.

Wednesday, May 16, 2007

"சுற்றுச்சூழல்-நகரம்" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் தேர்வானாலும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை

மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:


  1. கோட்டயம் (கேரளம்),

  2. புரி (ஒரிசா),

  3. திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),

  4. உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),

  5. பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்

  6. தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.



என்றாலும், தஞ்சாவூருக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தை சேர்ந்த ராஜா நேற்று வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

domain-B : Indian business : economy : Zero funds for Thanjavur under Eco-City project | தினமணி

S. No

Town

Amount released in Lakh of Rupees

1

Kottayam

40.84

2

Puri

55.53

3

Tirupati

49.34

4

Ujjain

67.41

5

Vrindavan

43

6

Thanjavur

Nil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...