.

Monday, July 30, 2007

மாணவர்களை கண்ணீர்விட வைப்பதா? - பாடகி பி.சுசீலா



திருச்சி, ஜூலை 30-

இசைப் போட்டி நடத்தி மாணவர்களின் மனதைக் காயப்படுத்துவதை டி.வி. சேனல்கள் கைவிட வேண்டும் என பின்னணி பாடகி பி. சுசீலா வேதனையுடன் கூறினார்.

திருச்சியில் சேவை அமைப்புகள் சார்பில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் பின்னணி பாடகி சுசீலா பேசியது:

சமீபகாலமாக டி.வி.க்கள் சிலவற்றில் நடத்தப்படும் இசைபோட்டிகளுக்கு நடுவர்களாக என்போன்ற இசைத்துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பதை விட அதிக சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து கடினமாக உழைக்கின்றனர்.
போட்டியின் முடிவில் மூவர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். பரிசு கிடைக்காத மாணவர் மற்றும் பெற்றோர்கள் கண்ணீரின் திரும்புவதை காண முடிகிறது. இது வேதனை தருவதாக உள்ளது.

இவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வாய்ப்புகள் பெற்றுத்தருமானால் இளைஞர்களுக்குப் பயனாக இருக்கும்.

இதுபோல டெல்லியில் சில டி.வி. சேனல்கள் இசைநிகழ்ச்சிகளை நடத்தி அதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளனர். இதேபோன்று தமிழ் சேனல்களும் முயலவேண்டும்.

இளைஞர்களுக்கு பயன்படாத நிகழ்ச்சிகள் என்றால் அதற்கு தடை விதிக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை நடுவராக பணியாற்ற பல நிறுவனங்கள் அழைத்தும் அதை மறுத்துவிட்டேன்.

இவ்வாறு சுசீலா கூறினார்.


படம், செய்தி:

நன்றி:
"தமிழ் முரசு"

2 comments:

வெட்டிப்பயல் said...

அருமையான கருத்து...

இதே மாதிரி ஒரு போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் முதல் பரிசு தர சொன்னார் ஜானகி.

Rajarajacholan said...

I truly second Suseela madam's view.Hope these TV channels would take this in positive sense and change their attitude.

-o❢o-

b r e a k i n g   n e w s...