.

Thursday, July 26, 2007

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரணை.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதே நேரத்தில் இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இந்த விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி தொடங்குவது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடையை நீக்கும்படி மத்திய அரசு மனு செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...