.

Sunday, April 1, 2007

சற்றுமுன்: இன்சமாம் குமுறல் பேட்டி- இந்தியா, பாக் வீரர்கள் பரிதாபம்

“விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்தான் விளையாட்டு வீரர்கள் பீதியுடன் வாழ வேண்டிய அவலமான நிலை இருக்கிறது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

லாகூரில் நிருபர்களிடம் நேற்று இன்சமாம் கூறியதாவது:

உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்பினேன். ஆனால், தோற்று விட்டோம். எனக்கும் அதிர்ச்சிதான். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். ஆனால், சோதனையான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய பத்திரிகைகளும், டிவி சேனல்களும், பாகிஸ்தான் அணியை கிழிகிழியென்று விமர்சிப்பது அநியாயம். இரண்டு போட்டிகளில் தோற்றதால் நாங்கள் பாகிஸ்தானியர் இல்லை என்று ஆகிவிடுமா? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எது நடந்தாலும் அதற்கு இன்சமாம்தான் பொறுப்பு என்று பத்திரிகைகள் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

உலகக்கோப்பையில் தோற்றதால் பாகிஸ்தானில் கிரிக்கெட் அழிந்துவிடாது. திறமையான வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். மீண்டும் வலுவான அணியாக வரலாம்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். உலகத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் இது புரிகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டும்தான் மக்களுக்கு தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

- தினகரன்

சற்றுமுன்: ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பு -வங்கி கடன்கள் வட்டி எகிறும்

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க நினைப்பவருக்கு இன்றைய தேதி உண்மையிலேயே ஒரு ஏமாற்ற தினமாகத்தான் இருக்கக்கூடும். ஆம். ஒரே நேரத்தில் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தையும், ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்) ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் முதலீடு செய்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் சிஆர்ஆர். இதேபோல, வர்த்தகத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகை மீதான வட்டி ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டையும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்த நிதி ஆண்டில் பணவீக்க விகிதத்தை 5 முதல் 5.5 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், உணவுப் பொருட்கள், வீடு, மனை உட்பட பலவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்க விகிதம் 6.46 சதவீதமாக உள்ளது.

எனவே, அதைக் கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பதை அதிகரிக்கும் வகையில் சிஆர்ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி இப்போதுள்ள 6.25ல் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது இந்த மாதம் 14 முதல் 28ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைமுறைக்கு வரும்.

இந்த நடவடிக்கையால் அதிர்ந்துள்ள வங்கிகளை மேலும் அதிரச் செய்யும் வகையில் ரெப்போ விகிதமும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், சிஆர்ஆர் அதிகரிப்பால் வங்கிகளின் ரூ.15,500 கோடி கூடுதல் வர்த்தக தொகை ரிசர்வ் வங்கி வசமாகி விடும். எனவே, அவற்றைக் கடனாக அளிப்பதன்மூலம் கிடைக்க வாய்ப்புள்ள ரூ.1,600 கோடி வட்டியை வங்கிகள் இழக்க நேரிடும். மொத்தமாக வங்கிகளிடம் இருந்து சுமார் 17,000 கோடி ரிசர்வ் வங்கிக்கு கைமாறும்.

இதனால், கடன் அளிப்பதற்கான வங்கிகளின் நிதி வரம்பு மேலும் கட்டுப்படுத்தப்படும். அதிக வருமானம் ஈட்ட வேறுவழியின்றி வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டிகளை வங்கிகள் மீண்டும் கடுமையாக உயர்த்தத் தொடங்கி விட்டன

- தினகரன்

சற்றுமுன்: ஷேன்வார்னே தனது மனைவியுடன் மீன்டும் சேர்ந்தார்


ஷேன்வார்னே பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி பிரிந்து இருந்த அவருடைய மனைவி மீன்டும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒன்றாக இனைந்தனர்.

ஷேன்வார்னே தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறப்போகிறார்.



"மேலும் செய்திக்கு"

சற்றுமுன்: அர்ஜுன் சிங் கார் மீது பாட்டில் வீச்சு

இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் கார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை செய்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதலாம் சுதந்திர போராட்டத்தின் (1857) 150வது ஆண்டு விழாவை யட்டி நேற்று கருத்தரங்கு நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் வந்தார். கருத்தரங்கில் அர்ஜுன்சிங் பேச தொடங்கியதும் 50 மாணவர்கள் எழுந்து அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். சமத்துவ இளைஞர்கள் என்ற அமைப்பை சேர்ந்த அவர்கள் கறுப்பு பாட்ஜ் அணிந்து இருந்தனர். “இடஒதுக்கீட்டை புகுத்தி மாணவர்களை பிரிக்காதே! அர்ஜுன்சிங்கே பதவியை ராஜினாமா செய்! என்று கோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சி முடிந்து அர்ஜுன்சிங் காரில் ஏறி புறப்பட்ட போது அதே மாணவர்கள் கார் முன் திரண்டு ரகளை செய்தனர். இந்த சம்பவம் பற்றி அர்ஜுன்சிங்கிடம் கேட்டதற்கு, இளைஞர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். அதே சமயம் நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சக்தியை இந்தியா பெற முடியும என்றார்.

தினகரன்

-o❢o-

b r e a k i n g   n e w s...