.

Thursday, August 23, 2007

வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்


வங்கதேசதில் ராணுவ ஆதரவுடன் செயற்பட்டுவரும் அரசாங்கம், தலைநகர் டாக்காவிலும் நாட்டிலிருக்கும் வேறு ஐந்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி போராடிவரும் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை மோதல்களுக்கு நடுவே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் நேரப்படி எட்டு மணிக்கு துவங்கும் இந்த ஊரடங்கு சட்டம் காலவறையறையின்றி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு நகரங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக, ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய இந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் நூறுபேர் வரை காயமடைந்திருக்கிறார்கள்.

செய்தி: தமிழ் பிபிசி
படம்: New York Times

Curfew in Bangladesh quells street violence - International Herald Tribune

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...