.

Wednesday, May 16, 2007

மாநிலங்களவை: தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு ஜூன் 15-ல் தேர்தல்

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதிமுகவைச் சேர்ந்த ஆர். காமராஜ்,
  • எஸ். கோகுல இந்திரா,
  • எஸ்.எஸ். சந்திரன்,
  • பி.ஜி. நாராயணன்,
  • திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன்,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன்

ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

  • அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்கள்,
  • காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர்,
  • திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8.

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பதவிகளுக்கு வேட்பாளர்கள் யார்?: தமிழக கட்சிகளில் பரபரப்பு

மாநிலங்களவையில் மொத்தம் 229 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளனர்.

கட்சிகளின் பலம்:
தற்போது பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களில் கட்சி வாரியாக பலம்:
  • தி.மு.க. - 95;
  • அ.தி.மு.க. - 61;
  • காங்கிரஸ் - 34;
  • பா.ம.க. - 18;
  • மார்க்சிஸ்ட் - 9;
  • இந்திய கம்யூனிஸ்ட் - 6;
  • ம.தி.மு.க. - 6;
  • விடுதலைச் சிறுத்தைகள் - 2;
  • தே.மு.தி.க. -1;
  • சுயேச்சை 1;
  • நியமன உறுப்பினர் 1;
  • பேரவைத் தலைவர் -1.


(மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் காலமானதால், அத்தொகுதி காலியாக உள்ளது.)

காங்கிரஸில் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தில் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட
  • பி.எஸ். ஞானதேசிகனே நிறுத்தப்படலாம்.
  • அல்லது ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார்,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,
  • ஜெயந்தி நடராஜன்,
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, அவருக்கோ,
  • தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிக்கோ
கூட இந்த இடத்தை காங்கிரஸ் மேலிடம் அளிக்கலாம்.

தி.மு.க.வைப் பொருத்தவரை, தனக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அல்லது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுத் தர எண்ணி உள்ளது.

எஞ்சிய 2 இடங்களில்
  • அழகிரி அல்லது அவர் சுட்டிக் காட்டும் நபர்,
  • கனிமொழி,
  • டி.கே.எஸ். இளங்கோவன்,
  • திருச்சி சிவா,
  • டாக்டர் கே.பி. ராமலிங்கம்,
  • தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,
  • முன்னாள் அமைச்சர்கள் அ. ரகுமான்கான்,
  • எஸ்.பி. சற்குணபாண்டியன்,
  • இந்திரகுமாரி,
  • கோவை மு. ராமநாதன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சரவணன்,
  • புகழேந்தி,
  • ஜெ. அன்பழகன்,
  • தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிபவர்களில் ஒருவரான கே.பி.கே. குமரன்

போன்றவர்களில் யாராவது இருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம்.

அ.தி.மு.க.வைப் பொருத்தவரை
  • சசிகலா அல்லது அவர் சுட்டிக் காட்டும் ஒருவர்,
  • கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன்,
  • முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி,
  • எஸ். முத்துசாமி,
  • நயினார் நாகேந்திரன்,
  • தளவாய் சுந்தரம்,
  • கட்சி நிர்வாகி ஆதிராஜாராம்

உள்ளிட்டோரில் யாராவது இருவர் நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...