.

Wednesday, May 16, 2007

ச: ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்

தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் 7 பேர் மத்திய மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர். இதில் தயாநிதிமாறனின் ராஜி னாமாவை தொடர்ந்து மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மத்திய மந்திரிகள் ராசா, ரகுபதி ஆகி யோரின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிபாரிசை ஏற்று திருச் செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.பி. ராதிகா செல்வி புதிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட இருக் கிறார். வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர் ஜனாதிபதி மாளிகையில் மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்க இருப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பதவி கிடைத் தது பற்றி ராதிகாசெல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கிடைத்தது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.

மத்திய மந்திரி பதவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க் கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன். தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

=மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...