சஞ்சய் தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை ஆனார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக சஞ்சய்தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் நகலை தயார் செய்ய தாமதமானதால் நேற்று விடுதலை ஆக வேண்டிய அவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அவரை சிறை வாசலில் வந்து அழைத்து சென்றனர். இன்னும் ஒருமாத காலத்திற்கு அவர் வெளியே இருப்பார் என தெரிகிறது.
Thursday, August 23, 2007
சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆனார்.
Labels:
குண்டுவெடிப்பு,
சட்டம் - நீதி,
தீவிரவாதம்
Posted by
Adirai Media
at
10:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment