.

Monday, July 30, 2007

டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கருணாநிதி

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், விவசாயிகளின் நலன் கருதி இந்த தொழிற்சாலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் வெளியான அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அப்பகுதி மக்களின் கருத்தறிந்த பிறகே இந்த தொழிற்சாலை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

MSN Tamil

Karunanidhi to take final call on Tata project
The Hindu News :: Govt. decision, a victory for AIADMK: Jayalalithaa

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...