.

Thursday, July 26, 2007

கருணாநிதிக்கு கொலை மிரட்டல்.

திருப்பூர் தாசில்தாருக்கு நேற்று காலை ஒரு தபால் கார்டு வந்தது. அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த கடிதம் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தில் எழுப்பட்டிருந்த வாசகங்கள் வருமாறு:-

தமிழ்நாடு போலீஸ் பணி யில் சேர வயது வரம்பு 24-ல் இருந்து 29-ஆக உயர்த்த மறுத்துள்ளதால், ஆகஸ்டு 15-ல் கோட்டையில் கொடியேற்றும் முதல்வர் கருணாநிதியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தி.மு.க. கொடி அரைக் கம்பத்தில் பறப்பது உறுதி.

29-ந் தேதி நடக்கும் போலீஸ் தேர்வில் குண்டு வெடிக்கும். இது அல்லாவின் ஆணை-அல் உம்மா இயக்கம்.

அல் உம்மா இயக்கம் சார்பில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. கோவை தலைமை தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தின் முத்திரையில் நேற்று முன்தினம் தேதி உள்ளது. நேற்று காலை திருப்பூர் தபால் நிலையத்தில் பெறப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாசில்தார் அந்த கடிதத்தை கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ. கவனத்துக்கு கொண்டு சென் றார்.

பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...