.

Friday, June 8, 2007

'பட்டம்' வாங்கினார் பில்கேட்ஸ்!

அப்பாடா, ஒரு வழியாக, 30 வருடத்துக்கு முன்பே தான் வாங்கத்தவறிய பட்டத்தை தான் படித்த அதே கேம்பிரிட்ஜ்ஜின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலக மகா பணக்காரருமான பில் கேட்ஸ் பெற்றுக்கொண்டார்.

ஆம், நேற்று இப்பல்கலை.யில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவொன்றில் சட்டப்படிப்பில் கவுரவ பட்டம் பில்கேட்ஸுக்கு வழங்கப்பட்டது. 51 வயதாகும் பில்கேட்ஸ், 1977ல் ஹார்வர்டில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இந்தப் பட்டத்தை ஒருநாள் வாங்கிவிடுவேன் என்று நான் சொன்னேனில்லையா?" என்று குழுமியிருந்தோரிடையே இருந்த தனது தந்தையை நோக்கி சொன்ன பில்கேட்ஸ், "அடுத்த ஆண்டு தான் பணி மாற இருப்பதால் தனது சுயகுறிப்பில் (Resume)
சேர்த்துக்கொள்ள இந்தப் பட்டம் மிகவும் உதவும்" என்று ஆரவாரத்துக்கிடையே கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் தனது முழுநேரத்தையும் தரும காரியங்களில் செலவிட இருப்பதாக பில்கேட்ஸ் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

மேலும்...

83 வயதில் தந்தையான இசைஞர்.

சம்பல்பூர் மாவட்டத்தின் பரமன்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற இசைஞர், 83 வயது நாத் என்பவர் தன் 45 வயது மனைவி மூலமாக 2.5 கிலோ எடையுடன் பிறந்த பெண்மகவுக்கு தந்தையாகியுள்ளார்.
இதன் மூலம் தான் இசைஞர் மட்டுமின்றி இளைஞரும் என்று நிரூபித்துள்ளார்.
மருத்துவ வரலாற்றில் 80 வயதுக்கு மேற்பட்ட 'தந்தைமை'கள் மிக அபூர்வமாகவும், குறிக்கத்தக்கனவாகவும் விளங்குகின்றன என்றாலும் 90 வயதிலும் ஆண்கள் தந்தைமை அடைவது முடியாத ஒன்றல்ல என்று மகப்பேறு மருத்துவர் சந்தோஷ் மிஸ்ரா கருத்தளித்தார்.

மேலும்...

மகன் கொலை: தாய்க்கு ஆயுள்தண்டனை.

தனது பதின்ம வயது மகனை விசம் கொடுத்து கொலை செய்த தாய்க்கு பஞ்சாப் உள்ளூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

தனது இரண்டாம் திருமணத்திற்குப் பின்னரும் மூன்றாவதாக கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்ட தன் தாயை 14 வயது பல்விந்தர் கண்டித்ததால், தாயான பல்ஜித்கவுர் மகனுக்கே விசம் வைத்து கொன்றுள்ளார்.

மேலும்...

டவுன் பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்.

திருச்சி அருகே நகரப் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 30 பயணிகள் காயமடைந்தனர். திருச்சி அருகே உள்ள மாத்தூரிலிருந்து, சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. கும்பக்குடி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, எதிரே ஒரு ஆடு குறுக்கில் ஓடியது. ஆட்டின் மீது பேருந்து மோதி விடாமல் இருக்க பேருந்தை திருப்பினார் டிரைவர். அப்போது பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற தடை.

இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு !

கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொழும்பில் வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலையில் கொழும்பு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, போர் நடந்து வரும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் கொழும்பு போலீஸாரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொழும்பு போலீஸாரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதிமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக கூறி அதிமுகவினர் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. திமுகவினரும், அதிமுகவினரும் சரமாரியாக பல இடஙகளில் மோதிக் கொண்டனர். கரூரில் உச்சகட்ட வன்முறை அரங்கேறியது. இந்த நிலையில் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில் அலுவலகம் ஓரளவு சேதமடைந்தது. அலுவலகத்திற்குள் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

மும்பை ரயிலில் திருடர்களை அடித்து விரட்டிய பெண்கள்

நாகர்கோயில் விரைவு வண்டியில் நேற்று தம் சொந்த ஊரான ஏர்வாடியிலிருந்து விடுமுறை முடிந்து, குழந்தைகளுடன் மும்பை திரும்பிக் கொண்டிருந்தனர் திருமதி லக்ஷ்மி வேலுவும்(35), திருமதி பிச்சம்மாள் மணியும்(36).

வண்டி தாதர் ரயில் நிலையத்தை இரவு சுமார் ஒன்பது மணிக்கு அடைந்தபோது அவர்களின் பெட்டியில் பயணம் செய்த எல்லா பயணிகளும் இறங்கிவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்கள் வண்டியில் ஏறி பிச்சம்மாள் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.

உடனிருந்த லக்ஷ்மி அந்த இளைஞர்களை அடிக்கத் தொடங்கினார். பிச்சம்மாளும் சமாளித்து தொடர்ந்து தாக்கியதில் இளைஞர்கள் பின்வாங்கினர். கூர்மையான ஆயுதத்தால் அவர்கள் தாக்கியபோதும் தளர்ந்து விடாமல் போரிட்டதைக் கண்டு ஐந்து திருடர்களில் மூவர் ஓடிவிட்டனர். பெண்கள் தொடர்ந்து துரத்திச் சென்று விரட்டி ஒரு இளைஞனை ஓடும் ரயிலிலிருந்து விழ செய்துவிட்டார்கள்!

'சுமார் ரூ. 69000 மதிப்புள்ள நகைகளை இழந்து விட்டாலும் திருடர்களைத் துரத்தியடித்தைப் பற்றி மகிழ்கிறோம்' என்று பத்திரிக்கையாளர்களிடம் லக்ஷ்மி தெரிவித்தார்.

தாதர் ரயில்வே போலீஸார், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்து, ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு, பிடித்தும் விட்டனர். ஜரார்தன் ஜய மங்கள் ராம்(21) என்ற அந்த இளைஞன் மூலம், அவன் கூட்டாளிகளான ஜெதாலிகுமார் கோகலே(22), துனி முகியா(19), சிக்கந்தர் கான்(22), விஷால் குமார் ரத்தோட்(22) முதலானோரையும் பிடித்து ரூ. 52,000 மதிப்புள்ள நகைகளையும் மீட்டுவிட்டதாக காவல்துறை அதிகாரி நம்தியோ கதம் கூறினார்.

Men smart, women smarter - DNA News.

'கல்விக் கொள்கையை மாற்றாவிட்டால் அரசை எதிர்த்துப் போராட்டம்': பாமக

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகக்கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையைத் தமிழக அரசு மாற்றாவிட்டால், பாமக கடுமையான போராட்டங்களை நடத்தும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பேட்டி: தமிழகத்தில் மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை, கல்வி வியாபாரம் நடக்கிறது.

தமிழக அரசு தகுந்த சட்டங்களைக் கொண்டுவந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 400 இடங்களை இந்த தனியார் கல்வி நிறுவனத்தினர் கிடைக்காமல் செய்துவிட்டனர்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...