.

Thursday, March 22, 2007

சற்றுமுன்: திரைப்படத்தால் விபரீதம் : பள்ளிமானவன் தீக்குளிப்பு

சேலம் நகரில் பள்ளி மாணவன் தீக்குளித்து இறந்தான். அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் வருவது போல் சாகசம் செய்ய நினைத்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

கமலக்கண்ணன்(13) தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். செவ்வாய் கிழமை வீட்டில் தனியே இருந்த அவன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, அலறியபடி வெள்யில் ஓடி வந்துள்ளான், அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு கமலக்கண்ணன் இறந்தான். அண்மையில் வெளியான ஆங்கிலத்திரைபடத்தில் ஒருவர் தீப்பிடித்த உடலோடு மோட்டார் சைக்கிள் ஓட்டிவரும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்போல தானும் செய்ய வேண்டும் என்று கமலக்கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளான்.

நன்றி :-தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...