.

Monday, July 30, 2007

'புனர்நிர்மாணப் பணிகளில் இராக் அரசு தோல்வி'

பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஈராக் மீள்கட்டமைப்பு திட்டங்களை பொறுப்பேற்று நிறைவேற்றுவதில், ஈராக் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாக, இராக் புனர்நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈராக் மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களை, ஈராக்கிய அரசின் ஒப்புதல் இல்லாமலே, அமெரிக்க அரசு மாற்றி அமைப்பதாகவும், இந்த நிறுவனத்தின் தணிக்கைக் குழுவின் அறிக்கை கண்டுபிடித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் தற்போதைய தவறான மேலாண்மையும், அதில் நடக்கும் ஊழலும் தொடர அனுமதிக்கக் கூடாது என்று, ஈராக்கிற்கான அமெரிக்கச் சிறப்பு தலைமை கண்காணிப்புத் தலைவர் ஸ்டூவர்ட் பொவ்ன், பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நிலைமைகளை இரண்டாவது உள்நாட்டுக் கிளர்ச்சியாக அவர் வர்ணித்தார்.

பல லட்சக்கணக்கான டாலர்களைச் செலவழித்து உருவாக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையம், இராக்கிய நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட பிறகு செயற்படாமல் போனதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

BBC Tamil

Report Finds Dire Humanitarian Crisis in Iraq - New York Times
8 million Iraqis need urgent aid, report says | Iraq | Guardian Unlimited
OXFAM/NCCI REPORT IN FULL - Rising to the humanitarian challenge in Iraq (324KB)

மாணவர்களை கண்ணீர்விட வைப்பதா? - பாடகி பி.சுசீலா



திருச்சி, ஜூலை 30-

இசைப் போட்டி நடத்தி மாணவர்களின் மனதைக் காயப்படுத்துவதை டி.வி. சேனல்கள் கைவிட வேண்டும் என பின்னணி பாடகி பி. சுசீலா வேதனையுடன் கூறினார்.

திருச்சியில் சேவை அமைப்புகள் சார்பில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் பின்னணி பாடகி சுசீலா பேசியது:

சமீபகாலமாக டி.வி.க்கள் சிலவற்றில் நடத்தப்படும் இசைபோட்டிகளுக்கு நடுவர்களாக என்போன்ற இசைத்துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பதை விட அதிக சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து கடினமாக உழைக்கின்றனர்.
போட்டியின் முடிவில் மூவர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். பரிசு கிடைக்காத மாணவர் மற்றும் பெற்றோர்கள் கண்ணீரின் திரும்புவதை காண முடிகிறது. இது வேதனை தருவதாக உள்ளது.

இவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வாய்ப்புகள் பெற்றுத்தருமானால் இளைஞர்களுக்குப் பயனாக இருக்கும்.

இதுபோல டெல்லியில் சில டி.வி. சேனல்கள் இசைநிகழ்ச்சிகளை நடத்தி அதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளனர். இதேபோன்று தமிழ் சேனல்களும் முயலவேண்டும்.

இளைஞர்களுக்கு பயன்படாத நிகழ்ச்சிகள் என்றால் அதற்கு தடை விதிக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை நடுவராக பணியாற்ற பல நிறுவனங்கள் அழைத்தும் அதை மறுத்துவிட்டேன்.

இவ்வாறு சுசீலா கூறினார்.


படம், செய்தி:

நன்றி:
"தமிழ் முரசு"

ஹனீஃபிடம் மன்னிப்பு கோரமாட்டோம் - அவுஸ்த்ரேலியா

அவுஸ்த்ரேலிய பிரதமர் ஹோவர்ட் இன்று தவறாக தீவிர்ரவாதி என பிடித்து வைக்கப்பட்டு விடூவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபிடம் மன்னிப்புக் கோரமாட்டோம் என திட்டவட்டமாக அரிவித்துள்ளார். தவறுகள் அவ்வப்போது நிகழத்தான் செய்யும் என்றும் தீவிரவாதத்தை கையாளுகையில் 9அதீத கவனட்த்தால்) தவறிழைப்பது (தாக்குதலுக்குப் பின்) வருந்துவதை விட மேலானது என அவர் தெரிவித்துள்ளார்.

Australia not to apologise to Haneef: Howard - The Hindu

ஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை

ஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

கட்டணம் ஏதும் இல்லை. அழைப்பிதழ் தேவை இல்லை. இங்கு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொண்டால் பட்டறையைத் திட்டமிட உதவும். குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கீழ்கண்ட தலைப்புக்கள் விளக்கப்படவிருக்கின்றன.

  • வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
  • பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
  • புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
  • பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
  • பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.

சற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.

மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்

ஸ்டான்ஃபோர்டில் சானியா: ஒற்றையரில் தோல்வி, இரட்டையரில் வெற்றி

ஸ்டான்ஃபோர்டில் சானியா மிர்சாவின் வெற்றிபயணம் ஒற்றையர் ஆட்ட இறுதிப் போட்டியில் முதல் தரவரிசை ஆட்டக்காரர் அன்னா சாக்வெடஸிடம் தடைபட்டது. உருசிய வீராங்கனையிடம் 6-3,6-2 என்ற கணக்கில் $600,000 மதிப்புள்ள வெஸ்ட் பாங்க் கிளாசிக் போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

இருப்பினும் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆறுதலாக இஸ்ரேலின் ஷகர் பீருடன் உருசிய பெலாரஸ் ஜோடியை 6-4,7-6(5) என்ற கணக்கில் வென்றார்.

The Hindu News Update Service

அரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா

டாடாவின் டைடானியம் டையாக்ஸைட் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக அரசின் அறிவிப்பு அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுசெயலர் ஜெ ஜெயலலிதா கூறினார். தாங்கள் ஆட்சியில் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலனுக்காக பாடுபடும் கட்சி என்பது உறுதியாகியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

இதுபற்றிய The Hindu News Update Service

டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கருணாநிதி

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், விவசாயிகளின் நலன் கருதி இந்த தொழிற்சாலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் வெளியான அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அப்பகுதி மக்களின் கருத்தறிந்த பிறகே இந்த தொழிற்சாலை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

MSN Tamil

Karunanidhi to take final call on Tata project
The Hindu News :: Govt. decision, a victory for AIADMK: Jayalalithaa

ஸ்வீடிஷ் இயக்குனர் இங்மார் பெர்க்மன் மறைவு

பிரபல ஸ்வீடிஷ் பட இயக்குனர் இங்க்மார் பெர்க்மன் தனது 89 வயதில் இன்று இயற்கை மரணமடைந்தார்.

Ingmar Bergman passes away

வரதட்சணையாக 'மெர்சிடீஸ்' கார்: அர்ஜுன்சிங் மீது வழக்கு

நடுவண் அரசின் மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் மீதும் அவரது மனைவி பீனா சிங், மகன் அபிமன்யூ சிங், பேரன் அபிஜீத்சிங் ஆகியோரின் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று மொரதாபாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது அமைச்சர் தான் குடும்ப விதயங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.
அர்ஜுன்சிங்கின் பேரனின் மனைவி பிரியங்காவிடம் அவரது கணவர் குடும்பத்தினர் மெர்சிடீஸ் காரும் அடுக்கக குடியிருப்பும் கேட்டு துன்புறுத்தியதாக பிரியங்காவின் தந்தை மத்வேந்தர் சிங் கொடுத்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதியப் பட்டுள்ளது.

IBNLive.com > Dowry case against Arjun Singh for 'demanding' Mercedes : Arjun Singh, Dowry, Madhvendra Singh

கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று துவங்கியது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக கலெக்டர்கள் மாநாடு இன்று காலை துவங்கியது. சென்னை தலைமைசெயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கருத்தரங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு மாநாடு துவங்கியது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். நாளையும் மாநாடு தொடர்ந்து நடைபெறும் என தலமைகழக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

கோவா: காங். அரசு தப்பியது

திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை வென்று தனது ஆட்சிக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பியது. கட்சி மாறிய தனது மூன்று எம் எல் ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு முன்னதாக காங். மனு கொடுத்திருந்தது. அவைத்தலைவர் பிரதாப்சிங் ரானே அம்மூவரையும் வாக்களிக்க விலக்கிவைத்தார். இதனால் அவையின் வாக்கிடுவோர்் எண்ணிக்கை 40இலிருந்து 37ஆக குறைந்தது. அவைத்தலைவரின் வாக்கையும் கணக்கில் கொண்டு மயிரிழையில் அரசு பிழைத்தது.

NDTV.com: Goa: Kamat govt survives floor test

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்: SCயில் பொதுநல வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர் அசோக் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் பொதுநலவழக்கொன்றை பதிந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் படியே தலமைநீதிபதி எந்தவொரு உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதியை நியமிக்க முடியும். ஆனால் அசோக் குமாரின் நியமனத்தை இந்த உயர்மட்டக்குழு பரிந்துரைக்காத போதும் தலைமை நீதிபதி நீதியரசர் கே ஜி பாலகிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார். நீதியரசர்கள் அர்ஜித் பசயத் மற்றும் டிகே ஜைன் அடங்கிய பெஞ்ச் அரசை 1999 இலிருந்து இதுவரை வெவ்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு ஆணையிட்ட நியமனங்களின் விவரங்களை குறித்த அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

IBNLive.com > Madras HC judge chosen despite SC objection, PIL filed : Supreme Court, judge, appointement, CJI Balakrishnan, Madras High Court, Collegium, PIL

-o❢o-

b r e a k i n g   n e w s...