்குடி மலைக்கண்ணன் குளச்சல் சாமிதாஸ் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் மதுரை மேற்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் 23ம் தேதி(நாளை) சபை கூடியதும் நிதியமைச்சர் அன்பழகன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் உரை முடிந்ததும் அலுவல் ஆய்வு குழுக்கூட்டம் கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாட்களில் வைத்துக் கொள்வது என்பது பற்றி முடிவு செய்யும்.

தினமலர்

சற்றுமுன்: உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவுகள்

புதன், 21 March 2007
ஐசிசி உலகக் கோப்பை
பங்களாதேஷ்: 112 ( 37.0 ஓவரில்)
ஸ்ரீலங்கா: 318-4 ( 50.0 ஓவரில்)
ஸ்ரீலங்கா பங்களாதேசத்தை 198 ரன்களில் தோற்கடித்தது (மழை காரணமாக வெற்றி இலக்கு குறைக்கப் பட்டது.)
ஸ்கோர் விவரம் ஆட்ட விவரம்

பாகிஸ்தான்: 349 ( 49.5 ஓவரில்)
சிம்பாப்வே: 99 ( 19.1 ஓவரில்)
பாகிஸ்தான் சிம்பாப்வே வை 93 ரன்களில் தோற்கடித்தது.(மழை காரணமாக வெற்றி இலக்கு குறைக்கப் பட்டது.)
ஸ்கோர் விவரம் ஆட்டவிவரம்

நன்றி: BBC Sports

சற்றுமுன்:ஈரான்-பாக்-இந்தியா எண்ணை குழாய் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

ஈரானிலிருந்து பாக்கிஸ்த்தான் வழியாக இந்தியாவுக்கு எரிபொருள் எண்ணை கொண்டுவரும் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதக் கொள்கைக்கு ஆதரவளிக்கும் எதையும் ஆதரிக்கப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

US opposes gas pipeline from Iran to India
Asked why the US is opposed to the pipeline, Bodman said, "We believe that Iran is seeking to develop nuclear weapons, and anything that will support that endeavour is something that we oppose."

சற்றுமுன்: மாணவனை அடித்துக் காயப்படுத்திய தலமை ஆசிரியருக்கு சிறை

பூனே பள்ளி ஒன்றின் தலமை ஆசிரியருக்கு மாணவர் ஒஅருவரை அடித்து செயலிழக்கச் செய்ததற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

School principal sentenced for beating student
In a landmark order, the principal of a Pune school has been sentenced to a year in jail for beating a student so brutally that his arm was paralysed.
Munir Patel remembers the day, eleven years ago when he lost the use of his right arm.Munir, then an 8th standard student of Pune's Vinay High School, was beaten by his principal Ujawal Andrews for not studying and for causing trouble in class.
He was beaten on the head so badly that he collapsed with severe internal injuries to the head.

சற்றுமுன்:பாப் உல்மர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார், ஊடக செய்தி

ஜமைக்கா ரேடியோ தகவலின்படி பாப் உல்மர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. அவர் கழுத்தில் நெரிக்கப்பட்டதன் தடங்கள் பதிந்திருந்ததாகச் செய்தி சொல்கிறது.

Woolmer strangulated, says media report
In a fresh twist to the Bob Woolmer case, Radio Jamaica reported on Wednesday that the former Pakistan coach was strangulated. It said strangulation marks were found on Woolmer's neck.

சற்றுமுன்: முதல்வர் கருணாநிதி கர்நாடகத்துடன் 'கா' !

சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன் இன்னும் 10 நாட்களில் பேச்சு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கருணாநிதி தனக்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும் குமாரசாமி கூறியிருந்தார்.

இதற்கு கருணாநிதி இன்று மறுப்பு தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவெ கௌடா எனது நீண்ட நாளைய நண்பர். அவருக்கும், அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமிக்கும் நான் உகாதி வாழ்த்து தொடர்பாகத்தான் செய்தி அனுப்பினேன்.

நான் அனுப்பிய செய்தி முழுக்க முழுக்க உகாதி தொடர்பானதுதான். காவிரி தொடர்பானது அல்ல. எனவே கர்நாடகத்துடன் பேச்சு நடத்த நான் தயாராக இருப்பதாக குமாரசாமி கூறியிருந்தால் அது தவறானது, அதை செய்தியாக வெளியிட்டால் மிக மிக தவறானது.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்தப்பட மாட்டாது என்றார் கருணாநிதி.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் பாமக அதுதொடர்பாக சட்டசபையில் பிரச்சினை எழுப்பினால் எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, பிரச்சினை எழுப்பினால் அதை சந்திப்போம் என்றார் கருணாநிதி.

சற்றுமுன்:இந்தியாவில் ஏழ்மை 4.3% குறைந்துள்ளது

National Sample Survey(NSS) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஏழ்மை 1999-2000 கணக்கெடுப்பைவிட 2004-2005 கணக்கெடுப்பில் 4.3% குறைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 23,85,00,000 பேர் (21.8%) மோசமான நிலையில் வாழ்வதாகத் தெரிகிறது.

Poverty declines to 21.8 per cent: NSS
Poverty in India has declined to 21.8 per cent in 2004-05 from 26.1 per cent in 1999-2000, a report of the National Sample Survey (NSS) released by the Planning Commission said on Wednesday.

The decline in poverty was comparatively much more steep in rural areas, where the percentage of people living below poverty line fell to 21.8 per cent (2004-05) from 27.1 per cent (1999-00).

In urban areas, percentage of people living below poverty line fell to 21.7 per cent (2004-05) from 23.6 per cent (1999-00), according to the NSS estimates based on the Mixed Recall Period (MRP)-consumption distribution data.

The number of people living below poverty was estimated at 238.5 million -- 170.3 million in rural areas and 68.2 million in urban areas -- out of the over one billion population.

சற்றுமுன்:சைனாவில் ப்ரொபசர் ரமணா

ரமணா திரைப்படத்தில் வருவதுபோல ஒன்றை சைனாவில் சில பத்திரிகையாளர்கள் செய்துள்ளனர்.

மருத்துவமனைகள் நோயாளிகளை கொள்ளையடிப்பதை நிரூபிக்க சிறுநீருக்குப் பதில் தேநீரை(Tea) சோதனைக்கு அளித்ததில் 10ல் 6 மருத்துவமனைகள் சிறுநீரில் infection உள்ளது என ரிப்போர்ட் வழங்கியுள்ளன.

5 மருத்துவமனைகள் $50 மதிப்புள்ள மருந்துக்களை ப்ரிஸ்க்ரைப் செய்துள்ளன.

Scandal brews over China tea-for-urine samples
A group of Chinese reporters came up with a novel idea to test how greedy local hospitals were -- pass off tea as urine samples and submit the drink for tests.

The results: six out of 10 hospitals in Hangzhou, the capital of the rich coastal province of Zhejiang, visited by the reporters over a two-day period this month concluded that the patients' urinal tracts were infected.

Five of the hospitals prescribed medication costing up to 400 yuan ($50), the online edition of the semi-official China News Service (www.chinanews.com) said in a report seen on Wednesday. Of the hospitals, four were state-owned.

"It makes one shiver all over even though it's not cold," the China News Service said after its reporters and colleagues from Zhejiang Television tested the hospitals.

-o❢o-

b r e a k i n g   n e w s...