.

Thursday, July 26, 2007

கோவா: கவிழ்கிறது காங்கிரஸ் அரசு?

கோவாவில் 2 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களை பிடித்து இருந்தது. அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2 இடங்களில் வென்ற மராத்திய கோமந்த் கட்சி, 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதன் மூலம் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர் சுலேமா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்டோரியா பெர்னாண்டஸ் ஆகியோர் விலகி விட்டனர். மராத்திய கோமந்த் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வும் விலகி உள்ளார். மொத்தத்தில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வந்த 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி உள்ளனர்.

இதனால் காங்கிரசின் பலம் 17 ஆக குறைந்து மைனாரிட்டி ஆகி உள்ளது. எனவே காங் கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே 14 எம்.எல்.ஏ.க்களுடன் உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி உள்ள 5 பேரும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு கட்சிகளை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளனர். தற்போது சபாநாயகராக இருக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.வும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பாரதீய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் முதல்- மந்திரி திகாம்பர் காமத் தனது அரசு இப்போதும் முழு மெஜாரிட்டி பலத்துடன் இருப்பதாக கூறி உள்ளார்.

கோவாவில் கடந்த 17 ஆண்டுகளில் 14 தடவை அரசு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...