.

Thursday, July 26, 2007

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! கலாமுக்கு புகழாரம் - கலைஞர் கவிதை

சென்னை, ஜூலை 26: முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:


அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்
அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்
பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு: பூரிப்பு தாங்காமல்
“பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு
பொருத்தமான மகுடம்தான் இதுÕÕ என்று
புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையன்று
கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது-இராமேசுவரம்
கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையலித்து
ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!
கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல:
காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த-இந்த
அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த
நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு-
இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!
இல்லை: ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!
இனிது வாழ்க: என்றும் வாழ்க! வாழ்க!!

நன்றி:

"தினகரன்"

2 comments:

Anonymous said...

poiyane karunanithiye un ethayam sithara pohirathu miha viraivil.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படி நாக்கைப் புரட்ட உலகில் இவர் ஒருவரால் தான் முடியும்.
இந்த வயதில் இருக்கக் கூடாத இயல்பு.
இதை எழுதி தன்னையே கேவலப்படுத்தியுள்ளார்.
ஐயா கலாமுக்குக் குறையொன்றுமில்லை.

-o❢o-

b r e a k i n g   n e w s...