.

Showing posts with label கிளர்ச்சி. Show all posts
Showing posts with label கிளர்ச்சி. Show all posts

Thursday, August 23, 2007

வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்


வங்கதேசதில் ராணுவ ஆதரவுடன் செயற்பட்டுவரும் அரசாங்கம், தலைநகர் டாக்காவிலும் நாட்டிலிருக்கும் வேறு ஐந்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி போராடிவரும் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை மோதல்களுக்கு நடுவே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் நேரப்படி எட்டு மணிக்கு துவங்கும் இந்த ஊரடங்கு சட்டம் காலவறையறையின்றி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு நகரங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக, ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய இந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் நூறுபேர் வரை காயமடைந்திருக்கிறார்கள்.

செய்தி: தமிழ் பிபிசி
படம்: New York Times

Curfew in Bangladesh quells street violence - International Herald Tribune

Thursday, August 9, 2007

ஹைதராபாத்தில் தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபத்தில் தாக்கப்பட்டார். தஸ்லீமா எழுதிய Shodh-இன் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டு விழாவில் அவர் மீது நாற்காலிகள் மீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஜ்லிஸ் இட்டாஹூதுல் முஸ்லிமின் கட்சி (Majlis Ittehad-ul-Muslimeen - MIM) சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார்.

நஸ்-ரீன் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக மதவாத அமைப்புகள் சில அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய சற்றுமுன்...: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா

Taslima Nasrin attacked in Hyderabad
NDTV.com: Taslima Nasreen attacked in Hyderabad
Exiled Bangladeshi female writer attacked by Muslims in India - International Herald Tribune

Tuesday, August 7, 2007

சாலை விபத்தில் மூன்று 'கன்வாரியா'க்கள் மரணம்: கலவரம்

சிராவண மாதத்தில் ( நமது ஆவணி) வட இந்தியாவில் தோளின் மீது ஒரு கம்பில் இருமுனைகளிலும் 'கன்வார்' எனப்படும் நீர்கலசங்களைக் கட்டி கால்நடையாக சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பல சாலைகளிலும் நடந்தாலும் தில்லி- ஹரித்வார் சாலை இதற்கு பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சாலையையே அடைத்துப் போவது நமது தைப்பூசத்திற்கு மதுரையிலிருந்து பழனி செல்லும் பக்தர்கள் கூட்டம் போலிருக்கும். கன்வார் எடுத்துச் செல்லும் இவர்களை கன்வாரியாக்கள் என்றழைப்பர்.

செவ்வாயன்று குட்கான்வ் அருகே இக்கூட்டத்தினர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த டிரக் ஒன்று மோதி மூன்று கன்வாரிகள் இறந்தனர்;பலர் படுகாயமடைந்தனர். காலை 8 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கன்வாரியாக்கள் சாலையை வழிமறித்து தில்லி- ஜெய்பூர் சாலையில் வண்டிகளை கொளுத்தி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை 8 இல் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. துணை காவல் ஆணையரின் வண்டியையும் காவல்நிலைய வண்டியையும் தீயிட்டு கொளுத்தினர்.
இறந்தவர்களுக்கு நட்டைஇடு வழங்கும்வரை போராட்டத்தைத் தொடருவோம் எனவும் இனி இத்தைகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் அரசு உறுதி தர வேண்டும் எனவும் கன்வாரியா ஒருவர் கூறினார்.

Accident Kills Three 'kanwarias', Pilgrims Turn Violent

Friday, July 13, 2007

விசாகப்பட்டினத்தில் தொலைக்காட்சி கோபுரம் குண்டு வைத்து தகர்ப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சின்னட்டபள்ளி கிராமத்தில் உள்ள தூர்தர்சனுக்கு சொந்தமான கோபுரத்தை நேற்று இரவு நக்சல் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Zee News - Centre ascertaining facts on Naxal attack: Minister
IBNLive.com > Naxals blow up Doordarshan office in Andhra Pradesh: "They also blew up an ex MLA's house in the city and damaged the Roads and Building department building in Chintappali. PTI reports Maoists were reportedly protesting against the proposed bauxite mining project."

Tuesday, July 10, 2007

இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 23 பாதுகாப்பு படையினர் பலி

இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்படையினர் 23 பேரின் சடலங்களை தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

காட்டின் நடுவே மறைவான ஒரு இடத்தில், மாவோயிஸ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை விசாரிக்க நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட படை நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட இந்தப் பாதுகாப்பு படையினரோடு தமக்கு இருந்தத் தொடர்பை அதிகாரிகள் இழந்ததாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

போலீசாரின் அறிக்கையின்படி கிளர்ச்சியாளர்கள் 500 பேர் வரை இப்பதுங்குத் தாக்குதலை நடத்தினார்கள் என்றும், கிளர்ச்சியாளர்கள் 40 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இப்பகுதியில் நடந்துவரும் மாவோயிஸ சண்டைகளில் இதுவரை 6000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

- BBC Tamil

BBC NEWS | South Asia | Dozens die in India Maoist clash

Friday, July 6, 2007

முஷாரப்பைக் கொல்ல முயற்சி

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சென்ற விமானத்தை குறிவைத்து நடந்ராக்கெட் தாக்குதலில், அவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப், இன்று ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்திலிருந்து பலுச்சிஸ்தான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக விமானம் ஒன்றிள் புறப்பட்டு சென்றார்.

அவரது விமானம் பறக்க தொடங்கிய சில விநாடிகளில், அவரது விமானத்தை குறிவைத்து அவரது விமானத்தை குறிவைத்து ராக்கெட் மட்டுமல்லாது விமான எதிர்ப்பு துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடைபெற்றதாகவும்,இத்தாக்குதல் விமான ஓடு தளத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் விமானத்தை எட்டமுடியாமல் தப்பித்தார். இந்த செய்தியை இராணுவம் மறுத்தபோதிலும் அதிகாரியொருவர் இதனை தனிமையில் உறுதி செய்தார்.

இஸ்லாமாபாத்தின் லால்மசூதியில் தஞ்சம் அடைந்துள்ள மதகுருவும் அவரது ஆதரவாளர்களும் தாங்கள் இறந்தாலும் இறப்போம் ஆனால் சரண் அடையமாட்டோம் என சூளுரைத்துள்ளனர்.அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.




Shots fired at Pakistani leader; mosque siege drags on - Yahoo! India News

பாக். லால் மசூதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பு

பாகிஸ்தானின் லால் மசூதியில் தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இன்று நீடித்தது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்த மசூதிக்குள் நுழையும்பொருட்டு, இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மசூதியைச் சுற்றி நின்ற பாதுகாப்புப் படையினர், சரண் அடையுமாறு மசூதிக்குள் உள்ள தீவிரவாதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் யாரும் சரண் அடையவில்லை என்று தெரிகிறது. இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் சரண் அடைந்துள்ள நிலையில், மற்றவர்களையும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

- MSN INDIA

BBC NEWS | South Asia | Blasts at radical Pakistan mosque: "There have been two large explosions in the buildings of a rebellious mosque in the Pakistani capital, Islamabad, which is being besieged by security forces."

Tuesday, July 3, 2007

இஸ்லாமாபாதில் செம்மசூதிக்கு வெளியில் இடம்பெற்ற மோதலில் பலர் பலி

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதிக்கு வெளியே இஸ்லாமிய மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலின் போது வெடித்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இறந்தவர்களில் இரு மாணவர்களும், ஒரு சிப்பாய் மற்றும் ஒரு செய்தியாளர் ஆகியோர் அடங்குவர்.

அந்த மசூதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முட்கம்பிகளை கொண்டு தடைகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவதை அடுத்து, வெடித்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். அந்தக் கட்டிடத்துக்கு மிக நெருக்கமாகச் சென்றுள்ள பாதுகாப்புப்படையினர், கேந்திர முக்கியத்துவ வாய்ந்த இடங்களை கையகப்படுத்தியுள்ளதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளைச் வீசி வருகிறார்கள்.

பல மாதங்களாக அரசாங்கத்தை பகிரங்கமாக நிராகரிக்கும் மாணவர்களுக்கு, கடும்போக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் இடமாக இந்த செம்மசூதி மாறியுள்ளது. பல பொதுக் கட்டிடங்களைப் பிடித்துள்ள இவர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்று குற்றஞ்சாட்ட்டப்பட்டவர்களை கடத்தியவர்களாவர்.

- BBC Tamil

BBC NEWS | South Asia | Clashes erupt at Pakistan mosque

Wednesday, June 13, 2007

தில்லியில் போலீஸ்-மக்கள் மோதல்

தென்மேற்கு தில்லியில் விமான நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் போலீஸ் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

விமான நிலையத்திற்கு சுற்றுசுவர் அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி ஷஹாபதா கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்கள் ஏற்றிவந்த டிராக்டருக்கு தீவைத்த ஒரு கும்பல், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

தினமணி | 20 injured in mob fury, police action near Delhi airport- Hindustan Times

Sunday, June 10, 2007

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

காங்கிரசால் உயிருக்கு ஆபத்து: கிறிஸ்தவ மதபோதகர் குற்றச்சாட்டால் ஆந்திரத்தில் பெரும் பதற்றம்

்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் கே.ஏ. பால். இவர், 1989-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர், கிறிஸ்தவ மத போதகராகவும், சர்வதேச அமைதிக்காகவும் தன்னார்வ அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், ஆந்திரத்தில் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை முன்னின்று செய்துள்ளார்.

நன்கொடை கேட்டு மிரட்டல்: கடந்த 2003-ல் ஆந்திர காங்கிரஸ் வளர்ச்சி நிதிக்காக ரூ. 20 கோடி நன்கொடை அளிக்க வேண்டும் என முதல்வர் ராஜசேகர ரெட்டி தரப்பில் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் தமக்கு மிரட்டல் வந்ததாகவும் பால் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

மதபோதகரின் இப் பேச்சால் ஆந்திரத்தில் காங்கிரஸார் கொந்தளித்துள்ளனர். 2003-ல் மிரட்டியதாக கூறப்படுவது நம்பத்தகுந்ததல்ல. அவர் தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்பி விடுவதாகவும் ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சனிக்கிழமை விசாகப்பட்டினம் வந்த பாலை முற்றுகையிட்ட காங்கிரஸார், மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பால், உடனடியாக மன்னிப்புக் கேட்கத் தவறினால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி

Saturday, June 9, 2007

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்


மாலைமலர்

Thursday, June 7, 2007

தலித் எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பிடிவாரண்ட்

கடலூர் அருகே வீடுகளுக்கு தீ வைப்பு, போலீஸ் மீது தாக்குதல் வழக்கு தொடர்பாக காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ ரவிக்குமார், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வார்டு பாபு ஆகியோருக்கு கடலூர் மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்து உள்ளார்.

கடலூரை அடுத்த சேடப்பாளையம் அருகே எஸ்.என்.நகர் காலனி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிவா (25), ஒரு கோஷ்டியினரால் தாக்கப்பட்டு 2-1-2007-ல் இறந்தார். சிவாவின் இறுதி ஊர்வலத்தில் சேடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வீடுகள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ ரவிக்குமார், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வார்டு பாபு, கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், செல்வன், அமுதன், குணசேகரன், ஞானம், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு கடலூர் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எம்எல்ஏ ரவிக்குமார், கெய்க்வார்டு பாபு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், திங்கள்கிழமை பிடிவாரண்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் கலைமதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தாமரைச்செல்வன் செவ்வாய்க்கிழமை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் விடுதலை ஆனார்.

தினமணி

Monday, June 4, 2007

ச: இராஜஸ்தானில் பேச்சு வார்த்தைகளில் வெற்றி: போராட்டம் கைவிடப்படுகிறது

கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து வந்த குஜ்ஜர் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. இராஜஸ்தான் அரசு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு ST ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேரடங்கிய குழு ஒன்று ஆராய்ந்து மூன்று மாதங்களில் தன் அறிக்கையை வெளியிடும் என்று வாக்களித்திருக்கிறது.

DNA - India - Gujjar-Raje talks successful; agitation called off - Daily News & Analysis

ச- இராஜஸ்தான் கிளர்ச்சி: டெல்லி சாலைகள் அடைப்பு

இராஜஸ்தானில் குர்ஜார் இனமக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து டெல்லிக்குச் செல்லும் சாலைகள் அடைபட்டிருப்பதாக சிறப்பு செய்தியாளர் (பி.டி.ஐ) தெரிவிக்கிறார்.

'எல்லா சாலைகளும் டெல்லிக்கு செல்லும்' என்று தற்போதைக்கு சொல்ல இயலாது!

Friday, June 1, 2007

ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் குஜ்ஜர்-மீனா கைகலப்பில் ஐவர் மரணம்,20 பேர் காயம்

இராஜஸ்தானில் குஜ்ஜர் இனமக்களின் ST ஒதுக்கீட்டுக்கான போராட்டமும் அதற்கு மீனா இன மக்களின் எதிர்ப்பையும் அடுத்து அங்கு வன்முறை மேலோங்கி வருகிறது. இன்று நடந்த இனச்சண்டையில் ஐந்து பேர் மரணமடைந்ததாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை செயலர் விஎஸ் சிங் கூறினார்.

மேலும்...DNA - India - Five killed, 20 hurt in Gujjar-Meena clash - Daily News & Analysis

Wednesday, May 30, 2007

ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்

ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்துவரும் குஜ்ஜார் இனக் கலவர்ங்களுக்கு இராஜஸ்தான் அரசை குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி நீதியரசரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. அம்மாநில பிஜேபி அரசின் அடக்குமுறை அனைவரும் அறிந்தது என்று குறைகூறிய அக்கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த அரசு அதனை மக்களிடம் விளக்கமுடியாததால் இந்தக் கலவரங்களும் வன்முறையும் எழுந்துள்ளன என்றும் கூறியுள்ளது.

The Hindu News Update Service

ராஜஸ்தானில் காவல் நிலையங்கள் எரிப்பு!

குர்ஜார் வகுப்பினரை பழங்குடி வகையிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகைக்கு 'உயர்த்திய' அரசின் செயலைக் கண்டித்து நடைபெறும் கிளர்ச்சியில் இன்று டவுசா ('ர்' இல்லை) மாவட்டத்தில் இரு காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஜெய்ப்பூர் -ஆக்ரா நெடுஞ்சாலைப் போக்குவரத்து இக்கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவலரை காணவில்லை என்று பி.டி.ஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

-o❢o-

b r e a k i n g   n e w s...