.

Wednesday, May 16, 2007

ச:பாட்னாவில் இரயிலைத் தள்ளிய பயணிகள்

பாட்னாவில் திடீரெனெ நின்ற மின்சார இரயிலை ஓட்டுநரின் வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கணக்கான பயணிகள் இறங்கி தள்ளினர்.

ஓடிக்கொண்டிருந்த இரயிலில் பயணி ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததில் இரயில் மின்சாரம் பெற இயலாத 'நியூற்றல் ஜோன்'ல் (Neutral Zone) நின்றது. அரைமணி நேரம் முயற்சித்து 12 அடிகள் தள்ளியபின் பயணம் தொடர்ந்தது.


Train passengers asked to get out and push Reuters

ச:திரை அரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: புதிய படங்களுக்கு சிக்கல்

இனிமேல் புதிய படங்களை சதவீத அடிப்படையில் தான் திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி துõக்கியுள்ளது. இதனால் ரஜினியின் சிவாஜி, அஜீத்தின் கிரீடம், கமலின் தசாவதாரம் உள்ளிட்ட புதிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர்

ச:விஜயகாந்த் மண்டபம் இடிக்கும் பணி ஆரம்பித்தது

விஜயகாந்த் மனைவி பெயரில் இருக்கும் ஆண்டாள் அழகர் திருமணமண்டபம் மற்றும் தே.மு.தி.கவின் கட்சி அலுவலகமுமான கட்டிடம் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்படவுள்ளது. கட்டிடத்தை இடிப்பதற்கான அளவுகள் இன்று எடுத்து குறிக்கப்பட்டன.

கட்டிட இடிப்பு பணிகள் நாளை காலை 8 மணிக்கு துவங்குகின்றன. இன்று நெடுஞ்சாலைத்துறை வேலை செய்யும்போது கட்சித் தொண்டர்கள் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர் சிலர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர் அவர்களை விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் பின்னர் கலைந்து போகச் சொன்னார்.

தினமலர்

ச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும்

மும்பையில் ஜூன் 8 அன்று வரவேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமான தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு முன்னதாக, அதாவது இம்மாதம் 24 ம் தேதியன்றே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் கடந்த 10 ம் தேதியன்றே தென்மேற்கு பருவ மழை மையம் கொண்டு விட்டது.அதாவது வழக்கமான தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முன்னதாகவே இந்த மழை மையம் கொண்டு விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடலோரப் பகுதிகளில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உபி தோல்விக்கு அமைப்பு கோளாறே காரணம் - சோனியா.

அமைப்பு ரீதியான கோளாறுதான் உத்தர பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
எனினும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகுமாறு கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இந்தத் தேர்தலில் மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சியின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்த போதிலும் அதனை வாக்குகளாக மாற்றும் அளவுக்கு அமைப்பு பலமாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ச: லாவோஸில் பூகம்பம்: பாங்காக், ஹனாய் கட்டிடங்கள் பாதிப்பு

இன்று வடக்கு லாவோசில் 6.1 ரிச்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 800 கி.மீ தொலைவிலுள்ள பாங்காக் நகரிலும் ஹனாய் நகரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன. கடைகளிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறினார்கள்; அலுவலக கட்டிடங்கள் காலி செய்யப் பட்டன. கிரீன்விச் நேரப்படி காலை 0856 ( இந்திய நேரம் 1426)க்கு லாவோசின் தலைநகர் லுஅங் ப்ரபாங்கிலிருந்து 148 கி.மீ தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க கணிப்பு மையம் தெரிவிக்கிறது.

Laos earthquake shakes Bangkok, Hanoi buildings

ச: இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்த இந்திய குடும்பம்: US

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பணக்காரப் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர இந்தியக் கணவன் - மனைவி இரண்டு இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்து துன்புறுத்தியதாக கைது செய்யப் பட்டுள்ளனர்.

மஹேந்தர் சபானி மற்றும் அவர் மனைவி வர்ஷா நறுமண வியாபாரம் செய்துவந்தனர். அவர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய இந்த அடிமைகலை வைத்திருந்ததாகவும் அவர்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் குற்றம் சாடப்பட்டுள்ளனர்.

அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட்டுல்ள அமெரிக்காவில் அவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டால் 17இலிருந்து 22 வருடம் வரை தண்டனை கிடைக்கலாம்.
DNA - World - Indian couple arrested for keeping 2 Indonesians as slaves - Daily News & Analysis

ச: உச்சநீதிமன்றம்: கல்லூரி ராகிங்க்கு தடை

இன்று உச்சநீதிமன்றம் கல்லூரிகளில் புது மாணவர்களை கலாய்க்கும் ராகிங் முறையை கட்டுப்படுத்தும் விதமாக கல்விநிலையங்கள் விதிமுறைகளை மீறுபவர்களை காவல்நிலையங்களில் குற்றம் பதிவு செய்கின்ற அளவிற்கு கண்டிப்புக் காட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

மேலும்...SC approves stringent anti-ragging measures- Hindustan Times

ச: நிக்கோலஸ் சார்கோசி பிரஞ்ச் அதிபராக பதவியேற்றார்


இன்று நடந்த ஒரு எளிய விழாவில் நிக்கோலஸ் சார்கோசி ஷாக் சிராக்கை அடுத்து பிரஞ்ச் நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். சென்ற மாதத்தில் நடந்த தேர்தலில் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றியை ஒட்டி எல்சி அரண்மனையில் அடுத்த ஐந்து வருடங்களை கழிக்க விருக்கும் சார்கோசி தனது ஏற்புரையில் பிரான்ஸின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றும் நாட்டின் பெருமையை மீட்பேன் என்றும் கூறினார்.

Nicolas Sarkozy takes over as France's president | U.S. | Reuters

ச: கிராமங்களில் தொலைதொடர்பு மேம்பாடே தன் முதல் முன்னுரிமை: இராஜா

தனது புதிய துறையின் பொறுப்பை இன்று புதனன்று எடுத்துக் கொண்ட இராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கிராமப்புற வளர்ச்சியே தனது தனிக்கவனத்தைப் பெறும் என்றார். தனக்கு முந்தைய அமைச்சர்கள் காலத்தில் தொலைதொடர்பு பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அவை சென்றடையவில்லை என்று கூறினார். அந்நிய முதலீடு பெருக்குவதும் தன் முன்னுரிமைகளில் ஒன்று என கூறினார்.

Raja to focus rural telephony, foreign investment - India

ச: காயத்திற்கு பின் மீண்டும் சானியா: மொரொக்கோவில் வெற்றியுடன் துவக்கம்


கடந்த பிப்ரவரியில் காயமடைந்ததால் கத்தார் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய சானியா மிர்சா உடல்நிலை தேறி மீண்டும் ஆடத் துவங்கியுள்ளார். நேற்று மொரொக்கோவில் நடந்த பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் தன்னுடைய துணைவி அமெரிக்க வானியா கிங்குடன் சேர்ந்து ஆடி 6-3,5-7,10-8 என்ற கணக்கில் உருசிய,உக்ரைன் வீராங்கனைகளை வென்று நல்லதுவக்கத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத் தொடரில் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் முதல் வரிசையெண் பெற்றுள்ளார்.

ania makes winning return in Morocco : Tennis, Morocco Open, Sania Mirza, win, doubles, first round : IBNLive.com : CNN-IBN

ச: ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்

தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் 7 பேர் மத்திய மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர். இதில் தயாநிதிமாறனின் ராஜி னாமாவை தொடர்ந்து மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மத்திய மந்திரிகள் ராசா, ரகுபதி ஆகி யோரின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிபாரிசை ஏற்று திருச் செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.பி. ராதிகா செல்வி புதிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட இருக் கிறார். வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர் ஜனாதிபதி மாளிகையில் மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்க இருப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பதவி கிடைத் தது பற்றி ராதிகாசெல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கிடைத்தது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.

மத்திய மந்திரி பதவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க் கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன். தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

=மாலைமலர்

விமான கண்காணிப்பை பலப்படுத்த இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம்.

இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம் அமைக்கத் தேவையான நிலத்தை தரும்படி தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற் பகுதியில் வான் வழி கண்காணிப்பு எளிதாகும் என்று இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் வைஸ்.அட்மிரல் ஆர்.பி. சுதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்து வருவதால் இந்தியக் கடல்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இராமநாதபுரத்தில் விமான ஓடுதளத்தை விரிவுபடுத்த நிலம் தேவைப்படுகிறது. இங்கு விமான ஓடுதளம் அமைப்பதன் மூலம், வான் வழியாக எளிதில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளலாம். இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகின்றன.இலங்கையில் நீடித்து வரும் சண்டையால் கடல் பகுதியில் ஆயுதம் போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத் தவிர்க்க, இந்தியக்கடல் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், அந்நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இலங்கை கடற்படையுடன், தகவல் பரிமாற்றம் மட்டும் செய்து கொள்கிறோம். அவர்களும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் புலிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையுடன் கூட்டு ரோந்து இல்லை. விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக பாக்.ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இந்தியா முழுக்க கடல் பாதுகாப்புக்காக 50 ரோந்து கடற்படை படகுகள், இதில் தமிழக கடல் பகுதிக்கு ஏழு கப்பல்கள் உள்ளன. இவற்றில் நான்கு படகுகள் பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன் இரண்டு கப்பல் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைப்பதால் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர்.சமீபத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிப்பட்டுள்ள மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இந்திய கடற் படைக்கு இராமநாதபுரத்தில் பெரிய விமான தளம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். அதுபோல தூத்துக்குடி,எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகங்களில் கடற்படைக்கு தேவையான இடவசதி செய்து தர மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு பிரேம் சுதன் கூறினார்.

நன்றி : வீரகேசரி

நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு

சிதம்பரம், மே 16: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுத்து மயிலாடுதுறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவனடியார் உ.ஆறுமுகசாமி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார்.

விசாரணை முடிந்து ஆணையர் த.பிச்சாண்டி அளித்த தீர்ப்பு விவரம்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அனைவரும் நின்று வழிபடும் இடத்திலிருந்து தமிழில் இறைவனை போற்றிப் பாடுவதை தடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஆறுமுகசாமி தெய்வத்தமிழ் பதிகங்களை பாட அனுமதி மறுப்பது அவர் பிறந்த சாதியின் காரணமாக ஒதுக்கப்படும் செயலாகும்.

பழக்க வழக்கங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது.

Dinamani

"சுற்றுச்சூழல்-நகரம்" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் தேர்வானாலும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை

மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:


  1. கோட்டயம் (கேரளம்),

  2. புரி (ஒரிசா),

  3. திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),

  4. உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),

  5. பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்

  6. தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.



என்றாலும், தஞ்சாவூருக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தை சேர்ந்த ராஜா நேற்று வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

domain-B : Indian business : economy : Zero funds for Thanjavur under Eco-City project | தினமணி

S. No

Town

Amount released in Lakh of Rupees

1

Kottayam

40.84

2

Puri

55.53

3

Tirupati

49.34

4

Ujjain

67.41

5

Vrindavan

43

6

Thanjavur

Nil

ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2 கோடி வழங்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்குக்காக சென்னையில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார் செங்கோட்டையன். விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு நீதிபதி மீனாட்சி சுந்தரம் ஒத்தி வைத்தார்.

1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பிறந்தநாள் பரிசாக காசோலை மூலம் ரூ. 2 கோடி பணம் அனுப்பப்பட்டது. இந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

இது பற்றி வருமானவரித்துறையின் புகாரின்பேரில் சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவுக்குப் பணம் அனுப்ப ஏற்பாடு செய்ததாக செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Dinamani

மாநிலங்களவை: தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு ஜூன் 15-ல் தேர்தல்

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதிமுகவைச் சேர்ந்த ஆர். காமராஜ்,
  • எஸ். கோகுல இந்திரா,
  • எஸ்.எஸ். சந்திரன்,
  • பி.ஜி. நாராயணன்,
  • திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன்,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன்

ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

  • அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்கள்,
  • காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர்,
  • திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8.

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பதவிகளுக்கு வேட்பாளர்கள் யார்?: தமிழக கட்சிகளில் பரபரப்பு

மாநிலங்களவையில் மொத்தம் 229 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளனர்.

கட்சிகளின் பலம்:
தற்போது பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களில் கட்சி வாரியாக பலம்:
  • தி.மு.க. - 95;
  • அ.தி.மு.க. - 61;
  • காங்கிரஸ் - 34;
  • பா.ம.க. - 18;
  • மார்க்சிஸ்ட் - 9;
  • இந்திய கம்யூனிஸ்ட் - 6;
  • ம.தி.மு.க. - 6;
  • விடுதலைச் சிறுத்தைகள் - 2;
  • தே.மு.தி.க. -1;
  • சுயேச்சை 1;
  • நியமன உறுப்பினர் 1;
  • பேரவைத் தலைவர் -1.


(மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் காலமானதால், அத்தொகுதி காலியாக உள்ளது.)

காங்கிரஸில் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தில் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட
  • பி.எஸ். ஞானதேசிகனே நிறுத்தப்படலாம்.
  • அல்லது ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார்,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,
  • ஜெயந்தி நடராஜன்,
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, அவருக்கோ,
  • தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிக்கோ
கூட இந்த இடத்தை காங்கிரஸ் மேலிடம் அளிக்கலாம்.

தி.மு.க.வைப் பொருத்தவரை, தனக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அல்லது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுத் தர எண்ணி உள்ளது.

எஞ்சிய 2 இடங்களில்
  • அழகிரி அல்லது அவர் சுட்டிக் காட்டும் நபர்,
  • கனிமொழி,
  • டி.கே.எஸ். இளங்கோவன்,
  • திருச்சி சிவா,
  • டாக்டர் கே.பி. ராமலிங்கம்,
  • தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,
  • முன்னாள் அமைச்சர்கள் அ. ரகுமான்கான்,
  • எஸ்.பி. சற்குணபாண்டியன்,
  • இந்திரகுமாரி,
  • கோவை மு. ராமநாதன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சரவணன்,
  • புகழேந்தி,
  • ஜெ. அன்பழகன்,
  • தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிபவர்களில் ஒருவரான கே.பி.கே. குமரன்

போன்றவர்களில் யாராவது இருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம்.

அ.தி.மு.க.வைப் பொருத்தவரை
  • சசிகலா அல்லது அவர் சுட்டிக் காட்டும் ஒருவர்,
  • கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன்,
  • முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி,
  • எஸ். முத்துசாமி,
  • நயினார் நாகேந்திரன்,
  • தளவாய் சுந்தரம்,
  • கட்சி நிர்வாகி ஆதிராஜாராம்

உள்ளிட்டோரில் யாராவது இருவர் நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை

புதுதில்லி, மே 16: தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க. அழகிரி மீது மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் அசோக் பான் மற்றும் வி.எஸ். சிர்புர்கர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மதுரையில் முக அழகிரிக்கு உள்ள செல்வாக்கை மேற்கோள் காட்டி வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றவேண்டும் என்று சாட்சி விண்ணப்பம் அளித்திருந்தார்.

Dinamani | Chennai Online News Service - View News: "SC also asked the State Government as to why the case should not be transferred to Karnataka. The bench asked the TN Government to file its response within four weeks after one of the witnesses apprehended threat to his life.

The witness Suresh Kumar alias Kremmer Suresh filed the petition seeking transfer of the trial presently being held before the III Additional Sessions Judge, Madurai to any other court in the neighbouring Karnataka State on the ground that a free and fair trial cannot be held as Azhagiri wielded enormous influence."

தாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி

நவீனகால உலக அதியசங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் கட்டிடத்தை அண்மித்த பகுதிகளில் காற்றில் மாசுகட்டுப்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தாஜ்மஹாலின் புகழ்பெற்ற வெளிப்புற வெள்ளை பளிங்குக் கற்கள் மெதுவாக நிறமிழந்து மஞ்சள் நிறமாக மாறி வருவதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் முயற்சிக்கப்பட்ட, பளிங்குக் கற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சுத்திகரிப்பு முறை ஒன்றினை மீண்டும் மேற்கொண்டு, இந்த 17ம் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தை பழைய நிலைக்கே, அதாவது வெள்ளை நிறத்தை மீண்டும் கொண்டு வர மற்றுமொருமுறை முயற்சிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தாஜ்மஹாலிற்கு 30 இலட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டப்படி இந்த புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | South Asia | Face mask to beautify Taj Mahal (BBC Tamil)

பர்மாவுடன் ரஷியா அணு சக்தி ஒப்பந்தம்

ரஷ்யா பர்மாவுடன் ஒரு அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக கூறுகிறது. இந்த நடவடிக்கை, மேலை நாடுகளை கவலையுறச்செய்யும். அடக்குமுறை மற்றும் ஜனநாயக தன்மையற்ற நடவடிக்கைகளை கையாளுவதாக பர்மா மீது மேலை நாடுகள் குற்றச்சாட்டுகின்றன.

பர்மாவில் இந்த உடன்படிக்கையின் மூலம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் , ஒரு அணு ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமான வேலைகள் ஆகியவை செய்து தரப்படும் என்று மோஸ்கோவில் உள்ள அணுசக்தி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் மிகக்குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் இயங்கும் ஒரு 10 மெகாவாட் திறன்கொண்ட அணுசக்தி உலையும் அடங்கும். இந்த அணு உலை அமைதி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று பர்மிய அரசு கூறுகிறது.

BBC NEWS | Asia-Pacific | Russia and Burma in nuclear deal (BBC Tamil)

-o❢o-

b r e a k i n g   n e w s...