.

Thursday, August 23, 2007

தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007

தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007


தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதை இந்திய அரசு நிறுவியுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ( என்.ஜி.ஓ ) அல்லது மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிலைநாட்ட பணிபுரிந்த்திருக்க வேண்டும்.

ஆண்டுக்கு நான்கு விருதுகள் வழங்கப்படும். போராளிக்கு வழங்கப்படும் விருத்துதொகை இரண்டு இலட்சம். நிறுவனத்துக்கு வழங்கப்படும் தொகை ஐந்து இலட்சம்.

மேற்கண்ட துறைகளில் தீவிரமாக சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளி என யாராவது ஒருவருக்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளை கணக்கில் கொண்டு மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்படலாம்.

இந்த விருது 2007 ஆம் ஆண்டு நிறுவப்படுகிறது. தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படும். இனம், பால், ஜாதி, மத அடிப்படையில் ஒடுக்குதல், வேறுபாடுகளைக் கடந்து இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளிகளின் முக்கிய பணிகளை ஒரு தேர்வுக் குழுவும், நீதிபதிகள் குழுவும் தீவிரமாக பரிசீலனை செய்யும்.

கூடுதல் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்

Shri R K Meena
Under Secretary
Room No 721 A
Shastry Bhawan
New Delhi
Tel : 011 23386981 / 23384918
www.socialjustice.nic.in

கடைசி தேதி : அக்டோபர் 31, 2007

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...