.

Wednesday, May 16, 2007

ச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும்

மும்பையில் ஜூன் 8 அன்று வரவேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமான தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு முன்னதாக, அதாவது இம்மாதம் 24 ம் தேதியன்றே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் கடந்த 10 ம் தேதியன்றே தென்மேற்கு பருவ மழை மையம் கொண்டு விட்டது.அதாவது வழக்கமான தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முன்னதாகவே இந்த மழை மையம் கொண்டு விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடலோரப் பகுதிகளில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...