.

Wednesday, April 18, 2007

போலி மனைவியுடன் கனடா செல்ல முயன்ற பாஜக எம்.பி கைது!


பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா


மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா. தாஹோத் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்று காலை 7.30 மணிக்கு கனடா தலைநகர் டொரண்டோவுக்கு செல்வதற்காக ஒரு பெண்ணுடன் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார் கத்தாரா.
அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதித்தபோது, அதில் அந்தப் பாஸ்போர்ட்டுக்குரியவர் கத்தாராவின் மனைவி சாரதா பென் இல்லை என்பது தெரிய வந்தது. கத்தாராவுடன் வந்த பெண்ணின் பெயர் பரம்ஜித். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கத்தாரா விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். அதில் கத்தாரா தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கத்தாராவை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். குடியேற்றத் துறையினரால் பிடிக்கப்பட்ட கத்தாரா மற்றும் பரம்ஜித் ஆகிய இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்


உத்தரபிரதேசம்: ராகுல் காந்தி 5ம் கட்ட பிரச்சாரம்.

உத்தரபிரதேச சட்டசபைக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்து வரும் நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் காந்தி தனது 5ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அமேதி தொகுதியில் இருந்து இன்று துவக்கியுள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...