.

Thursday, August 23, 2007

பள்ளி விடுமுறைக்காக கொலை செய்த மாணவர்கள்

மஹாராட்டிர மாநிலத்தில் பர்தூரில் பழங்குடி மக்களுக்காக சிறுவர் பள்ளி/விடுதி ஒன்றில் மூன்று பதின்ம வயது மாண்வர்கள் தங்கள் இளைய பள்ளித்தோழர்களை விடுமுறை கிடைக்கும் என்பதற்காக கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிப்யா காலே,வல்லப் காலே, நாம்தேவ் காலே ஆகிய மூவரும் 8 வயது அஷோக் காலே மற்றும் அவன் தம்பி ஐந்து வயது மங்கல் காலே இருவரையும் செவ்வாய் இரவு பக்கத்தில் இருந்த பண்ணைக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூச்சை நிறுத்தி கொன்றிருக்கிறார்கள். அங்கேயே படிக்கும் இறந்தவர்களின் சகோதரியின் புகாரின் பேரில் தேடத்தொடங்கிய ஆஸ்ரமமசாலை மேலாளர்கள் இருவரின் உடலையும் பள்ளி கழிவறையொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பழங்குடி சிறுவர்களுக்காக நடத்தப்படும் அந்த விடுதியில் யாரேனும் இல்லவாசிகள் இறந்தால் 15 நாட்கள் விடுமுறை விடுவது பழக்கமாயிருந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவரும் இந்த விடுமுறைக்காகவே இக்கொலையை செய்ததாக கூறினர். காவலர்கள் பாலியல் குற்றங்களுக்காக கொலை நடக்கவில்லை என உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனையும் அதனை உறுதிசெய்துள்ளது.

இக்குழந்தைகளின் பெற்றொர் மும்பையில் கூலிவேலை செய்கின்றனர். தங்களால் ஆஸ்ரமத்தில் கிடைக்கும் வசதியை கொடுக்கமுடியாது என்பதால் சகோதரி இந்திராவை அங்கேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

Khabrein.info

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...