.

Sunday, May 6, 2007

ச: கௌஹாத்தியில் குண்டு வெடிப்பு: 12 பேர் காயம்

அசாமின் முக்கியநகரான கௌஹாத்தியில் மக்கள் நெரிசல்மிக்க கடைத்தெருவில் இன்று குண்டு வெடிப்பில் இரு துணைராணுவத்தினர் உட்பட, குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிகிறது.

மேலும்..Blast in Guwahati injures 12, including 2 troopers- Hindustan Times

வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு


பசுபதி,பிரியங்கா,பரத்,பாவ்னா நடித்து இயக்குனர் ஷங்கர் தாரிப்பில் வெளியான 'வெய்யில்' படம் 'மற்றமொழிப்படங்களில் மிகச்சிறந்தது' என்ற வகையில் கேரளாவில் அம்ரிதா விருதைப் பெற்றுள்ளது. அதே நேரம் பிரான்ஸின் மதிப்புமிக்க கான்( Cannes) திரைப்பட விழாவில் இந்திய திரைபடங்களின் சார்பாக பங்குபெற தெர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.


IndiaGlitz - Veyyil gets one more award - Tamil Movie News

ச: நொறுங்கிய விமானத்தில் பயணித்த இந்தியர்கள்

இந்திய அரசு ஞாயிறன்று கென்யா ஏர்லைன்ஸில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்ததாக எண்ணப்படும் இந்திய பயணிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
1. நிக்லி ஷிர்லி (Nigli Shirly)
2. நிக்லி கெவின் ஜோசஃப் (Nigili Kewin Joseph)
3.ஜோர்ஜ் ஜோசஃப் கோச்சேரி (George Joseph Kocherry)
4. மரியா ஜோசஃப் (Maria Joseph)
5. கிரேசி மானுவல் (Gracey Manuel)
6. அமன் கௌர் (Aman Gaur)
7. பிரகாசம் சுந்தரராமன் (Prakam Sundaraman)
8. திருமதி பாக்யா மதுசூதன் (Mrs Bhagya Madhusudhan)
9. செல்வி பூஜிதா மதுசூதன் (Ms Poojitha Madhusudhan)
10. திரு மதுசூதன் (Mr Madhusudhan)
11. மேரி ரூபி (Mary Ruby)
12. அமோல் சௌஹான் (Amol Chauhan)
13. திரு நளகாத் கிரீசன் (Mr Nalakath Gireesan).
14. திருமதி மீரா ஷா) Mrs Meera Shah

இதில் திரு அமோல் சௌஹான் பார்லே குடிபானங்கள் நிறுவனத்தின் டைரக்டர் ஆவார்.

மேலுமறிய....DNA - India - Names of Indians on Kenyan plane that crashed - Daily News & Analysis

ச: உலகின் பெரிய பயணிகள் விமானம் A380 இந்தியா வந்தது !

இந்திய வான்வெளி வரலாற்றில் முதல்முறையாக உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 தில்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமானதாவளத்தில் தரையிறங்கியது. இரண்டு தட்டுகளில் 850 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த விமானம் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் இரண்டாம் வருட கொண்டாட்டங்களின் அங்கமாக இன்று காலை இந்திய நேரம் 10.50க்கு பிரான்ஸின் துலூஸிலிருந்து வந்திறங்கியதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. விமானநிலையத்தின் அண்மையில் செல்லும் NH 8 சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Airbus 380's maiden trip to India - Deccan Herald - Internet Edition

இன்று ஐம்பது - நாவல் "Atlas Shrugged " by Ayn Rand

தத்துவ இயலை கருவாக கொண்டு வெளிவந்த நாவலாசிரியர் Ayn Rand ன் ஆங்கில நாவல், "Atlas Shrugged" இன்று தன் ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1957 ல் வெளியிடபட்ட இந்த புத்தகம் மக்களிடையே பரவலாக படிக்க பட்ட ஒன்றாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி சில கருத்துக்களை படிக்க


http://www.ocregister.com/ocregister/opinion/atoz/article_1681164.php

http://www.ocregister.com/ocregister/opinion/atoz/article_1681148.php

போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாததால் மக்களவை ஒத்திவைப்பு

புதுதில்லி, மே 5: போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், வெள்ளிக்கிழமை மாலை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை மாலை பட்டினி சாவுகளைத் தடுப்பது குறித்தப் பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் சிந்தா மோகன் கிளப்பினார்.

ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன: மத்திய அரசு தகவல்

புதுதில்லி, மே 5: நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன; இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன என சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி கூறியுள்ளார்:

குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையுடன் பிறத்தல், வயிற்றுப் போக்கு, மலேரியா, சின்னம்மை, மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளே பிறந்த ஓராண்டுக்குள் குழந்தைகளின் இறப்புக்கு அதிக அளவில் காரணமாகின்றன.

குழந்தைகள் இறப்பு உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என யுனிசெப் (ஐ.நா. குழந்தைகள் நிதியம்) அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன.

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...