.

Thursday, July 26, 2007

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: மேலும் 2 கல்லூரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கிறார்களா என்பது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னையில் ஒரு தனியார் சுயநிதி என்ஜினீயரிங் (St Joseph's Engineering College) கல்லூரியிலும் நாமக்கல் அருகே ஒரு என்ஜினீயரிங் கல்லூரியிலும் ( King's College of Technology) அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த கல்லூரிகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு செட்டிநாடு மருத்துவ கல்லூரியிலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரியிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப கல்வி இயக்கக தொடர்பு அதிகாரி மோகனசுந்தரம் தலைமையில் ஒரு குழு அந்த என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அந்த கல்லூரி நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல், சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கலாநிதி, மருத்துவத்துறை இணை இயக்குர் டாக்டர் சுகுமாறன், பிசியாலஜி துறைத் தலைவர் ஜெலீசியா ஆகியோர் தலைமையிலான குழு காஞ்சீபுரம் அருகேயுள்ள மருத்துவ கல்லூரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தது.

தினத்தந்தி

The Hindu News :: TN Govt initiates crackdown on colleges
Chennai Online News Service - 'TN law favours self-financing colleges'

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...