.

Thursday, July 26, 2007

நடுவானில் விமானத்தில் இறந்த குழந்தை.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மொரீசியசில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் கிரண் முகமது (35), அவரது மனைவி செய்யது பீவி (30) ஆகியோர் பயணம் செய்தனர்.

தங்களது 5 மாத குழந்தை ஹைதர்அலிக்கு இருதய கோளாறு தொடர்பான சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் குழந்தை ஹைதர் அலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

இது பற்றி பெற்றோர் விமானியிடம் கூறினார்கள். அவர் விமானநிலைய அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் அங்கு வர வழைக்கப்பட்டனர்.

விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும் குழந்தை ஹைதர்அலியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது குழந்தை நடுவானில் வைத்தே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்டதும் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அங்கேயே குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடுத்த விமானத்திலேயே மொரீசியசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாலைமலர்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: மேலும் 2 கல்லூரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கிறார்களா என்பது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னையில் ஒரு தனியார் சுயநிதி என்ஜினீயரிங் (St Joseph's Engineering College) கல்லூரியிலும் நாமக்கல் அருகே ஒரு என்ஜினீயரிங் கல்லூரியிலும் ( King's College of Technology) அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த கல்லூரிகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு செட்டிநாடு மருத்துவ கல்லூரியிலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரியிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப கல்வி இயக்கக தொடர்பு அதிகாரி மோகனசுந்தரம் தலைமையில் ஒரு குழு அந்த என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அந்த கல்லூரி நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல், சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கலாநிதி, மருத்துவத்துறை இணை இயக்குர் டாக்டர் சுகுமாறன், பிசியாலஜி துறைத் தலைவர் ஜெலீசியா ஆகியோர் தலைமையிலான குழு காஞ்சீபுரம் அருகேயுள்ள மருத்துவ கல்லூரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தது.

தினத்தந்தி

The Hindu News :: TN Govt initiates crackdown on colleges
Chennai Online News Service - 'TN law favours self-financing colleges'

'சென்னை-28' பட விழாவையொட்டி 32 அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம், 'சென்னை-28.' இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, விழா கொண்டாடப்படுகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் விழா நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, 32 அணிகள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இரவு-பகல் ஆட்டமாக இந்த போட்டிகள் நடைபெறும். இதில், 384 வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிகள், ஆகஸ்டு 4-ந் தேதி மாலை முடிவடையும். வெற்றி பெறும் அணியுடன் 'சென்னை-28' படத்தில் நடித்த கிரிக்கெட் அணி மோதும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

விழாவில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் நிறுவனம், ஹலோ எப்.எம். நிறுவனம் ஆகியவை செய்து வருகின்றன.

இந்த தகவல்களை 'சென்னை-28' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், டைரக்டர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.

தினத்தந்தி

IndiaGlitz - Cricket carnival for Chennai 600028 - Tamil Movie News

1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியது

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ளது திருமால்பூர் கிராமம். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க மணிகண்டீஸ்வரர் சிவன்கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

இந்த கோவில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. திருமால் சிவபெருமானிடம் வேண்டி சுதர்சன சக்கரம் பெற்றதனால் இந்த ஊர் திருமால்பேறு என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தற்போது திருமால்பூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் 70 அடி உயர ராஜகோபுரம் உள்ளது

நேற்று மாலை 5 மணியளவில் திருமால்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது மணிகண்டீஸ்வரர் கோவிலின் 70 அடி உயர ராஜகோபுரம் மீது பலத்த இடி தாக்கியது.

இதில் ராஜகோபுரத்தின் மேல்பகுதி உடைந்து அதில் இருந்த செங்கற்கள் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு விழுந்தன. ராஜகோபுரத்தின் மேல் உள்ள 5 கலசங்களும் சேதம் அடைந்தன. ராஜகோபுரத்தை சுற்றி பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இடிதாக்கியதால் ராஜகோபுரத்தின் மேல்பகுதி கருகிய நிலையில் உள்ளது.

தினத்தந்தி

'இறந்தவர்' உயிருடன் திரும்பினார்

வாராணசி அருகே ஒரு கிராமம்.

அது ஒரு சவ ஊர்வலம்.
இறந்தவர் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர். கல்லு (லல்லு அல்ல)யாதவ் என்பது அவர் பெயர்.

கடந்த செவ்வாய் இரவு அவருடைய நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் அடங்கிப்போயிருந்தது.

சில மணி நேரங்களுக்குப்பின்னர், உறவினர்களும், கிராமத்தினரும் துக்கத்துடன் அவரை எரியூட்ட சவகட்டிலில் சுமந்துச்செல்கின்றனர்.

மெதுவாக உணர்வு திரும்பிய அவர் கேட்கிறார்: "என்னை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள்?"
ஏதோ துக்க நினைப்பில் இருந்த உறவினர்கள் "இறந்துவிட்டீர்கள், எரியூட்ட எடுத்துச்செல்கின்றோம்" என்றுச்சொல்ல "என்ன, என்னை உயிருடன் எரியூட்டப்போகிறீர்களா?" என்று கத்துகிறார்.

துக்க உணர்விலிருந்து நிதானத்து வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

காட்டுத்தீயாகப் பரவிய இச்செய்தி 'சற்றுமுன்'னையும் வந்தடைந்தது.

பி/டி/ஐ

நீதிபதிகளை கழுதை என்று திட்டியவர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில், தனது பதவிநீக்க வழக்கை விசாரித்து வரும் இரண்டு நீதிபதிகளை 'மூளை இல்லாதவர்கள்' என்றும் 'கழுதை' என்றும் திட்டிய ஒரு முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.... பி/டி/ஐ

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரணை.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதே நேரத்தில் இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இந்த விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி தொடங்குவது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடையை நீக்கும்படி மத்திய அரசு மனு செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

மாலைமலர்

"பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு போராடுவேன்" - கனிமொழி

எம்.பி.யாக பதவி ஏற்ற பின் கனிமொழி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் எம்.பி.யாக பொறுப்பு ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயமும் உள்ளது.

அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வதே எனது லட்சியம்.

தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பெண் உரிமைக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பாடு படுவேன்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

நன்றி: மாலைமலர்

தேவகோட்டை அருகே வன்முறை; பதட்டம்

தேவகோட்டை கருதாவூரை சேர்ந்த வேன் டிரைவர் வீரப்பன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இன்று இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர்

திருமணமாகாதவருக்கு சாராயம் கொடுத்து "கு.க" ஆபரேஷன்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 26-

திருமணம் ஆகாத எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துவிட்டார் என சுகாதார ஆய்வாளர் மீது நெசவுத் தொழிலாளி ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). நெசவுத் தொழிலாளி. இவர், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

நெசவுத் தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எனக்கு உடல் உபாதை ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள், எனக்கு ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெலமங்கலம் சுகாதார ஆய்வாளராக இருந்தவர், எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்தார். போதையில் இருந்த எனக்கு அப்போது அவர் சிகிச்சை அளித்தார். அவர்தான் ஏமாற்றி எனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வைத்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு புகாரில் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெங்கடேசுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்ட ஜனநாயக இளைஞர் அணியினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். வாலிபரை ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துண்டு நோட்டீஸ்கள் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கெலமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி:

நன்றி: தமிழ் முரசு

துபாய்: குர்ஆன் விருது விழா

துபாயில் நடைபெற உள்ள துபாய் சர்வதேச புனித குரான் விருது விழாவில் 40 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்க முன் வந்துள்ளன. இந்த விருதுக்கான ஏற்பாட்டுக்குழு கூட்டம் அதன் தலைவர் இப்ராகிம் பு மெல்ஹா தலைமையில் அல் தல்வார் மையத்தில் நடைபெற்ற போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

பிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆணை.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 1995ம் ஆண்டு கொடைக்கானலில் ராகேஷ் மிட்டல் என்பவர் பிளசன்ட்ஸ் ஸ்டே என்ற பெயரில் ஓட்டல் கட்டினார். ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த ஓட்டல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து பழனிமலை பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முகாபாத்யாயா, சுகுணா ஆகியோர் விசாரித்து வந்தனர். 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 6 மாடிகள் கொண்ட பிளசன்ட்ஸ் ஸ்டே ஓட்டல் விதிமுறை மீறி சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் மாடிக்கு மட்டுமே முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 4 மாடிகளை 6 மாத காலத்துக்குள் இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விதிமீறலுக்கு துணைபோகும் விதமாக திருத்தப்பட்ட நகராட்சி சட்டம் 3வது பிரிவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளசன்ட்ஸ் ஸ்டே உழல் வழக்கில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

விருந்தினர் மாளிகையில் திடீர் பவர்கட்: கலாம் தவிப்பு

சென்னை, ஜூலை 26-

கார் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழ்கத்திற்கு கலாம் சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் இருந்தனர். விருந்தினர் மாளிகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு இரவு 11 மணிக்குச் சென்றார். பின்னர் அறையில் இருந்த நைட் லேம்ப்பை ஆன் செய்தார். அப்போது, திடீரென்று கரன்ட் கட்டானது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சிடையந்தனர்.


பதறிப்போன பாதுகாப்பு அதிகாரிகள் உடனே கலாமை சூழ்ந்து கொண்டு அவரை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து அங்கு தங்க வேண்டாம் என்று கூறி ராஜ்பவனில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உடனே அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் குடியரசு தலைவரும், அணுசக்தி விஞ்ஞானி என்பதாலும் அவருக்கு இசட்பிளஸ் என்ற உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மின்தடை, அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. உடனே நடத்தப்பட்ட விசாரணையில், கலாமுக்கு ஒதுக்கப்பட்ட அறை கொண்ட கட்டிடம் பழமையானது. அவரது வருகைக்காக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. அவருக்கு தேவையான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியவர்கள், மின்சார கேபிள் வயர்கள் பழுதடைந்ததை கவனிக்கவில்லை.


மேலும் நேற்று கலாம் வருகிறார் என்பதால் பல்கலை. வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓவர்லோடு காரணமாக வயர்கள் எரிந்து கரன்ட் கட்டாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பவர்கட் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திக்கு தமிழ் முரசு

இந்திய இராணுவ தலைமை தளபதியாக தீபக் கபூர் நியமனம்

லெஃப்டினன் ட் ஜெனரல் தீபக் கபூர் நமது இராணுவத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 30இல் பணிஓய்வு பெறும் ஜேஜே சிங்கிடமிருந்து பதவி ஏற்பார். இந்தப் பதவியை ஏற்பதற்கு ஏதுவாக பிப்.2005இலிருந்தே வடக்கு மண்டல தளபதியாகவும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து துணை தலைமை தளபதியாகவும் பதவி வகித்து வருகிறார்.

அமைச்சரவையின் நியமனகுழு வதந்திகள் ஏதும் வருமுன்னரே இந்தப்பதவிக்கு தன் பரிந்துரையை கொடுத்துவிட்டது.

Lt Gen Deepak Kapoor to be next army chief

கிரண்பேடி விவகாரம்: அடிமட்ட காவலர்கள் ஏமாற்றம்

கிரண்பேடிக்கு பதவி கொடுக்காமல் யுத்பீர் சிங் தட்வாலுக்கு தில்லி காவல் தலைவராக பதவி கொடுத்ததை ் பணிஓய்வு பெற்ற மற்றும் பணிபுரியும் உயர்அதிகாரிகள் வரவேற்கையில் காவலர்கள், தலைமை காவலர்கள், துணைஆய்வாளர்கள்,ஆய்வாளர்கள் இடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிதிகளை மதித்து நேர்மையான ஒரு காவல் அதிகாரிக்கு அவர் உண்மையைப் பேசுவதால் பதவி மறுக்கப் பட்டுள்ளது என பெயர்சொல்ல மறுத்த காவலர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அறிய.....Kiran Bedi episode sparks a class divide in Delhi Police - Daily News & Analysis

பாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு போட்டி

வழக்கமான மற்றும் மாறுபட்ட அணு ஆயுதங்களை ஏற்றி 700 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதனை ஓட்டம் விட்டது. இது பாகிஸ்தானின் முன்னேற்பாட்டை ஒருங்குபடுத்தி நாட்டின் பாதுகாப்பை வலுவாக்கும் என பாதுகாப்புதுறை அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் காரணமாக அமைந்த விஞ்ஞானிகளை அதிபர் முஷரஃப்பும் பிரதமர் சௌகத் அசீஸும் பாராட்டினர். இந்த சோதனை பற்றி இந்தியாவிற்கு முன்னதாக தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள உடன்பாடு தானே விழும் (ballistic missile) ஏவுகணைகளுக்கே பொருந்தும். பாபர் தரையிலுள்ள ரடார் மூலம் முழுவதும் கட்டுப்பாட்டிலுள்ள (Cruise missile) ஏவுகணையாகும்.

IBNLive.com > Pak test-fires Babur missile, the rival to Brahmos :

கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்கள்.
அவருடன் திருச்சி சிவாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி இராஜாவும் மாநிலங்களவை துணைத்தலைவர் இரகுமான்கான் அறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜி கே வாசன், நாடாளுமன்ற செயல்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, அஹ்மத் படேல் ஆகியோரும் உடனிருந்தனர்.


NDTV.com: Kanimozhi, D Raja take oath

கோவா: கவிழ்கிறது காங்கிரஸ் அரசு?

கோவாவில் 2 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களை பிடித்து இருந்தது. அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2 இடங்களில் வென்ற மராத்திய கோமந்த் கட்சி, 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதன் மூலம் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர் சுலேமா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்டோரியா பெர்னாண்டஸ் ஆகியோர் விலகி விட்டனர். மராத்திய கோமந்த் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வும் விலகி உள்ளார். மொத்தத்தில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வந்த 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி உள்ளனர்.

இதனால் காங்கிரசின் பலம் 17 ஆக குறைந்து மைனாரிட்டி ஆகி உள்ளது. எனவே காங் கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே 14 எம்.எல்.ஏ.க்களுடன் உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி உள்ள 5 பேரும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு கட்சிகளை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளனர். தற்போது சபாநாயகராக இருக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.வும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பாரதீய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் முதல்- மந்திரி திகாம்பர் காமத் தனது அரசு இப்போதும் முழு மெஜாரிட்டி பலத்துடன் இருப்பதாக கூறி உள்ளார்.

கோவாவில் கடந்த 17 ஆண்டுகளில் 14 தடவை அரசு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாலைமலர்

கனிமொழிக்கு மந்திரி பதவி; ராகுலுக்கும் முக்கியத்துவம்.

விரைவில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டெல்லி மேல்சபை தலைவராக இருக்கும் ரகுமான்கான் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார். அவர் துணை ஜனாதிபதியானால் டெல்லி மேல்சபை தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இரு பதவிகளிலும் முஸ்லிம் இருப்பதை தவிர்க்கும் வகையில் ரகுமான்கானை மத்திய மந்திரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ரகுமான்கானுக்கு பதில் மேல் சபை துணை தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளன. இதில் சுரேஷ் பச்சவுரிக்கு துணை தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

மத்தியமந்திரி மணிசங்கர் அய்யரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. அவர் பஞ்சாயத்து ராஜ் மற்றும் விளையாட்டு இளைஞர் விவகாரத்துறையை கவனித்து வருகிறார். ஆசிய விளை யாட்டு போட்டி தொடர்பாக மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் காரணமாக அவரிடம் இருந்து விளையாட்டு இளைஞர் விவகாரத்துறையை எடுத்து விட்டு பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக மட்டும் இருப்பார் என்று தெரிகிறது.

மத்திய மந்திரிசபை மாற்றத்தின்போது கனிமொழி எம்.பி.யும் மத்திய மந்திரியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப இலாகா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்பு தயாநிதி மாறன் வசம் இருந்த இந்த இலாகாவை அவர் நீக்கத்திக்கு பிறகு மத்திய மந்திர ராசா கவனித்து வருகிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேஜாஸ்வானி ரமேசும், மத்திய மந்திரி ஆகிறார். இவர் ஹாசன் எம்.பி. தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை தோற்கடித்தவர்.

ராஜஸ்தான் கவர்னராக இருந்த பிரதீபாபட்டீல் ஜனாதிபதி ஆகிவிட்டதால் அவருக்கு பதில் காங்கிரஸ் கட்சியைக் சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் கவர்னராக நியமிக்கப் படுகிறார்.

இது குறித்து சோனியாகாந்தி தீவிரமாக பரிசிலித்து வருகிறார். இது தவிர கட்சியில் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் செய்யும், புதிதாக சிலரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்.

கட்சியில் இளைஞர்களை ஊக்கு விக்கும் வகையில் ராகுல்காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. தற்போது எம்.பி.யாக மட்டுமே இருக்கும் ராகுல் காந்தி கட்சியில் தீவிரமாக பணியாற்றும் வகையில் அவருக்கு பொது செயலாளர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ராகுலுக்கு கட்சியில் முக்கியதுவம் அளிக்க வேண்டும் என்று சோனியா விடம் தலைவர்கள் பலர் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு சோனியாவும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது போல் உத்தரபிரதேச மாநில காங்கிரசிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சல்மான் குர்ஷித் மாற்றப்பட்டு அவருக்கு பதில் புதிய தலைவர் நியமிக் கப்படுகிறார். சல்மான் குர்ஷித்துக்கு தேசிய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

மாலைமலர்

கருணாநிதிக்கு கொலை மிரட்டல்.

திருப்பூர் தாசில்தாருக்கு நேற்று காலை ஒரு தபால் கார்டு வந்தது. அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த கடிதம் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தில் எழுப்பட்டிருந்த வாசகங்கள் வருமாறு:-

தமிழ்நாடு போலீஸ் பணி யில் சேர வயது வரம்பு 24-ல் இருந்து 29-ஆக உயர்த்த மறுத்துள்ளதால், ஆகஸ்டு 15-ல் கோட்டையில் கொடியேற்றும் முதல்வர் கருணாநிதியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தி.மு.க. கொடி அரைக் கம்பத்தில் பறப்பது உறுதி.

29-ந் தேதி நடக்கும் போலீஸ் தேர்வில் குண்டு வெடிக்கும். இது அல்லாவின் ஆணை-அல் உம்மா இயக்கம்.

அல் உம்மா இயக்கம் சார்பில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. கோவை தலைமை தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தின் முத்திரையில் நேற்று முன்தினம் தேதி உள்ளது. நேற்று காலை திருப்பூர் தபால் நிலையத்தில் பெறப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாசில்தார் அந்த கடிதத்தை கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ. கவனத்துக்கு கொண்டு சென் றார்.

பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

மாலைமலர்

இந்தியா: மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?

இந்தியாவின் நடுவண் அரசு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு ஒரு ரூபாயும் விலை குறைப்பு செய்தது. அதன் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பாரல் ஒன்றுக்கு 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஆனால் கடந்த 6 மாதங்களாக இவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 193 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி நீண்ட நாட்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவது சிரமமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. எனவே விரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.



இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி முரளி தியோரா நேற்று டெல்லியில் கூறும்போது, "நீண்ட காலமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படாமல் இருக்கிறது. குறைந்த விலையில் இவற்றை விற்பதன் காரணமாக ஒரு நாளைக்கு 193 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சுமையை நாம் எவ்வளவு நாள்தான் சுமந்து கொண்டிருப்பது?.. எனவே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு தொடர்பாக மத்திய நிதி மந்திரியுடன் பேச்சு வார்த்தையும் நடத்தினேன்'' என்று சொன்னார்.

வேறு ஏதேனும் இது தொடர்பாக யோசனைகள் தெரிவிக்கப்பட்டதா? என்று முரளி தியோராவிடம் கேட்டபோது, "இறக்குமதி வரியை குறைப்பது மற்றும் நிலையான விலையை நிர்ணயித்தல் போன்றவை பற்றி பேசப்பட்டது. எனினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆலோசனை தொடர்ந்து நடத்தப்படும். இது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் இடது சாரி தலைவர்களிடமும் தொடர்பு கொள்ளப் பட்டிருக்கிறது'' என்று கூறினார்.

நன்றி: தினத்தந்தி

திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்!

அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ஈரோடு சி.எஸ்.ஐ.பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பான ஒரே தலைவர் கருணாநிதிதான். சட்டசபையில் பொன்விழா கொண்டாடும் திமுக தலைவர், சட்டசபை தேர்தலில் ஒரு முறைகூட தோற்றதில்லை. பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்று ஜெயலலிதா கூறுகிறார். அண்ணாவால் உருவாக்கப்பட்ட பாச உணர்வு உள்ள குடும்பம்தான் திமுக. இந்த கழகத்தை பூண்டோடு அழித்துவிடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். திமுகவை அழிக்க முடியாது. எப்போதும் இந்த கழகம் அழியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநங்கைகள் போராட்டம்



பெண்ணாக மாற அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் நேற்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நன்றி:

"தினகரன்"

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! கலாமுக்கு புகழாரம் - கலைஞர் கவிதை

சென்னை, ஜூலை 26: முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:


அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்
அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்
பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு: பூரிப்பு தாங்காமல்
“பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு
பொருத்தமான மகுடம்தான் இதுÕÕ என்று
புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையன்று
கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது-இராமேசுவரம்
கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையலித்து
ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!
கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல:
காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த-இந்த
அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த
நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு-
இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!
இல்லை: ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!
இனிது வாழ்க: என்றும் வாழ்க! வாழ்க!!

நன்றி:

"தினகரன்"

நீதிபதியை "சார்" என அழைத்தால் போதும்

சேலம், ஜூலை 26: நீதிபதிகளை "அய்யா" அல்லது "சார்" என அழைத்தால் போதும். "மை லார்டு, யுவர் ஆனர்" என அழைக்க வேண்டாம் என வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நீதி நிர்வாகம் ஆங்கிலேயேர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் பணியாற்றும் நீதிபதிகளை "மை லார்டு, யுவர் ஆனர், ஹானரபள் கோர்ட்" என வக்கீல்கள் அழைத்து வருகின்றனர். நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை மாற்ற இந்திய பார் கவுன்சில் முன் வந்தது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளை ஆங்கிலத்தில் "சார்" என்றோ அல்லது இது போன்ற அர்த்தம் வரும்படி அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப அழைக்கலாம். இதன்படி தமிழில் நீதிபதிகளை "அய்யா" என்று கூறலாம் என வக்கீல்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் இன்னும் பழைய முறையிலேயே நீதிபதிகளை அழைத்து வருகின்றனர். பார் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடைபிடிக்கும்படி வக்கீல்களை பார் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதனை பின்பற்றுவதில் வக்கீல்கள் இடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. மூத்த வக்கீல்கள் பழைய முறைப்படியே நீதிபதிகளை அழைக்கின்றனர். புதிதாக வருகிறவர்கள் வேண்டுமானால் "சார்" என அழைக்கட்டும் என கூறுகின்றனர்.
இதுகுறித்து சேலம் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் வி.ஆர்.சந்திரசேகர் கூறுகையில், ‘‘பார் கவுன்சில் கூறியபடி "மிஸ்டர் ஜட்ஜ்" என்றோ மரியாதைக்குரிய நீதிபதி என்றோ அழைப்பதில் தவறு இல்லை. காலம் காலமாய் வழக்கத்தில் இருந்த ஒன்றை உடனடியாக மாற்றுவதில் சிரமம் இருக்கலாம். அதே நேரத்தில் காலத்திற்கு ஏற்ப மாறுவதிலும் தவறு கிடையாது’’ என்றார்.

நன்றி:

"தினகரன்"

மேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்

கடந்த ஓராண்டாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகம் (எய்ம்ஸ்) மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, கடந்த 8 நாள்களாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்போக்கு டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைப்பு என்ற போர்வையின் கீழ் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு எய்ம்ஸ் இயக்குனர் பி. வேணுகோபாலுக்கு, தேசிய எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எய்ம்ஸ் பேராசிரியர்கள், உள்ளுறை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப்பிரச்னை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபாலுடன், தேசிய எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் தலைவர் பூடா சிங் இம்மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

எய்ம்ஸ்-ஸின் 'ஃபுளோட்டிங் ரிசர்வேஷன்' கொள்கை சட்டவிரோதமானது என்று பூடா சிங் கூறியுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மீது பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் சக்தி குமார் குப்தா. 1993-ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எய்ம்ஸ் முழுமையாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

Govt asks AIIMS to give it information regarding reserved posts - India - The Times of India
The Hindu News :: Govt. to amend law governing AIIMS, PGIMER
News From Sahara Samay:: HC notice to Ramadoss, Thorat

இட்லியிலிருந்து ஊத்தப்பத்துக்கு...

குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பதவியேற்றதை அடுத்து, சுவையான ஊத்தப்பம் செய்யும் பணியில் ராஷ்டிரபதி பவன் சமையல் கலைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

"அப்துல் கலாம் இட்லி, தோசை, சாம்பார் வகைகளையே விரும்பி உண்பார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த வரை ராஷ்டிரபதி பவன் "டைனிங் டேபிள்' தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றால் நிரம்பி வழியும்" என்று நினைவு கூர்ந்தார் ராஷ்டிரபதி பவன் மூத்த அதிகாரி.

72 வயதான பிரதிபா பாட்டீலுக்கு பிடித்த உணவு ஊத்தப்பம் மற்றும் பருப்புக் கூட்டு. அவருக்குப் பிடிக்காதது கீரை மற்றும் உருளைக்கிழங்கு.

"பிரதிபாவுக்கு எளிமையான உணவுதான் மிகவும் பிடிக்கும். எண்ணெய் மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் சேர்க்காமல் சமைத்த உணவை அவர் விரும்பி உண்பார்" என்றார் ஜெய்ப்பூர் ஆளுநர் மாளிகை தலைமை சமையல் கலைஞர் கைலாஷ்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, ராஷ்டிரபதி தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார். அதாவது, ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சமையல் செய்யப்படும் பொது சமையல் கூடத்திலேயே, தனக்கும் சமையல் செய்ய வேண்டும். தனக்காக தனி சமையல் கூடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

அதே போல், இரவில் தான் உணவு சாப்பிடும் வரை மற்ற ஊழியர்கள் காத்திருக்கக் கூடாது. உணவு பரிமாறுவதற்கு ஒருவர் மட்டும் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தார்.

கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, அவரிடம் 4 ஆண்டுகள் செயலராக இருந்த பி.எம். நாயர் கூறியது:

வழக்கமாக நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்குத் தான் கலாம் தூங்கச் செல்வார். இருந்தாலும் காலை 6.30 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்.

கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.

தினமணி

மலேசிய வலைப்பதிவர்கள் மீது கெடிபிடி முடுக்கிவிடப்பட்டது

இஸ்லாம் அல்லது மலேசிய அரசரை புண்படுத்தும் வலைப்பதிவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் ஏவப்படும் என்று மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவின் பொடா போல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் வழக்கு தொடுக்காமலும் வெகுகாலம் சிறையில் வைக்க இந்த சட்டங்கள் உதவுகிறது.

மலேசியாவில் பொதுத்தேர்தல் வரப்போகும் சமயத்தில், விமர்சனங்களை மட்டுறுத்தும் வகையில் இந்த செய்கை இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஜொனாதன் கென்ட் (Jonathan Kent) கருத்து தெரிவித்துள்ளார்.

BBC NEWS | Asia-Pacific | Malaysia cracks down on bloggers

ஃபேஸ்புக் மீது மோசடி வழக்கு

உலகெங்கும் உள்ள கல்லூரி நண்பர்களையும் முன்னாள் சகாக்காளையும் ஃபேஸ்புக் கை கோர்க்கிறது. ஹார்வர்டில் படித்தபோது, இந்தத் தளத்திற்கான எண்ணத்தை தங்களிடமிருந்து திருடிவிட்டதாக ConnectU வழக்குத் தொடுத்திருக்கிறது.

2002- ஆம் ஆண்டு கேம்ரானும் (Cameron) டைலரும் (Tyler Winklevoss) திவ்யா நரேந்தாவும் (Divya Narenda) கணினி நிரலி எழுத மார்க்கை (Mark Zuckerberg) தொடர்பு கொண்டார்கள். இணைய தளத்திற்கான நிரலை அப்போது எழுதாமல் தட்டிக் கழித்த மார்க், சில காலங்கழித்து நுட்பத்திற்கான திட்டத்தை களவாண்டு ஃபேஸ்புக் துவங்கினார் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.


BBC NEWS | Business | Facebook site faces fraud claim

-o❢o-

b r e a k i n g   n e w s...